ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

விவேகானந்தரின் சிந்தனை துளிகள்.....



விவேகானந்தரின் சிந்தனை துளிகள்.....

* மனம் என்னும் புத்தகத்தை படித்து விட்டால் வேறெந்த புத்தகத்தையும் படிக்கத் தேவையில்லை.

* மற்றவர்களுக்கு வழிகாட்ட விரும்பினால் வேலைக்காரனைப் போல நடந்து கொள்ளுங்கள்.

* தெய்வீக சக்தி ஒவ்வொருவரின் உள்ளத்திலும் குடி கொண்டிருக்கிறது. அதை விழிப்படையச் செய்வது நம் பொறுப்பு.

* நீ உலகை விட்டுச் செல்லும் நாளில் மக்கள் நன்றியுடன் உனக்காக அழ வேண்டும். ஆனால், நீ மட்டும் சிரித்தபடி செல்ல வேண்டும்.

* நன்மை செய்வதே மக்கள் தலைவனின் நோக்கமாகும். அப்படிப்பட்ட நல்லவர்களையே தலைவனாக தேர்ந்தெடுங்கள்.

* ஏழை எளியவர் நலனில் அக்கறை காட்டும் சிறந்த தலைவர்களையே தேர்ந்தெடுங்கள்.

* தொண்டு செய்வோர், சுயநலம் இல்லாதவர்கள், சுக துக்கத்தை பொருட்படுத்தாதவர்கள் ஆகியோரே உயர்ந்த தலைவர்கள்.

- விவேகானந்தர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக