திங்கள், 19 மார்ச், 2018

எந்த கிழமையில் எந்த மலரை கொண்டு பூஜித்தால் நன்மை பெருகும்?


எந்த கிழமையில் எந்த மலரை கொண்டு பூஜித்தால் நன்மை பெருகும்?

ஞாயிறு :

தாமரை மலர்களை சமர்ப்பித்து இறைவனை வழிபட்டால், குடும்பத்தில் இருக்கும் மனக்குறைகள் நீங்கி, குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

திங்கள் :

முல்லை, மல்லிகை போன்ற மலர்களை கொண்டு இறைவனுக்கு பூஜை செய்தால், விரோதங்கள் மறையும். மனச் சங்கடங்கள் நீங்கும்.

செவ்வாய் :

அரளி, கஸ்தூரி போன்ற சிகப்பு பூக்களை மாலையாக தொடுத்து துர்க்கைக்கு அணிவித்தால், திருமணத்தடைகள் நீங்கும். கணவன், மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

புதன் :

புதன்கிழமையை பொறுத்தவரை எல்லா வகையான மலர்களாலும் இறைவனை பூஜிக்கலாம். இதனால் நல்ல அறிவாளியான குழந்தைகள் பிறப்பார்கள். பிள்ளைகளின் கல்வி கேள்விகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

வியாழன் :

சாமந்தி, செவ்வந்தி போன்ற மலர்களைக்கொண்டு அர்ச்சித்தால், திருமணத்தடைகள், வியாபார தடங்கல்கள் நீங்கும். தொழில் ஏற்றம் பெறும், குழந்தை பாக்கியம் அமையும்.

வெள்ளி :

மல்லிகை மலர்களால் இறைவனை பூஜை செய்தால், நோய்கள் நீங்கும், செல்வம் பெருகும், பிள்ளைகளுக்கு நன்மை உண்டாகும்.

சனி :

மனோரஞ்சித மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்தால், மன தைரியம் கூடும், நல்ல சிந்தனைகள் வளரும். வாழ்வில் இருந்த தேக்க நிலை அகலும், புதிய உற்சாகம் பிறக்கும்.


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக