வியாழன், 31 ஆகஸ்ட், 2017

காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.!



காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.? காகம் பற்றிய உண்மைகளும் ஆன்மீக தகவல்களும்.!

1.அதிகாலையில் எழுந்துகரைதல்.

2.உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல்.

3.உணவு உண்ணும் போதே சுற்றும் முற்றும் பார்த்தல்.

4.பிறர் காணாமல் ஜோடி சேர்ந்து இணைதல்.

5.மாலையிலும் குளித்தல்,பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாகக்கொண்டவை.

6. தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காக்கைகளும் ஒன்று கூடி கரையும் தன்மையையும் காணலாம்.

இது அஞ்சலி செய்வதற்குச்சமமாக கருதப்படுகிறது….மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள்தான்..
ஆனால் மெல்ல,மெல்ல இதை நாமே பெரிதுபடுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது… !!காகத்திற்கு தினமும் காலையில் சாதம்வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா..இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா….தெரியவில்லை!..

ஆனால்,உங்கள் வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள்,
விபத்துக்கள்,வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது..
*செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது.*தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான
பலன்களையும்,

உங்கள் நியாயமான
அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில்– *மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர்வழிபாடுதான்.

*உங்கள் முன்னோர்களுக்கே, நீங்கள்உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமானசக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , *அற்புதமானஜீவ ராசி – காக்கை இனம்.*

குடும்ப ஒற்றுமைவேண்டும்
என்று நினைக்கும்
சுமங்கலிப்பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.தன்
உடன்பிறந்தவர்கள்
ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும்இருக்க,
தங்களிடம்பாசம்
உள்ளவர்களாகத்திகழ இந்தக்காணுப்பிடி பூஜையைச்செய்கிறார்கள்.
திறந்தவெளியில்
தரையைத்
தூய்மையாகமெழுகிக்
கோலமிடுவார்கள்.அங்கேவாழைஇலையைப்பரப்பிஅதில்வண்ணவண்ணசித்ரான்னங்களைஐந்து,ஏழு,ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடிஅளவுஎடுத்துவைத்து,காக்கைகளை “கா…கா…’என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள்.அவர்களின்அழைப்பினைஏற்றுகாக்கைகளும்பறந்துவரும்.

அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும்.
அப்படிச்சுவைக்கும்போதுஅந்தக்காக்கைகள் “கா…கா…’என்றுகூவிதன்கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும்.

அந்தக்காக்கைகள் உணவினைச்சாப்பிட்டுச்சென்றதும்,அந்தவாழை இலையில் பொரி,பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள்,வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.

*மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்)காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.*இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திப்படுத்தியதாவும் கருதுகிறார்கள்.காக்கை சனிபகவானின்வாகனம்.காக்கைக்குஉணவுஅளிப்பதுசனிக்குமகிழ்ச்சிதருமாம்.
காக்கைகளில் *நூபூரம்,பரிமளம், மணிக்காக்கை,*
*அண்டங்காக்கை* எனசிலவகைகள்உண்டு.

காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப்பறவைகளிடமும் காணமுடியாது.
எமதர்மராஜன் காக்கைவடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.அதனால்காக்கைக்கு உணவு அளித்தால் எமன்மகிழ்வாராம்.எமனும்சனியும்சகோதரர்கள்ஆவர்

*காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.*
தந்திரமான குணம் கொண்ட காகம் யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்லசெய்திகள் வருவதாக இருந்தாலும் முன்கூட்டியே காகம் நம்வீட்டின் முன் உள்ள “கா…கா…’என்று பலமுறை குரல் கொடுக்கும்.இந்தப்பழக்கம் இன்றும் உண்டு. *காலையில் நாம் எழுவதற்கு* *முன்,காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்தகாரியம் வெற்றி பெறும்.*நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கிக் கரைந்தால் நல்லபலன் உண்டு.

வீடு தேடிகாகங்கள் வந்துகரைந்தால் அதற்கு உடனே உணவிடவேண்டும்.
காக்கைவழிபாடு செய்வதால்சனிபகவான்,
எமன்மற்றும்முன்னோர்களின்ஆசீர்வாதத்தினைப்பெற்றுமகிழ்வுடன்
வாழலாம் என்று ஆன்மீகம் கூறினாலும் மனிதனை அண்டி பிழைக்கும் ஒர் உயிரினம் நாகரீக வளர்ச்சியில் நாம் கவனிக்க தவறி அந்த இனம் அழியாமல் பாதுகாக்கபட வேண்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக