புதன், 24 ஜூலை, 2019

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று 25-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது



நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று 25-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இன்று காலை 5-30 மணிக்கு  அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
 4-ம் திருவிழாவான 28-ந்தேதி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது.

மதியம் 12 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், வளைகாப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு காந்திமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது.


அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி 10-ம் நாள் திருவிழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயறை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும். இதையடுத்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயறை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக