ஞாயிறு, 29 டிசம்பர், 2019

சிவபுராணம் 2 : அழகிய தோற்றம்...



சிவபுராணம் 2 : அழகிய தோற்றம்...

எம்பெருமானின் அருள்... பேய் உருவம்...!
ழூ சிவபுராணத்தின் முந்தைய கதைகள் நமது நித்ரா நாட்காட்டியின் முதல் பக்கத்தில் உள்ள கதைகள்ஃகட்டுரைகள் பகுதியில் நாள்தோறும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும், நீங்கள் தவறவிட்ட சிவபுராணப் பகுதிகளை இப்பகுதியில் படித்து மகிழுங்கள்.சிவபுராணம் - பகுதி 2

(திருவிளையாடலும், திருவினையும்)

காரைக்கால் அம்மையார்...!
பாண்டிய நாட்டில் உள்ள ஒரு சோலையில் வந்திருந்த அனைவரும் தங்கியிருந்து புனிதவதி வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். சற்றும் எதிர்பாராத இந்த செய்தியினால் மனதில் ஒருவிதமான பயம் கொண்டார் பரமதத்தன். மனதை திடப்படுத்தி கொண்டு அவர்கள் இவ்விடம் வரும் முன்பு நாமே அவ்விடத்திற்கு செல்வோம் என்று எண்ணம் கொண்டார். பின்பு மறுமணம் செய்து கொண்ட மனைவியுடனும், குழந்தையான புனிதவதியுடனும் தனது முன்னாள் மனைவி புனிதவதி தங்கியுள்ள இடத்திற்குப் புறப்பட்டார் பரமதத்தன்.

மனைவியோடும், தளர்நடை நடந்த குழந்தையோடும் சென்ற பரமதத்தன் புனிதவதியார் இருக்கும் இடத்தை அடைந்ததும் விரைந்து வந்து மனைவி மற்றும் மகளுடன் புனிதவதியார் பாதங்களில், வீழ்ந்து வணங்கி எழுந்தார். அடி‌யேன் உமது திருவருளால் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். என் குழந்தைக்கு உன்னுடைய திருநாமத்தையே சூட்டியிருக்கிறேன் என்றும், தாங்கள் அருள்புரிய வேண்டும் என்றும் கூறினார். சற்றும் எதிர்பாராத இந்த செய்கையினால் தம் கணவரான பரமதத்தனை கண்டு புனிதவதி அஞ்சி ஒதுங்கி நின்றாள்.

பரமதத்தனின் செயல்களைக் கண்டு திகைத்துப்போன உறவினர்கள் மனைவியின் காலடியில் விழ காரணம் ‌என்னவென்று பரமதத்தனிடம் கேட்டனர். உறவினர்களே... இவர் எனக்கு மனைவியாக இருக்கலாம். ஆனால் இவர் மானிடப்பிறவியே இல்லை. அம்மையார் தொழுவதற்குரிய தெய்வம் ஆவார். அதனால்தான் நான் இவர்களை விட்டு விலகி நின்றேன். நீங்களும் இவரை போற்றி வணங்குங்கள் என்று கூறினார். பரமதத்தன் உரைத்ததை கேட்டதும் அனைவரும் திகைத்து நின்றனர்.

கணவரின் இந்த முடிவுகளை அறிந்ததும் புனிதவதியாருக்கு மனதில் பெரும் வேதனை உண்டானது. அக்கணத்தில் இருந்து இளமையுடனும், எழிலுடனும் இருக்கும் இந்த உருவத்தை வெறுத்து ஒதுக்கினார். கணவருக்காக மட்டும் இந்த அழகிய உடலை கொண்டு என்றும் இளமையோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தேன். ஆனால் தன் கணவர் விரும்பாத இந்த இளமை உடல் எனக்கு எதற்கு என்று எண்ணி புனிதவதி அக்கணமே இறைவனிடம் இந்த எழில் உடம்பு எனக்கு தேவையில்லை. இவ்வுடலுக்கு பேய் வடிவம் தந்து அருள வேண்டும் என்று வேண்டினார்;.

எம்பெருமானும் அம்மையாரின் விருப்பத்திற்கு ஏற்ப பேய் வடிவத்தை கொடுத்து அருளினார். புனிதவதியின் வனப்பு மிகுந்த தசைகள் யாவும் மாயமாக மறைய துவங்கின. உடலில் உள்ள தோலானது எலும்பை மூடிய போர்வையாக அமைந்த வண்ணம் காட்சியளித்தார். தேவர்களும், மானிடர்களும் வியக்கும் பேய் வடிவத்தை புனிதவதி விரும்பி பெற்றார். பெண்ணாக நின்றவர் அவ்விடத்தில் பேயாக மாறினார்.

அனைவரும் போற்றுதலுக்கு உரிய புனிதவதியாரிடம் சுற்றத்தினர்கள் நிற்பதற்கே அஞ்சினர். அம்மையார் பேய் உருவத்தை கொண்டதோடு மட்டுமல்லாமல் நல்ல தமிழ் புலமையும் பெற்றார். மேலும், கைலாய மலையில் வீற்றிருக்கும் சிவபெருமானை தரிசிக்க வேண்டும் என எண்ணினார்.

பேய் உருவம் கொண்ட புனிதவதியார்...

எம்பெருமானை வழிபட்டாரா? இல்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக