வியாழன், 25 மே, 2017

உலகின் மிகப்பெரிய சிவன் சிலை நேபாளத்தில்! கைலாசநாதராக சிவன்!!



உலகின் மிகப்பெரிய சிவன் சிலை நேபாளத்தில்! கைலாசநாதராக சிவன்!!

இந்தியாவிற்கு அடுத்து இந்து மக்கள் அதிகளவில் வாழும் ஒரு நாடு தான் நேபாளம். இந்துக்கள் அதிகம் வாழும் இரண்டாவது நாடான நேபாளத்தில் தற்போது
2 கோடியே 34 இலட்சத்து 40 ஆயிரத்து 450 இந்துக்கள் வாழ்கின்றனர் (81.3%).

சிவன் கோவில் அதிகம் இருக்கும் நேபாளத்தில் தொழிலதிபரான கமல் ஜெயின் என்பவர் தன் சிவபக்தியினால் உலகின் மிகப்பெரிய சிவனின் சிலையை பக்தாபூர் மாவட்டம் சங்கா என்ற பகுதியில் 2004 ஆம் ஆண்டு கட்ட தொடங்கவே, இந்தியா மற்றும் நேபாளத்தினர் என முந்நூறுக்கும் மேற்பட்டோர் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனின் பணிகள் 2011 ல் நிறைவடைந்தது.

இச்சிலையானது எஃகு கம்பிகள், கற்காரை, துத்தநாகம் மற்றும் காப்பர் போன்றவற்றின் கலவையினால் வானுயர 144 அடி (44 மீட்டர்) உயர சிலையாக விண்ணை முட்டி நிற்கின்றது.

ஜுன் மாதம் 21 ம் தேதி 2011 ல் நேபாளத்தின் வசந்த கால "தீஜ்" பண்டிகையின் போது இக்கோவில் பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. வாரத்திற்கு 5000 க்கும் மேற்பட்ட சுற்றுலா மற்றும் பக்தர்கள் வருகை புரிந்து கோவிலை பிரம்மிப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

கைலாசநாத மகாதேவ் சிவன் சிலையானது உலகின் மிகப்பெரிய 14 வது உயர்ந்த சிலையாகவும் திகழ்கிறது.

             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக