வியாழன், 20 பிப்ரவரி, 2020

மகாசிவராத்திரி... சிவபெருமானின் அருளைபெற செய்ய வேண்டியவை...!!

மகாசிவராத்திரி... சிவபெருமானின் அருளைபெற செய்ய வேண்டியவை...!!

*மகாசிவராத்திரி அன்று செய்ய வேண்டியவை!*       

👉சிவபெருமானுக்குரிய விரதங்களாக மாத சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகாசிவராத்திரி என்று வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மகாசிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது.

👉மகாசிவராத்திரி நாளை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21ஆம் தேதி) அனைத்து சிவன் கோவில்களும் மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

👉இந்நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்தால், நினைத்த காரியம், ஆசை மற்றும் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழலாம்.

👉இந்த மகாசிவராத்திரியன்று சிவபெருமானுக்கு நான்கு ஜாம பூஜைகள் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்தின் போதும் வௌ;வேறு விதமான அர்ச்சனைகள், அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்படும்.

*மகாசிவராத்திரி வழிபாட்டில் முக்கியமான ஆறு அம்சங்கள் :*

👉சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும்.

👉லிங்கத்திற்கு குங்குமம் அணிவித்தல் நல்லியல்பையும், நல்ல பலனையும் வழங்கும்.

👉உணவு நிவேதனம் செய்தல் நீண்ட ஆயுளையும், விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.

👉தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.

👉எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானம் அடைதலைக் குறிக்கும்.

👉வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.

👉இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலோ அல்லது கோவிலிலோ சிவராத்திரியை அனுஷ்டிக்கும்போது இறைவனுக்கு வழங்கப்பட வேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.



*மகாசிவராத்திரியில் செய்ய வேண்டியவை :*

👉மகாசிவராத்திரி அன்று சிவபெருமானை நினைத்து, சுகபோகங்களை தவிர்த்து ஒருவேளை மட்டும் ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

👉அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து, நீராடி விட்டு காலைவேளையில் சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்துவிட்டு, சிவாலயங்கள் சென்று வழிபட வேண்டும்.

👉வீட்டில் சிவ பூஜைக்கு செய்யும் இடங்களை சுத்தம் செய்து, தேவையான பொருட்கள், மாலை மற்றும் தோரணங்கள் கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும்.

👉நண்பகலில் நீராடி விட்டு, உச்சிகால பூஜைகளை செய்ய வேண்டும்.

👉சிவாலயங்களில் நடைபெறும் பூஜைக்கு தங்களால் இயன்ற பொருள் உதவி செய்ய வேண்டும்.

👉மாலை நேரத்தில் மீண்டும் குளித்துவிட்டு அலங்கரித்து வைத்த இடத்தில் சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

👉நான்கு கால சிவ பூஜையில் பூஜைக்கு தேவையான வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியம் லிங்கத்திற்கு படைத்து பூஜை செய்ய வேண்டும்.

👉சிவ பூஜை செய்ய இயலாதவர்கள் சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டும் சிவனருள் பெறலாம்.

👉சிவராத்திரியன்று வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலியவற்றை நீங்கள் படிக்கலாம், இல்லையேல் அடுத்தவரை படிக்க சொல்லி கேட்கலாம். மேலும், அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லியும் தியானிக்கலாம்.

👉சிவராத்திரி அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, நம்முடைய கவனங்களை வேறு பக்கம் கொண்டு செல்வது தவறாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக