வியாழன், 26 செப்டம்பர், 2019

நவராத்திரி ஸ்பெஷல்... கொலுவில் பொம்மைகள் வைக்கும் வழக்கம் எப்படி உருவானது?


நவராத்திரி ஸ்பெஷல்... கொலுவில் பொம்மைகள் வைக்கும் வழக்கம் எப்படி உருவானது?
கொலு மேடையும், பொம்மைகளும் !!


🌟 நவராத்திரி விழா செப்டம்பர் 29ஆம் தேதி (புரட்டாசி 12) ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகிறது. கொலு மேடைக்கு பூஜை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

🌟 புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி பத்து நாட்களுக்கு கொண்டாடப்படும் பண்டிகையே நவராத்திரி ஆகும். இந்தப் பண்டிகை எல்லா மாநிலங்களிலும் வௌ;வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

🌟 நவராத்திரியின் சிறப்பே பல விதமான மண்ணாலான பொம்மைகளை கொண்டு கொலு வைப்பதுதான். அவரவர் வசதிப்படி முப்பெரும் தேவியை குறிக்கும் விதமாக மூன்று படிகளாகவோ அல்லது சக்தியின் சக்கரத்தை குறிக்கும் விதமாக ஐந்து படிகளாகவோ, சப்தமாதர்களை குறிக்கும் ஏழு படிகளாகவோ, நவகிரகங்களை குறிக்கும் ஒன்பது படிகளாகவோ வைக்கலாம்.

கொலு மேடைக்கு பூஜை :

🌟 கொலு வைப்பதற்கு முன் கொலு மேடைக்கு பூஜை செய்வது முக்கியம். ஒரு நூல் சுற்றிய கும்பத்தில், பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலைப்பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும்.

🌟 குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜை செய்ய வேண்டும்.


கொலுவில் பொம்மைகள் வைக்கும் வழக்கம் எப்படி உருவானது?

🌟 சுரதா என்ற அரசரிடம், அவரது எதிரிகள் போர் செய்ய வந்தார்கள். அவர்களிடம் போர் புரிந்து வெற்றி பெறுவது என்பது ஆகாத காரியம் என்பதை உணர்ந்த அரசர், தன் குருவான சுமதாவிடம் ஆலோசனை கேட்டார்.

🌟 காளியை வணங்கினால் எதிரிகள் காணாமல் போவார்கள் என்று குருதேவர் கூறினார். அதன்படி காளிதேவியை மண்ணால் செய்து வழிபட்டார் மன்னர் சுரதா.

🌟 காளிதேவி, அரசரின் தவத்தால் மகிழ்ந்து, மன்னருக்கு எதிரிகளை வெல்லும் சக்தியை அருளினாள்.

🌟 அத்துடன் 'பஞ்சபூதங்களில் ஒன்றான மண்ணில் என்னை வடிவமைத்து பூஜித்ததால் உனக்கு சகல நலங்களும், வளங்களும் கிடைக்கும்" என்ற ஆசி வழங்கினாள்.

🌟 இதுவே கொலுவில் மண்ணால் செய்யப்படும் பொம்மைகள் இடம் பெற காரணமாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக