புதன், 23 ஆகஸ்ட், 2017

21 வகை இலைகள்... வழிபாடுகள்...பலன்கள்..



21 வகை இலைகள்... வழிபாடுகள்...பலன்கள்..

விநாயகர் சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது என்பார்கள். அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதால் அடையக்கூடிய பலன்களைப் பார்ப்போமா?

முல்லை இலை கொண்டு வழிபட்டால், அறம் வளர்க்கும்.

கரிசலாங்கண்ணி இலையால் அர்ச்சித்து வழிபட்டால், இல்லத்துக்குத் தேவையான பொருட்சேர்க்கை நிகழும்!

வில்வம் இலையால் அர்ச்சித்து விநாயகரை வழிபட்டால், விரும்பிய அனைத்தும் கிடைக்கும்.

அருகம்புல்லால் அர்ச்சித்து வணங்கினால் அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறலாம்!

இலந்தை இலையால் அர்ச்சனை செய்து ஆனைமுகத்தானை வழிபட்டால், கல்வியில் மேன்மை பெறலாம்.

ஊமத்தை இலையைக் கொண்டு அர்ச்சித்து வழிபட்டால், பெருந்தன்மையான மனம் பெறலாம்!

வன்னி இலை கொண்டு வழிபட்டால், பூவுலகிலும் சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.

நாயுருவி இலையால் வழிபட்டால், முகப் பொலிவும் அழகும் கூடும். தேஜஸூடன் வாழலாம்!

கண்டங்கத்திரி இலையால் கணபதியை வழிபட்டால், வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறலாம்.

அரளி இலையால் ஆனைமுகனை வழிபட்டால், எல்லா முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.

எருக்கம் இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால், கருவில் உள்ள சிசுவுக்கு பாதுகாப்பு கிடைக்கும். குழந்தை ஞானத்துடனும் யோகத்துடனும் வளரும்.

மருதம் இலையால் வழிபட்டால், மகப்பேறு கிடைக்கும்.

விஷ்ணுகிராந்தி இலையால் விநாயகப் பெருமானை வழிபட்டால், தேர்ந்த அறிவுடன் திகழலாம். காரியத்தில் வெற்றி கிடைக்கும்.

மாதுளை இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால், பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.

தேவதாரு இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால், எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.

மருக்கொழுந்து இலையால் மகேசன் மைந்தனை வழிபட்டால், இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.

அரச இலை கொண்டு வழிபட்டால், உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.

ஜாதிமல்லி இலை கொண்டு விக்னேஸ்வரனை வழிபட்டால், சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறலாம்!

தாழம் இலையால் ஆனைமுகனை வழிபட்டால், செல்வச் செழிப்புடன் வாழலாம்! .

அகத்தி இலையால் அர்ச்சித்து பார்வதிமைந்தனை வேண்டிக் கொண்டால், கடன் தொல்லையில் இருந்து விடுபடலாம்! பொருட்சேர்க்கை நிகழும்!

தவனம் ஜகர்ப்பூரஸ இலை கொண்டு வழிபட்டால், நல்ல கணவன்- அல்லது மனைவி அமையப் பெறும். தாம்பத்தியம் சிறக்கும். நல்ல வாழ்க்கைத் துணையுடன் இனிதே வாழலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக