திங்கள், 21 ஆகஸ்ட், 2017

விநாயகர் சதுர்த்தி



விநாயகர்  சதுர்த்தி 

விநாயக சதுர்த்தி என்பது விநாயகரின் முக்கியமான விழாவாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.

வரலாறு
இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப் பட்டிருக்கிறது.  அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர்
பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார். அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தியன்று, வசதிபடைத்தவர்கள் மட்டுமின்றி எல்லோரும் தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர்.ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் இதன் போது வழங்கினர்.
17 ஆம் நூற்றாண்டின் போது தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு மன்னர் வட மாநிலத்தில் போர் புரிந்து வெற்றிபெற்றார் அதன் நினைவாக அங்கிருந்த விநாயகர் சிலையை கொண்டு வந்தார். அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் விநாயகர் வழிபாடுகள் தொடங்கின. தமிழகத்தில் இவ்விழா பெரும்பாலும் குடும்ப விழாவாகவே கொண்டாடப்பட்டது. வெகுகாலத்தின் பின்னரே பொது விழாவாக அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.



.
விநாயகர் தோற்றம் குறித்த புராணக்கதைகள்

ஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர் கொடுத்து காவலுக்கு நிற்கச் சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அப்போது அங்கே வந்த சிவபெருமானைத் தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையைத் துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான் அச்சமுற்று, தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையைத் துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையைத் துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்தச் சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்குப் பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார்.


விநாயகர் சதுர்த்தி வரலாறு!

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..!!
விநாயக சதுர்த்தி வரலாறு! (History of vinayagar sathurthi)
பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு
அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
இந்து மக்கள் அனுட்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயக வழிபாடியற்றி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம். இந்த ஆண்டு ஆவணி மாதம் 18ஆம் திகதி புதன்கிழமை 03.09.2008 இந்த விரத தினம் சம்பவிக்கின்றது. பிள்ளையாரின் அவதார தத்துவம்.
ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி ‌தினத்தில் அதிகாலையில் எழுந்தி மூஷிக வாகனனை முழு மனதோடு ‌நினைத்து ‌‌நீராட வேண்டும். பூஜை அறையில் சுத்தமான மனப்பலகை வைத்து அதன் ‌‌‌மீது கோலம் போட வேண்டும். அதன் மேல் தலைவாழை இலை ஒன்றை வடக்கு பார்த்து வைத்து அதன் மேலே ‌‌பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும்.
பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன. இவற்றுள் 'விநாயகர்' என்பது 'மேலான தலைவர்' என அர்த்தப்படும். விமேலான: நாயகர் தலைவர் தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும். அதுபோலவே 'விக்னேஸ்வரர்' என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும், 'ஐங்கரன்' என்றால் (தும்பிக்கையுடன் சேர்த்து) ஐந்து கரங்களை உடையவரெனவும்' அர்த்தப்படும். 'கணபதி' என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.
விநாயக விரதங்கள்.(Ganesh fasts)
ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம். சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் மதாந்தம் சம்பவிக்கின்றன. சுக்கில பட்சச் சதுர்த்தியை 'சதுர்த்தி விரதம்' என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை 'நாக சதுர்த்தி' என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை 'விநாயக சதுர்த்தி' என்றும் கைக்கொள்கின்றனர்.
மாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தியை 'சங்கடஹர சதுர்த்தி' என்பர். விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை 'சங்கடஹர சதுர்த்தி விரதம்' என்கின்றனர். இருந்தும் ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை 'சங்கடஹர விநாயக சதுர்த்தி' (sangadagara vinagar sathurthi) என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் 'விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேடமானது. சுக்கில பட்ஷ சதுர்த்தியின் அதிபதியான 'தேவி' விநாயகரை வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்று உய்ந்தாள் என்றும், அந்நாளில், அந்நேரத்தில் விநாயரைக் குறித்து விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின் அருளும், சுகபோக சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்றும் கூறுவர்.
விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்திரகள்ஸ அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல பயக்கும் என்பர். அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:
1. முல்லை இலை பலன்: அறம் வளரும்
2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.ஸ
4. அறுகம்புல் பலன்: அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
ஜ21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானதுஸ
5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.
7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும். 12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.
13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.
14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.
16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.
18. ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும் 19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.
20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்
. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்பூச்சியா, மியன்மார் மொங்கோலியா, தீபெத்து ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக்கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழைமை வாய்ந்தவையென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நாமம் பல தத்துவம் ஒன்று! (One name many Philosophy!)
வரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே. ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.
இவ்விழா கொண்டாடப் படுவதற்குப் பின்னணியாக ஸ்காந்த புராணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.
இல்லந்தோறும் நடக்கம் இனிய பூஜை! (prayers will be for all homes!)
வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!
என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.
இவ்வாறு ஆண்டுதோறும் நாடெங்கும், ஏன் உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.




வளம் தரும் விநாயகர் சதுர்த்தி விரதம்

விநாயகர் சதுர்த்தி விரதத்தை ஒரு கொண்டாட்டமாகவே நாம் பாவிக்கலாம். விநாயகர் மிகவும் எளிமையான கடவுள். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள் தருவார்.
அதனால்தான் அவர் எல்லாருக்கும் பொதுவாகவும், யாரும் சுலபமாக வழிபடும் வகையிலும் இருக்கிறார்.
விநாயகர் விரதத்தை பார்வதி தேவியே மேற்கொண்டிருக்கிறார். தன் கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள் பார்வதி என்ற தாட்சாயணி. ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.
இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் அப்படியே பாய்ந்துவிட்டாள்.
அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்து வந்தாள்.
சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் பலிக்க வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.
அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள்.
அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள்.
ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.
அதற்குப் பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்.
விநாயகர் ஆதி பரம்பொருள். எல்லோருக்கும் மூத்தவர். பிரம்மா, விஷ்ணு, சிவன் என்று எல்லோரையும் உருவாக்கியவர் அவர்தான். அவர் சாதிக்க வேண்டியது நிறைய இருந்ததால் அவர் பலவித அவதாரங்களை எடுத்தார்.
அந்த மாதிரியான ஒரு அவதாரம்தான் சிவன் மகனாக அவர் தோன்றியது. அற்பத் தாவரமான புல்லையும் (அருகம்புல்) அவர் ஏற்றுக் கொள்கிறார். காட்டுப்பூவான எருக்கம்பூவைக் கூட அவர் மறுப்பதில்லை.
அவரைப் பொறுத்தவரை புல் மாலை போட்டவரும் ஒன்றுதான்; ரோஜா மாலை போட்டவரும் ஒன்றுதான். வித்தியாசமே பார்க்க மாட்டார். தன்னை வணங்குபவரின் மனம் சுத்தமாக இருக்கிறதா, அந்த மனதில் தனக்கு எத்தகைய இடம் இருக்கிறது என்பதை மட்டும்தான் பார்ப்பார்.
விநாயகர் சதுர்த்தி விரத நடைமுறைகள் என்னென்ன?
அன்றைய தினம் விடியற் காலையிலேயே எழுந்து, சுத்தமாக குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலைத் தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக் கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டி வைக்கலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும்.
அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.
 பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.
அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம்.
அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம்.
உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.
(விநாயகருக்கு முதன் முதலாக இந்தக் கொழுக்கட்டையை நிவேதனம் செய்தது, வசிஷ்ட முனிவருடைய மனைவியான அருந்ததி.)
பிள்ளையாருக்கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் எதை வேண்டுமானாலும் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களைத் தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.
பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை; ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.
இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்கக் கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்குப் பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.
இத்தனை நாள் விரதத்துக்குப் பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம்.
பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.
வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந்தோறும் பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் பட்டினி இருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம்.
இந்த விரதங்களால் உள்ளம் மேன்மைஅடையும்; உடல் ஆரோக்கியம் வளரும்; எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.



விநாயகர் சதுர்த்தி விரதமும் அதன் மகிமையும் - விளக்கங்களுடன் - பிள்ளையார் பெருங்கதை இணைப்பு


"ஓம் விக்ந விநாயக பாத நமஸ்தே"
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடிபோற்று கின்றேனே.
ஆவணிமாத சுக்லபக்ஷ் சதுர்த்தி திதியில் அனுஷ்டிக்கப்பெறும் இவ் விரதமானது விநாயகர் ஆலயம் உட்பட பல பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயங்களில் இவ் விரதம் அனுஷ்டிக்கப்பெறுகின்றன. இந்தியாவில் பிள்ளையார் பட்டி போன்ற பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயங்களில் 10 நாட்கள் பெருவிழாவாகவும் கொண்டாட்டப் பெறுகின்றன.
பிள்ளையார்
விரதம்:
மனமானது, பொறிவழி (ஐம்பொறிகளின் தூண்டுதலுக்கு) போகாது நிற்றற் பொருட்டு; உணவை விடுத்தேனும், சுருக்கியேனும், மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் கடவுளை மெய்யன்போடு வழிபடுதல் விரதமாகும்.
இந்துக்கள் ஆன்ம ஈடேற்றங்கருதி செய்யுஞ் சமய அனுட்டானங்களில் ஒன்று விரதம். விரதம் என்னும் சொல் உண்ணும் உணவை சுருக்குதல் அல்லது விடுத்தல் என பொருள்படும். உபவாசம், நோன்பு என்பன விரதத்துடன் தொடர்புடைய சொற்களாகும். உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும்.
மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம். விரதம் என்பது ஒரு வகை விஷேட வழிபாடு ஆகும். விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி, திரிகரண சுத்தியுடன் இருத்தல் வேண்டும். அப்போதுதான் மன அடக்கத்தை மேம்படுத்த முடியும். பெரியோர் கூறும் புண்ணியம் ஏழினுள் இதுவும் ஒன்று. விரதம் அனுஷ்டிப்பதனால் மனம் புத்தி முதலிய உட்கருவிகள் தூய்மை அடையும். இதனால் ஞானம், நல்லறிவு கைகூடும்.
விநாயக சதுர்த்தி
சிவம் என்னும் பரம்பொருள் உயிர்களுக்கு அருள்புரிவதற்காகப் பல்வேறு வடிவங்களைத் தாங்கி வந்து அருள்புரிகின்றார் என்று தமிழர் சமயமான சித்தாந்த சைவம் குறிப்பிடும். தமது சிறப்பு நிலையில் வடிவமும் பெயரும் அடையாளமும் இல்லாத சிறப்பும் வனப்பும் மிக்க அப்பேராற்றல் உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாகப் பொது நிலையில் முருகன், அம்பாள், விநாயகன், சிவன் என்று வடிவம் தாங்கி வருகின்றது என்று சைவம் குறிப்பிடுகின்றது. இதனைக், “கற்பனை கடந்த சோதி, கருணையே உருவமாகி, அற்புதக் கோலம் நீடி” என தெய்வச் சேக்கிழாரும், “அகளமாய் யாரும் அறிவரிதப் பொருள், சகளமாய் வந்தென்று உந்தீபற, தானாகத் தந்ததென்று உந்தீபற” என்று திருவுந்தியாரும் குறிப்பிடுவர். அவ்வகையில் உயிர்களின் மீது கொண்ட கருணையின் காரணமாக சிவம் எனும் பரம்பொருள் விநாயகராக வடிவம் தாங்கித் தோன்றிய நாளே விநாயகர் சதுர்த்தி.


விநாயகர்
‘வி’ என்றால் உலகம். ‘நாயகர்’ என்றால் தலைவர். ‘விநாயகர்’ என்றால் உலகத் தலைவர் என்று பொருள்படும். சிவம் என்னும் பரம்பொருள் தனது வடிவமற்ற நிலையிலிருந்து வடிவ நிலைக்கு இறங்கி வருகின்றபோது, முதலில் ஒலி வடிவமாகவும் பின்பு, ஒளி வடிவமாகவும் இறங்கி வருவதாய்ச் சைவம் குறிப்பிடுகின்றது. இதனைப் பரநாதம் பரவிந்து என்று குறிப்பிடுகின்றது. இதனையே பரமசிவன் பராசக்தி என்றும் குறிப்பிடுகின்றது. இதனை எழுத்து வடிவமான மந்திர வடிவில் ‘ஓ’ என்று குறிப்பிடுகின்றது என்று திருமூலர் குறிப்பிடுகின்றார். அசபை அல்லது பேசா எழுத்து எனப்படும் இவ் ‘ஓ’ என்ற எழுத்தைப் பிரித்தால் ‘அ’ + ‘உ’ என்ற இரண்டு எழுத்துக்கள் அதனுள்ளே அடங்கியுள்ளமையைத் திருமூலர் சுட்டுவார். அறிவோன் என்பதாகிய ‘அ’ வும் உடையாள் என்பதாகிய ‘உ’ வும் அதனுள்ளே அடங்கியிருத்தலையும் திருமூலர் குறிப்பிடுவார். ‘அ’ என்ற சிவனும் ‘உ’ என்ற சிவையும் ‘ஓ’ வினுள்ளே அடங்கியுள்ளன. ‘ம்’ என்பது உயிருக்கு மயக்கம் செய்யும் மாயை என்று குறிக்கப்பெறுகிறது. எனவே ‘ஓம்’ எனும் மூல மந்திரத்தின் வடிவமே விநாயகரின் வடிவம். விநாயகர் சிவத்தினின்று வேறுபட்ட ஒரு தனிக்கடவுளல்ல! சிவனின் மகனும் அல்ல! ‘ஓம்’ எனும் மந்திரம் இறைவன் கொண்ட முதல் வடிவத்தை உணர்த்துவதாலேயே வழிபாட்டில் விநாயகருக்கு முதலில் பூசனை நடக்கின்றது.
விநாயகரின் தோற்றம்
சைவ நெறிக்குப் பொருந்தாத பல செய்திகள் விநாயகரின் தோற்றத்தைப் பற்றி மக்களிடையே விரவி கிடப்பினும் சைவத்திற்கு ஏற்புடைய செய்திகள் கச்சியப்பரின் கந்தபுராணத்திலும் திருஞானசம்பந்தரின் திருமுறையிலும் காணக்கிடக்கின்றன. கந்தபுராணத்தின்படி கயமுகாசுரன் என்பவன் இறைவனின் வரம்பெற்று தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்தவே அவர்கள் இறைவனிடம் அருள்வேண்டி நின்றதாயும் அவர்களுக்கு அருள்புரியவே இறைவன் தம்மிலிருந்து விநாயகரைத் தோற்றுவித்ததாகவும் கூறுகின்றது. அதாவது அடியார்களின் வேண்டுதலை ஏற்ற பரமசிவனும் பராசக்தியும் ஒரு சோலையுள் சென்று, அதனுள் இருக்கின்ற ஒரு சித்திர மண்டபத்துள் விரைந்து சென்று அங்கிருந்த ‘ஓம்’ என்ற பிரணவத்தை நோக்க, அது இரண்டு யானைகளின் உருவானது. அவ்விரண்டு யானைகளும் ஆண் யானைகளாகவும் பெண்யானையாகவும் இருக்க அவை கூடியவுடன் விநாயகப் பெருமான் தோன்றினார் என்று கந்தபுராணம் கூறுகிறது. எனவே பிரணவ மந்திர வடிவே இறைவன் கருணையினால் யானையாகத் தோன்றி பின் விநாயராக வந்ததை உணரலாம்.
இக்கருத்தினையே திருஞானசம்பந்தரும், ‘பிடியதன் உரு உமைகொள மிகு கரியது, வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர், கடிகணபதி வர அருளினன் மிகுகொடை, வடிவினர், பயில்வலி வலமுறை இறையே’ என அருளினார். அதாவது அழகிய தமது திருவடிகளை வணங்கும் அடியார்களின் துன்பத்தைப் போக்குவதற்காக வலிவலம் என்ற திருக்கோயிலில் இருக்கின்ற இறைவன் தான் ஆண்யானையாகவும் இறைவியைப் பெண்யானையாகவும் கொண்டு கணபதியாகிய விநாயகர் வர அருள்புரிந்தார் என்று தெளிவுறப்பாடுகின்றார்.
இப்படி விநாயகப் பெருமான் தோன்றிய தினம் ஆவனி வளர்பிறைச் சதுர்த்தி ஆகும். எனவேதான் ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுகிறோம். எனவே விநாயகர் சதுர்த்தி என்பது சிவம் என்கின்ற பரம்பொருள் நம் துன்பங்களைப் போக்குவதற்கு விநாயகர் வடிவம் கொண்ட நாளாகும். இறைவன் நம் துன்பங்களைப் போக்க நாளும் ஓடி வருகின்றான் என்பதனை உணர்த்தும் நாள் விநாயகர் சதுர்த்தியாகும். விநாயகர் சதுர்த்தி விநாயகர் பிறந்த நாள் என்று சிலர் குறிப்பிடுவது தவறு. நம் கடவுள் பிறப்பு இறப்புகுக்கு அப்பாற்பட்டவன். எனவே இறைவன் விநாயகர் வடிவம் தாங்கி வந்த நாள் என்று கூறுவதே சரியானது.
வழிபடும் முறை
விநாயகர் சதுர்த்தியன்று குறைந்த அளவு உணவு உட்கொண்டு மனம், வாக்கு, காயத்தால் தூய்மையாய் இருந்து இறைவனை இடைவிடாது நினைந்திருந்து வீட்டிலும் ஆலயங்களிலும் வழிபாடுகள் செய்யலாம். ஆலயங்களிலே நடைபெறும் சிறப்புப் பூசனைகளில் கலந்து கொள்வதோடு இறைவனை இடைவிடாது நினைப்பதற்குத் துணைபுரியும் சமய நிகழ்வுகளில் பங்கேற்று இறைவனைச் சிந்திக்கலாம். இதற்காகவே ஆலயங்களில் திருமுறைகள் ஓதுதல், திருமுறை நடனங்கள், சமய நாடகங்கள், சமய சொற்பொழிவுகள், சமய திரைப்படங்கள் போன்றவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவ்வாறு இல்லாத சூழலில் வீட்டில் திருமுறைகளை ஓதுதல், சமய நூல்களை வாசித்தல், சமய உரைகளைக் கேட்டல் போன்றவற்றைச் செய்யலாம்.
வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் விநாயகர் சதுர்த்தியன்று புற்று மண்ணால் விநாயகப் பெருமானின் திருவுருவத்தினைச் செய்து, அதில் விநாயகரை மந்திரம், பாவனை (முத்திரைகள்), வழிபாட்டுக் கிரியைகளால் எழுந்தருளச் செய்து, நீராட்டு, அலங்காரங்கள் செய்து திருவமுது அளித்துப் போற்றி வழிபட்டு மறுநாள் அவ்வுருவத்தைத் திருக்குளத்திலோ, புண்ணிய ஆறுகளிலோ அல்லது கடலிலோ கரைத்து விடுவார்கள். இம்முறை இந்தியாவில் வடநாட்டுப் பகுதியில் அதிகமாகப் பின்பற்றப்படுகிறது.


விநாயகர் சதுர்த்திப் பூஜை மந்திரங்கள்:
விநாயகப் பெருமானுக்குரிய அங்க பூஜைக்குரிய நாமங்களும் அந்தந்த நாமங்களுக்குரிய அங்கங்களும்: (இந்த நாமங்களை ஒவ்வொன்றாகச் சொல்லி பத்ரம், புஷ்பம், அறுகு ஆகியவற்றுள் ஏதாவதொன்றினால் அந்தந்த அங்கங்களில் அர்ச்சிக்க வேண்டும்)
ஓம் பார்வதீ நந்தநாய நம : - பாதௌ பூஜயாமி - கால்கள்
ஓம் கணேசாய நம : - குல்பௌ பூஜயாமி - கணுக்கால்கள்
ஓம் ஜகத் தாத்ரே நம : - ஜங்கே பூஜயாமி - பாதத்துக்கு மேல்
ஓம் ஜகத் வல்லபாய நம : - ஜானுனீ பூஜயாமி - முழங்கால்
ஓம் உமாபுத்ராய நம : - ஊரூ பூஜயாமி - தொடை
ஓம் விகடாய நம : - கடிம் பூஜயாமி - இடுப்பு
ஓம் குஹாக்ரஜாய நம : - குஹ்யம் பூஜயாமி - மறைவிடம்
ஓம் மஹத்தமாய நம : - மேட்ரம் பூஜயாமி - ஆண்குறி
ஓம் நாதாய நம : - நாபிம் பூஜயாமி - தொப்பூள்
ஓம் உத்தமாய நம : - உதரம் பூஜயாமி - வயிறு
ஓம் விநாயகாய நம : - வஷம் பூஜயாமி - மார்பு
ஓம் பாஸச்சிதே நம : - பார்ஸ்வௌ பூஜயாமி - இருபக்கங்கள்
ஓம் ஹேரம்பாய நம : - ஹ்ருதயம் பூஜயாமி - இதயம்
ஓம் கபிலாய நம : - கண்டம் பூஜயாமி - கழுத்து
ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம : - ஸ்கந்தௌ பூஜயாமி - தோள்கள்
ஓம் ஹரஸுதாய நம : - ஹஸ்தான் பூஜயாமி - முன்கைகள்
ஓம் ப்ரஹ்மசாரிணே நம : - பாஹுன் பூஜயாமி - மேற்கைகள்
ஓம் ஸுமுகாய நம : - முகம் பூஜயாமி - முகம்
ஓம் ஏகதந்தாய நம : - தந்தௌ பூஜயாமி - தந்தங்கள்
ஓம் விக்கினநேத்ரே நம : - நேத்ரே பூஜயாமி - கண்கள்
ஓம் சூர்ப்பகர்ணாய நம : - கர்ணௌ பூஜயாமி - காதுகள்
ஓம் பாலசந்த்ராய நம : - பாலம் பூஜயாமி - நெற்றி
ஓம் நாகாபரணாய நம : - நாஸிகாம் பூஜயாமி - மூக்கு
ஓம் கிரந்தனாய நம : - சுபுகம் பூஜயாமி - மோவாய்
ஓம் ஸ்தூலௌஷ்டாய நம : - ஒஷ்டௌ பூஜயாமி - மேலுதடு
ஓம் களன்மதாய நம : - கண்டௌ பூஜயாமி - கழுத்து
ஓம் கபிலாய நம : - கசான் பூஜயாமி - இடுப்பு
ஓம் சிவப்ரியாய நம : - சிரம் பூஜயாமி - தலை
ஓம் ஸர்வமங்களஸுதாய நம : - ஸர்வாண்யங்காணி பூஜயாமி - எல்லா அங்கங்களும்.
விநாயக பத்ர பூஜைக்குரிய இருபத்தொரு நாமங்களும், அவற்றுக்குரிய பத்திரங்களும்:
ஓம் உமாபுத்ராய நம : - மாசீபத்ரம் சமர்ப்பயாமி - மாசிப்பச்சை
ஓம் ஹேரம்பாய நம : - ப்ருஹதீபத்ரம் சமர்ப்பயாமி - கண்டங்கத்தரி
ஓம் லம்போதராய நம : - பில்வபத்ரம் சமர்ப்பயாமி - வில்வம்
ஓம் த்விரதானனாய நம : - தூர்வாம் சமர்ப்பயாமி - அறுகம்புல்
ஓம் தூமகேதவே நம : - துர்தூரபத்ரம் சமர்ப்பயாமி - ஊமத்தை
ஓம் ப்ருஹதே நம : - பதரீபத்ரம் சமர்ப்பயாமி - இலந்தை
ஓம் அபவர்க்கதாய நம : - அபாமார்க்கபத்ரம் சமர்ப்பயாமி - நாயுருவி
ஓம் த்வைமாதுராய நம : - துளசீபத்ரம் சமர்ப்பயாமி - துளசி
ஓம் கிரந்தனாய நம : - சூதபத்ரம் சமர்ப்பயாமி - மாவிலை
ஓம் கபிலாய நம : - கரவீரபத்ரம் சமர்ப்பயாமி - அலரி
ஓம் விஷ்ணுஸ்துதாய நம : - விஷ்ணுக்ராந்தபத்ரம் சமர்ப்பயாமி - விஷ்ணுகிராந்தி
ஓம் வடவே நம : - தாடிமீபத்ரம் சமர்ப்பயாமி - மாதுளை
ஓம் அமலாய நம : - ஆமலகீபத்ரம் சமர்ப்பயாமி - நெல்லி
ஓம் மஹதே நம : - மருவகபத்ரம் சமர்ப்பயாமி - மருக்கொழுந்து
ஓம் ஸிந்தூராய நம : - ஸிந்தூரபத்ரம் சமர்ப்பயாமி - நொச்சி
ஓம் கஜாநநாய நம : - ஜாதீபத்ரம் சமர்ப்பயாமி - மல்லிகை
ஓம் கண்டகளன்மதாய நம : - கண்டலீபத்ரம் சமர்ப்பயாமி - வெள்ளெருக்கு
ஓம் சங்கரீப்ரியா நம : - சமீபத்ரம் சமர்ப்பயாமி - வன்னி
ஓம் ப்ருங்கராஜத்கடாய நம : - ப்ருங்கராஜபத்ரம் சமர்ப்பயாமி - கரிசலாங்கண்ணி
ஓம் அர்ஜுனதந்தாய நம : - அர்ஜுனபத்ரம் சமர்ப்பயாமி - வெண்மருது
ஓம் அர்க்கப்ப்ரபாய நம : - அர்க்கபத்ரம் சமர்ப்பயாமி - எருக்கு
விநாயக புஷ்ப பூஜைக்குரிய இருபத்தொரு நாமங்களும் அவற்றுக்குரிய புஷ்பங்களும்:
ஓம் பஞ்சாஸ்ய கணபதியே நம : - புந்நாக புஷ்பம் சமர்ப்பயாமி - புன்னை
ஓம் மஹாகணபதியே நம : - மந்தார புஷ்பம் சமர்ப்பயாமி - மந்தாரை
ஓம் தீர கணபதயே நம : - தாடிமீ புஷ்பம் சமர்ப்பயாமி - மாதுளை
ஓம் விஷ்வக்ஸேன கணபதயே நம : - வகுள புஷ்பம் சமர்ப்பயாமி - மகிழ்
ஓம் ஆமோத கணபதயே நம : - அமருணாள புஷ்பம் சமர்ப்பயாமி - வெட்டிவேர்
ஓம் ப்ரமத கணபதயே நம : - பாடலீ புஷ்பம் சமர்ப்பயாமி - பாதிரி
ஓம் ருத்ர கணபதயே நம : - த்ரோண புஷ்பம் சமர்ப்பயாமி - தும்பை
ஓம் வித்யா கணபதயே நம : - துர்த்தூர புஷ்பம் சமர்ப்பயாமி - ஊமத்தை
ஓம் விக்ன கணபதயே நம : - சம்பக புஷ்பம் சமர்ப்பயாமி - செண்பகம்
ஓம் துரித கணபதயே நம : - ரஸால புஷ்பம் சமர்ப்பயாமி - மா
ஓம் காமிதார்த்தப்ரத கணபதயே நம : - கேதகீ புஷ்பம் சமர்ப்பயாமி - தாழை
ஓம் ஸம்மோஹ கணபதயே நம : - மாதவீ புஷ்பம் சமர்ப்பயாமி - முல்லை
ஓம் விஷ்ணு கணபதயே நம : - ஸம்யாக புஷ்பம் சமர்ப்பயாமி - கொன்றை
ஓம் ஈச கணபதயே நம : - அர்க்க புஷ்பம் சமர்ப்பயாமி - எருக்கு
ஓம் கஜாஸ்ய கணபதயே நம : - கல்ஹார புஷ்பம் சமர்ப்பயாமி - செங்கழுநீர்
ஓம் ஸர்வஸித்தி கணபதயே நம : - ஸேவந்திகா புஷ்பம் சமர்ப்பயாமி - செவ்வந்தி
ஓம் வீர கணபதயே நம : - பில்வ புஷ்பம் சமர்ப்பயாமி - வில்வம்
ஓம் கந்தர்ப்ப கணபதயே நம : - கரவீர புஷ்பம் சமர்ப்பயாமி - அலரி
ஓம் உச்சிஷ்ட கணபதயே நம : - குந்த புஷ்பம் சமர்ப்பயாமி - குண்டுமல்லி
ஓம் ப்ரஹ்ம கணபதயே நம : - பாரிஜாத புஷ்பம் சமர்ப்பயாமி - பவளமல்லி
ஓம் ஜ்ஞான கணபதயே நம : - ஜாதீ புஷ்பம் சமர்ப்பயாமி - மல்லிகை
விநாயகரின் இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்கள்: (அறுகம்புல் இரண்டிரண்டாக அர்ச்சிக்க வேண்டும்.)
ஓம் கணாதிபாய நம:
ஓம் பாசாங்குசதராய நம:
ஓம் ஆகுவாஹனாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் ஈசபுத்ராய நம:
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் இபவக்த்ராய நம:
ஓம் மூஷிகவாஹனாய நம:
ஓம் குமாரகுரவே நம:
ஓம் கபிலவர்ணாய நம:
ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் மோதகஹஸ்தாய நம:
ஓம் ஸுரஸ்ரேஷ்டாய நாம:
ஓம் கஜநாஸிகாய நம:
ஓம் கபித்தபலப்ப்ரியாய நம:
ஓம் கஜமுகாய நம:
ஓம் ஸுப்ரஸன்னாய நம:
ஓம் ஸுராக்ரஜாய நம:
ஓம் உமாபுத்ராய நம:
ஓம் ஸ்கந்தப்ப்ரியாய நம:
பத்ரபூஜை, புஷ்பபூஜை முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பத்ரபுஷ்பங்களும், நாமங்களும் வெவ்வேறு புத்தகங்களில் வெவ்வேறு விதமாகக் காணப்படும்.
இருபத்தொரு பத்திரங்களுரைக்கும் தமிழ்ப்பாடலொன்றைக் கீழே காணலாம்.
மேதகு மாசிப்பச்சை நறுங்கையாந் தகரை
வில்வமுட னூமத்தை நொச்சி நாயுருவி
ஏதமில் கத்தரி வன்னி அலரிகாட் டாத்தி
எருக்குமரு துடன்மால்பே ரியம்பு காந்தி
மாதுளையே உயர்தேவ தாருமரு நெல்லி
மன்னுசிறு சண்பகமே கெந்தளி பாதிரியே
ஓதரிய அறுகிவையோர் இருபத் தொன்றும்
உயர்விநா யகசதுர்த்திக் குரைத்திடுபத் திரமே.
வாக்குண்டாம் நல்லமன முண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு!
- ஒளவையார்
“நற் குஞ்ரக் கன்று நண்ணில் கலைஞானம் கற்குஞ் சரக்கன்று காண்.” உமாபதி சிவாச்சாரியாரின் “திருவருட்பயன்”
மகிமைபெற்ற எம்பிரானை நாமும் வாழ்த்தி வணங்கி உய்திபெறுவோம்.
"ஓம் விக்ந விநாயக பாத நமஸ்தே"
விநாயகரும் தத்துவங்களும்:
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகனா!
தத்துவங்கள் தோன்றும் முறையில் முதற்கண் சுத்தமாயையில் இருந்து "ஓம்" என்ற பிரணவ நாதமே தோன்றியது. பிள்ளையார் பிரணவ வடிவினர் ஆதலால் ‘பிரணவன்’ என்றும் ‘மூத்த பிள்ளையார்’ என்றும் அறியப்படுகின்றது. ‘ஓங்கார நாத தத்துவம்’ சிவனையும் சுட்டிநிற்பதால் சிவனும், பிள்ளையாரும் ஒன்றேயென்றும் கொள்ளமுடிகின்றது. பிரணவத்தை முற்றறிந்தவர் என்பதால் பிரணவன், பிரணவநாதன் என்றெல்லாக் அழைக்கப்படுகின்றார். "ஓம்" என்ற பிரணவ மந்திர ரூபியான அவர் ஞானமே வடிவானவர்.
அவரது திருமேனிய ஒரு தத்துவ வித்தென ஆன்றோர் விஸ்தரித்துள்ளனர். அவருடைய இரு திருவடிகளிலே வலது திருவடியை
“முற்றறிவு” அதாவது "ஞானசக்தி" என்றும் “இடது திருவடியை“ முற்றுத்தொழில் அதாவது
"கிரியாசக்தி" என்றும் உணர்த்தப்படுகின்றது. அவ்விரு திருவடிகளின் துணையின்றி உயிர்கள் ஒன்றினை அறிந்து கொள்ளவோ, செயலாற்றவோ முடியாது.
எல்லாப் பொருட்களையும் ஆகாயம் தன்னுள் அடக்கவும், உண்டாக்கவும், விரிக்கவும், ஒடுக்கவும் கூடிய தன்மையைக்கொண்ட பரந்து விரிந்த ஒருரு பூதம். ஆகாயம் போலவே சகலவற்றையும் உள்ளடக்கியதாகவே அவரது பேருந்தி காட்சி கொடுக்கின்றது. சுருக்கமாக
சொல்வதானால், ஆனைமுகனின் பானை வயிற்றில்தான் (புவியும்) பிரபஞ்ச்சமே அடக்கம் என்பர். அவன் செயல் புவி ஈர்ப்பு விசையிலும் மேலானது அத்தனை அண்டங்களையும் கட்டி இழுத்திடும் விசை என்றும், வழிமாறிப்போனவற்றை சமன் செய்யும் விசை என்றும் போற்றுகின்றனர்
படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய பஞ்ச கிருத்தியங்களையும் அவர் தனது ஐந்து கரங்களால் இயற்றுகின்றார் எனப்படுகின்றது. ஐந்து கருமங்கட்கும் அவரே அதிபதி என்பதனால் அவருக்கு "ஐங்கரன்" என்ற நாமம் விளங் குகின்றது. அவரை "பஞ்சகிருத்திகள்" என்றும் கூறுவர். அவரது முற்றறிந்த ஞானத்தை முறம் (சுளகு) போன்று பரந்து விரிந்த இருசெவிகளும் விளக்குகின்றன.
வலது பக்கமுள்ள ஒடிந்த கொம்பு
“பாசஞானத்தையும்" இடது பக்கமுள்ள கொம்பு “பதிஞானத்தையும்" உணர்த்துவதாக உள்ளன. விநாயகரின் அடிக்கீழ் மூஷிகம் அழுந்தி அமைதியாகக் காணப்படுவதை, பிரணவ மூர்த்தியின் அடிக்கீழ் ஆணவ மலம் வலிகெட்டு அமைதி காக்கும் என்பதை விளக்குகின்றது.
அவரது உந்தியைச் சுற்றியுள்ள சர்ப்பம் "குண்டலினி சக்தியின்" வடிவம் என்பர். அதன் விரிவுகளும், சுருக்கங்களுமே பிரபஞ்சத்தின் தோற்றம், சுருக்கம் எனப்படுகின்றது. அதை அவர் உந்தியில் அணிந்திருப்பதானது, உலகிற்கு நிமித்த காரணர் அவர்தாம் என்பதையும் உணர்த்துகின்றது.
மேலும் விநாயகர் முக்கண் உடையவரெனவும் விளக்கப்பட்டுள்ளது. முக்கண்ணுடைய பெருமை சிவனுக்கே உரியது. ஆயினும் கிரியா வழி, ரூப வழி நோக்குமிடத்து சிவனும் பிள்ளையாரும் ஒன்றே எனும் தத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். மேலும், விநாயகருக்கு
"சித்தி", "புத்தி" என இரு சக்திகள் உள்ளதாகவும் புராணங்களில் பேசப்படுகின்றது.
விநாயகரின் வலது முன்கை அபய முத்திரையக் காட்டும், வலது பின்கையில் மழுவாயுதமும், இடது முன்கையில் மோதகம் அல்லது மாதுளம்பழம் வைத்திருப்பது போலவும், இடது பின்கையில் பாசக் கயிறோ அல்லது செந்தாமரை மலரோ கொண்டிருப்பது போலவும் சித்தரிக்கப்படுகின்றது.
துதிக்கையில் நீர்க் கலசம் ஜகமண்டலம் ஒன்றை ஏந்தியிருப்பார். செம்பட்டு வஸ்திரத்தையே அணிந்திருப்பார். விநாயகருக்கு உகந்த முக்கிய நிவேதனப் பொருட்கள் மோதகம், கொழுக்கட்டை பஞ்சாமிர்தம், தேங்காய், அப்பம், அவல், பொரி, கரும்பு, சர்க்கரை முதலியனவாகும். செம்மலர்கள், அறுகம் புல் ஆகியவற்றைக் கொண்டு விநாயகரை அர்ச்சிப்பது மிகச் சிறந்தது.
உலகிலுள்ள சைவ மக்கள் எதையாவது எழுதத் தொடங்கும் பொழுதும், எழுதும் தாளின் தலைப்பில் முதலாவதாக
"பிள்ளையார் சுழி" எழுதிய பின்னரே விடயத்தை எழுதத் தொடங்குவர். பிள்ளையார் சுழி ‘ள’ என்ற ஒரு வட்டமும் ஒரு கோடும் இணந்து இருக்கும்.
இதற்கு ஒரு தத்துவம் உண்டு, பூஜ்ஜியமன வட்டதை "0" பிந்து என்றும், தொடர்ந்துவரும் கோட்டை ” நாதம்" என்றும் கொள்கின்றனர். எனவே பிள்ளையார் சுழியை
"நாதபிந்து" என்பவர். பிள்ளையாருடன் சிவசக்தியின் இணைப்பை இது உணர்த்துவதாக உள்ளதெனக் கூறப்படுகின்றது.
எக்கருமத்தையும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பிள்ளையாரை வழிபட்ட பின்னரே ஆரம்பிக்கும் வழக்கம் சைவ மக்களிடையை காலாதிகாலமாக நிலவிவருகின்றது. அவரை வழிபட்டுத் தொடங்கினால் செய்கருமம் இடையே எதுவித விக்கினங்களும் இன்றி நிறைவுபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

விநாயகர் விரதங்கள்.
ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம். சுக்கில பட்ச (வளர்பிறை) சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் மதாந்தம் சம்பவிக்கின்றன.
சுக்கில பட்சச் சதுர்த்தியை "சதுர்த்தி விரதம்" என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை "நாக சதுர்த்தி" என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை "விநாயக சதுர்த்தி" என்றும் கைக்கொள்கின்றனர்.
மாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தியை "சங்கடஹர சதுர்த்தி" என்பர். விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை
"சங்கடஹர சதுர்த்தி விரதம்" என்கின்றனர்.
இருந்தும் ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை "சங்கடஹர விநாயக சதுர்த்தி" என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் "விநாயக சதுர்த்தி விரதமே" அதிவிஷேடமானது.
சுக்கில பட்ஷ சதுர்த்தியின் அதிபதியான
"தேவி" விநாயகரை வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்று உய்ந்தாள் என்றும், அந்நாளில், அந்நேரத்தில் விநாயரைக் குறித்து விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின் அருளும், சுகபோக சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்றும் கூறுவர்.
விநாயகரின் எல்லா விரத நாட்களையும் எல்லோரும் அனுஷ்டிப்பதில்லை. ஒருசில வைதீகச் சைவ மக்கள் மாத்திரமே சதுர்த்தி விரதங்கள் இருபத்தி நான்கையும் கைக்கொள்வதுண்டு.
சிலர் ஆவணி மாதச் சதுர்த்தி விரதங்கள் இரண்டையும் அனுஷ்டிப்பதுண்டு. அனேகமான இந்துக்கள் விநாயக சதுர்த்தியை மாத்திரமே தவறாது அனுஷ்டிப்பர்.
அத்துடன் மார்கழி மாதத்தில் வருகின்ற
சுக்கில பட்ச சதுர்த்தியையும் விஷேட நோன்பு தினமாகக் கைக்கொள்வர். மேலும் சிலர் கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்சப் பிரதமைத் திதியில் ஆரம்பித்து இருபத்தொரு நாட்கள், அதாவது மார்கழி மாத பூர்வ பட்ச ஷஷ்டிவரை அதை
"விநாயக ஷஷ்டி" அல்லது ”பிள்ளையார் பெருங்கதை” என்பர்கள்
இவ் விரத காலத்தில் காப்புக்கட்டி, நோன்பிருந்து விநாயகரை வழிபடுவர். அந்த இருபத்தொரு நாட்களும் இரவில் மாத்திரமே ஒரு வேளை உணவு கொள்வர். அந்த நாட்களில் அனேகமான விநாயகர் ஆலயங்களில் விஷேட பூசை வழிபாடுகள் நடைபெறுவதுடன் "பிள்ளையார் கதை" ஐபெருங் கதை என்ற புராண படனமும் பராயணம் செய்யப்படும்.
தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, மொறிஷியஸ் தீவு மற்றும் மேற்கு நாடுகளிலும் விநாயக வழிபாடு, ஆவணிச் சதுர்த்தி தினத்தன்று மாத்திரமே கொண்டாடப்படுவதுண்டு. ஆனால் இந்தியாவின் வடமாநிலங்களில், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயக சதுர்த்தியானது பத்துத் தினங்களுக்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.
அவர்கள் கழிமண் கடதாசி, அட்டை, பிளாஸ்ரர் ஒவ் பரிஸ் முதலிய பொருட்களைக் கொண்டு சிறியதும், பெரியதும், பிரமாண்டமானதுமான பிள்ளையார் சிலைகளை வடிவமைத்து வர்ணங்கள் தீட்டி அலங்கரித்து பிரதேசங்களின் சந்திகளிலும், வீதியோரங்களிலும், பொது மைதானங்களிலும் மேடையமைத்து வைத்து பத்துத் தினங்கள் வழிபாடியற்றுவர்.
ஆண், பெண், சிறுவர், பெரியோர், மேல்சாதி கீழ்சாதி என்ற பேதம் எதுவுமின்றி இந்துக்கள் சகலரும் ஒன்றுகூடிப் பிரார்த்தனைகள் பஜனைகளில் கலந்துகொண்டு வழிபடுவர். வழிபாடு மிகவும் கோலாகலமாக பத்து நாட்களுக்கு நீடித்து, "ஆனந்த சதுர்த்தசியான" பத்தாம் நாள் ஆடல் பாடல்கள், பஜனைகள், வாத்திய இசைகள் சகிதம் விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலிலோ, ஆறு குளங்களிலோ, கிணறுகளிலோ நீருடன் சங்கமிக்க விட்டுவிடுவர். இப்படிச் செய்வதனால் சூழல் மாசடைவதாக ஆர்வலர்கள் எதிர்க்குரல் எழுப்புகின்றனர்.
இந்தக் கலாசாரம் மெதுமெதுவாகத் தென்னகத்திற்குள்ளும் வந்து சேர்வதாகக் கூறப்படுகின்றது. சத்திரபதி சிவாஜி மன்னர் காலத்தில் பிரபல்யம் பெற்றிருந்த விநாய சதுர்த்தி விழா, பின்னாட்களில் நாடு வேற்று நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த காரணத்தால் விநாயக சதுர்த்தி விழாவின் முக்கியத்துவம் குன்றிவிட்டது.
1893ம் ஆண்டளவில் லோகமானிய திலகர், அந்நியரின் ஆட்சிக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாக விநாய சதுர்த்திக் கொண்டாட்டத்தைப் பிரகடனப்படுத்தினார். அதைப் பிரபல்யப்படுத்தி பெரு விழாவாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளையும் வகுத்துவைத்தார். அன்றிலிருந்த இன்றுவரை வட மாநிலங்களில் அந்தப் பத்துத் தினங்களும் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
விநாயகரின் ஒரு கரத்தில் ஏடும் மறுகரத்தில் கொம்பும் இருப்பது போன்று காணப்படுகின்ற கணத்தை ‘வித்தியபிரதாதா’ என அழைப்பர். விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்திரகள்ஸ அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல பயக்கும் என்பர்.


அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:
1. முல்லை இலை பலன்: அறம் வளரும்
2. கரிசலாங்கண்ணி இலை பலன்:
இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
4. அறுகம்புல் பலன்: அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது
5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.
7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.
8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும்.
12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.
13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.
14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.
16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.
18. ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்
19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.
20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும் .
சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்பூச்சியா, மியன்மார் மொங்கோலியா, தீபெத்து ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக்கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழைமை வாய்ந்தவையென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்
விநாயகர் சதுர்த்தி விரதத்தின் சிறப்பு:
விநாயகருக்கு உரிய விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, விநாயக சஷ்டி போன்ற விரதங்களுள் மிக விசேஷமானது இந்த விரதம். இந்துக்கள் யாவரும் விரும்பி அநுஷ்டிக்கும் விரதம். விநாயகர் ஆலயங்களில் சிறப்பாகவும், ஏனைய ஆலயங்களில் பொதுவாகவும் இவ் விரதநாளிலே விசேஷ அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நிகழ்கின்றன. எனினும் இவ்விரதத்தினைப் பூஜை வழிபாடுகளுடன் இல்லங்களிலும் கைக்கொள்வது நன்று. விநாயகப்பெருமான் உற்பவமான தினம் இது என்பர்.
சூரியன் சிங்கராசியில் இருக்கும் போது, அதற்குரிய ஆவணி மாதமே ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்பட்ட ஒரு காலத்தில் ஓங்காரத் தெய்வ வணக்கம் சிறப்பாக அத்திங்களில் எல்லோராலும் நடத்தப் பெற்று வழக்கத்தில் வந்ததுள்ளது
விநாயகருக்கு அறுகும், வன்னிப் பத்திரங்களும், மந்தாரைப் பூவும் மிகச் சிறந்தவை. புட்ப விதியிலே சதுர்த்தி விரத காலத்தில் விநாயகரை அர்ச்சிக்க வேண்டிய பத்திரங்களாக பாசிப்பச்சை, கையாந்தகரை, வில்வம், ஊமத்தை, நொச்சி, நாயுருவி, கத்தரி, அலரி, காட்டாத்தி, எருக்கு, மருது, விஷ்ணுகரந்தை, மாதுளை, தேவதாரு, மருது, நெல்லி, சிறுசண்பகம், செந்தாளி, பாதிரி என்பவற்றையும் கூறுகின்றது. சதுர்த்தியில் அறுகுக்கு முதலிடம் தரப்படுகின்றது.
கந்தபுராணத்தில் சிறப்பித்துக் கூறப்படும் இந்த விரதமானது சூதமுனிவரால் பஞ்சபாண்டவருக்கு உபதேசிக்கப்பட்ட பெருமையை உடையது. துரியோதனனாதி கௌரவர்களின் கொடுமையினால் பாண்டவர்கள் வனவாசம் செய்ய நேர்கிறது. காட்டிலே மிகுந்த கஷ்டமும் மனவேதனையும் அடைந்திருக்கும் நிலையில் சூதமுனிவரை ஒருநாள் சந்திக்கின்றார்கள்.
அப்போது தருமர் தமது கஷ்டங்கள் நீங்கிச் சுகமாக வாழ வழிகேட்கிறார். அதற்கு வழியாக இந்த விநாயக சதுர்த்தி விரதத்தை உபதேசிக்கிறார் சூதமுனிவர். அது மட்டுமல்லாமல் இந்த விரதத்தை முன்பு அநுஷ்டித்துப் பயன்பெற்றவர்களின் வரலாற்றையும் எடுத்துக் கூறுகிறார்.
தமயந்தி நளனை மீண்டும் அடைந்ததும், கிருஷ்ணர் ஜாம்பவதியையும் சியமந்தகமணியையும் பெற்றுக்கொண்டதும், இராமன் சீதையை மீட்டதும், இந்திரன் அசுரப்பகையை வென்றதும், பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவந்ததும் இந்த விரத மகிமையினால்தான் என்று விளக்கினார்.
இதனைக்கேட்ட பாண்டவரும் முறைப்படி விநாயக விரதத்தைக் காட்டிலேயே அநுஷ்டித்து உரிய காலத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றனர். இஷ்ட சித்திகளைப் பெற, நினைத்த காரியசித்தியைப் பெற விரும்புவோர் இவ்விரதத்தைக் கைக்கொள்ளலாம்.
அதிகாலை துயிலெழுந்து நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு பிரார்த்தனை வழிபாடுகள், ஆலய தரிசனம் முதலியவற்றில் ஈடுபடவேண்டும். மத்தியானம் ஒரு பொழுது உண்ணலாம். நல்லெண்ணெய் சேர்க்கக்கூடாது என்பது விதி. இரவு பட்டினி இருக்க முடியாதவர்கள் பால்பழம் அல்லது பலகாரம் உண்ணலாம்.
வீட்டிலே பூஜை வழிபாடுகளுடன் விரிவாக இந்த விரதமிருக்க விரும்புவோர் வீட்டிற்கு ஈசான திக்கில் பசும்சாணியால் மெழுகித் தூய்மையாக்கப்பட்டு வெள்ளைகட்டித் தயார் செய்யப்பட்ட ஓரிடத்தில் அல்லது பூஜை அறையிலே மாவிலை தோரணங்களாலும் சிறிய வாழைமரம் முதலியவற்றாலும் அலங்கரித்து அங்கு ஐந்து கும்பங்களை முறைப்படி ஸ்தாபித்து சித்த கணபதி, வித்தியா கணபதி, மோஷ கணபதி, மஹா கணபதி ஆகிய மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து பூஜைகளை நடத்தலாம்.
தத்தமக்குரிய புரோகிதரை அல்லது அருகிலுள்ள ஆலய அர்ச்சகரை அழைத்து இந்தப் பூஜையைச் செய்விக்கலாம். சங்கல்பத்துடன் ஆரம்பித்து பிராமண அநுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்யபூஜை முதலிய பூர்வாங்கக் கிரியைகளிலிருந்து ஆவாஹனாதி சர்வோபசார பூஜைகளையும் செய்து தீபாராதனை நமஸ்காரங்களுடன் நிறைவு செய்யலாம்.
விசேஷ நிவேதனங்களாக அறுசுவை உணவும், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் என்பனவும் சொல்லப்பட்டிருக்கின்றன. நாவற்பழம், விளாம்பழம், வாழைப்பழம், கரும்புத்துண்டு, வெள்ளரிப்பழம், அப்பம், மோதகம், கொழுக்கட்டை ஒவ்வொன்றிலும் இருபத்தொன்று என்ற எண்ணிக்கையில் படைத்து நிவேதனம் செய்ய வேண்டும். (வெள்ளரிப்பழத்தை இருபத்தொரு துண்டுகளாக நறுக்கி வைக்கலாம்)
விநாயக சதுர்த்தி பூஜையில் இன்னொரு முக்கிய அம்சம் இருபத்தொரு பத்திரம், இருபத்தொரு புஷ்பம், இருபத்தொரு அறுகம்புல் என்பவற்றால் தனித்தனியாக அர்ச்சித்தலாம். இறைவனை அவரது பலவித நாமங்களையும் சொல்லி ஓங்காரத்துடன் உச்சரித்து வணக்கம் செலுத்துவதே அர்ச்சனையாகும். ஒவ்வொரு நாமம் சொல்லும் போதும் ஒவ்வொரு பத்திரம் அல்லது புஷ்பம் சமர்ப்பித்தல் மரபு.
இவ்வித விசேஷ அர்ச்சனைக்குரிய நாமங்களும் அவற்றுக்குரிய பத்திர புஷ்பங்களின் பெயர்களும், அங்கபூஜைக்குரிய நாமங்களும், அங்கங்களும்(ஒவ்வொரு நாமங்களையும் சொல்லி மூர்த்தியின் திருவுருவத்தில் அல்லது படத்தில் அந்தந்த நாமத்துக்குரிய அங்கங்களில் பூவினால் அர்ச்சித்தல் அங்கபூஜையாகும்). அவை பற்றிய விபரம் (நாமமும் அங்கமும்) கீழே தரப்பெற்றுள்ளன.
மாத சதுர்த்தி விரதம்:
மாதந்தோறும் வருகின்ற பூர்வபட்சச் சதுர்த்தி நாட்களும் விநாயகருக்குரிய விரத நாட்களே. சதுர்த்தி விரதம் எனப்படும் இந்த நாட்களிலும் விரதமிருப்பது மிக விசேஷமானதாகும். அவ்வாறு அநுஷ்டிக்க முடியாதவர்கள் விநாயக சதுர்த்தி எனப்படும் ஆவணிச் சதுர்த்தி நாளில் விரதமிருக்கலாம்.
மாதந்தோறும் விரதமிருக்க விரும்புவோர் ஆவணிச் சதுர்த்தியிலே பூஜை வழிபாடுகளுடன் சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து (இந்தக் காரணத்துக்காக இந்த விரதத்தை நான் இத்தனை வருடம் கைக்கொள்வேன் என்று சங்கல்பம் பூண்டு) முறைப்படி தவறாமல் தொடர்ந்து கைக்கொள்ளவேண்டும். இருபத்தொரு வருடம் விரதமிருப்பது நன்று. இயலாதெனின் ஏழுவருடங்கள் அநுஷ்டிக்கலாம். அல்லது இருபத்தொன்றுக்குக் குறையாமல் மாத சதுர்த்தி விரதமிருந்து அதையடுத்துவரும் ஆவணிச் சதுர்த்தியில் நிறைவு செய்யலாம்.
விரத உத்தியாபனம்:
குறிப்பிட்ட கால எல்லை முடிந்ததும் அதாவது தாம் கைக்கொள்வதாகக் கருதிய வருடம் நிறைவு பெற்றதும் முறைப்படி விரதத்தை முடித்து, விரதபலனைத் தருமாறு வேண்டுதல் செய்தலே விரதோத்யாபனமாகும்.
முன்பு கூறப்பட்ட விதமாக வீட்டிலே பூஜை வழிபாடுகள் செய்யும்போது தங்கம், வெள்ளி, செம்பு இவற்றில் ஏதாவதொரு உலோகத்தில் விநாயகர் திருவுருவத்தைச் செய்து வைத்து ஆவாகனம் செய்து பூஜை நடத்த வேண்டும். அன்று உபவாசமிருந்து மறுநாட்காலை புனர்பூஜையின் பின் (மீண்டும் பூஜை செய்தல்) உத்வாசனம் செய்து அர்ச்சகருக்குரிய தஷிணை தாம்பூலங்களுடன் உலோகப் பிரதிமையையும், கும்பப்பொருட்களையும், வேட்டி சால்வை முதலிய தானங்களையும் வழங்கி இதன்பின் மஹேஸ்வர பூஜை செய்து (சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்தல்) தாமும் காலை எட்டரை மணிக்கு முன்னதாகப் பாரணை செய்து விரத பூர்த்தி செய்யலாம்.
விரத உத்யாபன சமயத்தில் பூஜையை ஆரம்பிக்கும் போது "வ்ரதோத்யாபன காலே யதோக்தபல சித்யர்த்தம் விசேஷ பூஜாம் ஆசார்யமுகேன அஹம் அத்ய கரிஷ்யே "
(விரதபூர்த்தி காலத்தில் சாஸ்திரத்தில் கூறியபடி விரதத்துக்குரிய பலன்கள் எனக்குச் சித்திக்க வேண்டுமெனக் கருதி இந்தப் பூஜையைச் செய்கிறேன்.) என்று சங்கல்பத்துடன் ஆரம்பித்து முடிவில் அர்ச்சகருக்குரிய தானம் வழங்கும் போது " ப்ரதிமாம் வஸ்த்ர சம்யுக்தாம் கும்போகரணைர்யுதாம், துப்யம் தாஸ்யாமி விப்ரேந்த்ர யதோக்த பலதோ பவ " (பிரதிமை, வஸ்திரங்கள், கும்பப்பொருட்கள் முதலிய தானங்களை மகிழ்ச்சியுடன் பிராமணோத்தமருக்கு வழங்குகிறேன், இவ்விரதத்திற்குச் சொல்லப்பட்ட பலன்கள் எனக்கு உண்டாகட்டும்.) என்று பிரார்த்திக்க வேண்டும்.
பூஜை முடிவில் கும்பத்தால் யஜமானுக்கு அபிஷேகம் செய்வித்தலும் சொல்லப்பட்டிருக்கிறது. உலோகப் பிரதிமை செய்வதற்கு வசதியில்லாதவர்கள் களிமண்ணால் செய்து வழிபட்டபின் அதனை நீர்நிலையில் விட்டு விடலாம்.
விரதோத்யாபன காலத்தில் இவ்வாறு வீட்டில் பூஜைகள் செய்ய வசதியில்லாதவர்கள் ஆலயத்துக்குச் சென்று அபிஷேகம், பூஜை, அர்ச்சனை, உற்சவம் முதலியன செய்வித்தபின் அல்லது குறைந்த பட்சம் விரதோத்யாபனத்துக்குரிய சங்கல்பத்துடன் சஹஸ்ர நாமார்ச்சனையாவது செய்து அர்ச்சகருக்குரிய தாம்பூல தஷிணைகள் தானங்கள் வழங்கி முன்கூறியவாறு விரதபலனைத் தருமாறு பிரார்த்தித்து விரத பூர்த்தி செய்யலாம்.
ஸ்ரீ விநாயகர் துதி!
கஜாநனம் பூதகணபதி ஸேவிதம்
கபித்த ஜம்பூபல ஸாரபஷிதம்
உமாஸ¤தம் சோக விநாச காரணம்
நமாமி விக்நேஸ்வர பாதபங்கஜம்
மூஷிக வாஹன மோதகஹஸ்தம்
சாமரகர்ண விலம்பித ஸ¤த்ர
வாமநரூப மஹேஸ் வரபுத்ர
விக்ந விநாயக பாத நமஸ்தே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக