ஞாயிறு, 19 ஜனவரி, 2020

பௌர்ணமியில் விளக்கேற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்!


பௌர்ணமியில் விளக்கேற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்!


விளக்கேற்றும் பலர் ஏதோ சம்பிரதாயத்துக்காக விளக்கு ஏற்றுகிறார்களே தவிர அதன் உண்மை தன்மையை அறிவதில்லை.

பொதுவாக விளக்கு ஏற்ற எண்ணெய், திரி, தீ இருந்தால் போதும். எண்ணெய், திரி, தீ இதை மீண்டும் மீண்டும் சொல்லி பாருங்கள் கடவுளே எண்ணை திருத்தி நல்வழிப்படுத்து என்று பொருள்படும்.

யார் ஒருவர் பிரதி மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று விளக்கேற்றி வழிபட்டு வருகிறார்களோ அவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

• சித்திரை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தான்யத்தைப் பெறுவர்.

• வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தன லாபம் பெறுவர்.

• ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று விளக்கேற்றினால் சந்தான பாக்கியம் கிட்டும்.

• ஆடி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் நீண்ட ஆயுளைப் பெறுவர்.

• ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பதவி கிடைக்கும்.

• புரட்டாசி மாத பௌர்ணமியில் விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகும்.

• ஐப்பசி மாதத்தில் விளக்கேற்றினால் பசிப்பினிகள் நம்மை விட்டு அகலும்.

• கார்த்திகை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் ஐஸ்வரியம் பெருகும். நிலைத்த புகழ் ஏற்படும்.

• மார்கழி மாதத்தில் விளக்கேற்றினால் துன்பம் அகலும் இன்பங்கள் வந்து சேரும்.

• தை மாதத்தில் வரும் பௌர்ணமியன்று விளக்கேற்றினால் வெற்றியைப் பெறுவர்.

• மாசி மாதத்தில் விளக்கேற்றினால் பாவங்கள் போகும்.


• பங்குனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தர்மசிந்தனை பெருகும்.

எத்தனை முகம் ஏற்றலாம்?

• ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்

• இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்

• மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும்

• நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்

• ஐந்து முகம் ஏற்றினால் – நற்பலன்கள் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக