சனி, 8 பிப்ரவரி, 2020




இருப்பிடம்:

மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில்இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில்சென்றால்தாணிப்பாறை விலக்கில்இறங்கலாம்இங்கிருந்து 7 கி.மீ., தூரம்சென்றால் சதுரகிரி மலை அடிவாரமானதாணிப்பாறை வரும்அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தைதரிசிக்கலாம்.
அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும்பஸ் உள்ளதுஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும்பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில்நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்துவத்திராயிருப்பு செல்லுங்கள்ஒவ்வொருஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதிஉள்ளது.
அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ்அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்

மலையின் சிறப்பு :

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும்,மூலிகைகளும் பல நோய்களை தீர்க்கவல்லதுஇந்த மலை ஏறி இறங்கினால்உடலில் உள்ள வியர்வை வெளியேறி,மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள்குணமாவதாகச் சொல்கிறார்கள்சித்தமருத்துவர்கள் பலர் மூலிகைகளைஇங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம்பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்தகாரணத்தால் சதுரகிரி என்ற பெயர்ஏற்பட்டதுமலையின் பரப்பளவு 64 ஆயிரம்ஏக்கர்.

தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதிஅருகே உள்ள தீர்த்தம்

  • மகாலிங்கம்கோயிலுக்குவடக்கில்உள்ளமூலிகைகள்நிறைந்தகுன்றை "சஞ்சீவிமலைஎன்கின்றனர்.
  • சந்தனமகாலிங்கம்கோயில்அருகே18 சித்தர்கள்சன்னதிஉள்ளது.
  • ஆடி அமாவாசை முக்கிய விழா.தை அமாவாசைமகாளயஅமாவாசைமகா சிவராத்திரி,சித்ரா பவுர்ணமிமார்கழி நாள்ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம்இருக்கும்
    முதல்
  • பழநியிலுள்ள நவபாஷாணமுருகன் சிலையை போகர் சதுரகிரிமலையில் தங்கியிருந்தபோதேசெய்ததாக கூறப்படுகிறது.
  • இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில்நீரில் நனைத்து விட்டுஇரவில்பார்த்தால் தீபம் ஏற்றியது போல்இருக்கும்பழங்காலத்தில்சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்தபுல்லை உபயோகித்துள்ளார்கள்.
  • மகாலிங்கம் கோயிலின் வடக்கே"ஊஞ்சல் கருப்பண சாமிகோயில்உள்ளது
  • சுந்தர மகாலிங்கத்திற்குஅமாவாசை நாட்களில் மதியம் 1மணிக்கு அபிஷேகம் துவங்கும்.
  • ஆடி அமாவாசை தவிர மற்றஅமாவாசை நாட்களில் தேனும்,தினைமாவும் பிரசாதமாகதரப்படுகிறது.
  • சதுரகிரி மலைக்கு மின்சார வசதிகிடையாதுஜெனரேட்டர்பயன்படுத்துகின்றனர்.




சதுரகிரி தல வரலாறு :  
சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ளகோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால்.இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான்.இவனது பெற்றோர் தில்லைக்கோன்-திலகமதிமனைவி சடைமங்கைஇவள்மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டுவருவாள்ஒருமுறைபால் கொண்டு சென்றபோது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்கபால் கேட்டார்சடைமங்கையும் கொடுக்கவே,தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார்.சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக்கவனித்த சடைமங்கையின் மாமனார்,இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்துவிட்டார்பச்சைமால் தனது மனைவியை பின்தொடர்ந்து சென்றுஅவள் துறவிக்கு பால்தந்ததை அறிந்து கோபம் கொண்டுஅடித்தான்தனக்கு பால் கொடுத்ததால் அடிவாங்கிய சடைமங்கை மேல் இரக்கம்கொண்ட அவர்அவளுக்கு "சடதாரிஎன்றுபெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கிவிட்டு மறைந்தார்மனைவியை பிரிந்தபச்சைமால்மனம் திருந்திசதுரகிரிக்குவந்த அடியவர்களுக்கு பால் கொடுத்துஉதவி செய்தான்.

சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்தபூஜைக்கும் பால் கொடுத்து உதவினான்.சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன்இத்தலத்தில் அவர்களுக்கு காட்சிகொடுத்தார்பச்சைமாலுக்கும் சிவதரிசனம்கிடைத்ததுஒருநாள்சிவன் ஒரு துறவியின்வேடத்தில்சிவபூஜைக்கு பால் கொடுக்கும்காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால்குடித்து கொண்டிருந்தார்இதைக்கண்டபச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு,துறவியின் தலையில் கம்பால் அடித்தான்.அப்போதுசிவன் புலித்தோல் அணிந்துகாட்சி கொடுத்தார்சிவனைஅடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும்வருந்தி அழுதான்.
சிவபெருமான் அவனை தேற்றி, "" நீதேவலோகத்தை சேர்ந்தவன்உன் பெயர்யாழ்வல்லதேவன்நீ யாழ் மீட்டி என்னை பாடிமகிழ்விப்பாய்சிற்றின்ப ஆசை காரணமாகஎன்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில்மனிதனாக பிறந்தாய்உன்னை மீட்டுசெல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்குமுக்தி அளித்தார்அத்துடன் அங்கிருந்தசித்தர்களின் வேண்டுகோளின்படி"மகாலிங்கம்என்ற திருநாமத்துடன்அங்கேயே எழுந்தருளினார்இதுலிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது எனசதுரகிரி புராணம் கூறுகிறதுஇன்றும் கூடமகாலிங்கம் சாய்ந்த நிலையில்இருப்பதையும்தலையில் அடிபட்டதழும்பையும் காணலாம்.

சதுரகிரி மலை ஏறுவது கடினமானது.மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள்காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதைவழக்கமாகக் கொண்டுள்ளனர்.தாணிப்பாறை அடிவாரத்திலிருந்துமலையேற வேண்டும்.
மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரைவணங்கியபின் சிவசிந்தனையுடன் மலையாத்திரையைத் தொடங்க வேண்டும்.செல்லும் வழியில் ராஜயோக காளி,பேச்சியம்மன்கருப்பணசாமி கோயில்கள்உள்ளனஇதனை அடுத்து குதிரை ஊற்று,வழுக்குப்பாறைகள் வருகின்றன.

இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில்செல்வது கடினம்சிறிது தூரம் சென்றதும்அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தைதரிசிக்கலாம்அடுத்து வருவது காராம்பசுத்தடம்இந்த இடத்தில் தான் சிவன் துறவிவேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில்பால் அருந்தியதாக வரலாறு.
இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்தகுகையும்பதஞ்சலி முனிவரின் சீடர்கள்பூஜித்த லிங்கமும் உள்ளதுஇந்த லிங்கத்தைதரிசிக்க வேண்டுமானால்ஆகாய கங்கைதீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப்பிடித்து தொங்கி ஏறித்தான் செல்லவேண்டும்இது ஆபத்தான இடம்இதன்பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ,தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக்கூடாதுஇதை ஒட்டிய குகையில் உள்ளே ஒருசிறிய லிங்கம் உள்ளதுஇதை நீங்கள்காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம்உங்களுக்கு ஏற்படுவது உறுதி.

கோரக்கர் மலைக்கு நேர் மேலேசெங்குத்தான மலையில் சற்று மேலேஏறினால் ஒரு லிங்கம் உள்ளதுகொஞ்சம்இளவட்ட ஆளுங்க போக முடியும்ரொம்பவேசெங்குத்தான பாதைஅதனால் ,அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.
இதையடுத்து இரட்டை லிங்கத்தைதரிசிக்கலாம்சற்று தூரத்தில் சின்னபசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல்ஊற்று வருகிறதுஇந்த ஊற்று நீருக்குசர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமைஇருப்பதாக கூறப்படுவதால்பக்தர்கள்இதைப் பருகுகிறார்கள்பின்னர்,பச்சரிசிப்பாறைவனதுர்க்கை கோயில்,பெரிய பசுக்கிடைபிலாவடி கருப்புகோயிலைத் தரிசித்துமகாலிங்கம்கோயிலை அடையலாம்மலையிலுள்ள 10கி.மீதூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம்வரை ஆகும்.

இரட்டை லிங்கம்:






 ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன்மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்ததுஅவரதுமனைவி ஆண்டாள்பெருமாள் பக்தை.இவர்கள் இருவரும்தான் வணங்கும்கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர்.இதற்கு விடை காண இருவரும் சதுரகிரிவந்து தியானம் செய்தனர்இவர்கள் முன்புசிவன் தோன்றினார்.

""சிவபெருமானேதாங்களே அனைத்துமாகஇருக்கிறீர்கள்என்பதை என் மனைவியிடம்தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார்வியாபாரிசிவன் ஆண்டாளிடம் சென்றார்.அவளோ, ""நான் உம்மை நினைத்ததேஇல்லைபெருமாளை நினைத்தே தவம்செய்தேன்,'' என்றாள்அப்போது சிவனும்,விஷ்ணுவும் இணைந்துசங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர்.இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில்சிவலிங்கம்விஷ்ணு லிங்கம் என இரட்டைலிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர்என்பவர் பூஜை செய்தார்இந்த சன்னதிக்குஎதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

பிலாவடி கருப்பு:

வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும்ஆசை இருந்ததுஆனால்பணம்போதவில்லைபலரிடம் உதவி கேட்டும்இவரது தேவையை பூர்த்தி செய்யமுடியவில்லைமுனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாதசித்தரிடம் சென்றால் உனது விருப்பம்நிறைவேறும்,'' என்றார்.
வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரைதரிசித்தார்அவர் அங்குள்ள சிலமூலிகைகளைக் கொண்டு உலோகங்களைதங்கமாக்கி அவனிடம் கொடுத்தார்.மீதமிருந்த தங்கத்தையும்தங்கம் தயாரிக்கபயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில்கொட்டி பாறையால் மூடினார்இந்தகிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியைநியமித்தார்இவரது சன்னதியில் மூன்றுகாய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது.இதனால்இவரை "பிலாவடி கருப்பர்எனஅழைத்தனர்இந்த மரத்தில்ஒரு காய்விழுந்து விட்டால் இன்னொரு காய்காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாகநடக்கிறது.

பெரிய மகாலிங்கம்:




 நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து,லிங்க வடிவ பாறை உள்ளதுஇதை "பெரியமகாலிங்கம்என்கின்றனர்பெரியமகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம்உள்ளதுசாதாரண நாட்களில் இதற்குமட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது.சிவராத்திரியன்று மட்டும் பெரியலிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

தவசிப்பாறை:




மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லிஅம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று,மேற்கு பக்கமாக ஏறிகிழக்கு பக்கமாகஇறங்கினால் தவசிப்பாறையை(தபசுப்பாறைஅடையலாம்இதுகடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில்உள்ளதுகோயிலில் இருந்து தவசிப்பாறைசெல்ல குறைந்தது 2 மணி நேரமாகும்இதுமிகவும் சிரமமான பயணம்பாறைக்குசெல்லும் வழியில் "மஞ்சள் ஊத்துதீர்த்தம்உள்ளது.

தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும்குகை உள்ளதுகுகைக்குள் ஒரு ஆள்மட்டுமே மிகவும் சிரமப்பட்டுசெல்லும்படியான துவாரம் உள்ளதுஉள்ளேசென்ற பிறகுபத்து பேர் அமர்ந்து தியானம்செய்ய வசதியிருக்கிறதுஇதனுள் ஒருலிங்கம் உள்ளதுமன திடம் உள்ளவர்கள்மட்டுமே இந்த குகைக்குள் சென்றுலிங்கத்தை தரிசனம் செய்ய முடியும்இந்தகுகையில் தான் 18 சித்தர்களும் தினமும்சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது.குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள்உள்ளனஇவற்றை "நவக் கிரக கல்'என்கிறார்கள்இதற்கு அடுத்துள்ள "ஏசி'பாறையின் கீழ் அமர்ந்தால்கடும்வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும்.தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாககீழிறங்கும் வழியில்"வெள்ளைப்பிள்ளையார்பாறை உள்ளது.பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும்.இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடிஉயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது.அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.

சுந்தரமூர்த்தி :

கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம்நடந்தபோதுஅகத்தியர் தெற்கே வந்தார்.அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடுசெய்தார்அவர் அமைத்த லிங்கமேசுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும்சதுரகிரியில்அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்பமலைஎன்கின் றனர்அகத்தியர் பூஜித்தலிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்துவந்தார்இதனாலேயே இந்த லிங்கம்"சுந்தரமூர்த்தி லிங்கம்எனப்படுகிறது.அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்',பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்திலிங்கம்என்று கூறுவர்சதுரகிரி கோயிலின்நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம்இருக்கிறதுஇரவு 12 மணியளவில் இந்தசன்னதி அருகே யாரும் செல்வதில்லை.அப்போதுசித்தர்கள் அவரை தரிசிக்கவருவதாக ஐதீகம்.

பார்வதி பூஜித்த லிங்கம் :  

சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்றுமேடான பகுதியில் சந்தன மகாலிங்கம்கோயில் அமைந்துள்ளதுபிருங்கி மகரிஷிசிவனை மட்டும் வழிபட்டுசக்தியைக்கவனிக்காமல் போய்விடுவார்எனவே,சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்கவேண்டிஅவர் உடலில் பாதியைக் கேட்டு,பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்கபூஜை செய்தாள்தினமும் சந்தனஅபிஷேகம் செய்தாள்மகிழ்ந்த சிவன்பார்வதியை தன்னுடன் இணைத்து"அர்த்தநாரீஸ்வரர்ஆனார் என தல வரலாறுகூறுகிறதுபார்வதி தான் அமைத்தலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாயகங்கையை வரவழைத்தாள்இங்குள்ளசந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்
இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்குஅபிஷேகம் செய்கின்றனர்பார்வதி பூஜித்தசந்தன மகாலிங்கத்தைசட்டைநாத சித்தர்பூஜித்து வந்தார்மகாசிவராத்திரியன்றுபக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீதுபூத்தூவி வழிபடுகின்றனர்.

இக்கோயிலில் சந்தன மகாலிங்கம்சந்தனவிநாயகர்சந்தன முருகன்சந்தன மாரி எனஎல்லாமே சந்தன மயம் தான். 18சித்தர்களுக்கும் சிலை உள்ளது.செண்பகப்பூவை காயவைத்துவாசனைக்காக விபூதியில் கலந்துகொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.

லிங்க வடிவ அம்பிகை:

சிவனைப்போலவே அம்மனும் இங்குநிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும்என விரும்பிய சித்தர்கள் நவராத்திரிநாட்களில் கடுமையாக தவம் இருந்தனர்.இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன்"ஆனந்தவல்லிஎன்ற திருநாமத்தில்லிங்கவடிவில் எழுந்தருளினாள்.சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம்இவளது சன்னதி உள்ளதுநவராத்திரிநாட்களில் உற்சவ அம்மனின் பவனிநடக்கும்விஜயதசமியன்று அம்மனுக்குமகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்துபாரிவேட்டை நடக்கிறது.

சதுரகிரியில் தீர்த்தங்கள்

சந்திர தீர்த்தம்

சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில்'சந்திர தீர்த்தம்இருக்கிறது.இந்த சந்திரதீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கிஒரு முறை நீராடினால் கொலைகாமம்குருதுரோகம் போன்ற பஞ்சமாபாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம்பெறலாம்.

கெளண்டின்னிய தீர்த்தம்

சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளதுஇந்தத் தீர்த்தம்இது தெய்வீகத் தன்மைவாய்ந்த நதியாகும்வறட்சியுற்ற காலத்தில்தேவர்களும்ரிஷிகளும் சிவபெருமான்வேண்டஈசன் தமது சடை முடியில் உள்ளகங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்குகிரிகளுக்கும் மத்தியில் விட்டுலிங்கத்தில்மறைந்தார் என்பது ஐதீகம்.
கங்கைகோதாரிகோமதிசிந்து,தாமிரவருணிதுங்கபத்திரை முதலியபுண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு.இந்த நதியில் நீராடுவதால் சகலபாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரிநதி'' என்னும் பெயரும் உண்டு.

சந்தன மகாலிங்கம் தீர்த்தம்

இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்என்கிறஇருண்டவனம் ஒன்றுள்ளது.அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம்சந்தனமகாலிங்க தீர்த்தம் என்றுஅழைக்கப்படுகிறதுஉமையாள் பிருங்கமுனிவர் தம்மை வணங்காமல் ஈசனைவணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின்காரணமாகச் சிவபெருமானை விட்டுப்பிரிந்துஅர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்திகோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்குவந்து லிங்கப் பிரதிஷ்டை செய்துஅபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாயகங்கையாகும்.
இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால்எந்தப்பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.
இது தவிரசதுரகிரியில் பார்வதி தேவியின்பணிப்பெண்களான சப்த கன்னியர்கள்தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய'திருமஞ்சனப் பொய்கைஉண்டு.

காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட'பிரம்மதீர்த்தம்ஒன்று சதுரகிரி மலைக்
காவலராகிய கருப்பணசுவாமி சன்னதிமுன்பாக இருக்கிறதுஇது தவிர கோரக்கர்,இராமதேவர்போகர் முதலிய மகரிஷிகளால்உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்'போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரிமலையில் உள்ளன.மகாலிங்கம்கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில்உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது.இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும்என்பது நம்பிக்கை.
மகரிஷிகளும்சித்தர்களும் இன்றும்அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும்வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.
பொதுவாகவே மலைகளின் மேல்,மனிதர்களுக்கு ஆயுளும்ஆரோக்கியமும்தரும் அற்புதமான பல மூலிகைகளும்,மருத்துவ குணம் நிறைந்த மரம் செடிகொடிகள் யாவும் இருக்கின்றன.இவைகளைத் தழுவி வரும் காற்று நம்மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள்தீர்கின்றன.

அபூர்வ மூலிகைகள் :

இங்கே கிடைக்கும் பல அற்புதமூலிகைகளில் முறிந்த எலும்பைகூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கேஉள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி,இந்த மூலிகை இலையை வைத்துக்கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்புகூடும்.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதிவிருட்சமும்சாயா விருட்சம் போன்ற அதிஅற்புதமான மரங்கள்மூலிகைகள்,இலைகள் இம்மலையில் மேல் உள்ளன.இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லிபோன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.
தவிர கோரக்க முனிவரால் 'உதகம்என்றுகுறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு.மருத்துவ குனம் கொண்ட மரம்,செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும்தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.
இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான்'உதகம்என்று பெயர்பார்ப்பதற்கு குழம்பியசேற்று நீர்போல் காணப்படும்இந்த உதகநீர்மருத்துவ குணங்களைக் கொண்டது.இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.
விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும்,துணையோடு அந்நீரை மருந்தாக
பயன்படுத்த வேண்டும்.

 சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில்கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில்சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.
இந்த மரத்தின் காய் நாய்க்குட்டிபோலிருக்கும்அந்தக் காய் கனிந்துவிழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப்போல் இருக்கும்விழுந்த கனி 10வினாடிக்குப் பிறகுமறுபடியும்அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்என்றொருமரம் உண்டு.
இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன்கீழே விழுந்து விடும்விழுந்த காய் காய்ந்துஅதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்போய் ஒட்டிக்கொள்ளும்இடையில் மழை,காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய்இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன்மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.
இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்கொட்டைகளைஎடுத்து எண்ணையில ஊறவைத்து அதன்மூலம் கிடைக்கும் மையை உபயோகித்துவசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில்கனையெருமை விருட்சம் என்றொருமரமுண்டுஅம்மரத்தினடியில் யாராவதுஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமைபோல் கனைக்கும்அம்மரத்தை வெட்டினால்,குத்தினால் பால் வரும்.
இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும்உண்டுஇந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப்போல் கத்தும்வெட்டினால் பால் கொட்டும்.நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சகமரத்தின் பாலும் முக்கியமானசேர்க்கையாகும்.
இவை எல்லாவற்றையும் விட தூக்கிசாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது.மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதிமயக்கி வனம்என்ற பகுதி உள்ளதுஇங்கேஉள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கிஅவர்கள் வெளியே வரவே முடியாது என்றுகூறுகின்றனர்நான் கேள்விப்பட்ட வரை ,ஒருவர் வழி தவறி உள்ளே சென்றுமாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம்காப்பாத்துகாப்பாத்துஎன்று மூன்றுநாட்கள் கதறிஒரு வழியாக அந்தவனத்திலிருந்து வெளியே வந்து விட்டார்.அடர்ந்த காடுநிறைய பூச்செடிகள் இருந்தது.எதுவும் கோவில் கூட இல்லைஆட்களேயாரும் இல்லைபசியே தெரியவில்லை.வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று,இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக்கொண்டே இருக்கிறார்.

இன்றும் அமாவாசைபௌர்ணமிதினங்களில் - சித்தர்கள்ரிஷிகள் -மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர்.கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள்மலைப்பகுதிகளில் விழுகின்றனவீடியோகாமிராக்களில் அதை நிறைய பகதர்கள்பதிவு செய்து இருக்கின்றனர்ஏற்கனவேநாம் " கட்டை விரல் அளவில் காட்சி தந்தசித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம்பகிர்ந்து கொண்டுள்ளோம்இவைஅத்தனையும் சர்வ நிஜம்இறை நம்பிக்கைஉள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒருமுறையேனும் இந்த மகாலிங்கத்தையும் ,சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருகபூஜித்து வழிபட்டு வாருங்கள்நீங்கள்நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்தசிவம் உங்களுக்கு அளிக்கும்.
உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் -நீங்கள் மனதார நினைத்து வழிபாடுசெய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்குசதுரகிரியில் நிச்சயம் கைகூடும்இதைநிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் ,இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும்கூட்டத்திற்கு குறைவில்லை..

முதன்முறை செல்பவர்கள் - கூட்டம்அதிகமாக இருக்கும் தினங்களை தவிர்த்துசாதாரண சனி , ஞாயிறு கிழமைகளில்செல்வது உங்களுக்கு நல்லதொருஅனுபவம் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக