வியாழன், 9 ஜனவரி, 2020

ஆருத்ரா தரிசனம்...!சிறப்பு பதிவு !!


*ஆருத்ரா தரிசனம்...!*
*சிறப்பு பதிவு !!*

பிறப்பே எடுக்காத ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளான...

சிவபெருமானுக்கு
உரிய நட்சத்திரம் திருவாதிரை...!

 ஆர்த்ரா = திருவாதிரை

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு ....

வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது...!

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா  சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்.

ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் - புனர்பூசம்;

பரதனுக்கு - பூசம்..
லட்சுமணனுக்கு -ஆயில்யம்..
சத்ருக்னனுக்கு- மகம்..

கிருஷ்ணனுக்கு - ரோகிணி..
முருகனுக்கு - விசாகம்...
இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரம்..!

#ஆனால்பிறப்பேஎடுக்காத #சிவபெருமானுக்குபிறந்தநட்சத்திரமா..? (#திருவாதிரை)

"பிறவா யாக்கைப் பெற்றோன்  பெரியோன்..!"

என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம் சிவ பெருமானைக் குறிக்கிறது...!

சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன...!

சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்.. ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள்..!

இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது....

#இதனால்சிவபெருமானின்நட்சத்திரம் #திருவாதிரைஆனது...!!

ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் ...

பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள்...!

திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும்.....!

ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்...!

திரேதாயுகா அலறித் துடித்து..

"பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா,..

 உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.....!

அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,

திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப்பிச்சையளிக்க சபதம் செய்தாள்...!

அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார்...!

இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்...!

அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகாவுக்கும் ..

அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள்..!

இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது...!

இந்த தரிசனத்துக்கு ஆருத்ரா தரிசனம் என்று பெயர் ஏற்பட்டது...!

சேந்தனாருக்கும்  திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த ...

அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ....

ஆருத்ரா தரிசனமாக  கொண்டாடப்படு
கிறது...!🌺

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக