புதன், 3 அக்டோபர், 2018

பழமையான சிவ லிங்கம்



பழமையான சிவ லிங்கம்

உலகின் மிகப் பழமையான சிவ லிங்கம் 'ஹரப்பா' வில் உள்ளது.

அதற்கு அடுத்த பழமையான சிவ லிங்கங்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன. அதில் இரண்டு மிகப் பழமையானவை. ஒன்று காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள சிவ லிங்கம்.

அடுத்து, 'குடிமல்லம்' என்ற இடத்தில் உள்ள சிவ லிங்கம். பழைய எல்லைப்படி இது தமிழகம். இன்றைய எல்லைப்படி இது ஆந்திரா. ஆம் ரேணிகுண்டாவிற்கு அருகில் உள்ள ஊர்.
இந்த குடிமல்லம் பரசுராமேஸ்வர சிவன் கோயில் ASI(Archeological Survey of India) -ன் கட்டுப்பாட்டில் உள்ளது. உலகில் சிவ லிங்கத்தை ஆராய்ச்சி செய்பவர்களின் கருத்துப்படி இதுவே மிகவும் பழமையான சிவ லிங்கம்.

இந்த லிங்கம் முதல் நூற்றாண்டுக்கும் முந்தைய பழமையான லிங்கம் என கண்டறிந்துள்ளனர். இக்கோவில் சுவர்ணமுகி என்னும் ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது பக்தன் பரசுராமேஸ்வரன் என்பவன் இவ்வீசனை தினமும் சுவர்ணமுகி ஆற்றின் நீரை கொண்டும் பலவித மலர்களை கொண்டும் பூஜை செய்து வந்தான். அவன் பக்தியில் மனம் குளிந்த ஈசன் பக்தனுக்கு காட்சி தந்து பக்தனின் பெயரிலே லிங்கமாக காட்சி அளிக்கிறார். இங்கு சூரியன் மற்றும் ப்ரம்மாவும் பூஜை செய்துள்ளனர். சுவர்ணமுகி ஆற்றின் நீரை கொண்டே இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் கற்கள் முதல் நூற்றாண்டுக்கும் முந்தைய உள்ள மிக நீண்ட கற்களாக உள்ளது.

ஆன்மீகத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் காண வேண்டிய சிவ ஸ்தலம்.
உண்மை. மிகவும் சாதாரணமாக இருக்கும் என்பதற்கு இந்த ஊர் சிவ லிங்கம் ஒரு உதாரணம். மக்கள் யாரும் இந்த ஊருக்கு வருவதில்லை. நன்கு விஷயம் அறிந்தவர்கள் மட்டுமே இந்த ஊர் கோயிலில் உள்ள சிவ லிங்கத்தை காண வருகின்றனர். உண்மை ஆன்மீகத்திற்கான திறவுகோல் இந்த சிவ லிங்கம். உண்மையில் தேடுபவர்களுக்கு மட்டுமே உண்மைப் பொருள் விளங்கும்.

இத்தனை முக்கியமான சிவன் கோயிலுக்கு மக்கள் வருவதே இல்லை.ஆனால் ரேணிகுண்டாவை தாண்டித்தான் லட்ச கணக்கானோர் திருப்பதிக்கு செல்கின்றனர்.

அப்படி என்ன இந்த சிவ லிங்கத்தில் உள்ளது என்பது என்பதை காண ஆன்மீகவாதிகள் சென்று முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒருமுறையாவது அந்த சிவ லிங்கத்தை நேரில் சென்று தரிசனம் செய்ய தவறாதீர்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக