ஞாயிறு, 6 அக்டோபர், 2019

வீட்டினுள் மூதேவி வர என்ன காரணம்

வீட்டினுள் மூதேவி வர என்ன காரணம்

மூதேவி : நம் வீட்டில் என்ன தான் பணம் சம்பாதித்தாலும் சேமிப்பு என்பது இருக்காது. சம்பாதித்த பணத்தில் கடன்கள் கொடுத்து வருவதுமாக இருக்கும். கடவுளே இந்த மாத இது செலவு இல்லை,

சேமிப்புதான் என்று நினைக்கும் நேரத்தில் தான் ஏதாவது வீண் செலவுகள் வரும். இல்லையெனில் குடும்பத்தில் சண்டைகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே சச்சரவுகள் அதிகரிக்கும்.

காலையில் வீட்டினை சுத்தம் செய்யாமல் இருப்பது.காலையில் சீக்கிரமாகவே வீட்டை கூட்டி விடணும்.மாலையில் சூரியன் மறைந்த பிறகு வீடு மற்றும் வாசலை கூட்டுவது.

அதன்பிறகு கூட்டினால் வீட்டுக்கு வரும் தேவி மீது கூட்டி தள்ளுவது போல் ஆகும்.அடுப்பினை துடைக்காமல் புழங்குவது.

எப்பொழுதும் காலையில் எழுந்த உடனே அடுப்பை சமைப்பதற்கு முன் கண்டிப்பாக துடைத்துவிட்டு தான் சமைக்க வேண்டும்.

வீட்டினுள் உப்பு, சீனி, அரிசி, பால் முழுமையாகத் தீர்ந்த பிறகுதான் மீண்டும் வாங்குவீர்கள்.

நான் மேலே சொன்ன பொருட்கள் தீர்வதற்கு முன்பே வாங்கி வையுங்கள். அது செல்வத்தின் பொருட்கள். வீட்டில் பணம் இருக்கோ இல்லையோ, ஆனால் அந்த பொருட்களை குறையாமல் இருந்தாலே போதும்.

வீட்டினுள் எச்சில் பாத்திரங்களை கழுவாமல் அதிக நேரம் அப்படியே வைத்திருப்பது.

எச்சில் பாத்திரங்கள் அனைத்துமே வீட்டு சுத்தமில்லாத போல் காட்டும். நம் வீட்டிற்கு ஒரு விருந்தாளி பார்த்தாலே நமக்கு ஒரு மாதிரி ஆகும்.

வீட்டிற்குள் லட்சுமி கடாட்சம் இருக்க வேண்டும் என்றால் நாம் தானே சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

சில பெண்கள் வாரத்தின் செவ்வாய் மற்றும் வெள்ளியில் தலை குளிக்காமல் இருப்பது. மீதி நாட்களில் தலை குளிப்பது.

சில பெண்கள் வாரத்தில் ஏழு நாளும் தலைக்கு குளிப்பார்கள் அவர்களை பற்றி கவலை இல்லை. ஆனால் வாரத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் குளிக்கிறேன் என்ற பெயரில் செவ்வாய் வெள்ளியில் குளிக்க மறந்துவிடுவார்கள்.

நேற்று தானே தலை குளித்தோம் இன்று ஏன் மீண்டும் குளிக்கவேண்டும் என்ற எண்ணதால் குளிக்க மாட்டார்கள். கண்டிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளியில் தலை குளிக்க வேண்டும். தெய்வத்தையும் வழிபட வேண்டும்.

சில ஆண்கள் புதன் மற்றும் வெள்ளியில் தலை குளிக்காமல் இருப்பது.

ஆண்கள் வாரத்தில் ஏழு நாளும் தலை குளித்தாலும் சரிதான். ஆனால் குளிக்க முடியாதவர்கள் புதன் மற்றும் வெள்ளியில் கண்டிப்பாக தலை குளிக்க வேண்டும்.

வீட்டில் ஆண்கள் விளக்கு ஏற்றுவது.

வீட்டினுள் எப்பொழுதும் பெண்கள் தான் விளக்கேற்ற வேண்டும் ஆண்கள் விளக்கேற்றக்கூடாது.

வீட்டினுள் சில வார்த்தைகள் பேசக்கூடாது. அதாவது கிடைக்காது, வராது, இல்லை, அப்படி என்கிற வார்த்தைகள் அதிகம் உபயோகப்படுத்துவது.

வீட்டில் பேச்சு வார்த்தைகளில் மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் அதிகம் உபயோகப்படுத்தாதீர்கள். வீட்டில் எப்போதும் இல்லை என்று சொன்னால் இல்லாமலே போய்விடும். கிடைக்கவே கிடைக்காது என்றாலும் கிடைக்காது.

எல்லாம் இருக்கு கிடைக்கும் என்று பேசி பழகி கொள்ளுங்கள்.இவைகளைத் தொடர்ந்து வீட்டினுள் செய்து பாருங்கள் கண்டிப்பாக லட்சுமி கடாட்சம் உங்கள் வீட்டிற்குள் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக