புதன், 25 டிசம்பர், 2019

மார்கழி அமாவாசை... முன்னோர்களின் ஆசியை பெற்று... நற்பேறு அடையுங்கள்... !!



மார்கழி அமாவாசை... முன்னோர்களின் ஆசியை பெற்று... நற்பேறு  அடையுங்கள்... !!

மார்கழி மாத அமாவாசை!!

12 மாதங்கள் கொண்ட தமிழ் வருடத்தில் சூரியன் தட்சிணாயனம் எனப்படும் தென்திசையில் சஞ்சரிக்கும் இறுதியான மாதம் மார்கழி மாதம் ஆகும். மார்கழி மாதம் என்பது சிவ மற்றும் விஷ்ணு வழிபாட்டிற்குரிய மாதமாகும்.

இந்த மாதத்தில் வரும் அனைத்து தினங்களும், திதிகளும் ஆன்மிக முக்கியத்துவம் கொண்டவையாகும். இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த வகையில் 'மார்கழி மாத அமாவாசை" தினத்தின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

🌚'மார்கழி" மாதத்தில் வரும் அமாவாசை தினமும், மற்ற மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள் போன்றே முக்கியமான திதி தினமாகும். இம்மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்கள் வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நன்மையானது.

🌚மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு, குறிப்பாக எதிர்பாராத விதத்தில் மரணித்த முன்னோர்கள் அல்லது உறவினர்களுக்கு திதி, தர்ப்பணம் போன்றவற்றை தருவதாலும் அல்லது அவர்களை வழிபடுவதாலும் அவர்களுக்கு பெருமாளின் வைகுண்ட வாச பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

🌚இன்று (புதன்கிழமை) மார்கழி மாத அமாவாசை தினம். இந்த நாளில், வீடு மற்றும் பூஜையறையை சுத்தப்படுத்தி, முன்னோர்களின் படங்கள், இறந்துவிட்ட நம் தாய், தந்தையரின் படங்களை சுத்தம் செய்து, படங்களுக்கு பூக்களை அணிவியுங்கள். முடிந்தால், துளசி மாலை சாற்றலாம்.

🌚மார்கழி அமாவாசை தினமான இன்று காலையில் குளித்து முடித்து, ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி, தர்ப்பணம் தரலாம்.

🌚இந்தநாளில், தர்ப்பணம் அல்லது எள்ளும், தண்ணீரும் விட்டு முன்னோரை வணங்க வேண்டும். ஆச்சார்யர்களுக்கு வெற்றிலை, பாக்கு, அரிசி, வாழைக்காய் கொடுத்து தட்சணையும் வழங்கி நமஸ்கரிக்க வேண்டும்.

🌚இப்படி தர்ப்பணம் தர இயலாதவர்கள் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு தரலாம். காகம் நம் முன்னோர்களின் மறுவடிவம் என்கிறது சாஸ்திரம். நம் முன்னோர்களை மனதில் நினைத்து, நான்கு பேருக்காவது அன்னதானம் செய்யலாம்.

🌚இந்தச் செயல்களால், நம் முன்னோர்கள் குளிர்ந்து போவார்கள். நம்மையும், நம் குடும்பத்தையும் ஆசீர்வதித்து அருளுவார்கள்.

🌚மார்கழி அமாவாசை தினத்தில் மேற்கண்டவற்றை செய்வதால் முன்னோர்களுக்கு சரியான காலத்தில் பித்ரு சிரார்த்த சடங்குகள் செய்ய முடியாததால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.

🌚உங்கள் பரம்பரையில் இயற்கைக்கு மாறான முறையில் மறைந்த முன்னோர்கள் அல்லது உங்களின் உறவினர்களின் ஆன்மா சாந்தியடைந்து நற்கதியடையும்.

மார்கழி அமாவாசை தினத்தில் மறக்காமல் முன்னோர்களுக்கு ஆராதனை செய்து நற்பேறு அடைவோம்...!!

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக