வெள்ளி, 27 செப்டம்பர், 2019

நாளை மகாளய அமாவாசை... முன்னோர்களின் ஆசியை பெற மறக்காமல் இதை செய்யுங்கள்..!!


நாளை மகாளய அமாவாசை... முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த தினம்..!!


🌚ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசை திதியின்போது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறந்தது.

🌚பொதுவாக, பித்ருக்கள் என்று அழைக்கப்படும் முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த தினம் அமாவாசை. முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

🌚அந்த நாட்களில் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசிப்பெற்று, நமது பாவங்கள் அனைத்தும் விலகும்.

🌚அதிலும் தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள் சிறப்பு பெற்ற தினங்களாகும்.

🌚இவற்றில் புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மட்டும் 'மகாளய அமாவாசை" என்று அழைக்கப்படுகிறது.

🌚இந்த ஆண்டு மகாளய அமாவாசை நாளை புரட்டாசி மாதம் 11ஆம் தேதி செப்டம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 3.08 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் கூடிய நாளில் மகாளய அமாவாசை தொடங்குகிறது.

🌚மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவறவிட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், இது அதற்கான முழுப்பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வருவதாக ஐதீகம்.

🌚மறைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை மனதில் நினைத்து இந்த நாளில் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி தர்ப்பணம் செய்ய வேண்டும்.

🌚இந்த மகாளய அமாவாசையில் பித்ரு தோஷம் நீங்க திதி தர்ப்பணம் கொடுங்கள். இந்த மகாளய அமாவாசையில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது நல்லது. தோஷங்கள் இருந்தாலும் அகலும். முக்கியமாக இந்த மகாளய அமாவாசையில் தானம் செய்வது சிறப்பான பலன்களை தரும்.

எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?

🌚அன்னம் - வறுமையும், கடன் தொல்லைகளும் நீங்கும்

🌚தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்

🌚தீபம் - கண்பார்வை தெளிவடையும்

🌚அரிசி - நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கும்

🌚நெய் - தீராத நோய்களை போக்கும்

🌚பால் - துன்பங்கள் நீங்கும்

🌚பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்

🌚தேங்காய் - நினைத்த காரியம் ஈடேறும்

🌚நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்

🌚பூமி தானம் - ஸ்வர தரிசனம் உண்டாகும்

🌚அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் என்பது நம் பிதுர்களையும் மகிழ்விக்கும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களின் ஆசிகளும் நமக்கு கிடைக்கும். நமது குலம் தழைக்கும்.

தர்ப்பணம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் :

🌚உடல் மற்றும் மனம் சம்மந்தமான வியாதிகளில் இருந்து நம்மை விடுவிக்கும்.

🌚மனதில் அமைதியை கொண்டு வரும்.

🌚பித்ரு தோஷம் விலகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக