வெள்ளி, 5 அக்டோபர், 2018

குலசை தசரா திருவிழா

குலசை தசரா திருவிழா

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற புரட்டாசி மாதம் 24ம் நாள் (10.10.2018) புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி புரட்டாசி மாதம் 23ம் நாள் அக்டோபர் 9ந்தேதி மதியம் 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு காப்பு கட்டுதல் நடைபெற உள்ளது.

*கொடியேற்றம்:*

முதலாம் திருநாளான அக்டோபர் 10ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதி உலா, காலை 9 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்றம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவில் அன்னை முத்தாரம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

*10/10/2018:*

1-ம் திருநாள் இரவில் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலம்

*11/10/2018:*

2–ம் திருநாள் இரவில் கற்பகவிரிசம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலம்.

*12/10/2018:*

3–ம் திருநாள் இரவில் ரிஷபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலம்.

*13/10/2018:*

4–ம் நாள் இரவில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலம்.

*14/10/2018:*

5–ம் திருநாள் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலம்.

*15/10/2018:*

6–ம் திருநாள் இரவில் சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலம்.

*16/10/2018:*

7–ம் திருநாள் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலம்.

*17/10/2018:*

8–ம் திருநாள் இரவில் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலம்.

*18/10/2018:*

9–ம் திருநாள் சரஸ்வதி பூஜை அன்று இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலம்.

*19/10/2018:*

 *(சூரசம்காரம்)*
10–ம் திருநாளான ஐப்பசி 2ம் நாள் அக்டோபர் 19ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி, மகிஷாசுரனை வதம் செய்யும் மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது.

*20/10/2018:*

11–ம் திருநாள் அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.
அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவிலுக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் முடிந்து, அதிகாலை 3 மணிக்கு திருத்தேரில் பவனி வந்து தேர் நிலையம் வந்தடைகிறார்.

*பாலாபிஷேகம்:*

காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதி உலா புறப்படுதல், மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்தல், மாலை 6 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.

*21/10/2018:*

12–ம் திருநாளான அக்டோபர் 21ந்தேதி (ஞாயிறுக்கிழமை ) காலையில் அபிஷேக ஆராதனைகள், மதியம் சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக