வெள்ளி, 20 டிசம்பர், 2019

கிருஸ்துமஸ் சுவையான தகவல்கள்



கிருஸ்துமஸ் சுவையான  தகவல்கள் 

இயேசு கிறிஸ்து, கிறிஸ்துமஸ் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரிய தகவல்களை கீழே விரிவாக பார்க்கலாம்.

கிறிஸ்துமஸ் பண்டிகை பற்றிய சிறப்பு தகவல்கள்
* இயேசு கிறிஸ்து கி.மு.5ஆம் ஆண்டு, பாலஸ்தீன் நாட்டின் பெத்லகேம் நகரில் பிறந்தார். பெத்லகேம் என்றால் ‘அப்பத்தின் வீடு’ என்பது பொருள்.

* இயேசு என்ற பெயரின் எபிரேய மூலச்சொல்லான ‘யெஷ¨வா’ என்பதற்கு ‘கடவுள் விடுவிக்கிறார்’ என்றும், கிறிஸ்து என்ற கிரேக்க வார்த்தைக்கு ‘அருட்பொழிவு பெற்றவர்’ எனவும் பொருள்.


* கி.பி.240களில் மார்ச் 28ந்தேதி கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டம் நிகழ்ந்ததாக, அக்கால கிறிஸ்தவ நாள்காட்டி குறிப்பிடுகிறது.

* டிசம்பர் 25ந்தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கம் கி.பி.336ஆம் ஆண்டு ரோம் நகரில் தோன்றியது. இந்த தேதிக்கு, போப் முதலாம் ஜூலியஸ் அங்கீகாரம் வழங்கினார்.

* கிறிஸ்துமஸ் கேரல் கீதங்கள் 4ஆம் நூற்றாண்டு முதல் ஆலயங்களிலும், 13ஆம் நூற்றாண்டு முதல் தெருக்களிலும் பாடப்படுகின்றன.

* கிறிஸ்துமஸ் விழாவின்போது, இயேசு பிறந்த காட்சியை குடிலாக அமைக்கும் வழக்கத்தை, அசிசி புனித பிரான்சிஸ் 1223ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

* கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு கொடுக்கும் வழக்கம் 10ஆம் நூற்றாண்டில் தோன்றினாலும், தொப்பையும், குல்லாவும் கொண்ட சான்டாகிளாஸ் 19ஆம் நூற்றாண்டில்தான் வடிவம் பெற்றார்.

* 16ஆம் நூற்றாண்டு முதலே கிறிஸ்துமஸ் விழாக்களை நட்சத்திரங்கள் அலங்கரித்து வருகின்றன.

* 15ஆம் நூற்றாண்டு முதல் வழக்கத்தில் உள்ள கிறிஸ்துமஸ் மரம், 1882ஆம் ஆண்டு முதன்முதலாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.



கிறிஸ்துமஸ் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்!!


கிறிஸ்துமஸ் பற்றிய புனைவுகள்

யேசு கிறிஸ்து டிசம்பர் 25 ம் தேதி பிறந்தவர் அல்ல. அவர் கி.மு. 6க்கும் கி.பி. 30க்கும் இடையில், ஒரு செப்டம்பர் மாதத்தில் பிறந்தார் என்பது பல இறையியல் நிபுணர்களின் கணிப்பாகும்.




யேசு கிறிஸ்து பிறந்தது மர கொட்டகையில் அல்ல. ஒரு குகையின் உள்ளே என்பது பல பைபிள் பண்டிதர்களின் வாக்காகும்.

‘மூன்று அறிவாளர்கள்’ குழந்தை யேசுவை வழிபட்டனர் என்று கதைகளில் கூறப்பட்டாலும், பைபிளில் எண்ணிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை. மத்தேயூவின் நல்வாக்கில் அறிவாளர்கள் என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

3 அரசர்கள் 12 நாள் அவகாசத்தில் குழந்தை யேசுவை கண்டுபிடித்தமையால், கிறிஸ்துமஸ் என்பது 12 நாட்களாக கொண்டாடப்படுகிறது.




அறிவாளர்களுக்கு யேசுவின் இருப்பிடத்தை காட்டிய “பெத்தலகேம்” நட்சத்திரம் ஒரு வால் நட்சத்திரம் அல்லது யுரேனஸ் கோளாக இருந்திருக்க கூடும் என வானியல் நிபுணர்கள் நம்புகிறார்கள்.

கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ் என்ற சொல் புராதன ஆங்கிலத்தின் “கிறிஸ்டிஸ் மேஸீ” (Cristes Maesse) எனும் சொற்றொடரிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் கிறிஸ்துவின் கூட்டம் (Christ’s Mass) ஆகும்.



கிறிஸ்துமஸின் சுருக்கமான X-மஸ் என்பது மதத்திற்கு முரணானது அல்ல. கிரேக்க மொழியில் X என்பது யேசுவை குறிக்கும் குறிசொல்லாகும்.

அமெரிக்க புராதனவாதிகள் நன்றி நவிலும் நாளை (Thanks Giving Day) கிறிஸ்துமஸை விட முக்கியமான பண்டிகையாய் கொண்டாட முயன்றார்கள்.

கி பி 440 ம் ஆண்டு வரை, டிசம்பர் 25 ஆனது யேசு கிறிஸ்துவின் பிறந்தநாளாக கொண்டாடப்படவில்லை என்பது ஒரு வரலாற்று உண்மை.

கிறிஸ்துமஸ் பாடல்கள்

13ம் நூற்றண்டில், அசிசியின் புனித ‘ஃபாதர் ஃப்ரான்சிஸ்’ என்பவர் அறிமுகப்படுத்தும் வரை, “காரோல்” (Carols) எனப்படும் கிறித்துவ ஞானகீதம் தேவாலையங்களில் பாடப்படவில்லை.

“வஸைலிங்” (Wassailing) எனப்படும் ஆங்கில சம்பிரதாயதிற்கேற்ப, அக்கம்பக்கத்தோர் நல்வாழ்விற்கு பாடப்பட்ட வாழ்த்துப்பா தான் பின்னர் “காரோல்” எனப்படும் கிறித்துவ ஞானகீதம் ஆகியது.

கிறிஸ்துமஸின் போது பாடப்படும் புகழ்பெற்ற “ஜிங்கிள் பெல்ஸ்” (Jingle Bells) பாடல் தான் விண்வெளியில் ஒலிபரப்பப்பட்ட முதல் பாடலாகும். ஜெமினி 6 எனும் விண்கலத்தில் பயணம்செய்த “டாம் ஸ்டாஃபர்ட்” (Tom Stafford) மற்றும் “வாலி சிறா” (Wally Schirra) ஆகிய விண்வெளி வீரர்கள், இந்த பாடலை டிசம்பர் 16, 1695 ல் ஒலிபரப்பினார்கள்.

கிறிஸ்துமஸ் தகவல்கள்

ஒவ்வொரு டிசம்பர் 6 ஆம் திகதி பரிசுகள் வழங்கும் பழக்கமுள்ள “சின்டர்க்ளாஸ்” (Sinterklass) என அழைக்கப்பெற்ற ‘புனித நிகோலாஸ்’ அவர்களை பற்றிய நெதர்லாண்டின் நாட்டுப்புற கதையிலிருந்து தான் கிறிஸ்துமஸ் புகழ் “சான்டா க்ளாஸ்” (Santa Claus) தாத்தா பிறந்தார்.

உலகத்தின் மிக உயரமான 221 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் 1950 ம் ஆண்டு வாஷிங்டன் வணிக வளாகத்தில் நிறுவப்பட்டது.

கிறிஸ்துமஸ் மரத்தின் அநேக பகுதிகள் உண்ணத் தகுந்ததாகும். குறிப்பாக அதன் கூர் முனை இலைகள் விட்டமின் “சி” சத்துக்கள் நிறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தைக்கு விற்பனைக்கு வரும் முன்னால், கிறிஸ்துமஸ் மரம் சுமார் 15 ஆண்டுகள் வளர்க்கப்படுகிறது.

சுற்றுசூழல்வாதி ஆகிய அமெரிக்க அதிபர் “டெடி ரூஸ்வெல்ட்” (Teddy Roosevelt) 1912 ஆம் ஆண்டு, வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் மரங்கள் நிறுவுவதை தடை செய்தார்.

12 ஆம் நூற்றண்டில் ஃப்ரென்சு கன்னிகாஸ்த்ரீகள் ஏழைகள் வீட்டு வாசலில், காலுறையின் உள்ளே பழங்கள், உலர் பழங்கள் மற்றும் சிறிய ஆரஞ்சு சுளைகள் வைத்து கதவில் மாட்டிவிட்டு வந்த பழக்கம், பின்னர் காலுறையின் உள்ளே ஆரஞ்சு சுளைகள் வைக்கும் ஒரு கிறிஸ்துமஸ் மரபாக மாறிவிட்டது.

பண்டிகையின் சிறப்புகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பிட்டு, தொன்மையில் திராட்சை மற்றும் திராட்சை ரசமான மதுவை கொண்டு செய்யப்படும் “சூப்” ஆக தான் இருந்தது.

1938 இல் ஓர் அமெரிக்க நிறுவனத்தின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது உருவாக்கபட்ட கண்டுபிடிப்பு தான் “ருடால்ஃப்” (Rudolph) எனப்படும் சிவந்த மூக்கு கொண்ட பனி கலைமான்.

நம் பூமியில் கிறிஸ்துமஸ் எனும் பெயர் கொண்ட இரு தீவுகள் உள்ளன. ஒன்று பசிபிக் பெருங்கடலில் உள்ள (முன்னர் “கிறிட்டி மாட்டி” என அழைக்கப்பெற்ற) கிறிஸ்துமஸ் தீவு. மற்றொன்று இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள கிறிஸ்துமஸ் தீவு.




* கதவைத் திறந்து கிறிஸ்துமஸ் வாழ்த்து:
பெர்லின் நாடு இரண்டாகப் பிரிந்திருந்த காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் நடுவே ஒரு சுவர் அமைக்கப்பட்டிருந்தது. சுவரின் நடுவே ஒரு கதவு அமைக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் அன்று மட்டுமே, இந்தக் கதவு திறக்கப்பட்டு இருநாட்டு மக்களும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர். மற்ற நாட்களில் இந்தக் கதவு மூடப்பட்டிருக்கும்.

* மலர் அலங்காரம்:
இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் மரம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாகவே ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் “பிர்’ என்ற மரத்தை அலங்கரிக்கும் வழக்கம் இருந்தது.

இருப்பினும், மரங்களில் இலைகள் மற்றும் மலர்களைக் கட்டி அலங்கரிக்கும் வழக்கம் இங்கிலாந்தில் தான் 1841ம் ஆண்டில் ஆரம்பித்தது.

அல்பெர்டினால் என்ற அரசன் முதன்முதலாக கிறிஸ்துமஸ் மரத்தை நட்டார்.

* 20நாள் கொண்டாட்டம்:
ஸ்காட்லாந்து நாட்டில் 20 நாட்கள் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும்.

“யூல்’ எனப்படும் டிசம்பர் 18ம் தேதியே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கி ஜனவரி 6ம் தேதி வரை நடக்கும். கடைசிநாள் விழாவை “எபிபனி’ என்கிறார்கள்.

* போக்குவரத்து நிறுத்தம்:
பின்லாந்து நாட்டில் கிறிஸ்துமஸ் அன்று போக்குவரத்து நிறுத்தப்பட்டு விடும். அந்நாட்டு மக்கள் தேவாலயங்களுக்குச் செல்ல சறுக்கு வண்டியைப் பயன்படுத்துகிறார்கள்.

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மக்கள் மின்னல் வேகத்தில் தங்கள் வாகனங்களை செலுத்துவது வழக்கம்.

அவ்வாறு விதிகளை மீறும் வாகனங்களின் மீது போலீசார் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை ஒட்டி அனுப்புகிறார்கள்.

* இலை இல்லாத மரம்:
ஸ்வீடன் நாட்டில் மக்கள் கிறிஸ்துமஸ் மரங்களை நடும்போது பச்சை இலைகளைப் பயன்படுத்துவதில்லை.

ஏனெனில், அந்நாட்டில் யாராவது இறந்து போனால் பச்சை மரங்களை சமாதி அருகில் நடுவது உண்டு.

இறப்பின் சின்னமாக பச்சை மரம் இருப்பதால் கிறிஸ்துமஸ் மரங்களுக்கு முழுக்க முழுக்க பூக்களையே பயன்படுத்தி அலங்கரிக்கிறார்கள்.

* கிறிஸ்துமஸ் குடில்:
இயேசுநாதர் பிறந்ததைப் போல சித்தரிக்கும் கிறிஸ்துமஸ் குடில்கள் விதவிதமான அலங்காரங்களுடன் உலகெங்கும் அமைக்கப்படுகின்றன.

இதை முதன்முதலாக புனித பிரான்சிஸ் என்பவர் 1722ம் ஆண்டில் அறிமுகப்படுத்தினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக