வியாழன், 7 பிப்ரவரி, 2019

இதுதான் இந்துமதத்தின் ஆற்றல்


இதுதான் இந்துமதத்தின்   ஆற்றல்

★சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம்
வேல் வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது.

★திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகு காலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு
செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.

★நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் விநாயகர் ஆறுமாத காலம்
கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார்.

★வழிபாடு செய்யப்பட்ட சாணிப்பிள்ளையாரை கரையான்கள், வண்டுகள் அரிப்பதில்லை.

★திருபுறம்பியம் சுவேத விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் முழுவதும்
உறிஞ்சப்படுகிறது.

★ஆந்திராவில் மங்களகிரியில் பானகரம் தயாரித்து பானகநரசிம்மர் கோவிலில்
நரசிம்மர் வாயில் ஒரு அண்டா அல்லது ஒரு தம்ளர் ஊற்றினால் பாதியை
உள்வாங்கிக்கொள்கிறார். மீதி பாதியை பிரசாதமாக வழங்குகின்றனர்.

★கும்பாபிஷேகம் மற்றும் ஐயப்பனின் திருவாபரண பெட்டியை எடுத்துச் செல்லும்
போது கருடன் தரிசனம் தருகிறது.

★கும்பகோணம் அருகே திருநறையூர் நாச்சியார் கோவிலில் கருட சேவையின்போது கல்
கருடன் முதலில் 4 பேர் தூக்க ஆரம்பித்து பின் எடை படிப்படியாக அதிகரித்து
வீதிக்கு வருவதற்குள் 8, 16, 32, 64 பேர் சேர்ந்து தூக்கும் அதிசயம்
இன்றும் நடைபெறுகிறது.

★முருகனுக்கு விரதமிருந்து சர்ப்பக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள்
பாம்பும், மச்சக்காவடி எடுப்பவர்களின் பானைக்குள் மீனும் தானாக
வருகின்றன.

★திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு
தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம்
நடைபெற்றது.

★திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள
தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளி சுனையின்
நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.

★தூத்துக்குடி முத்தையாபுரம் மற்றும் மாளிகைப்பாறை கருப்பசாமி கோவிலில்
கொடைவிழாவின்போது பூசாரி பாட்டில் பாட்டிலாக ஏராளமாக மதுவை அருந்தும்
அற்புதம் நடக்கிறது.

★காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால்
நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.

★சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார்
கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.

★திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில்
சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.

★குஜராத் பவநகரில் 1½ கிமீ கடலுக்குள் இருக்கும் நிஷ்களங்க மகாதேவரை
கடல்நீர் உள்வாங்கி பக்தர்கள் வழிபடும் அற்புதம் நடைபெறுகிறது.

★ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு
வடை சுடுகிறார் ஒரு பாட்டி.

★திருப்பத்தூர் – தர்மசாலா சாலையில் நான்குவழி சாலையை அகலப்படுத்த
நாகாத்தம்மன் குடிகொண்டிருக்கும் ஒரு பாம்புப் புற்றை அகற்ற முயன்றபோது 7
புல்டோசர்கள் பழுதாகி விட்டன. இறுதியில் அந்த பாம்புப்புற்றை இடிக்காமல்
விட்டு விட்டு சாலை அமைத்தனர்.

★வேலூர் செங்கம் ரிஷபேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுக்கு ஒருமுறை
பங்குனியில் சூரிய ஒளிக்கதிர்கள் நந்தீஸ்வரர் மீது பட்டு தங்கநிறமாக
ஜொலிக்கும் அதிசயம் நடைபெறுகிறது.

★திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர்
கோவிலில் சூரியன் மறைந்துவிட்டபோதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை
அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.

★சோமநாதபுரம் சிவன்கோவிலில் சிவலிங்கம் அந்தரத்தில் இருந்தது. கஜினி
முகமது உடைத்து அழித்தான்.

★அலகு குத்துதல், அக்னிசட்டி எடுத்தல், தீமிதித்தல் போன்ற நோ்த்திக்
கடன்கள் செய்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

★இதுபோல் நாம் அறியாத அற்புதங்கள் ஏராளம். இதுபோன்ற அற்புதமான கோவில்களை,மகான்களின்
 ஜீவசமாதிகளை தரிசிக்கும் பாக்கியத்தை புண்ணியம்    செய்தவர்கள்பெறுகிறார்கள்.

திங்கள், 4 பிப்ரவரி, 2019

அமாவசை சாஸ்த்திரம் பற்றி சுவாரஸ்யமான தமிழன் கதை

அமாவசை சாஸ்த்திரம் பற்றி சுவாரஸ்யமான தமிழன் கதை

திங்கள் கிழமையில் வரும் அமாவாசையில் தனித்துள்ள அரசமரத்தை சிவ பஞ்சாட்சரம் ( நமசிவய ) சொல்லியபடி 108 முறைகள் வலம் வரவேண்டும்
என்பது குருசிஷ்ய அனுபவ சாஸ்திரம் சொல்லும் ரகசிய வழிபாட்டு முறை.
ஏன் ?
என்ன காரணம் ?
ஒரு நாட்டின் மன்னனுக்கு திடீர் என்று ஒரு இனம் காண முடியாத நோய் தாக்கியது.
எல்லா வைத்தியர்களும் வந்து பார்த்தார்கள்., முடிவில் அரண்மனை வைத்தியர் வந்தார்.
ஆனால் நோய் என்ன என்பதையே கண்டுபிடிக்க முடியவில்லை.
நோயை அறியாமல் மருந்து கொடுக்க முடியவில்லை.
மன்னர் நாளுக்கு நாள் உடல் தளர்ந்து மெலிந்து உருக்குலைந்து போனார்.
அப்போது மந்திரி.,
மன்னா., ராஜகுருவை அழையுங்களேன் அவரிடம் கேட்போம் என்றார்.
மன்னரும் சரி என்று ராஜ குருவை வரவழைக்க ஏற்பாடுகள் செய்தார்.
ராஜகுரு வந்தார். மன்னனைப் பார்த்தார்.
சில நொடிகள் கண்களை மூடி த்யானித்தார்.
மந்திரியை அழைத்தார்.
அவரிடம் ராஜகுரு.,
மந்திரி., இவ்வூரில் உள்ள சலவை தொழிலாளியின் மனைவியை அழைத்து வாருங்கள் என்றார்.
உடனே மந்திரி பணியாட்களை விட்டு அழைத்து வரச் செய்தார்.
மிகவும் பயந்து போய் வந்தாள் அந்த பெண்மணி.
அய்யா., நாங்கள் ஏதும் தவறு செய்ய வில்லையே என்றாள் அவள்.
அம்மா பயப்படாதே., உள்ளே வா என்றழைத்தார் ராஜகுரு.
தைரியம் சொல்லி அவளை அழைத்துக்கொண்டு ராஜா இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்ற ராஜகுரு., மகாராஜாவைக் காண்பித்து., அம்மா நீங்கள் ராஜாவைப்பார்த்து மகாராஜா கவலைப்படாதீர்கள் நீங்கள் விரைவில் குணமாகி விடுவீர்கள் என்று சொல்லுங்கள் என்று கூறினார்.
பயந்து கொண்டே ராஜகுரு சொன்ன அந்த வார்த்தைகளை அப்படியே கூறினாள் அந்த பெண்மணி.
சரியம்மா நீ போகலாம் என்று சொல்லி அந்த பெண்ணை நிறைய சன்மானங்களோடு அனுப்பி வைத்தார் ராஜகுரு.
அடுத்து வந்த சில நாட்களிலேயே மகாராஜா நலமாகி உடல் தேறினார். பழைய நிலையை அடைந்தார்.
எப்படி இது..?
பலவிதமான மருந்துகளால் தீராத எனது நோய் எப்படி குணமானது சொல்லுங்கள் என ராஜகுருவை வேண்டி கேட்டுக் கொண்டார் மகாராஜா.
மகாராஜா.,
திங்கள் கிழமையில் வரும் அமாவாசையில் அரசமரத்தை பஞ்சாட்சரம் சொல்லியபடி 108 முறைகள் வலம் வருபவர்களின் வாக்குவன்மை மிகவும் அதிகமாக மேம்படும்., ஆன்ம பலமும் பெருகும். இது அவர்களுக்கு இயற்கைதரும் மிக உயர்ந்த சன்மானம்.
ஆனால் நான் ஞானதிருஷ்டியில் பார்த்ததில் உங்கள் நாட்டில் இந்த பெண்மணி ஒருத்திதான் அவ்வாறு செய்திருந்தாள்.
ஆனால் அதன் பலனை அவள் அறிந்திருக்கவில்லை. அவள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக வலம் வந்திருந்தாள்.
அதனால்தான் அவளை வைத்தே உங்களுக்கு வைத்தியம் செய்தேன்.
மன்னா.,
முதன் முதலில் நாம் ஒரு சலவைத்தொழிலாளியை வைத்து இதை செய்ததால் பின் வரும் காலங்களில் யாரேனும் இதனை கடை பிடிப்பார்களேயானால்., அதாவது
அவர்கள் திங்கள் கிழமையில் வரும் அமாவாசையில் அரசமரத்தை பஞ்சாட்சரம் சொல்லியபடி 108 முறைகள் வலம் வந்தபின் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளவேண்டும்.
அவ்வாறு வாங்கிக்கொண்டால் அவர்களின் வாக்குவன்மையும் ஆன்ம பலமும் அதிகரிக்கும்.,
அதனால் பல உயிர்கள் காக்கப்படலாம்.
நாம் வளர்க்கும் உயிர் ஆபத்தில் இருக்கும் ஆடுகள் மாடுகள் முன்பாக நின்று “பயம் வேண்டாம் நீ பிழைத்துக்கொள்வாய்” என்று சொல்லி அந்த உயிரையும் காக்கலாம்.
ஆனால் இதனை பொதுநலத்திற்காக மட்டுமே பயன் படுத்த வேண்டும்.
என்று சொல்லி முடித்தார்.
இப்போது நீங்கள் தயாரா..?
வரும் பிப்ரவரி 4ஆம் தேதி திங்கள்கிழமை அமாவாசை வருகின்றது
இந்த நேரத்திற்குள் நீங்கள் வலம் வரலாம்.
கவனிக்க வேண்டியவை.
*வேப்பமரம் இல்லாத தனித்த அரசமரம் (விநாயகர் இருக்கலாம்) இருக்குமிடத்தை கண்டுபிடியுங்கள்.,* வலம் வருவதற்கு தயாராகுங்கள்.
நீங்கள் வாக்குவன்மையும்., ஆன்மபலம் பெறவும்., உங்களால் பல நூறு உயிர்கள் காக்கப்படவும் வாழ்த்துகள்.
இந்த வழிபாடு சித்தர்களால் சொல்லப்பட்டது.

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

தை அமாவாசை.... முன்னோர்களின் ஆசி வாழ்வை சிறப்பாக்கும்...!!


தை அமாவாசை.... முன்னோர்களின் ஆசி வாழ்வை சிறப்பாக்கும்...!!

சூரியனும், சந்திரனும் இணையும் தினமே அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் நமக்கு தரவல்லவர். சந்திரன் நமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் போன்றவற்றை எல்லாம் தரவல்லவர்.

சூரியனைப் 'பிதிர் காரகன்" என்றும், சந்திரனை 'மாதுர் காரகன்" என்றும் ஜோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் நமது பிதா, மாதாவாக வழிபடும் தெய்வங்களாக கருதுகின்றோம். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபடுகின்றனர்.

அமாவாசை தினத்தில் தந்தையை இழந்தவர்களும், பூரணை தினத்தில் அன்னையை இழந்தவர்களும் வழிபடுவது புராணகாலம் தொட்டு பின்பற்றிவரும் ஒரு வழக்கமாகும். அமாவாசைத் திதி, மாதா மாதம் நிகழ்ந்தாலும் அவற்றுள் தைமாதத்திலும், ஆடி மாதத்திலுல் வரும் அமாவாசைத் திதிக்கு அதிக சிறப்பு உண்டு.

தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். உத்தராயண கால ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணாயன கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம் வருவதால், ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

தை அமாவாசை :

ஆடி அமாவாசையன்று மூதாதையர்களை வரவேற்கும் நாம் தை அமாவாசையன்று விடைகொடுத்து அனுப்புகிறோம்.

இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்கவேண்டும்.

இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி பேறு கிடைக்கும். நம் முன்னோர்கள், காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் அன்று காகத்துக்கு உணவு அளிப்பது முக்கியம்.

வீட்டில் செய்ய வேண்டியவை :

தர்ப்பணம் செய்த பின் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, வடக்கு, கிழக்கு திசையில் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சார்த்த வேண்டும்.

முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

முன்னோர்களுக்கு பிடித்த இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும்.

கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும்.

வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை ஒத்திவைப்பது நல்லது.

தர்ப்பணம் செய்து முடித்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம்.

அமாவாசை நாளில் செய்யக்கூடாதவை :

அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். தர்ப்பணம் செய்யும்போது கறுப்பு எள்ளை, மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக்கூடாது.

நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும்.

நம் பித்ருக்கள் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வதித்தால் புண்ணியமும், செல்வமும் கிடைக்கும்.