வெள்ளி, 27 செப்டம்பர், 2019

மஹாளய அமாவாசை 2019: புரட்டாசி சனி மஹாளய அமாவாசையில் தானம் கொடுங்க தோஷங்கள் நீங்கும்...


மஹாளய அமாவாசை 2019: புரட்டாசி சனி மஹாளய அமாவாசையில் தானம் கொடுங்க தோஷங்கள் நீங்கும்...

நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று நாம் அவர்களுக்கு விருந்து கொடுப்போம். அதுபோல பித்ரு லோகத்தில் இருந்து நம்மை காண வரும் முன்னோர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஏழைகளுக்கு தானம் கொடுக்க வேண்டும் அன்னதானம் செய்ய வேண்டும் இதன் மூலம் நம் பித்ருக்கள் மகிழ்ச்சியடைந்து நம்மை ஆசிர்வாதம் செய்வார்கள். இதன் மூலம் எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் நீங்கும். நாளை சனிக்கிழமை மஹாளய அமாவாசை தினமாகும். இந்த நாளில் நாம் தானம் செய்தல் நம் தலைமுறை மட்டுமல்லாது மூன்று தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்.


மஹாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறப்பான நாளாகும். இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன என்பதைப் பார்ப்போம். அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப் பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டு மகாளய அமாவாசை புரட்டாசி சனிக்கிழமை தினத்தில் வருவது மிகவும் விசேஷமாகப் பார்க்கப்படுகின்றது.

மஹாளய பட்சம் எனும் 15 நாட்கள் கொண்ட இந்த புண்ணிய தினத்தின் இறுதியில் வருகின்றது மகாளய அமாவாசை. பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவை குறிப்பதாகும். மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பெளர்ணமிக்கு பின்னர் வரும் 15 நாட்களைக் குறிப்பதாகும். இந்த ஆண்டு மகாளய பட்சம் 2019 செப்டம்பர் 14 முதல் 28 செப்டம்பர் 2019 வரை உள்ளது. நாளை 28ம் தேதி மஹாளய அமாவாசை தினம் சனிக்கிழமையில் வருகின்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு புரட்டாசி சனிக்கிழமை வருவதால் அது சிறப்பான மஹாளய அமாவாசையாக கடைபிடிக்கப்படுகிறது.


மஹாளயத்தை மறக்காதீங்க
இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு எங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர்.எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ தர்ப்பணம் அளிக்க

வேண்டும் என்கிறார்கள். அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும்.


மஹாளயத்தை மறக்காதீங்க
இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு எங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர்.எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ தர்ப்பணம் அளிக்க

வேண்டும் என்கிறார்கள். அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும்.



ஏழைகளளுக்கு உதவி பண்ணுங்க
சனி அமாவாசை தினத்தில் ஏழை எளியோருக்கு உதவி செய்ய வேண்டும். அன்னதானம் கொடுக்கலாம் இயன்றவர்கள் மிதியடி, போர்வைகள் வாங்கிக் கொடுக்கலாம். ஏழை மக்களின் உருவில் சனி பகவான் இருக்கிறார். அவர்களுக்கு உதவி செய்வதால் சனி பகவானின் ஆசி கிடைக்கும். ஏழைகளுக்கு உதவியும் மரியாதையும் கொடுத்தால் போதும் சனி பகவானின் ஆசி கிடைக்கும்.


ஏழைகளளுக்கு உதவி பண்ணுங்க
சனி அமாவாசை தினத்தில் ஏழை எளியோருக்கு உதவி செய்ய வேண்டும். அன்னதானம் கொடுக்கலாம் இயன்றவர்கள் மிதியடி, போர்வைகள் வாங்கிக் கொடுக்கலாம். ஏழை மக்களின் உருவில் சனி பகவான் இருக்கிறார். அவர்களுக்கு உதவி செய்வதால் சனி பகவானின் ஆசி கிடைக்கும். ஏழைகளுக்கு உதவியும் மரியாதையும் கொடுத்தால் போதும் சனி பகவானின் ஆசி கிடைக்கும்.


முன்னோர்களுக்குப் படையல்
மஹாளய தினத்தில் நம் முன்னோர்களுக்கு பிடித்தமான சைவ உணவுகளை ஆக்கிப்படைத்து அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவதாக அமைகின்றது. படைத்த உணவின் சிறு பகுதியை மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக கொடுப்பதும், மிகுதியை, உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்து உண்பதும் மஹாளய அமாவாசையின் சிறப்பாகும். இந்த நாளில் நம் முன்னோர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணம் மூலம் நமது மூன்று தலைமுறைக்கும் ஆசியை பெற்றுத்தரும்.


முன்னோர்களுக்குப் படையல்
மஹாளய தினத்தில் நம் முன்னோர்களுக்கு பிடித்தமான சைவ உணவுகளை ஆக்கிப்படைத்து அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவதாக அமைகின்றது. படைத்த உணவின் சிறு பகுதியை மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக கொடுப்பதும், மிகுதியை, உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்து உண்பதும் மஹாளய அமாவாசையின் சிறப்பாகும். இந்த நாளில் நம் முன்னோர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணம் மூலம் நமது மூன்று தலைமுறைக்கும் ஆசியை பெற்றுத்தரும்.
நன்றி ஒன் இந்தியா.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக