ஞாயிறு, 18 மார்ச், 2018

பழனி தொட்டிச்சி அம்மன்...



பழனி தொட்டிச்சி அம்மன்...

அழகு முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழநியம்பதி. இந்த ஊரில் உள்ள தொட்டிச்சி அம்மனை வேண்டிக்கொண்டால், குழந்தைகளுக்கு கல்வி யோகத்தைத் தந்தருள்கிறாள் அவள் என்கின்றனர், பக்தர்கள்!

பழநி மலையின் கிரிவலப் பாதையில் உள்ளது புலிப்பாணி ஆஸ்ரமம். இந்தச் சித்தரின் சமாதிக்கு, ஞானமும் யோகமும் பெற வேண்டி வருகிற பக்தர்கள் ஏராளம். சுமார் நானூறு வருடங்கள்: பழைமை வாய்ந்த ஆஸ்ரமத்தில், கிராம தேவதையான தொட்டிச்சி அம்மனின் சந்நிதி உள்ளது. சக்தி மிக்க தொட்டிச்சி அம்மனிடம் சரணடைந்தால், நம் வாழ்வையே மலரச் செய்தருள்வாள் என்பது ஐதீகம்!

இந்த ஆஸ்ரமத்துக்கு வந்து தொட்டிச்சி அம்மனை வேண்டிக்கொண்டால், சாப விமோசனம் பெறலாம். சங்கடங்கள் யாவும் விலகும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, கல்வி ஞானத்தில் சிறந்து விளங்க வேண்டும் என விரும்பும் மாணவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து, பிரார்த்தித்துச் செல்கின்றனர்.

கல்விக்கும் கலைக்கும் அடையாளமாக தன் வலது கரத்தில் தாமரை மலரையும் பில்லி, ஏவல், சூனியம் முதலானவற்றில் இருந்து விடுபட்டு வாழ்வில் நிம்மதி பெறுவதன் அடையாளமாக இடது கரத்தில் மந்திர சக்தி கொண்ட ஓலைச் சுவடிகளையும் வைத்தபடி, நின்ற கோலத்தில் காட்சி தரும் தொட்டிச்சி அம்மனைத் தரிசித்துக் கொண்டே இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக