வியாழன், 30 மார்ச், 2017

நந்தனார் எனும் ஏழை அடியாரின் அன்பிற்க்காக நந்தியை விலக செய்து காட்சி கொடுத்த சிவன்..


நந்தனார் எனும் ஏழை அடியாரின் அன்பிற்க்காக நந்தியை விலக செய்து காட்சி கொடுத்த சிவன்..

சிதம்பரம் அருகிலுள்ள  மேல ஆதனூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் நந்தனார்.

அதிதீத *சிவபக்தர்*இந்த நந்தனார்.

இவருக்கு வெகு காலமாய் ஒரு தீராத ஆசையொன்று இருந்து வந்தது.

*சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானை* தரிசிக்க வேண்டுமென்று அவருக்கிருந்த பெரிய ஆசை.

இவருடைய வருமாணப் *பொருளாதாரம் மிகவும் குறைவாக இருப்பதும்*, அவர் சிதம்பரம் செல்ல முடியாமைக்கு இதுவும் ஒரு காரணம்.

இவர்,கூலி வேலைக்கு செல்வதால் *நாளை போவலாம்  நாளை போவலாம்* என்று நாளைத்  தள்ளிப் போட்டுக் கொண்டே போனதால் நந்தனாரை *திருநாளைப் போவார்* என்றும் அழைத்தும் வந்தார்கள்.

ஒரு நாள் தன் ஊருக்கு அருகாக இருக்கும் *திருப்புன்கூர் சிவலோகநாதர்* திருக்கோயிலுக்கு வந்தார்.

அக்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் திருக்கோயிலுனுள் சென்று வர அனுமதியில்லாத காலமது.

எனவே திருக்கோயிலுக்கு *வெளியே நின்று, சுவாமியை எட்டி எட்டிப் பார்த்தார்*. சுவாமியை அவரால் பார்த்து *வணங்க முடியவில்லை.*

திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி யிருந்ததாலும், *சுவாமியின் முன் நந்திவாகனர் அமர்ந்திருந்ததாலும்,* நந்தனாரின் பார்வைக்கு சுவாமி தெரியவில்லை.

ஆமாம், சுவாமியை தரிசனம் செய்த பக்தர்கள் கூட்டம் சிறிது நேரத்தில் குறைந்து போக, *நந்தனாரின் பார்வைக்கு சுவாமி தெரியவில்லை.* இப்போது நந்திபெருமானின் பின்புறம் மட்டும்தான் தெரிந்தது.

 இந்நிலையையை எண்ணி மனவருத்தத்துடன்.............
*"சிவனே!, உன் திருமுகத்தைக் காண முடியவில்லையே!* என மனமுருகி வேண்டினார்.

நந்தனாரின் *நினைவையெல்லாம், பெருமானின் கர்ப்பகிருக வாயிலில் இருக்கும் துவார பாலகர்களின் நினைவுக்கு* தோன்றியது.

உடனே இரு *துவாரபாலகர்களும் நந்தனாரின் மன வேதனையை பெருமானிடம் சென்று,*.............
ஐயனே!"  தங்கள் பக்தர் நந்தனார் வந்திருக்கிறார் என்று சொன்னார்கள்.

சிவபெருமானும் *நந்தனாரின் பக்தி நினைவலையையென்னி,*
தன் முன்பாக அமர்ந்திருந்த நந்தியை, *சற்று இடப்பக்கமாக விலகியிரு,* எனச் சொன்னார்.

பெருமானின் உத்தரவுபடி *நந்தியார் இடதுபுறமாக கொஞ்சம் நகர்ந்தமர்ந்தார்*. இப்போது சிவலோகநாதரின் திருமுக திருக்காட்சி நந்தனார்க்கு கிடைத்தது.

*(ஆனால் நிறையோர் மனதில் ஒரு வினா இருந்திருக்கும். ஈசன் நேராக நந்தனாரை உள்ளே வரவழைத்திருக்க வேண்டியதுதானே? என்று. அதைவிட்டு ஏன் நந்தியை விலகச் சொன்னாரென்று!")*

அதற்குக் காரணம்! இவ்விதம் நடந்து விட்டிருப்பது, நந்தி விலகியது நமக்குத் தெரிய வேண்டுமென்பதற்காகத்தான். நந்தி ஏன் விலகியது என்ற கேள்வி நமக்கு எழ வேண்டுமென்பதற்காகத்தான்.நந்தி விலகியதற்குக் காரணம் நந்தனார்க்காக என தெரிய வரவேண்டுமென்பதற்காகத்தான்.

இவ்விதம் நடக்க ஈசனும் ஏன் முடிவெடுத்தாரென்றால்?, *நந்தனாரின் பக்தியும் புகழும் வெளிக்கொணர,* ஈசனே திருவிளையாடல் நடத்த திட்டமிட்டிருந்தான்.

ஏனென்றால், நீண்ட *நாளாய் நந்தனாரின் ஆசையான சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானைத் தரிசிக்க* வேண்டுமென்று நினைப்பைக் கொண்டிருந்த ஆசையை, சிதம்பரத்தில் திருவிளையாட்டம் செய்து *அவருக்குக் காட்சி செய்ய வேண்டுமென்று ஈசனும்* முடிவு செய்து வைத்திருந்தார்.

காலம் வந்தது.
சிதம்பரத்திற்கு நந்தனார் வந்தார்.
அவரால் திருக்கோயிலுக்குள் செல்ல முடியாதகையால், *"நடராஜப் பெருமானே!* உன் *தரிசனம் எனக்கு கிடைக்குமா?* என்ற மன வேதனையைத் தாங்கிக் கொண்டு, திருக்கோயில் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி சுற்றி வந்தார்.

இரவு நெருங்கும் வேளையில் நந்தனார்க்கு களைப்பு வர, கோயிலின் மதில் சுவரருகில் *அமர்ந்திருந்தவர் அப்படியே தூங்கிப்* போனார்.

நந்தனாரின் மனவலைவுக்குள் கனவாக வந்த ஈசன், *"நந்தா வருத்தம் கொள்ளாதே!* என்னை நீ காணப் போகிறாய்!. *நெருப்புடத்தில் புகுந்தெழுந்து என்னைக் காண்பாய்!* எனச் சொல்லி கனவைக் கலைத்து மறைந்தார்.

உடனே மறுபடியும், *தில்லைவாழந்தணர்கள் கனவிலும் தோன்றி,* *அக்னி வளர்த்து என் அன்பன் நந்தனை, அக்கினிக்குள் உட்புக அழைத்து வாருங்கள*் அவனுக்கு உயிர் நீங்காதிருக்கச் செய்வோம் என்றார்.

தில்லைவாழந்தணர்களும் நந்தனாரைத் தேடிக் கண்டு ஈசனின் கனவு நிகழ்வைக் கூறி திருக்கோயிலுக்குள்அழைத்து வந்தனர். நந்தனார் மனம் நெகிழ்ந்தார்.

*நடராஜப் பெருமான் முன்பு அக்கினியை தில்லைவாழந்தணர்கள் உருவாக்கினார்கள்*

நந்தனாரை அக்கினியினுள் புக கூறினார்கள். *நந்தனாரும் அக்கினினுள் உட் பிரவேசம் செய்தார்.* கூடவே தில்லைவாழந்தணர்கள் நந்தனாரைக் காணும் பொருட்டு, அக்கினியின் இட, வல புறமாகச் சென்று முன் வந்தனர்.

*நந்தனாரைக் காணவில்லை.*

நடராஜப் பெருமானைப் பார்த்து வணங்கியெழுந்தார்கள் தில்லைவாழந்தணர்கள் அனைவரும்.

*என் அன்பன் நந்தன் என்னோடிருக்கிறான் என்று நடராசப் பெருமான் கூறினான்.*

ஆமாம்!, நந்தன் *நடராஜனோடு இரண்டறக் கலந்துவிட்டிருந்தார்*


*தீவிர பக்தி இருந்தால், ஈசன் அருள் கிடைக்கும்*

நீதி

*ஈசன் அடியார்களின் அன்பைத்தான் பார்ப்பார்*

*அடியார்களின்
*குலம்*
 *ஏழை*
*பணக்காரன்* என பார்க்கமாட்டார்*

*நாமும் ஈசனிடம் அன்பை செலுத்தி அருள் பெறுவோம்*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக