சனி, 7 செப்டம்பர், 2019

கர்ப்பரட்சாம்பிகை பற்றிய பயனுள்ள 45 தகவல்கள் !!!


கர்ப்பரட்சாம்பிகை பற்றிய பயனுள்ள 45 தகவல்கள் !!!

1. தமிழ்நாட்டில் கர்ப்பம் தரிப்பது
தொடர்பான
கோளாறுகளையும்,
இடையூறுகளையும் நீக்கும்
ஒரே தலமாக திருக்கருகாவூர்
கர்ப்பரட்சாம்பிகை தலம் உள்ளது .

2. இத்தலம் சுமார் 2 ஆயிரம்
ஆண்டுகள் பழமையானது.

3. இத்தலத்துக்கு ஈசனான
முல்லைவன நாதர் வினைப்
பயனால் ஏற்படும் வியாதிகளை
தீர்ப்பதால் அவருக்கு பவரோக
நிவாரணன் என்றும் ஒரு பெயர்
உண்டு .

4. தமிழ்நாட்டின் பல்வேறு
பகுதியிலும் உள்ள
குழந்தைகள் நல மருத்துவர்கள்
ஒவ்வொரு தடவை
பெண்களுக்கு பிரசவம்
பார்க்கும் போது
கர்ப்பரட்சாம்பிகையை மனதில்
நினைத்து கொண்டு
காணிக்கைப் பணம் தனியாக
எடுத்து வைப்பதை வழக்கத்தில்
வைத்துள்ளனர்.
3 மாதத்துக்கு
ஒரு தடவை திருக்கருகாவூர்
வந்து கர்ப்பரட்சாம்பிகைக்கு
அந்த காணிக்கையை
செலுத்துகிறார்கள் .

5. இங்கு தலவி நாயகராக கற்பக
விநாயகர் உள்ளார்.

6. கருச்சிதைவுற்று
மகப்பேறின்றி இருப்போர்
இத்தலத்திற்கு வந்து வழிபட்டு
மகப்பேறு அடைகின்றனர் .

7. இத்தலத்தை
வழிபடுவோர்க்குக் குறைப்
பிரசவம் ஏற்படுவதில்லை .
கர்ப்ப
வேதனையும்
மிகுதியாவதில்லை.
கருவுடன் மரணமடைவோரும்
இலர் .
கருவைத் தருவதும்,
காப்பதுமாகிய அருள் திறன்
பொருந்தி அம்பாள்
விளங்குகிறாள்.

8.
காவிரியின்
தென்கரையிலுள்ள பஞ்ச
ஆரண்யங்களுள்
இதுவுமொன்று.

9. ஸ்காந்தத்தில் க்ஷேத்திர
வைபவக் காண்டத்தில்
சனற்குமார சங்கிதையில்
நாரதருக்கு சனற்குமாரர்
கூறுவதாகவுள்ள பகுதியில்
இத்தலச் சிறப்பு இடம்
பெற்றுள்ளது .


10. இக்கோவிலில்
ரதவடிவிலான சபாமண்டபமும்
அதில் நித்துவ முனிவர்
பூசித்த லிங்கமும் உள்ளது .

11. மூலவர் சுயம்பு மூர்த்தி;
மேற்புறம் பிருதிவிபாகம் ;
புற்று மண்ணாலாகியது.
சுவாமி திருமேனியில்
முல்லைக்கொடி (இத்தலம் ஒரு
காலத்தில் முல்லை வனமாக
இருந்ததால் ) சுற்றிய வடு
உள்ளது .

12. இங்குள்ள நந்தி – உளிபடாத
விடங்கமூர்த்தம் என்பர் .

13. இத்தல அம்பாளுக்கு
சுத்தமான நெய்யால் தீபமிட்டு,
நெய்யால் அம்பாள்
திருவடியில் அபிஷேகம்
செய்து அந்நெய்யையுண்டால்
குழந்தை பிறக்கும் என்ற
நம்பிக்கை மக்களிடையே
உள்ளது .


14. சோழர்கள், மதுரைகொண்ட
கோப்பரகேசரிவர்மன் கால
கல்வெட்டுக்கள் உள்ளன .

15. முதலாம் இராசராசன்
கல்வெட்டில் “ நித்தவிநோத
வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத்
திருக்கருகாவூர் “ என்று தலம்
குறிக்கப்படுகின்றது .

16. பசியோடிருந்த
சுந்தரருக்கு இறைவன்
கட்டமுதும் நீரும் தந்து
பசிபோக்கிய தலமென்பது
தொன்நம்பிக்கை (ஐதிகம்).

17. தேவாரப் பாடல் பெற்ற
தலங்களில் காவிரியின் தென்
கரையில் அமைந்துள்ள 18 ஆவது
சிவத்தலமாகும் .

18. திருக்களாவூர் என மக்களால்
பொதுவாக அழைக்கப்பெறும்
இத்தலம் மாதவி வனம் ,
முல்லைவனம் ,
திருக்கருகாவூர் , கர்ப்பபுரி
என்று பல பெயர்களால்
நூல்களில்
குறிப்பிடப்படுகிறது .

19. மாதவி
(முல்லைக்
கொடியை )
தலவிருட்சமாகக்
கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்று பெயர்
பெற்றது.

20. இத்தலம் ஒரு சிறப்புமிக்க
பிரார்த்தனைத் தலமாகும் ,
இத்தலத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம்
மூன்றும் சிறப்புடையது .


21. க்ருத யுகத்தில் தேவர்களும் ,
த்ரேதா யுகத்தில்
முனிவர்களும், துவாபர
யுகத்தில் சூரியன் , சந்திரன்,
நட்சத்திரங்கள், தேவதைகளும்
வணங்கினர் . கலியுகத்தில்
முனிவர்களும், மனிதர்களும்
வணங்கி வரும் தலம்
திருக்கருகாவூர் தலமாகும் .

22. அம்மை இத்தலத்தில் 64 சக்தி
பீடங்களில் முதன்மையான வீர
சக்தியம்மன் ஆக அருள்பாலித்து
வருகிறாள்.

23. பொன்னி நதி பாபநாசம்
வட்டத்தில்
வெட்டாற்றங்கரையில்
அமைந்துள்ளது இத்திருத்தலம்.

24. இத்திருத்தலத்தில் பிரம்மன்,
கௌதமர், மன்னர் குசத்துவசன் ,
சங்குகர்ணன் நிருத்துவ
முனிவர் முதலியோர் வாழ்ந்து
சிவ பூசை செய்ததாக
வரலாறு உள்ளது .

25. முல்லைக்கொடியை தல
விருட்சமாக கொண்ட தலம்
ஆதலால் இத்தலம் மாதவி வனம்
என்றும் அழைக்கபடுகின்றது .
இதனாலே இறைவரும்
முல்லைவனநாதர் என்றும்
மாதவிவனேஸ்வரர் என்றும்
அழைக்கப்படுகிறார்.

26. முக்தி தரும் சிறப்புத்தலம்
என்று ஞான சம்பந்தர் பாடிய
தலம்.. தில்லை வனம் காசி
திருவாரூர் மாயூரம்
முல்லைவனம் கூடல் ,
முதுகுன்றம் – நெல்லை
களர்காஞ்சி கழக்குன்றம்
மறைக்காடருணை
காளத்திவாஞ்சிய என முத்தி
வரும் .

27. தட்ச சாபத்தில் இன்னலுற்ற
சந்திரன் ஒரு பங்குனி மாதம்
பௌர்ணமியில் இங்கு வந்து
பூஜை செய்ததால் ஒவ்வொரு
பங்குனி மாத முழு நிலா
நாளன்று சந்திரன் தன் ஒளியால்
இறைவனை வணங்குவதைக்
காணலாம்.

🌴🌳🐄🐄🦜🦚🦜🦅🦅🌳🌴

28. பிரம்மன்
படைப்புத்தொழிலில் ஆணவம்
கொண்டதால் படைப்புத்
தொழில் தடைப்பட்டது, இத்தலம்
வந்து பிரம்ம தீர்த்தம் ஏற்படுத்தி
நீராடி முல்லை வன நாதரை
பூஜித்ததால் மீண்டும்
படைப்புத்தொழில் கைவரப்
பெற்றார் .

29. சுவர்ணகரன் தீய செயலால்
பேயுருக் கொண்டான் .
கார்க்கிய முனிவரால்
இத்திருத்தலத்தில்
திருவாதிரை நன்னாளில்
பிரம்ம தீர்த்தத்தில் நீராடி
பேயுரு நீங்கப் பெற்றான் .


30. கௌதமரிடம் புகலடைந்த
முனிவர்களின் சூழ்ச்சியால்
பசுக்கொலை புரிந்த
பாவத்திற்கு ஆளானார் .
போதாயனார் முனிவரின்
சொற்படி நீராடி ஒரு
லிங்கத்தை வைத்து
பூஜித்தால் பசுக் கொலைப்பழி
நீங்கியது . கௌதமேஸ்வரர் என்ற
பெயருடன் அம்மன் சன்னதியில்
ஒருத் தனிக் கோவில் உள்ளது .

31. மன்னன் குசத்துவன் காட்டில்
வேட்டையாடும் போது சத்திய
முனிவரின் சாபத்தால்
கொடும்புலி உருப்பெற்று
சத்திய கூப தீர்த்தத்தில் நீராடு
சுய உருப்பெற்றான் .


32. சங்கு கர்ணன் என்னும் அந்தணன்
விந்தியா குருஷன் மகளை
திருமணம் செய்ய மறுத்ததால்
அவர் சாபப்படி பேயுருப்
பெற்றான் . பின் முன்
வினைப்பயனால் இத்திருத்தல
எல்லையை அடைந்ததும்
பேயுரு நீங்கப்பெற்றான் .

33. இத்தலத்தின் சோமாஸ்கந்தர் ,
நடராஜர் , ஆறுமுகர் உற்சவ
மூர்த்திகள் மிகவும் அழகு
வாய்ந்தவை.

34. கோவிலின் மேற்கு
கோஷ்டத்தில்
லிங்கோத்பவருக்கு பதிலாக
அர்த்தநாரீசுவரர் மிகுந்த
பொலிவுடன் உள்ளார். நடராஜர்
மண்டபத்தில் உள்ள தேர் சக்கரமும்,
குதிரையும் காணக் கண்
கோடி வேண்டும் .

35. இத்திருத்தல புராணத்தை
அம்பலவாணப் பண்டாரம்
பாடியுள்ளார்.
நான்மணி
மாலை , இரட்டை மணி மாலை
வீரபத்திர சுவாமிகள்
பாடியுள்ளார்.
பதிற்றுப்
பத்தந்தாதி ஆலந்தூர்
கோவிந்தசாமிப்பிள்ளையும் ,
வடமொழி ஸ்லோகங்கள்
சேங்காலிபுரம் பிரம்ம ஸ்ரீ
அனந்தராம தீக்ஷதரும்
பாடியுள்ளார்.
அம்பிகை
ஸ்தோத்திரங்களை டி .எஸ் .
வைத்திநாதன் பாடியுள்ளார் .

36. காலை 5.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையில் ,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி
வரையில் ஆலயம்
திறந்திருக்கும்.

37. இத்திருக்கோவிலில் உள்ள
நவக்கிரகங்கள் சற்று மாறுபட்ட
நிலையில் இருக்கம்
சூரியனைச் சுற்றி மற்ற எட்டு
கிரகங்களும் சூரியன்
பார்த்தவாறு நின்றிருக்கும் .
நவக்கிரகங்கள் அபய– வரத
முத்திரைகளுடன் காட்சி
தருகின்றனர் .

38. இத்திருக்கோவிலில் சந்தன
மரங்கள் தானாகவே வளர்கின்றன .
மரத்தை வைத்துப் பயிர் செய்ய
வேண்டிய அவசியமில்லை .

39. திருநாவுக்கரசர்,
திருஞான
சம்பந்தர்,
சுந்தரர் போன்ற
மூவரால் பாடல் பெற்ற
புண்ணியத் திருத்தலம் இது.


40. 1946 ஆம் ஆண்டு காஞ்சி
முனிவர் சாதுர்மாஸ்ய
விரதத்தை இங்கே
அனுஷ்டித்தார்கள் .
அப்போது
ஐந்து மாத காலங்கள் இத்தலத்தில்
எழுந்தருளியிருந்தார்கள் .

41. இத்திருக்கோவிலின் சிற்ப
வேலைப்பாடுகள் பல்லவ காலச்
சிற்பக் கலை நுணுக்கத்தோடு
கூடியவை .


42. மதுரை கொண்ட கோபுர
கேசரிவர்மன்,
முதலாம்
ராஜராஜன் ,
முதலாம்
ராஜேந்திரன் ,
முதலாம்
குலோத்துங்கன் மற்றும்
விக்கிரம சோழன் போன்றோர்
காலத்திய கல்வெட்டுக்கள்
இத்திருக்கோவிலின் சுற்று
மதிற்சுவர்களிலும்,
எம்பெருமானின் கர்ப்பக்கிரகச்
சுவர்களிலும் , அர்த்த மண்டபம்
மற்றும் மகா மண்டபங்களிலும்
காணப்படுவதாக,
இத்திருக்கோவில்
வெளியீட்டில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

43. தமிழக இந்து சமய
அறநிலையத்தினரால்
இத்திருக்கோவில் திறம்பட
நிர்வகிக்கப்பட்டு வருகின்றது .

44. ஸ்காந்த புராண புத்ர
வைபவக் காண்டத்தில்
சனத்குமார சம்கிதையில்
இத்திருக்கோவில் தல வரலாறு
காணப்படுகிறது .
இது
சமஸ்கிருதத்தில்
அமைந்ததாகும்.

45. அம்பலவாணப் பண்டாரம்
(வீரசைவம்)
என்பவரால் தமிழில் பாடப்பட்ட 338
பாடல்கள்...!!!
தற்சமயம்
அனைவருக்கும்
கிடைக்கக்கூடிய வகையில்
இல்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக