வியாழன், 9 ஜனவரி, 2020

மார்கழி மாதம்... திருவாதிரை... விரதமுறை...!!



மார்கழி ஸ்பெஷல்... திருவாதிரை... விரதம் இருப்பவர்களுக்கான பதிவு இது...!
மார்கழி மாதம்... திருவாதிரை... விரதமுறை...!!


🌟 சிவனுக்கு உகந்த விரதங்களுள் மிக முக்கியமானது திருவாதிரை விரதம். இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது?... என்பதை பற்றி பார்க்கலாம்.

🌟 மார்கழி திருவாதிரை என்பது மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தோடு கூடிய பௌர்ணமியில் கடைபிடிக்கப்படும் வழிபாடாகும்.

🌟 மார்கழி மாதம் தட்சிணாயனத்தின் கடைசி மாதமாகும். தேவர்களுக்கு இது அதிகாலைப் பொழுதாகும். இந்த காலமானது தேவர்களுக்கு பிரம்மமுகூர்த்த காலமாகும். இவ்வேளையில் தில்லையில் குடிகொண்டு அருள்புரியும் எம்பெருமான் நடராஜனைக் காண தேவர்கள் கூடுவதாக ஐதீகம்.

திருவாதிரை விரதம் இருக்கும் முறை :

🌟 மார்கழி திருவாதிரை நாளில், அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து நீராடி, சிவநாமம் ஜெபித்து திருநீறு பூச வேண்டும்.

🌟 சிவாலயம் சென்று நடராஜரையும், சிவகாமி அம்மனையும் தரிசிக்க வேண்டும். காலையில் நடக்கும் தாண்டவ தீபாராதனையைக் காண வேண்டும்.

🌟 சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.

🌟 அன்று பகலில் சாப்பிடக்கூடாது.

🌟 சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும்.

🌟 இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.

🌟 இந்த விரதத்தை ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடரவும் செய்யலாம்.

🌟 ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால், வாழ்வுக்குப் பின் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்பது நம்பிக்கை.

🌟 நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றை பஞ்சபூதங்களின் சேர்க்கையாக இந்த உலகம் இருக்கிறது.

🌟 இந்த ஐந்திற்கும் உரிய இடங்களாக ஐந்து திருத்தலங்களானது சிதம்பரம் (ஆகாயம்), திருவண்ணாமலை (நெருப்பு), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் (நிலம்) ஆகியவை.

🌟 இதில் முதன்மையான ஆலயத்தில் சிதம்பரத்தில் நடராஜன் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவார்கள்.

திருவாதிரை விரதத்தின் பலன்கள் :

🌟 மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார்.

🌟 தாலி பலன் பெருகும்.

🌟 பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக