வியாழன், 8 ஜூன், 2017

ஆலயங்களில் செய்யத் தகாதவை


ஆலயங்களில் செய்யத் தகாதவை

1. பிறருடைய அன்னத்தைப் புசித்த
தினத்தில், இறைவனை ஆலயத்தில்
வந்து தரிசிப்பது.
2. பிறர் பொருளைக்
கொண்டு சுவாமிக்கு நைவேத்யம்
செய்வது
3. வீட்டில் செய்துவரும் நித்திய
பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம்
செல்வது
4. ஒருவரைக் கெடுப்பதற்காக
சுவாமியை வேண்டிக் கொள்வது
5. தம்பதிகளின் உடலுறுவுக்குப்பின்
ஸ்நானம் செய்யாமல் ஆலயம்
ப்ரவேசிப்பது
6. ஸ்த்ரீகள் ரஜஸ்வலையாகக்கூடிய
நாட்களைக் கணக்கிட்டுக் கருத்தில்
கொள்ளாது, அந்நாட்களில் ஆலயம்
செல்லுதல்
7. மாதவிடாய்ப் பெண்டிருடன் பேசிக்
கொண்டு இருந்தவரோ, அருகில்
சென்றவரோ ஸ்நானம் செய்யாமல்
ஆலயம் செல்வது.
8. மரணத்தினால் தீட்டு உள்ளவர்கள்
ஆலயம் செல்வது
9. பிணத்தைப் பார்த்தவர்கள்,
பிணத்தோடு உடன் சென்றவர்,
மரணத்தினால் தீட்டு உள்ளவர்களைத்
தீண்டியவர்கள் ஆகியோர் ஸ்நானம்
செய்யாமல் ஆலயம் செல்வது.
10. மலஜலங்களை அடக்கிக்
கொண்டு ஆலயம் செல்லுதல்.
11. மலஜலம் கழித்தபின்
சுத்தி செய்துகொள்ளாமல் ஆலயம்
புகுதல்.
12. கருப்பு வஸ்திரம் தரித்துக்
கோயிலுக்குச் செல்லுதல்,
பூஜை செய்தல்
13. கோபத்துடன் ஆலயம் செல்லுதல்,
பூஜை செய்தல்
14. துவஜஸ்தம்பமும் பலிபீடமும்
கடந்து உள்ளே சென்றபிறகு,
எங்கேயாவது கீழே விழுந்து நமஸ்காரம்
செய்தல்
15. பகவானுக்கும் நந்திக்கும்
இடையே குறுக்காக நடத்தல்
அல்லது பிரதக்ஷிணம் செய்தல்
16. ஈர வஸ்திரங்களையோ,
விழுப்பு வஸ்திரங்களையோ அணிந்து ஆலயம்
செல்லுதல்
17. சாப்பிட்டுவிட்டுக்
கோயிலுக்கு வழிபாட்டிற்காகச்
செல்லுதல்
18.
இடுகாடு அல்லது சுடுகாடு சென்று வந்த
நாட்களில் ஆலயம் செல்லுதல்
19. புலாலோ, வெங்காயம்,
பூண்டு போன்றவற்றையோ உண்ட
நாட்களில் திருக்கோயில் செல்லுதல்
20. கால் அலம்பாமல் ஆலயத்திற்குள்
அடியெடுத்து வைத்தல்
21. மூர்த்திகளைத் தொடுதல்.
22. மூர்த்திகளின் அருகில் கற்பூரம்
ஏற்றுதல், அல்லது தீபம் ஏற்றுதல்
23. கோயில்
உள்ளே தீபத்தினை விரலால்
தூண்டுதல், கைகளைச் சுவரிலும்
மற்றுள்ள இடங்களிலும் துடைத்தல்.
24. எச்சில் துப்புதல்
25. நைவேத்யம்
ஆகும்போது பார்த்தல்
26. சிவ நிர்மால்யங்களை மிதித்தல்
அல்லது தாண்டுதல்
27. விமானம், த்வஜஸ்தம்பம்,
பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின்
நிழலை மிதித்தல்
28. உடலின் மேல்
பாகத்தை புருஷர்கள் மூடிச்
செல்லுதல்
29. நெற்றிக்கு விபூதி இடாமை
30. சிகை (குடுமி) இல்லாமை
31. தலைமயிரை அவிழ்த்துத்
தொங்கவிடுதல்
32. தலைமயிரை ஆற்றுதல்
33. மூக்கைச் சிந்துதல்
34. தும்முதல்
35. கோட்டுவாய் (கொட்டாவி)
விடுதல்
36. வாயில் எதையேனும்
அடக்கியிருத்தல்
37. பேசுதல்
38. வேகமாக வலம் வருதல்
39. தீபம் அணையும்படி மூச்சுக்
காற்று விடுதல்
40. மற்ற
ஆலயங்களை பற்றி இங்கு கூறுதல்
41. கை-கால்களை நீட்டிக்
கொண்டு உட்காருதல்
42. படுத்தல்
43. உறங்குதல்
44. சிரித்தல்
45. அழுதல்
46. அடித்தல்
47. சண்டையிடுதல்
48. எச்சில் துப்புதல்
49. மலஜலம் கழித்தல்
50. விளையாடுதல்
51. விக்ரஹங்களுக்குப் பின்புறத்தைக்
காட்டி நிற்றல்
52. தாம்பூலம் தரித்தல்
53. வாஹனத்தின் மீதமர்ந்தோ,
பாதரøக்ஷயுடனோ ஆலயத்துள்
செல்லுதல்
54. உற்சவ காலங்களில் விழாக்களைக்
கண்டு களித்துவிட்டு,
இறை வணக்கம் செய்யாதிருத்தல்
55. தெரிந்து தெரியாமலும்
தகாதவற்றைச் செய்தல்
56. உடல் சுத்தம்
இல்லாதபோது தொழுதல்
57. ஒரு கையை மட்டும் தூக்கிக்
கும்பிடுதல்
58. அப்பிரதக்ஷிணமாகச் சுற்றுதல்
59. மூர்த்திகளுக்கு எதிரில்
காலை நீட்டி உண்ணல்
60. தின்பண்டங்களைச்
சுவைத்துக்கொண்டிருத்தல்
61. பொய் பேசுதல்
62. உரத்துப் பேசுதல்
63. வாதம் செய்தல்
64.
எதையோ நினைத்து வருத்தத்துடன்
அழுதல்
65. சண்டை சச்சரவுகளில் ஈடுபடுதல்
66. தன்னை உயர்வாக
எண்ணிக்கொண்டு,
தன்னை அணுகுபவர்க்கு அருள்
புரிதல்
67. தன்னை உயர்வாக
எண்ணிக்கொண்டு, மற்றவர்க்குச்
சாபம் அளித்தல்
68. ஆடவர் பெண்டிரை நோக்கியும்,
பெண்டிர் ஆடவரை நோக்கியும் கடும்
சொற்களைக் கூறுதல்
69. கம்பளம் முதலியவற்றால்
உடலை மறைத்துக் கொள்ளுதல்
70. நர ஸ்துதி செய்தல்
71. பிறரை இழிவு படுத்துதல்
72. அபானவாயு விடுதல்
73. அமங்கலச் சொற்களைக் கூறுதல்
74. வசதிகள் இருந்தும்,
அவற்றிற்கேற்ப சிறப்பான
இறைப்பணிகளும் வழிபாடுகளும்
செய்யாமல், நடுத்தரமான
அல்லது அதற்கும் குறைவான
வகையில் அவற்றைச் செய்தல்
75. கடவுளுக்கு நிவேதனம்
செய்யப்படாததைப் புசித்தல்
76. அந்தந்தக் காலகட்டத்தில்
விளையும் பழங்கள் போன்ற
பொருள்களை இறைவனார்க்கு அளிக்காமல்
இருத்தல்
77. வேறு வகைகளில் பயன்படுத்திய
பிறகு, எஞ்சியதைக்
கடவுளுக்கு அளித்தல்
78. ஸந்நிதிக்குப் பின்புறத்தில்
அமர்ந்திருத்தல்
79. ஆலயத்துள், பிறரை வணங்குதல்,
80. ஆலயத்தில் கண்ட
தனது ஆசிரியரைக் காணாதது போல்
இருத்தல்
81. தற்பெருமை பேசுதல்
82. எந்த ஒரு ஆலயத்தையும் சார்ந்த
எந்த ஒரு தேவதையையும்
இழிவு படுத்திப்பேசுதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக