வெள்ளி, 27 ஏப்ரல், 2018

நரசிம்ம ஜெயந்தி - 28-4- 18


நினைத்தது உடனுக்குடன் நிறைவேற நரசிம்ம ஜெயந்தி...

நரசிம்ம ஜெயந்தி - 28-4- 18

விஷ்ணு எடுத்த
தசாவதாரங்களில் , மிக
உயர்ந்தது நரசிம்ம அவதாரம்.
ஏனெனில்,
ஒரு பக்தனின் சொல்லைக்
காப்பாற்ற விஷ்ணு இந்த
அவதாரத்தை  நிகழ்த்தினார்.

பிரகலாதனின் வார்த்தையைக்
காப்பாற்ற கம்பத்தை உடைத்துக் கொண்டு
வெளிப்பட்டார் நரசிம்மர்:

''அடேய் பிரகலாதா!
எங்கேயடா இருக்கிறான் உன்
விஷ்ணு? என்று கேட்கிறான்
இரண்யன்.
''தந்தையே! அவர் தூணிலும்
இருக்கிறார்,
துரும்பிலும் இருக்கிறார்.
ஏன்...
எங்கும் வியாபித்திருக்கிறார்.
ஒவ்வொரு  துகளிலும் அவர்
உட்கார்ந்திருக்கிறார்,
என்றான் பிரகலாதன்.

பிரகலாதன் தூணைக் கை
காட்ட,  இரணியன் அதை
உடைத்தான்.
மனித உடலும், சிம்ம முகமும்
கொண்டு நரசிம்மனாய் அவர்
வெளிப்பட்டார்.

'நரன் என்றால்  'மனிதன்.
'சிம்மம் என்றால் 'சிங்கம்.
இதனால் தான் அவரை 'நரசிம்மர்”  என்று சொல்வார்கள்.

இரணிய வதத்தை முடித்த
பிறகு,
பிரகலாதனிடம்,
''நீ ஏன் தூணைக் காட்டினாய்,
துரும்பைக் காட்டியிருக்கக்
கூடாதா? என்றார் .
''ஏன் இப்படி சொல்கிறீர்கள்?
என்ற பிரகலாதனிடம்,

தூண்  என்பதால்,  இரணியன்
அதை உடைக்கும் வரை
காத்திருக்க
வேண்டியிருந்தது.
துரும்பு என்றால் ,  அதைக்
கிள்ளி யெறிந்தவுடன்
பிரசன்னமாகி இருப்பேனே!
என்றார் .

ஆம்..
நாளை என்பது நரசிம்மருக்கு
இல்லை...!!! அவரிடம்
வைக்கும் கோரிக்கை
உடனுக்குடன் நிறைவேறும்.

“ ஶ்ரீ லட்சுமி நரசிம்மம்
சரணம்  பிரபத்யே “
என்ற மந்திரத்தை தினமும்
108 தடவை சொல்லி
வழிபடுவோர் , நினைத்தது நிறைவேறும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக