வியாழன், 12 ஜூலை, 2018

கோமாதா பற்றி அரிய தகவல்கள்


கோமாதா பற்றி அரிய தகவல்கள்

பசுவை ‘கோ மாதா’ என்று சிறப்பித்து அழைக்கின்றன வேதங்களும், புராணங்களும். பசுவை தெய்வமாக வழிபடும் முறை நம்மிடையே இருக்கிறது. பசுவிற்கு உணவளிப்பதே பலவற்றுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட கோ மாதா பற்றிய சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.

* கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தது பசுதான். எனவேதான் அவரை கோபாலகிருஷ்ணன் என்று அழைக்கிறோம்.

* #கோ பூஜை நடத்தும் போது கண்டிப்பாக பசுவுடன் அதன் #கன்றும் இருக்க வேண்டும். #கோபூஜை செய்வதால் #பணக்கஷ்டம் நீங்கும். #சஷ்டியப்பூர்த்தி, #சதாபிஷேகம் ஆகியவற்றின்போது, #பசுதானம் செய்தால் கூடுதல் #புண்ணியம் #சேரும்.

* ஒரு பசு தன்னுடைய முதன் கன்றை பிரசவிக்கும் போது அதனை ‘#தேனு’ என்பார்கள். இரண்டாவது கன்றை பிரசவித்ததும் அந்த பசுவை ‘#கோ’ என்பார்கள். #இரண்டாவது கன்றை பிரசவித்த பசுவைத் தான் #கோபூஜைக்கு #பயன்படுத்துவார்கள்.

* பசுவின் வாய் பகுதியில் கலி தேவதை இருக்கிறது. அதனால் தான் பசு பின் பகுதியை தொட்டு வணங்கும் முறை வழக்கத்தில் உள்ளது.

* காமதேனு பசு, மூவுலகிற்கும் தாயாக கருதப்படுகிறது. பசுவுக்கு தினமும் பூஜை செய்வது என்பது #பராசக்திக்குபூஜை செய்வதற்கு #சமமாகும்.

* #பசுவின் உடலில் முப்பத்து #முக்கோடி தேவர்களும், #நாற்பத்து எண்ணாயிரம் #ரிஷிகளும், அஷ்ட வசுக்களும், #நவக்கிரகங்களும் வீற்றிருந்து #ஆட்சி செய்கின்றனர்.

* பசுவை 108 போற்றி சொல்லி வழிபட்டால், பல புராதனக் கோவில்களுக்கு சென்று வந்த #பலன் கிடைக்கும். வீட்டில் பசு வளர்ப்பது செல்வ செழிப்பை உண்டாக்கும். பசுவுக்கு #அகத்திக்கீரை கொடுக்க இயலாவிட்டால். #வாழைப்பழம் கொடுக்கலாம்.

* உங்களால் வீட்டில் உள்ள பசுவை பராமரிக்க இயலாவிட்டால், அதை #அடிமாடாக #விற்காமல், ஏதாவது ஒரு கோ சாலையில் #சேர்த்து விடுவது நல்லது. பசுக்களை அடிக்கடி நீர் நிலைகளில் நீந்தி குளிக்க வைப்பது நல்லது.

#ஸ்ரீராமஜயம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக