வியாழன், 18 ஜூலை, 2019

தேங்காய் உடைக்கும் போது ஏற்படும் சகுனங்களை, தெரிந்து கொள்வோம்....


தேங்காய் உடைக்கும் போது ஏற்படும் சகுனங்களை, தெரிந்து கொள்வோம்....

தேங்காய் சகுணம்:

1) தேங்காய் முடிபாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால், செல்வம் சேரும்.
2) சரிசமமாக உடைந்தால், துன்பம் தீரும், செல்வம் பெருகும்.
3) மூன்றில் ஒரு பங்காக உடைந்தால், ரத்தினம் சேரும்.
4) ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால், அழியாத செல்வம் உண்டாகும்.
5) சிறு சிறு துண்டுகளாக உடைந்தால் செல்வம், செல்வாக்கு, ஆபரண லாபம் உண்டாகும்.
6) ஓடு தனியாக கழன்றால், துன்பம் வரும்.
7) நீளவாக்கில் உடைந்தால், தனம் அழிந்து துன்பம் உண்டாகும்.
8) உடைக்கும் பொழுது கைபிடியில் இருந்து தவறி கீழே விழுந்தால் குடும்பத்தில் துன்பம் மற்றும் பொருள் இழப்பு ஏற்படும்.
9) முடி பாகம் இருகூறானால் தீயினால் பொருள் சேதமாகும்.
10) ஆலயத்தில் தெய்வத்திடம் வேண்டி கொண்டிருக்கும்பொழுது தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டால், வேண்டும் காரியம் உடனே வெற்றியைத் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக