செவ்வாய், 31 அக்டோபர், 2017

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 2018 - ஆம் ஆண்டுக்கான மாதாந்திர நடை திறப்பு



சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 2018 - ஆம் ஆண்டுக்கான மாதாந்திர நடை திறப்பு

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 2018 - ஆம் ஆண்டுக்கான மாதாந்திர நடை திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அட்டவணையை, திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு வெளியிட்டுள்ளது.
நிகழாண்டு மண்டல பூஜை மஹோத்சவத்திற்காக வரும் நவம்பர் 15 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்; டிசம்பர் 26 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். மண்டல பூஜை ---டிசம்பர் 26.
மகரவிளக்கு பூஜைக்காக வரும் டிசம்பர் 31 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்; அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 20 - ஆம் தேதி காலை 7 மணி வரை நடை திறந்திருக்கும். ஜனவரி 14 -ம் தேதி மகரவிளக்கு (ஜோதி) இடம்பெறும். ஜனவரி 18-ஆம் தேதி காலை வரை மட்டும்தான் நெய் அபிஷேகம் நடைபெறும்.

பிப்ரவரி: பிப்ரவரி 12 மாலை 5 மணியில் இருந்து பிப்ரவரி 17- ஆம் தேதி இரவு வரை நடை திறந்திருக்கும்.
மார்ச்: மார்ச் 14 மாலை 5 மணியில் இருந்து மார்ச் 19 - ஆம் தேதி இரவு வரை நடைதிறந்திருக்கும். உற்சவத்திற்காக மீண்டும் மார்ச் 20 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி, 30- ஆம் தேதி பங்குனி உத்திரம் ஆராட்டு பூஜை முடிந்து இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
ஏப்ரல்: ஏப்ரல் 10 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 18 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். இதில் 15 -ஆம் தேதி விஷூ கணி தரிசனம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
மே மாதம்: மே 14 மாலை 5 மணியில் இருந்து 19 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். பிரதிஷ்டா தின மஹோத்சவத்துக்காக மே 24 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 25 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
ஜூன் : ஜூன் 14 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 19 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
ஜூலை: ஜூலை 16 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 21 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
ஆகஸ்ட்: ஆகஸ்ட் 16 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 21-ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். ஓணம் பண்டிகைக்காக 23 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 27 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
செப்டம்பர்: செப்டம்பர் 16 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 21 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
அக்டோபர்: அக்டோபர் 16 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 21-ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும்.
நவம்பர்: ஸ்ரீ சித்ர ஆட்ட திருநாளுக்காக நவம்பர் 5 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து 6 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும். 2018 -ஆம் ஆண்டின் மண்டல பூஜைக்காக, நவம்பர் 16 -ஆம் தேதி மாலை 5 மணியில் இருந்து டிசம்பர் 27 -ஆம் தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக