சனி, 26 மே, 2018

வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது



வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது

வாழ்க என்பது வாழ்த்துச் சொல்.

வளமுடன் என்பது ஒரு நிறைவுத் தன்மையைக் குறிக்கும்.

வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத் தன்மையுடன் வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம்.

ஒருவன் எப்போது நிறைவுத் தன்மை அடைய முடியும்?

தேவைகள் பூர்த்தியடையும் போது நிறைவுத் தன்மை ஏற்படும்.

தேவைகளை எப்படி பட்டியலிடுவது.

மனிதனின் பொதுவானத் தேவையை எளிதாக பட்டியலிட்டு விடலாம்.

ஒருவன் மகிழ்ச்சியாக வாழ ஐந்து தேவைகள் முக்கியம்.

1.உடல் நலம்

2.நீளாயுள்

3.நிறைச்செல்வம்

4.உயர்புகழ்

5.மெய்ஞானம்.

இந்த ஐந்தையும் உணர்ந்து அனுபவித்து கடந்து வாழும் வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கை.

உலகின் எல்லா இன்பங்களும் இந்த ஐந்தில் அடங்கிவிடும்.

வாழ்க வளமுடன் என்று ஒருவர் உச்சரித்து வாழ்த்தும் போது, நீங்கள் இந்த ஐந்து செல்வங்களையும் பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்.

இது வெறும் வார்த்தை ஜாலமல்ல ! இதுனூடே ஒரு ஆழமான உளவியல் தன்மை ஒளிந்து இருக்கிறது. அடுத்து இதன் பின் ஒரு அறிவியல் தன்மாற்றமும் இருக்கிறது.

அது என்ன ?

வாழ்க வளமுடன் என்று இன்னொரு முறை உச்சரித்து பாருங்கள். உங்களின் உள் நாக்கு அதாவது தொண்டையின் உள் மேல் பகுதியில் “ழ்” எனும்போது ஒரு அழுத்தம் நிகழ்வதை உங்களால் உணர முடியும்.

உள்நாக்கின் உச்சியில் அதாவது நெற்றிக்கும், பின் மண்டையில் பிடறிக் கண்ணுக்கும் நேர் கோட்டில் ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ளது.

அந்த சூட்சுமம் இந்த பிரபஞ்சத்தோடு நேரடியாக தொடர்புகொண்டிருக்கும் சக்தி.

உங்களின் எண்ணங்களில் எழும் தேவைகளை பிரபஞ்சத்தில் கட்டளையாக மாற்றி அதனை பெற்றுத் தரும் சூட்சுமம் அது.

உங்கள் எண்ணம் வலிமைமிக்கது என்றால், அது உங்கள் மூலமாகவே செயலுக்கு வந்துவிடும். கொஞ்சம் பலகீனமான எண்ணம் என்றாலும் நீங்கள் கவலைப்படத்தேவையில்லை...

நீங்கள் பேரப்பிள்ளைகளை எடுப்பதற்குள்ளாவாவது செயலுக்கு வந்துவிடும். எண்ணம் எப்போது வீணாவது இல்லை.

எண்ணமும் வீணாவது இல்லை. அதனால் எண்ணுவதை வலிமையாக எண்ணுவது சாலச்சிறந்தது.

அந்த சூட்சுமப் பகுதியை அறிவியலில் பீனியல் சுரப்பி என்பார்கள். ஆன்மிகத்தில் துரியம் என்பார்கள்.

வாழ்க வளமுடன் உச்சரிக்கும் போதும் உங்களின் துரியமையம் கட்டளைகள பிரபஞ்சத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்.

ஒருவர் உங்களை வாழ்த்தும் போது நீங்கள் வளமுடன் வாழ கட்டளைகளை அவர் பிரபஞ்சத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறார் என்று அர்த்தம்.

வாழ்க வளமுடன் வெறும் வாழ்த்துச் சொல் அல்ல... அது ஒரு மந்திரச் சொல்.

நன்றி..

 *_நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா?_*

*Kidney :* நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை.

*Stomach :* குளிரூட்டப்பட்ட உணவுகள்.

*Lungs :* புகைப்பிடித்தல்.

*Liver :* கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், மது அருந்துதல்.

*Heart :* உப்பு நிறைந்த உணவு வகைகள்.

*Pancreas :* அதிகப்படியான நொறுக்கு தீனி

*Intestines :* கடல்சார் உணவுகளை பாகுபாடின்றி மிகுதியாக உண்பது.

*Eyes :* Watching TV, Mobile & Computer screens

*Gall bladder :* காலை உணவு தவிர்ப்பது.

நம்மை பாதுகாத்துக் கொள்வது நமது கடமை.

ஏனெனில் பழுதடைந்து விட்டால் இந்த உதிரிபாகங்கள் விலையுயர்ந்து.

மாற்றிப் பொறுத்த மிகவும் செலவு பிடிக்கும்.

எளிதாக கிடைக்காது.

Original போல் இயங்காது.

உண்ணும் உணவில் கவனம் தேவை.

வாழ்க்கை முறையில் கவனம் தேவை.


*ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் 50 இலட்ச்சம்  ஆகும்.*

அந்த 30 இலட்சத்திற்கு என்னென்ன கிடைக்கிறது?

நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா?! முடியாது.

காரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை; ஆகவே, அவனுக்கும் சொந்தம்!

நம் தலைக்கு மேலிருக்கும் கூரையை நம்முடையது என்று சொல்லமுடியுமா? அதுவும் முடியாது; அது, மேல் மாடியில் இருப்பவனுடைய தரை.

ஆகவே, அவனுக்கும் சொந்தமானது!

சரி... வலது பக்க சுவரை நம்முடையது என்று சொல்ல முடியுமா? முடியவே முடியாது...
அது அந்தப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது!

சரி, இடது பக்க சுவர்?! அதுவும் இடதுப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது!

நாம் பயன்படுத்துகின்ற படிக்கட்டுகள், லிப்ட் ?! அவையெல்லாம் மொத்த அபார்ட்மென்டுக்கும் சொந்தமானது!

சரி, நமக்கென்று அபார்ட்மென்ட் வளாகத்தில் ஒரு பத்து சதுரடி இடமாவது கொடுத்திருக்கிறார்களா?

நிச்சயமாக இல்லை... இடம் எல்லோருக்குமே பொதுவானது! அப்படியென்றால்,
*அந்த ஒரு கோடிக்கு நமக்கு கொடுக்கப்பட்டது என்ன?!*

1500 சதுர அடி கொண்ட காலியான அந்த SPACE தான் நமக்கு கொடுக்கப்பட்டது!

சுற்றி இருக்கும் சுவர்களோ, கூரையோ, தரையோ நம்முடையது அல்ல, அந்த சுவர்களுக்கு இடையே உள்ள SPACE மட்டுமே நமக்கு கொடுக்கப்பட்டது!

அபார்ட்மென்ட் வளாகத்தில் உள்ள அத்தனை வசதிகளையும் பயன்படுத்தலாம், அனுபவிக்கலாம்,
ஆனால்,
என்னுடையது என்று உரிமை கொண்டாட முடியாது!

கடவுள் நமக்கு கொடுத்ததும் அதுதான்.

இந்த பூமியில் வாழ்வதற்கான SPACE மட்டும்தான் கொடுத்திருக்கிறார்;

அந்த SPACE ல் இருந்துகொண்டு, உலகத்தில் உள்ள அத்தனை சந்தோஷங்களையும் ரசித்து அனுபவிக்கலாம்,

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம்!

ஆனால், இங்கு இருக்கின்ற எதையும் உரிமை கொண்டாட முடியாது.

கொண்டுசெல்லவும் முடியாது!

என்னுடைய அம்மா எனக்கு தானே சொந்தம் என்று சொல்லலாம்,
ஆனால், அவர் அப்பாவின் மனைவி,
அவருக்கு தான் சொந்தம்.

அதன் பின்புதான் குழந்தைகள் வந்தது!

சரி... அம்மா, அப்பாவுக்காவது சொந்தமா என்றால் அதுவும் இல்லை.

அவர் இன்னொருவரின் மகள்; தாத்தாவுக்கு தான் சொந்தம்!

தாத்தாவும் தனியாக சொந்தம் கொண்டாட முடியாது,
காரணம் பாட்டிக்கும் அதில் சம பங்கு இருக்கிறது!

இப்படி இந்த பூமியில் இருக்கின்ற ஒரு துரும்பு கூட நமக்கு சொந்தமானது இல்லை!

நாம் இங்கு நிரந்தரமாக இருக்கப் போவதுமில்லை...

பிறகு ஏன் பிற மனிதர்கள் மீது கோபம், போட்டி, பொறாமை, வெறுப்பு, வஞ்சகம், சுயநலம் எல்லாம்!?

நமக்கு கொடுக்கப்பட்ட SPACEல் சந்தோஷமாக இருப்போம்.

சக மனிதர்களையும் நேசிப்போம்.

*முடிந்தால், பிறர் சந்தோஷப்படும்படி எதாவது செய்வோம்!*


*"வாழ்வியல் உண்மைகள்"*

குற்றம் பார்க்கின் சுற்றமில்லை’ என்பதை மனத்தில் நன்கு பதிய வையுங்கள். உறவினர் வீடுகளுக்குப் போய் வாருங்கள்; உங்கள் வீட்டிற்கு அவர்களை அழைத்து விருந்துண்ணுங்கள். அதே நேரத்தில், உறவோடு ஒதுங்கி வாழுங்கள்;

 பணத்தைச் சேர்த்து வைக்காதீர்கள். உங்களுக்குப் பின் உங்கள் குழந்தைகள் இதனால், கசப்புணர்வை வளர்த்துப் பகைவர்களாகி விடுகிறார்கள்.

 அவர்களைத் திருப்திப் படுத்தவே முடியாது. அன்பைப் பெரிதும் வெளிக் காட்டாதீர்கள்; அளவோடு அன்பு செய்யுங்கள்.

இரவு பத்து மணிக்கு முன்னர் நிம்மதியாகத் தூங்கி, அதிகாலை ஐந்து மணிக்கு முன்னர் விழித்திடுங்கள். தினமும் குறைந்தது பத்து மணித்துளிகளாவது உடற்பயிற்சி செய்யுங்கள். அதுபோல் தினமும் பத்து மணித்துளிகளாவது காலை அல்லது மாலை உடலில் வெயில் படும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம். உதவி வேண்டுமென்று கேட்டால் மட்டுமே, உதவ வேண்டும்.

 உங்கள் சகோதரர்களையும், சகோதரிகளையும் அவர்கள் குழந்தைகளையும் அளவோடு அன்பு செய்யுங்கள்.

கருத்து வேறுபாடு வரும் பொழுது, எதிர்வாதம் செய்ய வேண்டாம். தவறான கருத்தாக இருந்தாலும், உண்மையை அப்பொழுது கூற வேண்டாம்;

 அமைதியாக இருங்கள். அது உங்களுக்கு மனஅமைதியைக் கொடுக்கும்.

 எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்; அவமானங்களை எதிர்கொள்ளுங்கள்;

 அவமானங்களைத் தாங்கிக் கொள்ளும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். யாருக்கும் துன்பமளிக்காமலும், முடிந்தவரை பிறர் துன்பம் போக்கியும் வாழ்தல் இன்பமான எதிர்காலத்திற்கு வழி.

இவை யாவும் அரை நூற்றாண்டிற்கு மேல் வாழ்ந்த வாழ்வியல் அனுபவங்கள்.

"வாழ்க வளமுடன்"

எந்நாளும் இனியநாளே!

*"நட்பும்,அதன் உணர்வும்"*

பழகிக் கொண்டிருக்கும் மனிதர்களுடன் நட்பு கொள்வது என்பது ஆரம்பத்திலேயே

தவறான அடி எடுத்து வைப்பதாகும். நட்பு என்பது பகிர்தலாக இருக்க வேண்டும்.

உன்னிடம் ஏதாவது இருந்தால் பகிர்ந்து கொள். யார் உன்னிடம் பகிர்ந்து கொள்ள

தயாராக இருக்கிறார்களோ அவர்கள் நண்பர்கள். அது தேவை பற்றி. கேள்வி அல்ல.

நீ அபாயத்தில் இருக்கும்போது ஒரு நண்பன் வந்து உதவ வேண்டும் என்ற தேவையேகிடையாது. அது சம்பந்தமில்லாதது. அவன் வரலாம், வராமலும் இருக்கலாம்

ஆனால் அவன் வர வில்லையென்றால் நீ குற்றமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

அவன் வந்தால் நீ மிகவும் நன்றியோடு இரு, வரவில்லையென்றால் பரவாயில்லை.

வருவதும் வராததும் அவனிஷ்டம். நீ அவனை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை,

நீ அவனை குற்றம் சொல்லக் கூடாது. உனக்கு கெட்ட எண்ணம் எதுவும் இருக்கக்

கூடாது. எனக்குத் தேவை ஏற்படும் போது நீ ஏன் வரவில்லை என்ன வகையான

நண்பன் நீ என்று கேள்வி கேட்கக் கூடாது

நட்பு என்பது சந்தைக்கடைக்குரியது அல்ல. நட்பு என்பது கோவிலுக்குரிய மிக

அரிதான விஷயங்களில் ஒன்றாகும், அது கடைவீதிக்குரியது அல்ல. ஆனால்

உனக்கு அந்த வகையான நட்பைப் பற்றி எதுவும் தெரியாது. நீ அதைக் கற்றுக்

கொள்ள வேண்டும்.

நட்பு என்பது மிகப் பெரும் கலை. அன்பின் பின்னே ஒரு இயற்கையின் உந்துதல்

இருக்கும், நட்பின் பின்னே எந்த இயற்கையின் உந்துதலும் இருக்காது. நட்பு என்பது

தன்னுணர்வு கொண்டது. அன்பு தன்னுணர்வு இல்லாதது.

நாம் அன்பு என்று அழைப்பது மனித உணர்வை விட அதிக விலங்குணர்வு

கொண்டது. நட்பு முழுக்க முழுக்க மனித உணர்வு கொண்டது. உன்

உயிரியலிலேயே உள்கட்டமைப்பு கொண்டதல்ல அது. அது உயிரியலை

சேர்ந்ததல்ல. ஆகவேதான் ஒருவர் நட்பில் உயர்கிறார், அவர் நட்பில்

விழுவதில்லை. அது ஆன்மீக பரிமாணம் கொண்டது.

யார் என்னுடைய உண்மையான நண்பன் என கேள்வி கேட்காதே, பதிலாக நான்

உண்மையான நண்பனா எனக் கேள். எப்போதும் உன்னைக் குறித்துப் பார். நாம் எப்போதும் அடுத்தவர்களைக் குறித்துத்தான் அக்கறை கொள்கிறோம். மற்றவர்களை

பற்றி எதையும் உறுதியாக சொல்வது முடியாத காரியம். அது தேவையுமில்லை.

நீ எப்படி அடுத்தவரைப் பற்றி உறுதி கூற முடியும்

மற்றவர் எப்போதும் மாறுதல்தான். இந்த வினாடி அவர் அன்பாக இருக்கக் கூடும்,

அடுத்த வினாடி அவருக்கு அன்பு இல்லாமல் இருக்கக் கூடும். அங்கு எந்த

உறுதிமொழியும் கிடையாது. நீ உன்னைப் பற்றி வேண்டுமானால் உறுதியாக

கூறலாம், ஆனால் அதுவும் இந்தக் கணம் மட்டுமே.

எதிர்காலம் முழுமையையும் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த கணத்தைப்

பற்றி, நிகழ்காலத்தைப் பற்றி மட்டும் நினைத்தால் போதும். நிகழ்காலத்தில் வாழு.

இப்போது இந்த கணத்தில் நட்பும் நட்பின் மணமும் நிரம்பியிருக்கும் போது எதற்காக

அடுத்த கணத்தைப் பற்றி கவலைப் பட வேண்டும் அடுத்த கணம் இந்த

கணத்திலிருந்தே பிறக்கிறது. அது உயர்ந்த ஆழ்ந்த இயல்பாக இருந்தாக வேண்டும்.

அது அதே மணத்தை உயர்ந்த இடங்களுக்கும் கொண்டு வரும். அதைப் பற்றி

நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த கணத்தை ஆழ்ந்த நட்புடன் வாழு.

நட்பு யாரையும் குறிப்பாக நினைத்து இருந்தாக வேண்டிய அவசியம் இல்லை. - நீ குறிப்பிட்ட ஆட்களுடன்தான் நட்பாக இருக்க முடியும் என்பது பழைமையான கருத்து.

வெறுமனே நட்பாக இரு. நட்பை உருவாக்கிக் கொள்வதற்கு பதிலாக நட்புணர்வை

உருவாக்கிக் கொள். அது உனது இருப்பின் இயல்பாக மாறட்டும். உன்னைச் சுற்றி

சூழலை உருவாக்கிக் கொள். அப்போதுதான் உன்னருகில் யார் நெருங்கி வந்தாலும்

நீ அவர்களுடன் நட்புணர்வோடு இருக்க முடியும்.

இந்த பிரபஞ்சம் முழுவதும் நட்புணர்வாக வேண்டும். நீ இந்த இயற்கையுடன்

நட்புணர்வுடன் இருந்தால் ஆயிரம் பங்கு அதிகமாக அது உன்னுடன் நட்புணர்வுடன்
இருக்கும். அதே வழியில் ஆனால் அதிகமான அளவு அது உனக்கு திருப்பித்
தரும். அது உன்னை எதிரொலிக்கும்.

 "வாழ்க வளமுடன்"  .... எந்நாளும் இனியநாளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக