புதன், 24 மே, 2017

விரைவில் திருமணம் நடைபெற....


விரைவில் திருமணம் நடைபெற....

O1. துளசி கல்யாணம் செய்தால் விரைவில் திருமணமாகும்.

02. ஓர் ஏழைப்பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சக்திக்கு ஏற்ப புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.

03. 7-ல் ராகு இருப்பது கடுமையான திருமண தோஷமாகும்.
எவ்வளவு முயன்றும் திருமணம் கூடுவதில்லை.

இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்கள் #வெள்ளிக்கிழமை தோறும் அல்லது #செவ்வாய்க்கிழமை தோறும் #ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி வரவும்.

இவ்விரதம் ஒன்பது வாரங்கள் செய்து வர திருமணம் தோஷம் விலகும். திருமணம் கூடி வரும்.

04. சென்னை-#திருவேற்காட்டில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது.  பல்வேறு புராணச்சிறப்புகள் மிக்கது.

இந்த ஆலயம் திருவேற்காடு கருமாரியம்மனை தரிசிக்கும் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கூடி வருகிறது.

05. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள #ஆலங்குடியில் வீற்றிருக்கிறார் #குரு #பகவான்.

அங்குள்ள #தட்சிணாமூர்த்தியை வணங்கினால் திருமண யோகம் உண்டாகும்.

06. #வேப்ப_மரத்தடியில் வீற்றிருக்கும் #பிள்ளையாரை கடலை எண்ணெய் நீங்கலாக பிற #பஞ்ச #தீப #எண்ணை ஊற்றி தீபம் ஏற்றி #மஞ்சள் #பொடி #அபிஷேகமும், eபால் #அபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தால் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமையும்.

07. காஞ்சீபுரம் #கச்சபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள #நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமை மற்றும் #பஞ்சமி நாட்களில் #அடிப்பிரதஷணம் செய்யுங்கள்.

ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு #மாங்கல்யச் #சரடு தானம் செய்யுங்கள். சகல திருமண தோஷமும் தீரும்.

08. #தேவதோஷம்,
#பித்ருதோஷம்,
#சர்ப்பதோஷம்,
#திருஷ்டிதோஷம்,
#பிரேதசாபம்,
#அபிஷாரதோஷம்
என்று
#ஆறு
#வகையான
#தோஷங்களால்
#திருமணம்
#தடைப்படுகிறது.

#மாயவரம் #குத்தாலம் நெடுஞ்சாலையில் உள்ள ஊர் #திருமணஞ்சேரி, இங்குள்ள #கல்யாண #சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் உடனே திருமணம் ஆகிவிடும்.

09. திருமணம் #செவ்வாய் #தோஷத்தால் தடைபடுமாயின் #வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

10. துணைவியருடன் இருக்கும் நவக்கிரகங்களை வழிபட உடனே திருமணம் நடைபெறும்.

இத்தகைய நவக்கிரகங்கள் கல்யாண நவக்கிரகங்கள் என அழைக்கின்றனர்.

இயலாதவர்கள் #துணைவியாருடன் சேர்ந்துள்ள #நவக்கிரக படம் வாங்கி வழிபட்டு வரவும் விரைவில் திருமணம் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக