வியாழன், 30 ஆகஸ்ட், 2018

கிருஷ்ண ஜெயந்தி


கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி ( சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி (कृष्ण जन्माष्टमी) ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது. கிரெகொரியின் நாட்காட்டியின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். கோகுலாஷ்டமி என்று தென்னிந்தியாவில் இவ்விழா குறிக்கப்படுகிறது.
கிருஷ்ண ஜெயந்தி விழா சமயத்தில் விற்கப்படும் கிருஷ்ணர் சிலைகள்
மும்பையில் கோவிந்தாக்கள் தயிர்க்கலசத்தை எட்ட மனித நாற்கூம்பு அமைத்தல்
இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப் படுகிறது.
வட இந்தியாவில்
ராச லீலா மற்றும் தகி அண்டி (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும்.
மகாராட்டிரத்தில் பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு)அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அரசியல்கட்சிகளும் வணிக நிறுவனங்களும் புரவல் நல்கும் இவ்விழாக்களில் வெண்ணைத்தாழியை அடைந்தவர்களுக்கு பெரும் நிதிப் பரிசுக்கள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும்போது தண்ணீர் அடித்து அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது .

தென்னிந்தியாவில்

தென்னிந்திய வீடு ஒன்றில் ஸ்ரீஜெயந்தி கொண்டாடப் படுகிறது.
தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள், பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர்.தற்காலத்தில் தேரோட்டம் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கேரளாவில் குருவாயூர் கோவிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை கிருஷ்ண ஜெயந்தி. கிருஷ்ண ஜெயந்தி அன்று குருவாயூர் கோவிலுக்கு ஒரு லட்சம் அளவிலான பக்தர்கள் உலகெங்கும் இருந்து வருகின்றனர்.
கிருட்டிணன் நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை,முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.


கிருஷ்ண ஜெயந்தி: கண்ணன் பிறந்தான்... எங்கள் கண்ணன் பிறந்தான்....

ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திர நன்னாளில் பகவான் கிருஷ்ணரின் அவதாரம் நிகழ்ந்தது. எட்டு என்பது ராசியில்லாத எண் என்றும் அஷ்டமி திதி ஆகாத திதி என்றும் ஒரு இருக்கிறது. ஆனால் அஷ்டமியில் எட்டாவது குழந்தையாக பகவான் அவதாரம் நிகழ்ந்துள்ளது. அதனால்தான் ஆவணி மாதம் அஷ்டமியை ஜென்மாஷ்டமியாக கொண்டாடுகின்றோம்.
நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் வீடுகளை அலங்கரித்து கண்ணனின் பாதங்களை வரைந்து அலங்கரித்துள்ளனர். ஆலயங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன.
பகவான் கண்ணன் அவதாரம் எவ்வாறு நிகழ்ந்தது? என் நிகழ்ந்தது என்பதை கதைகள் மூலமாகவும் திரைப்படங்கள் மூலமாக அறிந்திருப்போம்.
அரக்க குணம் கொண்ட கம்சனை அளிக்கவும், குருச்சேத்திர போர் மூலம் 100 கவுரவர்களையும் அவர்களுக்கு உதவியவர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும் கண்ணன் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன. பகவானின் அவதாரத்தையும், அவரது வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களையும் அறிந்து கொள்வோம்.
தன் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திரு மணம் முடிந்ததும், அவர்களை தேரில் வைத்து ஊர்வலமாக சென்று கொண்டிருந்தான் கம்சன். அப்போது, 'உன் தங்கைக்கு பிறக்கப்போகும் எட்டாவது ஆண் குழந்தையால் உன் உயிர் போகும்' என்று ஒரு அசரீரி ஒலித்தது.
தன் உயிர் போகும் என்ற வார்த்தையைக் கேட்டதும், பாசம் வைத்திருந்த தங்கையின் மீது வாளை வீசும் முடிவுக்கு வந்திருந்தான்.
'கம்சா! தேவகிக்கு பிறக்கப்போகும் எட்டாவது மகனால்தானே உனக்கு அழிவு. அவளுக்கு பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன். தேவகியை விட்டு விடு!' என்று வாசுதேவர் கூறவே, தேவகியை கொல்லும் எண்ணத்தை கைவிட்டான் கம்சன்.
உடனே வசுதேவரையும் தேவகியையும் சிறையில் அடைத்து, தன் கண் காணிப்பிலேயே வைத்துக் கொண்டான். தேவகிக்கு பிறந்த குழந்தைகளை தொடர்ச்சியாக கொன்றுவிட்டான் கம்சன். 8வது குழந்தையின் கருவை தன் வயிற்றில் சுமந்திருந்தாள் தேவகி. இந்த குழந்தையும் தன் அண்ணனின் கையால் இறக்கப்போவதை எண்ணி, கர்ப்பவதியான தேவகி கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள்.
ஒரு நள்ளிரவு நேரத்தில் தேவகிக்கு எட்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையைப் பார்த்ததும் வசு தேவருக்கும், தேவகிக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி, மறுகணமே மறைந்து போனது. பொழுது விடிந்ததும் கம்சன் வந்து குழந்தையை கொண்டுபோய்விடுவான் என்பதால் அவர்கள் கலக்கம் கொண்டிருந்தனர்.
அப்போது குழந்தை, மகாவிஷ்ணுவாக சுய உருகொண்டு பேசத் தொடங்கியது. 'உங்களது முற்பலனால் நான் உங்கள் மகனாக பிறந்துள்ளேன். என்னை கோகுலத்திற்கு கொண்டு செல்லுங்கள். அங்கு வசுதேவரின் நண்பரான நந்தகோபருக்கு பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்து விடுங்கள். யாசோதை என்னை வளர்க்கட்டும். உரிய நேரத்தில் எல்லாம் நல்ல விதமாக நடக்கும்' என்று கூறிய விஷ்ணு பகவான், மறுகணமே சாதாரண குழந்தையாக மாறினார்.
குழந்தையை மாற்றுவதற்கு தோதாக, சிறையின் வாயில்கள் தானாக திறந்தன. காவலர்கள் மயக்கமுற்றனர். வசுதேவர் சற்றும் தாமதிக்காமல், குழந்தையை ஒரு கூடையில் எடுத்து வைத்தபடி கோகுலம் சென்றார். குழந்தையை மாற்றிக் கொண்டு, பெண் குழந்தையை கொண்டு வந்தார்.
காலையில் தேவகிக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டு வந்த கம்சன், பெண் குழந்தையைப் பார்த்ததும் வியப்படைந்தான். ஆண் குழந்தைதானே பிறந்திருக்க வேண்டும் என்று எண்ணியவன் இறுதியில் எந்தக் குழந்தையாக இருந்தாலும் அதை அழித்து விடுவது என்ற முடிவில், பெண் குழந்தையை வாளால் வெட்ட ஓங்கினான்.
ஆனால் அந்தக் குழந்தை மேல் நோக்கி பறந்தது. துர்க்கையாக வடிவெடுத்தது. 'ஏ! கம்சா! உன்னைக் கொல்லப்போகிறவன், வேறொரு இடத்தில் பத்திரமாக இருக்கிறான். உரிய நேரத்தில் அவன் உன்னை அழிப்பான்' என்று கூறி மறைந்தது.
பிருந்தாவனத்தில் கண்ணன்
பிருந்தாவனத்தில் குழந்தை கண்ணன் வெண்ணெய் திருடி, தயிர் பானையை உடைத்து கோபியர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தான். கண்ணனின் குறும்புகள் தாங்காத தாய் யசோதை உரலில் கட்டினாள். மர உரலில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர், தன் முன் இரண்டு அர்ஜுன மரங்கள் நிற்பதைக் கவனித்தார். இந்த இரண்டு அர்ஜுன மரங்களும் பிரபலமான தேவர்களான நளகூவரனும் மணிக்கிரீவனும், தேவர்களின் பொக்கிஷதாரனும் சிவபெருமானின் பெரும் பக்தனுமான குவேரனின் இரு மகன்கள் ஆவார்கள்.
நாரதர் அளித்த சாபத்தினால் அந்த இரு தேவர்களும் இரட்டை அர்ஜுன மரங்கள் என்று பெயர் பெற்ற மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளாந்து, ஸ்ரீ கிருஷ்ணரை நேரில் காணும் நல் வாய்ப்பைப் பெற்றார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணர் அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டதும் அதை பலமாக இழுத்தார். அப்போது மரங்கள் வேரோடு சாய்ந்ததும் அவைகளில் இருந்து நளகூவரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவர்கள் தோன்றினார்கள். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரை பலமுறை வலம் வந்து, சிரம் தாழ்த்தி வணங்கி துதித்து மறைந்தனர்.
கேட்டும் கொடுப்பான்... கேட்காமலும் கொடுப்பான் கண்ணன்
கிருஷ்ணருடைய பால்ய நண்பர்களில் சுதாமர் எனப்படும் குசேலரும் ஒருவர். இருவரும் ஒன்றாக குருகுல வாசம் செய்தவர்கள். குருகுல வாசம் முடிந்தவுடன் அவரவர் தத்தம் இல்லம் திரும்பினர். சுதாமரும் திருமணம் செய்துகொண்டு நிறையக் குழந்தைகளையும் பெற்றார்.
இவர்களுடைய வறுமையைக் கண்டே சுதாமரை எல்லோரும் குசேலர் என அழைக்க ஆரம்பித்தனர். ஒரு நாள் அவள் குசேலரைப்பார்த்து, கிருஷ்ணரைக் கண்டு கஷ்டம் நீங்க ஏதாவது உதவி பெற்று வருமாறு கூறி, கிருஷ்ணருக்குக் கொடுக்க ஒரு கந்தல் மூட்டையில் வேறொன்றும் இல்லாததால் சிறிது அவலை கட்டிக் கொடுத்தாள்.
குசேலரும் துவாரகையும் சென்று சேர்ந்தார். கந்தல் மூட்டையுடன் நின்ற அவரைக் கிருஷ்ணரும் வந்து வரவேற்றார், அவரை உள்ளே அழைத்துச் சென்று மஞ்சத்தில் உட்கார வைத்தார். ருக்மிணியை அழைத்து அறிமுகமும் செய்து வைத்தார். உணவு உபசாரங்கள் எல்லாம் முடிந்த பின் பழைய கதைகளைப் பேசினர்.
அப்போதும் தாம் வந்த காரணத்தை குசேலரால் சொல்லமுடியவில்லை, அந்த பரந்தாமனுக்காக அவல் கொண்டுவந்திருப்பதையும் தெரிவிக்க முடியவில்லை. தம்மை இவ்வளவு உயர்வாக உபசரித்த கிருஷ்ணருக்கு கேவலம் இந்த அவலையா கொடுப்பது. சர்வாந்தர்யாமியான கிருஷ்ணனோ ஒன்றும் தெரியாதவர்போல, குசேலரைப் பார்த்து நீங்கள் வரும்போது அண்ணியார் எனக்கு ஒன்றும் கொடுத்தனுப்பவில்லையா? அவர் சௌக்கியம் தானே? என்றெல்லாம் கேட்டார். குசேலர் தமது துணியில் முடிந்து வைத்திருந்த மூட்டையப் பார்த்து, இது என்ன என்று வினவியவாறே அதை வெடுக்கென்று பிடுங்கிப் பார்த்தார்.
அவலைக் கண்டதும், சுதாமரே, எனக்குப் பிடித்தமான அவலைக் கொண்டு வந்துள்ளீரே என அதில் ஒரு வாய் அள்ளிப் போட்டுக் கொண்டார். அடுத்து ஒரு பிடி அவலை எடுக்கும் போது ருக்மிணி அதைப் பிடுங்கி தமது வாயில் போட்டுக் கொண்டார். கேவலம் இந்த அவலையா இவர்களுக்குக் கொடுத்தோம் என நினைத்துக் கொண்டே குசேலர் தமது ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானார்.
தாம் கேட்க வந்ததை விட பெரும் பாக்கியமான அந்த பரந்தாமனின் அருகாமையில் சிறிது நேரம் கழிக்க முடிந்ததே போதும் என தம்மைச் சமாதானப்படுத்திக் கொண்டார். வீடு திரும்பிய குசேலர் தாம் கேட்காமலேயே வறுமை என்பதே அதன் பிறகு தமது வாழ்க்கையில் இல்லாது மறைந்து பகவானின் அனுக்கிரகத்தால் தமது மனைவியோடும் குழந்தைகளோடும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார். பகவான் கிருஷ்ணர் கேட்டவர்களுக்கு மட்டுமல்ல கேட்காதவர்களுக்கும் வரமளிப்பவன் என்பதை இந்த கதைகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.


கிருஷ்ண ஜெயந்தி விரத முறையும் பலனும்!

கிருஷ்ண ஜெயந்தி விரத முறையும் பலனும்: கண்ணன் பிறந்த ஆவணி மாத ரோகிணி நட்சத்திரம், மற்றும் பிறந்த திதியான அஷ்டமியைக் கணக்கிட்டு கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இவ் விழாவை வட நாட்டினர் சிறப்பாக கொண்டாடுகின்றனர் அன்று கண்ணன் லீலைகளை சித்தரிக்கும் பொம்மைகளை வைத்து வீடுகளில் கொலு பிரதானமாக இடம்பெறும்.
விரதமுறை: கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், வெண்ணெய், அவல், பழங்கள் மற்றும் வெண்ணெய் சர்க்கரை கலந்த நவநீதம் என்னும் கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும் வெல்லச்சீடை, உப்பு சீடை, முறுக்கு, லட்டு, மைசூர்பாகு, தேன்குழல், மனோகரம், திரட்டுப்பால், பர்பி போன்றவற்றையும் படைக்கலாம் இந்நாளில் தன்னை அழைக்கும் பக்தர்களின் வீட்டிற்கு கண்ணன் வருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை எனவே, அன்று வீட்டைச் சுத்தப்படுத்தி, அலங்கரித்து, வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து வருவது போல், அவனது பாதச்சுவடுகளை மாக்கோலமிட்டு வரவேற்கலாம் கண்ணனை பற்றிய துதிப்பாடல் பாடுவது, தோத்திர பாடல்கள் பாட வேண்டும்.
பலன்: கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை இன்றும் உள்ளது.


கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி, கண்ணன் பிறந்த நாள்

மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணர் இந்திய மனங்களில் பல்வேறு விதங்களில் குடிகொண்டிருப்பவர். மீராவுக்கோ காதலர், ராதாவுக்கும் அவ்வாறே. அர்ஜுனனுக்கோ நண்பர், தத்துவ ஞானி, வழிகாட்டி.
நாம் என்னவாக இருக்கிறோமோ அதன் படியே நமக்கு காட்சி தருபவர்தான் கிருஷ்ணர். பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்த போது அவருக்கும் ஒரு தரிசனம் கொடுக்கிறார். ஆனால் முழு ஆயுதபாணியாகக் காட்சி தருகிறார். ஏனெனில் பீஷ்மர் ஒரு போர் வீரர். அவருக்குப் போர் வீரராகவே காட்சியளிக்கிறார்.
விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும் வனமாலி கதீ சாங்கி சங்கீ சக்ரீச்ச நந்தகீ என்ற ஸ்லோகம் பீஷ்மருக்கு கிருஷ்ணர் கொடுத்த போர்வீரர் தரிசனத்தைக் குறிப்பதாகும்.
இந்துக் கடவுளர்களில் பக்தர்கள் மனத்தில் தனது தீராத விளையாட்டுத் தனத்தினால் அதிகம் குடிகொண்டிருப்பவர் கிருஷ்ண பகவான்தான்.
இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ணர் பிறந்த தினம் அஷ்டமி. ராமர் பிறந்த தினம் நவமி.
கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது. பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு அருளிய உபதேசங்களுடன் இந்திய தத்துவ சாரங்களின் அடிப்படைகளை ஒன்று கலந்து கொடுக்கப்பட்டுள்ள நூல், பகவத் கீதையாகும்.
இந்த நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களைச் செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரைத் தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தி தொடர்பான மேலும் சில பக்கங்கள் இங்கே:
முகுந்தா.. முகுந்தா..!
எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார். அந்த வகையில் அதர்மத்தை அழிக்க பகவான் கிருஷ்ணன் பூலோகத்தில் வந்து பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது.
மேலும் வாசிக்க இங்கே சொடுக்குங்கள்
கண்ணனின் கதை
கிருஷ்ணர்  பிறந்த அந்த சிறியச் சிறைச்சாலையின் மீது கத்ரகேஷப் தேவ் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. அதன் கீழ்தளத்தில் பழைய சிறைச்சாலை அப்படியே உள்ளது. கண்ணன் பிறந்த இடமாக அது வழிபடப்படுகிறது.
மேலும் வாசிக்க இங்கே சொடுக்குங்கள்
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் - பொட்டுக்கடலை முறுக்கு கிருஷ்ண ஜெயந்தி அன்று, பல விதமான பலகாரங்களை நமது வீட்டில் செய்து வழிபடுவது வழக்கம். அவ்வகையில் கிருஷ்ண ஜெயந்திக்குப் பிரத்யேகமான இந்தச் சுவையான பொட்டுக்கடலை முறுக்கைச் செய்து சுவைத்து மகிழுங்கள்.



வித்தியாசமான சில கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ரெசிபிக்கள்!!

மாயக்கண்ணன் கிருஷ்ணன் பிறந்த நாளைத் தான் கிருஷ்ண ஜெயந்தியாக நாம் கொண்டாடுகிறோம். கிருஷ்ண ஜெயந்தி வந்தாலே நமக்கு குஷியாக இருக்கும். ஏனெனில் அனைவரது வீட்டிலும் கிருஷ்ணனுக்கு படைப்பதற்காக பலகாரங்களை செய்வார்கள். இதனால் நம் வயிற்றுக்கு நல்ல இனிப்பு விருந்து கொடுக்கலாம்.
குறிப்பாக இந்நாளில் கிருஷ்ணனுக்கு பிடித்த பலகாரங்களான பால் பொருட்கள் கொண்டு செய்யப்படும் பலகாரங்களை அதிகம் செய்வார்கள். அத்துடன் சீடை, முறுக்கு போன்றவற்றையும் செய்வார்கள். நீங்கள் இந்த வருட கிருஷ்ண ஜெயந்திக்கு வித்தியாசமான ரெசிபிக்களை செய்ய நினைத்தால் தொடர்ந்து படியுங்கள். ஏனென்றால் இங்கு சில வித்தியாசமான இனிப்பு மற்றும் கார பலகாரங்கள் செய்முறையுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

மிஸ்டி தோய்
பெங்காலியில் கிருஷ்ண ஜெயந்திக்கு செய்யப்படும் ஒரு இனிப்பான ரெசிபி தான் மிஸ்டி தோய். நீங்கள் இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலாக செய்யலாம்.
செய்முறை
பாதாம் அல்வா
பாதாம் உடலுக்கு ஆரோக்கியமானது. அத்தகைய பாதாமைக் கொண்டு இந்த வருடம் அல்வா செய்து கிருஷ்ணனுக்கு படையுங்கள்.
செய்முறை
ரோஜாப்பூ கீர்
இந்த வருடம் கிருஷ்ணனை கவரும் வண்ணம் ஒரு அருமையான படையல் செய்ய நினைத்தால், ரோஜாப்பூ கீர் செய்து படையுங்கள். இது மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, வீட்டில் உள்ள குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.
செய்முறை
மைதா சீடை
சீடை கூட கிருஷ்ணனுக்கு பிடித்த ஓர் தின்பண்டம். அதிலும் மைதா சீடையை செய்தால், உங்கள் வீட்டு செல்ல கிருஷ்ணனும் விரும்பி சாப்பிடுவார்கள்.
செய்முறை
பால்கோவா
பால்கோவா என்றதும் பலருக்கும் எச்சில் ஊறும். அத்தகைய பால்கோவா கிருஷ்ணனுக்கும் பிடித்த ஓர் இனிப்பு. அந்த பால்கோவாவை எப்படி சுவையாக செய்வதென்று தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ளதை கிளிக் செய்யுங்கள்.
செய்முறை
அதிரசம்
அதிரசம் பலரது மிகவும் விருப்பமான ஓர் இனிப்பு பலகாரம். அந்த அதிரசத்தை பலருக்கும் செய்யத் தெரியாது. எனவே அவர்களுக்காக இதை எப்படி எளிமையாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
செய்முறை
பாதாம் லட்டு
பாதாம் கொண்டு அல்வா மட்டுமின்றி, லட்டு கூட செய்யலாம். கிருஷ்ணனுக்கு லட்டு என்றால் பிரியம். எனவே பலரும் லட்டு செய்வார்கள். ஆனால் இந்த வருடம் சற்று வித்தியாசமாக பாதாம் லட்டு செய்து படைக்கலாமே!
செய்முறை
ரவா சீடை
சீடையில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று ரவா சீடை. இந்த சீடையைக் கூட கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணனுக்கு செய்து படைக்கலாம்.
செய்முறை

1 கருத்து:

  1. இருளில் தோன்றிய ஒளி

    இருளில் தோன்றிய ஒளி
    இடரினை களையும் ஒளி
    உருவில் சிறியனாகி அகிலம் அளந்த ஒளி
    சிறுவிரலில் பெருமலை தூக்கிய ஒளி
    கருவினில் பாண்டவர் குலம் காத்த ஒளி
    தெருவெல்லாம் தேடித்தேடி வெண்ணை உண்ட ஒளி
    மறுபிறப்பை நீக்கிடும் மாதவர் போற்றும் ஒளி
    அரற்றும் கோபியர் அழிதுயர் தீர்த்த ஒளி
    முரனைக்கொன்று இன்பம் பயத்த ஒளி
    இம்சை மிகவே புரிந்து இருந்துயர் செய்
    கம்சனையே களைந்து கடிதில் காத்த ஒளி
    அரியணை விரும்பும் துரியனிடம் தூதாகும் ஒளி
    விதுரனின் வீட்டில் விருந்தாகி மகிழும் ஒளி
    விஜயனின் சாரதியாய் விளங்கும் ஒளி
    அஜாதசத்ருவை அணிசெய்யும் ஒளி
    அற்புதமாம் கீதைதனை தந்த ஒளி
    சிற்பர யோகியர் சிநதையில் திகழும் ஒளி
    அஷ்டமித் திருநாளில் அவதரித்த ஒளி
    இஷ்டமாய் தொழுது எந்நாளும் எளியவர்க்கு அளி!!

    களியுண்டபோதும் கலங்காதே கருத்தெல்லாம் கரியமேனியன் பால் வைத்து அளிமுரலும் ஓசைபோல் அவன் நாமமே உரைத்து விதி இதுவே எனநினைந்த போது கார்மேனிச்செங்கண் கதிர் !!மதியம்போல் ஒளிபடர நின்றநிலை கண்ட
    தேவகி வசுதேவன் மகிழ அட்டமிநாள் அவதரித்ததே

    பதிலளிநீக்கு