புதன், 24 மே, 2017

கருடபுராணம் சொல்லும் நன்மைகள்


கருடபுராணம் சொல்லும் நன்மைகள்

*1    அன்னதானம் செய்தல் -   விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.*

*2    கோ தானம் செய்தல்  -  கோலோகத்தில் வாழ்வர்*

*3    பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு -   கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு*

*4    குடை தானம் செய்தவர்    1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்*

*5    தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய், தலையணை - இதில் எதை தானம் செய்தாலும், சந்திர லோகத்து சுகங்களை அனுபவிப்பார்*

*6    வஸ்திர தானம் கொடுத்தவர்  10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்*

*7    இரத்தம்,  கண், உடல் தானம் கொடுத்தவர்  அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்*

*8    ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவர் இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்*

*9    குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவர்
 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்*

*10    நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர்    ஒரு மன்வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்*

*11    தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவர்  மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்*

*12    பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம்  உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை*

*13    நற்செயலை விரும்பி செய்கிறவர்கள்    சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்*

*14    தீர்த்த யாத்திரை புரிகின்றனர். சத்தியலோக வாசம் கிட்டுகிறது*

*15    ஒரு கன்னிகையை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவர்கள்,  14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்*

*16    பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவர், குபேர லோகத்தில் ஒரு மன்வந்தரம் வாழ்வார்*

*17    பண உதவி செய்பவர்கள், ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்*

*18    நீர் நிலைகளை சீர்திருத்துபவரும், உண்டாக்குபவரும் , ஜனலோகத்தில் நீண்டகாலம் சுகித்து வாழ்வார்கள்*

*19    பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பவர்,  தபோ லோகத்தை அடைகிறார்*

*20    புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால், 64 ஆண்டுகள் பரமபதத்திலிருப்பான்*

*21    தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர்,  10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.*

*22    பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர், இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.

*23    தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவர்.  நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்*

*24    சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவர்,  ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்*

*25    ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு    கைலாய வாசம் கிட்டும்*

*26    அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர், 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்*

*27    விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர், 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்*

*28    சுதர்சன ஹோமமும்,  தன்வந்திரி ஹோமமும் செய்பவர், ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக, தீர்க்காயுளுடன் வாழ்வர்*

*29    ஷோடச மகாலெட்சுமி பூஜையை முறையோடு செய்பவர்,  குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.*

*30    இதைப் படிப்பவரும், கேட்பவரும் புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும்,  தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள்.  அவர்களின் பெற்றோரும் பிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.*

*எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ, அவரவர் அதற்குரிய பொருட்களை, உயரிய ஒழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவார்கள்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக