செவ்வாய், 13 நவம்பர், 2018

சந்தோஷம் அள்ளித் தரும் சங்கரன்கோவில்!


சந்தோஷம் அள்ளித்  தரும் சங்கரன்கோவில்!

'தெய்வம் வெளிப்பட்டு, தன் வல்லமையை உணர்த்தி அதன் மூலம் மக்களைத் திருத்துவது இதிகாச, புராண காலத்தில் நிகழ்ந் திருக்கலாம். ஆனால்,

இப்போது அப்படியெல்லாம் நடக்காது!’ என்று 
#ஒரு #சிலர்_நினைக்கலாம்.

ஆனால், தெய்வம் ஒருபோதும் தனது  திருவிளையாடலை நிறுத்திய தில்லை. அடியாருக்கு அருள் புரிவதன் மூலம் அது எப்போதும் தன்னை வெளிப்படுத்தவே செய்கிறது. அனுபவத்தால் இதை உணர்ந்தவர்கள், அடுத்த வர்களுக்குச் சொல்கிறார்கள். அனுபவம் பெறத் துடிப்பவர்கள் அதை நம்புகிறார்கள். தெய்வத் தின் அருளை தாங்களும் அனுப விக்கிறார்கள்.

நினைப்பவர்களுக்கும், தன் னைத் தேடி வருபவர்களுக்கும் அருள் மாரி பொழியும் அம்பிகை, 'கோமதி அம்மன்’ என்ற திருநாமத் துடன் எழுந்தருளியுள்ள சங்கரன் கோவில் திருத்தலத்தில் 1944-ஆம் ஆண்டு நடந்த நிகழ்ச்சி இது.

ஆடி மாதம். ஆடித் தவசுத் திருவிழாவுக்கு உலகில் உள்ள மொத்தப் பேரும் திரண்டு வந்தது போல, சங்கரன்கோவில் முழுக்க மக்கள் வெள்ளம்!

இரவு நேரம். தெற்கு ரத வீதியில் இருக்கும் தவசு மண்டபத்தில், பல்லக்கில் எழுந் தருளியிருந்தாள் உற்சவ மூர்த்தியான அம்பிகை திருக்கல்யாண அலங்காரத்தில் இருந்ததால், அம் பிகையின் திருமேனி முழுவதும் தங்கமும் வைரமுமாக நகைகள் ஜொலித்தன. அம் பிகையின் அருகில் குப்புசாமி பட்டர் களைப்புடன் உட்கார்ந் திருந்தார்.

சங்கரன் கோவிலுக்கு அருகில் உள்ள அரியூரைச் சார்ந்த கணக்குப் பிள்ளை ஒருவர், பட்டரைப் போல வேடம் அணிந்து பல்லக்கை நெருங்கினார். அவர் அந்தக் கிராமத்து முக்கியஸ்தர். கட்டு மஸ்தான உடல் வாகு கொண்டவர். மனோவசியம் உட் படப் பல வித்தைகள் கற்றவர். அவரைப் பார்த்த எவருக்குமே சந்தேகம் ஏற்பட வில்லை. 'யாரோ, பூஜை செய்யும் பட்டர்’ என்று நினைத்தனர்.

பல்லக்கை நெருங் கிய வேடதாரி, அதில் ஏறி அம்மனின் காதுகளை அலங் கரிக்கும்  வைரத் தோடுகளைக் கழற்றிக் கொண்டு, கும்பலோடு கும்பலாகக் கலந்து மறைந்தார். (அந்தத் தோடுகளின் அன்றைய மதிப்பு பதினாறாயிரம் ரூபாய்.)

அப்போது, அசதியுடன் பல்லக்கில் சாய்ந்திருந்த குப்புசாமி பட்டரை, சுமார் எட்டு வயதுச் சிறுமி ஒருத்தியின் மென்மையான கரங்கள் உலுக்கி எழுப்பின.

அரக்கப் பரக்கக் கண் விழித்து எழுந்த குப்புசாமி பட்டரின் எதிரில் ஒளி மயமாக அந்தக் குழந்தை நின்று கொண்டிருந்தாள். 'என்ன? ஏது?’ என்று கேட்ப தற்கு முன், அவளாகவே பர பரப்புடன், ''மாமா... மாமா... எனது  தோடுகளை ஒருவன் திருடிக் கொண்டு போகி றான். வா, வந்து அவனைப் பிடி!'' என்று அவரின் கைகளைப் பிடித்து இழுத்தாள்.

'ஏதோ நடந்திருக் கிறது!’ என்பதைச் சட்டென்று உணர்ந்த குப்புசாமி பட்டர், மந்திரத்தில் கட்டுண்டவர் போல சிறுமியைப் பின்தொடர்ந்தார். சற்றுத் தூரம் சென்றதும், அந்த வேடதாரியைச் சுட்டிக் காட்டிய சிறுமி, ''அதோ போகிறானே... அவன்தான் எனது தோடுகளைத் திருடியவன்!'' என்றாள்.

#பார்த்தார் பட்டர்.
கட்டுமஸ் தான உடம்போடு ஒருவர் போய்க் கொண்டிருந்தார். ஒல்லியான உடல்வாகு கொண்ட பட்டருக்கு எப்படித்தான் தைரியம் வந்ததோ தெரியவில்லை. விறுவிறுவென்று போய், அந்த வேடதாரியின் மூடிய கையைப் பற்றி இழுத்துக் கடித்தார். வேடதாரி, திமிறினாரே தவிர, எதிர்த்துத் தாக்காமல், பிரமை பிடித்தவர் போல் அப்ப டியே நின்றார்.

அவர் கையைப் பிரித்துப் பார்த்தால், அம்மனின் ஆபரணம் ஜொலித்தது. ''திருடன்! திருடன்!'' என்று கத்தியபடி சிறுமியைப் பார்த்தார் குப்புசாமி பட்டர். #அவள்_மாயமாக_மறைந்து #விட்டிருந்தாள்!

அதற்குள் அங்கிருந்த மக்கள் அந்தத் திருடனைப் பிடித்து அடிக்கத் தொடங்கினர். திருவிழாக் கும்பல். கேட்க வேண்டுமா? ஆளாளுக்கு அடித்தார்கள். ஆனால், வேடதாரியோ, ''அடியுங்கள்... நன்றாக அடி யுங்கள். அப்போதுதான் நான் செய்த பாவம் தீரும்!'' என்று சொன்னாரே தவிர, கலங்கவில்லை. அவரைக் காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். திருட்டுப் போன நகை கிடைத்து விட்டதாலும், பெரிய மனிதர் என்பதாலும் மறு நாளே அவரை விடுதலை செய்தனர்.

அன்னை கோமதியம்மன் நடத்தும் அருள் ஆடல்கள் இன்றும் தொடர்கின்றன. இனி, கோமதியம்மை சங்கரன்கோவில் திருத் தலத்தில் குடிகொண்டது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.

'எது பெரிது?’, 'யார் பெரியவர்?’ - இவை போன்ற விவாதங்களும் விதண்டா வாதங்களும் என்றென்றும் உண்டு. இவற்றால் உண்டான அல்லல்கள் பல. இது கூடாது என்பதற்காகவே கயிலாயத்தில் ஒரு நிகழ்ச்சி அரங்கேறியது.

'சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்ற பேத புத்தி இல்லாமல், இந்த சக்திகள் இரண்டும் ஒன்றே என்பதை நிரூபிக்க வேண்டும்!’ என்று எண்ணினாள் அம்பிகை. தனது எண்ணத்தை சிவபெருமானிடம் கூறி, ''ஸ்வாமி... சங்கரரும் நாராயணரும் பேதம் இல்லா மல் பொருந்தி இருக்கும் திருக் காட்சியைக் காட்டியருள வேண் டும்!'' என வேண்டினாள்.

சிவபெருமான் ஒப்புக் கொண் டார். ''தேவி... உனது எண்ணம் போலவே, ஹரியும் ஹரனும் பேதமில்லாத ஒரே சக்தியே என்று உலகுக்கு உணர்த்த, யாம் சங்கர நாராயணராகக் காட்சி கொடுப்போம். பூலோகத்தில் அகத்திய முனிவன் இருக்கும் பொதிகை மலையின் அருகில் உள்ள புன்னைவனத் தலத்தில், உனக்கு அந்த தரிசனம் கிடைக் கும். மகா சக்தியான நீயும் அங்கே இடம் பெற வேண்டும்!'' என் றார்.

அம்பிகை தொடர்ந்தாள். ''தேவதேவா, சங்கரநாராயண திருக் காட்சிக்காக, ஜீவகோடிகளின் சார்பில் நானே அந்தப் புன்னை வனத்தில் தவம் புரிவேன். எனது தவத்துக்காக தாங்கள் அங்கே எழுந்தருள வேண்டும்!'' என்ற அம்பிகை அங்கிருந்து கிளம்பினாள்.

அங்கிருந்த வேத வல்லுநர் களான ரிஷிகள், தேவ மாதர்கள் யாவரும் அன்னையிடம், ''அம்மா... நீங்கள் செய்யும் தவத்தில் நாங்களும் பங்கு பெற வேண்டும்!'' என வேண்டினர். அம்பிகை அதற்கு ஒப்புக் கொண்டாள்.

''அப்படியே ஆகட்டும். சங்கரநாராயணக் காட்சிக்காக ஸ்வாமி நிச்சயித்திருக்கும் புன்னை வனத்தில், முனிவர்கள் -புன்னை மரங்களாகவும் தேவமாதர்கள்- பசுக் குலமாகவும் தோன்றட்டும். முனிவர்களின் நிழலில்,  தேவலோக மாதர்களின் பணிவிடையில் நான் அங்கு தவம் மேற்கொள்வேன்!'' என்று அருளினாள்.

புன்னை வனம். அம்பிகை தவத்தில் ஆழ்ந்தாள். வேத வல்லுநர்களான முனிவர்கள் புன்னை மரங்களாகித் தங்களது நிழலை பூமியில் பரப்பினர். தேவ மாதர்கள் பசுக் கூட்டமாகத் தோன்றி அன்னையின் தவத்துக்கு உதவினர். பசுக் குலத்தின் பணி விடையை எண்ணி மகிழ்ந்த அம் பிகை, அவற்றின் பெருமையை உலகுக்கு உணர்த்த, 'ஆவுடையாள்’ எனும் திருநாமம் கொண்டாள் (ஆ-பசு). 'கோ’(பசு)க்களின் பெயரை இணைத்து 'கோமதி’ எனும் மற்றொரு திருநாமத்தையும் ஏற்றாள். அம்பிகையின் தவத்தால் அங்கே ஆவினங்களும் பெருமை பெற்றன.

அது மட்டுமா? எந்தத் திருக் காட்சியைக் காண அங்கே அன்னை தவம் செய்தாளோ, அந்தக் காட்சியைக் காணும் பாக் கியத்தை இரு பாம்புகளுக்கும் அளித்து அருள் புரிந்தாள் அம்பிகை. பாம்புகளா?

ஆம். சங்கன், பதுமன் என்று இரு சர்ப்பங்கள்! சங்கன் - சிவ பக்தன். பதுமன் - விஷ்ணு பக்தன். இவர்களுக்கிடையே பெரும் போட்டி. ''சிவன் தான் பெரியவர்!'' என்று சங்கன் சொல்ல, ''இல்லை, விஷ்ணுவே பெரியவர்!'' என்று பதுமன் கூற, இரு வருக்கும் இடையே சண்டை மூண்டது.

இருவரும் முனிவர்கள் பலரைச் சந்தித்துத் தங்க ளுக்கு ஆதரவு தேடினார்கள். அப்போது குருபகவான், ''அறியாமைக் கடலில் மூழ்கிக் கிடக்கும் உங்களுக்கு, ஞான விளக்கம் கிடைக்க வேண்டுமெனில், நீங்கள் புன்னை வனம் செல்லுங்கள். அங்கு உங்களது கேள்விக்கு பதில் கிடைக்கும்!'' என் றார்.

அதன்படி இருவரும் அருள் செழிக்கும் புன்னை வனம் வந்து தவமியற்றினர். அவர்களின் தவம் சங்கரரையும் நாராயணரையும் மகிழச் செய்தது. வீண்வாதம் செய்யும் அவர்களுக்காக மட்டுமல்லாமல், உலகிலுள்ள மற்றவர்களுக்கும் உண்மையை உணர்த்த, பாதித் திருமேனி சங்கரர், பாதித் திருமேனி நாரா யணராகக் கோலம் கொண்டு சங்கரநாராயணராகத் திருக்காட்சி கொடுத்தனர்.

சங்க- பதுமர்கள் விவேகத்தோடு சங்கரநாராயணரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர். ''தெய்வமே! நாகங்களான எங்களது அறியாமை யைப் போக்கி அருள் புரிந்ததை, என்றென்றும் நினைவு கூரும் வகையில் எங்களது பெயரால் ஓர் அடையாளத்தை உருவாக்கி அருள வேண்டும்!'' என வேண்டினர்.

''அப்படியே ஆகட்டும்!'' என்ற சங்கரநாராயணரின் அருளால், அப்போது உருவானதே, இன்று நாம் சங்கரநாராயணர் திருக் கோயிலில் காணும், 'நாகசுனைத் தீர்த்தம்’. இந்த தீர்த்தம் மாமருந்தாக உள்ளது.

அரன் சொற்படி, தவம் இருந்த அன்னை, கோமதியம்மன் எனும் திருநாமத்துடன் இங்கு அருளாட்சி செய்கிறாள். சங்கரன்கோவில் என்றவுடன்

நம் நினைவுக்கு  வருவது- கோமதி அம்மன்தான்! அன்று அன்னை செய்த தவம், 'ஆடித் தவசு’ என்ற பெயரில் இன்றும் சங்கரன்கோவில் திருத் தலத்தில் பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தி அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. பத்து நாட்கள், திருவிழா நடைபெறும். உத்திராட நட்சத்திரத்தன்று ஆடித் தவசு மண்டபத்தில் கோமதியம்மன் எழுந்தருள்வாள். அன்று மாலை ஐந்தரை மணி அளவில் ஸ்ரீ சங்கர நாராயணர் திருக்காட்சி வைபவம் நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக