சனி, 22 ஜூலை, 2017

ஆடி அமாவாசையில் தானங்கள் செய்வோம்!


ஆடி அமாவாசையில் தானங்கள் செய்வோம்!

மாதந்தோறும் அமாவாசை நாள் என்பது, முன்னோர்கள் எனப்படும் பித்ருக்களை ஆராதித்து வணங்குவதற்கு உரிய அற்புதமான நாள். அதிலும் குறிப்பாக, தை மாத அமாவாசை, புரட்டாசி மகாளய பட்ச அமாவாசை, ஆடி மாதத்தில் வரும் அமாவாசை ஆகிய அமாவாசை தினங்கள், மிக மிக முக்கியமானவை.

இந்த நாட்களில், எந்த வேலை இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வணங்கவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

ஆடி அமாவாசை தினத்தில், நம் முன்னோர்கள் மற்றும் பித்ருக்களை நினைத்து, தந்தை இல்லாதவர்கள் புனித நீர்நிலைகளில் நீராடி, திதி தர்ப்பணம் அல்லது பித்ரு தர்ப்பணம் அளிப்பது மிகவும் சிறப்பு. அப்படிச் செய்ய இயலாதவர்கள், ஏழை மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு உணவு மற்றும் உடைகளை தானமாக வழங்கி, முன்னோரைக் குளிர்விக்கலாம்.

இதன் மூலம் நம் சந்ததிகள் எந்தக் குறையும் இல்லாமல், வாழையடி வாழையென வளர்வார்கள். செம்மையாய் வாழ்வார்கள்.

ஆடி அமாவாசை நாளில், பித்ருக்களை ஆராதிப்போம். அவர்களின் ஆசியுடன் சந்ததி சிறக்க வாழ்வோம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக