வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

திருச்செந்தூர் முருகனுக்கு மாத பூஜையும் பலன்களும்...



1940ல் செந்தூர் சுப்ரமண்யசுவாமி ஆலய தரிசனம்
In 1940s Chendur Subrahmanya Swamy Temple

திருச்செந்தூர் முருகனுக்கு மாத பூஜையும் பலன்களும்...

தை🌟

தை மாதம் அகில் தூபமிட்டு வழிபட்டால் சிவ தரிசனம் காணலாம். அனைத்து சங்கராந்திகளிலும் முகாரம்ப தீர்த்தத்திலும் ,கந்த புஷ்கரணி தீர்த்தத்திலும் நீராடி விட்டு சிறு பயறு கலந்த செந்நெல் அரிசிச் சோற்றை முருகனுக்குப் படைத்து வழிபட்டால் நூறு யாகம் செய்த பயனடையலாம்.

மாசி🌟

மாசி மாதம் வதனாரம்பத்தீர்த்தத்தில் நீராடி செந்திலாண்டவரை வழிபட்டால் இப்பிறவி கடைசியாகும்.

பங்குனி🌟

பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் அமரபட்சத்து நவமி திதிகளில் கடலில் நீராடி கந்தனை வழிபட்டால் எல்லா பாவங்களும் அகலும்.

சித்திரை🌟

சித்திரை மாதம் முகாரம்பத் தீர்த்தத்தில் குளித்து பூரணச் சந்திரன் காலத்திலும், உத்திர, தட்சிணாயக் காலங்களிலும் வேலவனைத் தொழுது நின்றால் முருகனருளை உடனே பெறலாம்.

வைகாசி🌟

வைகாசி மாதம் சுக்கிலபட்சம் மூன்றாம் திதியிலும் விசாக நட்சத்திரத்தின் போதும் வள்ளிமணாளனை திருச்செந்தூரில் வழிபட்டால் துக்கங்கள் அகலும்,நோயற்ற
வாழ்வு பெறலாம்.

ஆனி🌟

ஆனி மாதத்தில் பூரணச் சந்திரன் காலத்திலும் கிருத்திகை நாளிலும் வழிபட்டால் தொலையாத பாவங்கள் தொலைந்து போகும்.

ஆடி🌟

எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் பசுந்தயிர் கலந்த சோற்றை ஜெயந்தினாதருக்குப் படைத்து வழிபட்டால் முருகனுடைய பாதங்களை அடையலாம்.

ஆவணி🌟

ஆவணி மாதம் ஒவ்வொரு நாளும் வழிபடுவோர் நூறு யாகம் செய்த நற்பயனைப் பெறுவர்.

புரட்டாசி🌟

புரட்டாசி மாதம் திருச்செந்தூர் கடற்கரையில் முன்னோர்க்குத் திதி கொடுத்தால் முன்னோர்கள் தேவருலகை அடைவார்கள்.

ஐப்பசி🌟

இம்மாதம் உத்திர தட்சிணாயக் காலங்களில் கந்தபுஷ்கரணியில் நீராடி வழிபட்டால் மறு பிறவி கிடையாது.

கார்த்திகை🌟

கார்த்திகை மாதம் முப்பது நாளும் பசு நெய்யில்தீபமிட்டால் முருகனின் பாதத்தை அடைவர்.கார்த்திகைநட்சத்திரத்தன்று நெல்லி இலையால் முருகனை அர்ச்சனை செய்து வழிபட்டால் வேண்டியதைப் பெறலாம்.

மார்கழி🌟

மார்கழி மாதம் அமர பட்சத்து சப்தமி,நவமி திதிகளில்அர்ச்சனை செய்து வழிபட்டால் முருகனின் மாமாவான மாயவனின் அருளைப் பெறலாம்.


தகவலுக்கு நன்றி : திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக