செவ்வாய், 21 ஏப்ரல், 2020

அட்சய திருதியை 2020


அட்சய திருதியை 2020

அட்சய திருதியை   என்பது இந்துகள்  மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும்.  சித்திரை   மாதத்தின் முதல் அம்மாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை.
"அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் , என்றும் குறையாது என்று பொருள்.   அட்சய திருதியை அன்று நற்பயன்களை தரக்கூடிய நாளாக நம்பப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி உத்தமமான பலன்களை தருவதாக கூறப்படுகிறது. அதிலும், சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை தினம் மிகவும் உத்தமமான நாளாகவும் வாழ்வில் வளங்கள் குவிக்கும் நாளாகவும் சிறப்பித்து கூறப்படுகிறது. இதுதான் ‘அட்சய திருதியை’.

அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு காரியங்களும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.

அட்சய திருதியை 2020

அட்சய திருதியை 2020 தேதி:
ஏப்ரல் 26, 2020
அட்சய திருதியை பூஜை நேரம்:
காலை 5:45 - பகல் 12:19

அட்சய திருதியை செய்ய வேண்டியது:
அட்சய திருதியை அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிட வேண்டும். அதன்மேல் வாழையிலை ஒன்றினை வைத்து இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். கலசத்தின் அருகே ஒரு படியில் நெல் நிறைத்து வைக்க வேண்டும். அதன் பின் கலசத்திற்குப் பொட்டு, பூ வைத்து லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதற்கும் பொட்டு, பூ வைத்து குத்துவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அத்துடன் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வைக்க வேண்டும். அந்தப் பொருள் விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இப்படி செய்வதால் அஷ்டலட்சுமி உங்கள் இல்லம் தேடி வருவாள் என்பது நம்பிக்கை.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக