சனி, 31 மார்ச், 2018

ஏழுமலையான் உன் வீட்டிற்கே வருவான்


ஏழுமலையான் உன் வீட்டிற்கே வருவான்

ஒரு பணக்காரரும், பரம ஏழையும் திருப்பதி சென்றனர். இருவரும் வேங்கடவனை தரிசிக்கச் சென்றனர்.

அது ஒரு திருவிழா காலம் என்பதால் வழக்கமான கூட்டத்தை விட இரண்டரை மடங்கு கூட்டம் அதிகமாக இருந்தது.

தரிசனம் முடித்த அவர்கள், லட்டுக்காக வரிசையில் காத்து நின்றனர்.

பணக்காரருக்கு நான்கு லட்டுகள் கிடைத்தது.

ஏழையால் ஒன்றே ஒன்று தான் வாங்க முடிந்தது.

அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

மலைப்பாதையில் திரும்பி வரும் போது, ஒரு துறவியைச் சந்தித்தான்.

சுவாமி! செல்வந்தர்களால் எல்லாமே வாங்க முடிகிறது.

நான் ஏழையாக பிறந்த பாவத்திற்கு என்னால் ஒரு லட்டுத்தான் வாங்க முடிந்தது.

அதற்கு மேல் இன்னொன்று வாங்க முடியவில்லை.

அவன் பரிதாபமாக சொன்னதை கேட்டு குரு சிரித்தார்.

பிறகு மாகான் அமைதியாக பேசினார், அந்த பணக்காரனுக்கு நாலு லட்டு கிடைத்திருக்கலாம்.

ஆனால், அவரால் துளிக்கூட சாப்பிட முடியாது.

ஏனென்றாள், அவருக்கு சர்க்கரை வியாதி, ஆனாலும், அவர் அவற்றை வாங்கியது ஏன் தெரியுமா?

தன் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் பகிர்ந்தளிக்க..!

பக்தியின் நோக்கம் என்ன தெரியுமா? பிறருக்கு பகிர்ந்து அளித்தால் தான்!

அவரவருக்கு கிடைப்பதில், எவ்வளவு முடியுமோ அவ்வளவை மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

அது மட்டுமல்ல!

இதிலே இன்னொரு தத்துவமும் புதைந்துள்ளது.

திருப்பதி லட்டு அமிர்தம் போல் சுவையானது.

இதை யாருக்காவது சிறு துண்டு கொடுத்தால் கூட, இன்னொரு துண்டு கிடைக்காதா என ஏங்க வைக்கும்.

இறைவனின் கருணையும் அப்படித்தான்.

அவனது கருணை மழையில் சிறு துளியாவது கிடைக்காதா என்று தான், ஒவ்வொரு பக்தனும் ஏங்குகிறான்.

உனக்கு கிடைத்த இந்த ஒரு லட்டில் சிறுதுண்டை, நீ எடுத்துக்கொள்.

மீதியை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொடு.

ஏழுமலையான் உன்வீட்டிற்கே வந்து விடுவான் என்றார்.

ஏழையின் மனம்தெளிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக