செவ்வாய், 23 ஜூலை, 2019

ஆடிப்பூரம் அன்று வளைகாப்பு வைக்கலாமா? - ஜோதிடரின் பதில்..!!


ஆடிப்பூரம் அன்று வளைகாப்பு வைக்கலாமா? - ஜோதிடரின் பதில்..!!

ஜோதிடர் பதில்கள் !!
1. ஆடிப்பூரம் அன்று வளைகாப்பு வைத்து கொள்ளலாமா?

🌟 ஆடிப்பூரம் அன்று வளைகாப்பு வைத்து கொள்ளலாம்.

2. ஆடி மாதம் 18ஆம் தேதி புதிய தொழில் தொடங்க பூஜை போடலாமா?

🌟 ஆடி மாதம் 18ஆம் தேதி புதிய தொழில் தொடங்க பூஜை செய்வதை தவிர்த்து மற்ற சுப தினங்களில் செய்து கொள்ளவும்.

3. தோஷங்கள் மற்றும் பரிகாரங்கள் செய்வதற்கு ஆடி மாதம் கோவில்களுக்கு செல்லலாமா?

🌟 தோஷங்கள் மற்றும் பரிகாரங்கள் செய்வதற்கு ஆடி மாதம் கோவில்களுக்கு செல்லலாம்.

4. விநாயகர் சதுர்த்தி அன்று தொழில் தொடங்கலாமா?

🌟 விநாயகர் சதுர்த்தி அன்று தொழில் தொடங்குவதை தவிர்த்து மற்ற சுப தினங்களில் தொடங்கவும்.

5. ஆடி மாதம் பத்திரப்பதிவு செய்யலாமா?

🌟 ஆடி மாதம் பத்திரப்பதிவு செய்வதை தவிர்க்கவும்.

6. ஆடி மாதம் பெண்கள் பருவம் வரலாமா?

🌟 ஆடி மாதம் பெண்கள் பருவம் வரலாம்.

7. விநாயகர் கோவிலில் எனது கையால் அபிஷேகம் செய்யலாமா?

🌟 விநாயகர் கோவிலில் உங்கள் கையால் அபிஷேகம் செய்யலாம்.

8. வாஸ்து செய்த பிறகு ஆடு வெட்டி சாமி கும்பிடலாமா?

🌟 வாஸ்து செய்த பிறகு ஆடு வெட்டி சாமி கும்பிடலாம்.

9. பொருத்தம் அனைத்தும் இருந்தும் திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவிக்கு கூட்டுத்திசை நடக்கலாமா?

🌟 பொருத்தம் அனைத்தும் இருந்தும் திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவிக்கு கூட்டுத்திசை நடப்பது நன்றன்று.

10. ஆடி மாதம் திருமணப்பேச்சு வார்த்தை நடத்தலாமா?

🌟 ஆடி மாதம் திருமணப்பேச்சு வார்த்தை நடத்துவதை தவிர்த்து ஆவணி மாதம் சுப நாட்களில் நடத்தலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக