திங்கள், 13 மார்ச், 2017

ஆதிசங்கரர் - மந்திரத்தால் அவருக்குள் ஏவல் செய்ததை எப்படி முறியடித்துக் காட்டினார்?






ஆதிசங்கரர் - மந்திரத்தால் அவருக்குள் ஏவல் செய்ததை எப்படி முறியடித்துக் காட்டினார்?

அக்காலத்தில், அரசர்களுடைய நிலைகள் துவைதக் கொள்கையாக இருந்தது. ஆகையால், ஆதிசங்கரர் மீது மந்திர ஒலிகளை ஏவி அவருக்கு “வயிற்று வலியை” உருவாக்கினர்.

“நீ விநாயகருக்கு யாகங்கள் செய்தால்.., உன் வயிற்று வலி நீங்கும்” என்றும் கூறினார்கள்.

அப்போது ஆதிசங்கரர், “இதுவல்ல.., உண்மையான யாகம்” நமக்குள் இருக்கும் உயிரான நெருப்புக்குள் அந்த அருள் ஞானியின் உணர்வைச் செலுத்துவதே உண்மையான யாகம் என்றார்.

என்னை இயக்கிக் கொண்டிருக்கும் எனக்குள் ஜீவன் பெறச் செய்து கொண்டிருக்கும் என் உயிரான நெருப்புக்குள், அந்த மகாஞானியின் உணர்வைச் செலுத்துவேனென்றால்.., “என் உடலுக்குள் நீங்கள் ஏற்படுத்திய தீமையின் விளைவை.., என்னால் மாற்றிக் கொள்ள முடியும்” என்றார்.

“நீ புறத் தீயிட்டு.., அதில் பொருளைப் போட்டு.., அதனில் வரும் கருகிய மணத்தை நுகர்ந்தால்.., எனக்குள் அது வராது”.

தீமையை அகற்றிடும் தீமையை அகற்றிட்ட அந்த மெய்ஞானியின் உணர்வை என் உயிரான நெருப்புக்குள் போட்டு அந்த உணர்வின் தன்மையை அலைகளாகப் பாய்ச்சும்போது எனக்குள் விளைந்த தீதினை  “என்னால் அகற்றிட முடியும்.., என்று செய்து காட்டினார்.., ஆதிசங்கரர்”.

இந்தத் துவைதவாதிகள், “எமக்கு அது இல்லை” என்றனர்.

பின் ஆதிசங்கரர் கங்கைக்கரை சென்றவர்தான். அதற்குப்பின் அவர் சரித்திரம் இல்லை.

ஆனால், அவருக்குப்பின் அரசர்கள் துவைதம் என்ற நிலைகளிலேயே யாக கேள்விகள் போன்ற முறைகளிலேயே அரசாட்சி செய்து வந்தனர்.

உண்மையில் ஒவ்வொறு மனிதனையும் கடவுளாக மதி என்றும், அதனின் உணர்வுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொன்ன ஆதிசங்கரருடைய நிலைகள் மாறிவிட்டது.

அவரது இறுதிக் காலம் எப்படிப்பட்டது..? எங்கே சென்றார்…? எங்கே இருந்தார்..,? என்பது யாருக்கும் தெரியவில்லை.

சரித்திரத்தைச் சொல்லச் சொல்லுங்கள். அவருடைய சீடர்களாக இருப்பவர்கள்.., இன்று அந்த உண்மையான நிலைகளை.., “ஏன் மக்களுக்கு எடுத்துச் சொல்லவில்லை..?”

அன்று இந்த மக்களுடைய நிலைகளை “அறியாது தீது  விளைவிக்கும் அரச நிலைகளிலிருந்து.., மக்களை நீ மனிதனாக்கு.., அந்த மனிதனை முழுமையாக்கு..,” என்று அன்று சொன்னாரே ஆதிசங்கரர்.

“அதனுடைய நல்ல உணர்வின் தன்மையை” ஏன் பிறரைப் பருகச் செய்யவில்லை?

ஒரு ஆலயத்தைக் கட்டினார்கள். அதில் பூஜிக்க வரும் மக்களிடம் “காசு வாங்கிப் பிழைப்பேன்..,” என்ற நிலைகளில்தான் ஒவ்வொருவரும் செய்து வருகின்றார்களே தவிர அங்கே வருபவர்கள் நன்மை பெறுவார் என்ற நிலைகள் யாருக்கும் இல்லை.

“நீங்கள் நன்மை பெறுவீர்கள்.., என்று ஆசையை ஊட்டி..,” அதனின் மறைவிலே காசைத்தேடி உண்மையுடைய நிலைகளை மறைக்க முடிகின்றதே தவிர மறைந்த பொருளை கண்டுணரச் செய்யும் நிலை இல்லை.

ஆக, நம்மையறியாது தீது விளைவிக்கும் நிலைகளிலிருந்து காத்துக் கொள்ள முடிகின்றதா? என்றால் அது இல்லை.

இன்றும், விஞ்ஞான உலகில் மனித உணர்வு அனைத்திலும் அழிந்திடும் வெறித்தன்மையைத்தான் ஊட்டுகின்றார்கள்.

“மக்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள்”. ஒவ்வொரு மனிதனும் அவன் உயர்ந்த நிலைகள் பெறவேண்டும். அவர்கள் உயர்ந்த குணங்கள் பெறவேண்டும் என்ற எண்ணத்தை நாம் நமக்குள் வளர்த்துக் கொண்டால்.., “நாம் அதுவாகின்றோம்…, அவனையும் அதுவாக்க வேண்டும்.”

இந்த உணர்வின் தன்மையை நாம் பரப்பப்படும் பொழுது உடலில் வரும் தீதினை நீக்கிவிட முடியும்.

“மனிதா.., நீ ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயங்கும் உயிரைக் கடவுளாக மதி” அங்கே கடவுள் வீற்றிருக்கும் ஆலயம் “அது புனிதம் பெறவேண்டும்.. என்று எண்ணு.”

எந்த மனிதன் இங்கே தீது செய்கின்றானோ அந்த உணர்வு அவருக்குள் அறியாது உட்புகுந்து தீதினை விளைவிக்கின்றது. உடலான ஆலயத்தை மாசுபடுத்துகின்றது.

அப்பொழுது அங்கு ஆண்டு கொண்டிருக்கும் உயிரான ஈசனுக்கு தீதான மணங்கள் சேர்ப்பிக்கும் நிலையிலிருந்து அதைத் துடைத்திடும் நோக்கமாக.., “நீ இவ்வாறு செய்..,” என்று தான் அந்த மகாஞானி ஆதிசங்கரர் சொன்னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக