திங்கள், 15 ஜூன், 2020

UNESCO – பட்டியலில் அமைந்துள்ள தமிழகத்தின் ஏழு அதிசயங்கள்



UNESCO – பட்டியலில் அமைந்துள்ள தமிழகத்தின் ஏழு அதிசயங்கள்

UNESCO – (United Nations Educational, Scientific and Cultural Organization) யுனெஸ்கோவின் அமைப்பு என்பது உலக பாரம்பரியங்கள் திட்டத்தின் அடிப்படையில் உள்ள ஒரு களம் ஆகும். இந்த அமைப்பின் நோக்கம் காடு, மலை, ஏரி, பாலைவனம், நினைவுச் சின்னம், கட்டிடம்  மற்றும் நகரம் இந்த வகைகளின் தொகுப்புகள் யுனெஸ்கோ பட்டியலில் இடம் பெறுகின்றன. அந்த வகையில் செந்தமிழ் நாட்டில் உள்ள யுனெஸ்கோவால் அங்கிகரிக்கப் பட்ட பாரம்பரிய சின்னங்களைப் பற்றி அறிவோம் இந்த கட்டுரையில். இந்தியாவில் 29 உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலை யுனெஸ்கோ கொண்டுள்ளது, அவற்றில் நான்கு தமிழ்நாட்டில் உள்ளன.

உலக அதிசியம் ஏழு என்றால், அந்த ஏழு அதிசியங்கள் தமிழகத்தில் உள்ளது என்பதற்கு சான்றாக யுனெஸ்கோ பட்டியல் அமைந்துள்ளது. ஆம் இந்த ஏழு அதிசியங்களும் தமிழகத்தில்  தான் அமைந்துள்ளது என்று சொன்னால் நம்பமுடியவில்லையா. உண்மை தான் இந்தியா என்றதும் ஞாபகம் வருவது கோவில்களும், சிற்ப கலைகளும் தான். அந்த அளவுக்கு இந்தியா கோவில் நகரமாக அமைந்துள்ளது. உலகத்தில் அதிக கோவில்கள் சிற்ப கலைகள் கொண்ட நாடு இந்தியா என்று சொன்னால் மிகையாகது என்பது எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு, இந்தியாவில் அதிக அளவு கோவிகள் மற்றும் சிற்ப கலை, கட்டிடகலை போன்ற அதிக வேலைபாடு கொண்ட மாநிலம் தமிழ் நாடு தான்.

தமிழகம் கோவில் நகரம் , பாரம்பரிய தளங்களுக்கு மிகவும் பிரபலமானது. இந்தியாவின் மிகப் பெரிய சுற்றுலாத் தளமாக தமிழகம் திகழ்கின்றது. மேலும் இந்தியாவில் மட்டும் தமிழக மாநிலம்  நாட்டின் அதிக அளவு சுற்றுலா வருவாய் தரும் முதல் மாநிலமாக திகழ்கின்றது. இனி தமிழகத்தில் உள்ள யுனெஸ்கோ பட்டியலில் உள்ள ஏழு அதிசியங்களை பார்க்கலாம்.

யுனெஸ்கோ பட்டியலில் உள்ள தமிழகத்தின் பாரம்பரிய சின்னங்கள்:

உலக பாரம்பரிய தளங்களில் தமிழ் நாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடங்கள், மத தளங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் ஆகிவை அமைந்துள்ளது. இவற்றில் யுனெஸ்கோவில் அங்கீகரிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் சின்னம் தஞ்சாயூரில் உள்ள பிரகதீசுவரர் கோவில் தான் . இந்த கோவில் முதலாம் ராஜ ராஜ சோழரால் கட்டப்பட்டது இந்த கோவில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய இந்து கோவில்களில் ஒன்றாகும். கங்கைகொண்டா சோழபுரம் மற்றும் ஐராவடேஸ்வரர் கோயிலுடன் பெரிய கோயில் உலக பாரம்பரிய தளமாகும்.

1. பிரகதீசுவரர் கோயில்:


தஞ்சாவூரிலுள்ள காவரி ஆற்றின் தென்கரையில் தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலை தஞ்சைப் பெரிய கோயில் (“Big temple”) அல்லது தஞ்சைப் பெருவுடையார் கோயில் (“Peruvudayar Temple”) என்றும்  அழைக்கப்படும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கோவிலின் கட்டிகலை தமிழர்களின்  சிறப்பு மிக்க அற்புதமான கலைக்கு சான்றாக விளங்குகிறது. இக்கோவில் இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் மாமன்னர் முதலாம் ராஜ ராஜ சோழன் இக்கோவிலை கட்டினார்.  இந்த கோவில் கிபி 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.  இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் புதுமை மாறமால் காட்சி அளிக்கின்றது.

1000 ஆண்டுகள் பழமையான, இந்த கோவிலை 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
தென்னிந்தியாவின் மூவேந்தர்களின் ஒருவரான சோழரின் படைப்பு கோயிலின் தூய வடிவத்தின் கட்டடக்கலை ஒரு சிறந்த படைப்பு சாதனையை குறிக்கின்றது.
பிருஹதிஸ்வரர் கோயில் தஞ்சாவூர்பேகம் சோழர் கோயில்களின் முதல் சிறந்த எடுத்துக்காட்டு, அதைத் தொடர்ந்து மற்ற இரண்டு சொத்துக்களும் சாட்சியம் அளிக்கின்றன.
மூன்று பெரிய சோழர் கோயில்கள் ஒரு விதிவிலக்கானவை மற்றும் சோழ எம்பயர் மற்றும் தென்னிந்தியாவின் தமிழ் நாகரிகத்தின் கட்டிடக்கலை வளர்ச்சிக்கு மிகச் சிறந்த சான்றாகும்.
தஞ்சாவூரில் உள்ள சோழர் கோயில்களில், கங்கைகொண்டச்சோலபுரமண்ட் தரசுராமரே கட்டடக்கலை மற்றும் சோழர்களின் பிரதிநிதித்துவத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.
ஐராவடேஸ்வரர் கோயில்:
ஐராவடேஸ்வரர் கோயில் தாராசுரம் நகரில் அமைந்துள்ளது. இந்த திருத்தளம் தஞ்சாவூரிலிருந்து 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இரண்டாம் ராஜராஜ சோழரால் கட்டப்பட்டது. இந்து கோவில்  முலவராக சிவபெருமான் சிலை வைக்கப்பட்டுள்ளது. மகாமஹாம் பண்டிகைக்கு இக்கோவில் பெயர் பெற்றது.

கங்கைகொண்ட சோழபுரம் கோயில்:

கங்கைகொண்ட சோழபுரம் என்று அழைக்கப்படும் பிரிஹதீஸ்வரர் கோவில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரில் முதலாம் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று வெற்றி பெற்றதன் நினைவாக கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை கட்டினான்.

இது முதலாம் இராசேந்திரன்  கங்கைகொண்ட சோழபுரம் கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும்.

UNESCO – பட்டியலில் உள்ள மகாபலிபுரத்தின் நினைவுச்சின்னங்களின் தொகுப்பு:

மகாபலிபுரம் அல்லது மாமல்லபுரம் தமிழ் நாட்டில் காஞ்சிபுர மாவட்டித்தில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் தமிழ் நாட்டில் முதல் கட்டுமான கோவிலாகும். தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றாகும். இக்கோயில் 45 அடி உயரம் கொண்டது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த மாமல்லபுர கடற்கரைக் கோவில் யுனெஸ்கோ நிறுவனத்தால் 1984 ஆம் ஆண்டு உலகப் பாரம்பரிய களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

கடற்கரை கோயில் தென்னிந்தியாவின் பழமையான கல் கோயில்களில் ஒன்றாகும், இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தின் சின்னமாக விளங்கும் கடற்கரைக் கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை.

ஏழு கோவில்கள்:
மாமல்லபுரம் ஏழு கோவில்களின் நிலம் என்று செல்லப்பெயர் பெற்றது. 7 கோவில்களில், மற்ற ஆறு கோயில்கள் சோழமண்டல  கடற்கரையில் மூழ்கியுள்ளன.

மாமல்லபுரத்தில் ஏழு கோவில் அமைப்புகள் இருந்தன என்ற புராதனச் செய்தி முற்றிலும் உண்மையே என்று கூறமுடியாவிட்டாலும், மேற்கண்ட கண்டுபிடிப்புகளின் விளைவாக, மாமல்லபுரம் பகுதியில் மாபெரும் கோவில் வளாகம் இருந்தது என்றும் கடல்கோள் காரணமாக அது பெரும்பாலும் மறைந்துவிட, இன்று ஒருசில கட்டடங்களே எஞ்சியுள்ளன என்பதும் தெளிவாகிறது.

குகைக் கோயில்:


காஞ்சிபுரம் மாவட்டத்தில் வங்காள விரிகுடாவின் சோழமண்டல கடற்கரை பகுதியில் உள்ள மலை உச்சியில் மாமல்லபுர குகைக் கோயில்கள் அமைந்துள்ளது.  இந்த கோவிலை மண்டபங்கள் அல்லது குடவரை குகை கோவில் என்றும் அழைக்கப்படுகின்றன.

குகைகளில் சுவர்களில் செதுக்கப்பட்ட சுவர்களில் மிகவும் சுவாரஸ்யமான சிற்பம், பாசுரங்கள், ஒன்று, துர்க்கா (கடவுளின் சக்தியின் ஒரு வடிவம்) ஆகும். 1984 ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோ உலக மரபுரிமை தளமாக மகாபலிபுரத்தில் உள்ள நினைவுச்சின்னங்களின் குழுவில் ஒன்றாகும்.

வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள்: 


பல்லவர்கள் கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏறத்தாழ 700 வருடங்கள் ஆட்சி புரிந்தனர்.  இவர்களது ஆட்சி தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு அம்சங்களில் திருப்புமுனையாக அமைந்தது என்றும் கூறலாம்.

இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன. இந்த தொகுப்புகளில் உள்ளவை

அருச்சுனன் தபசு

கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல் (பிற்காலத்தில் இந்தச் சிற்பத் தொகுதிமீது ஒரு மண்டபம் கட்டப்பட்டது)
முற்றுப்பெறாத அருச்சுனன் தபசு
விலங்குகள் தொகுதி
வராக மண்டபம், ஆதிவராக மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியவற்றுள்ள் சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன. ராமானுச மண்டபத்தில் உருவாக்கப்பட்ட சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் பிற்காலத்தில் மதக் காழ்ப்புணர்ச்சி கொண்டோரால் செதுக்கி அழிக்கப்பட்டிருக்கிறது.

நீலகிரி மலை ரயில்:

நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து (Nilgiri Mountain Railway) 1908 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இப்பாதையை உருவாக்கினார்கள். இது சுமார் 1,000 மில்லிமீட்டர் (3 அடி) அளவு கொண்ட குறுகியப் பாதை வகை இரயில் போக்குவரத்து இயக்கப்படுகின்றது. இந்தியாவிலுள்ள ஒரே பற்சக்கர இருப்புப்பாதை  கொண்ட தொடர்வண்டி நீலகிரி மலை தொடர்வண்டி மட்டுமே இருகின்றது. இது ஆசியாவில் மிகக் கடுமையான சரிவு பாதையாக நீலகிரி ரயில் பயணம் கருதப்படுகிறது.

இந்த நீலகிரி மலை தொடர்வண்டி ஜூலை 2005 இல் டார்ச்சிலிங் இமாலயன் இரயில்வேயுடன் நீலகிரி மலை இரயில்வேவையும் ஓர் உலக பாரம்பரியக் களமாக யுனெஸ்கோவின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
நன்றி - வணக்கம் அமெரிக்கா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக