புதன், 22 ஜனவரி, 2020

150 ஆண்டுகளாக கோவிலை முதலை காவல் காக்கும் அதிசயம் பற்றி தெரியுமா ?


150 ஆண்டுகளாக கோவிலை முதலை காவல் காக்கும் அதிசயம் பற்றி தெரியுமா ?

இவ்வுலகில் தோன்றிய அனைத்து உயிர்களுமே இறைவனின் அம்சமாகக் கருதுவது இந்தியாவில் தோன்றிய மதங்களின் கோட்பாடாகும்.

அதுவும் நம் இந்து மதத்தில் பிற உயிர்கள் மனிதர்களுக்கும், தேவர்களுக்கும் ஏன் அதைப் படைத்த அந்த ஆண்டவனுக்கும் உதவியாக இருந்ததைப் பற்றி புராணங்களும், இதிகாசங்களும் போற்றுகின்றன.

அந்த வகையில் அக்காலம் தொட்டு இக்காலம் வரை, அந்த ஆண்டவனுக்கு சேவை செய்கிற ஒரு விலங்கும், அவ்விலங்கினால் பிரசித்தி பெற்ற அக்கோவிலைப் பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம்.

நம் அண்டை மாநிலமான கேரளத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான “அனந்தபுரா கோவில்” உள்ளது.

இக்கோவிலைச் சுற்றி பச்சைப் பசேல் என்று பாசிபடிந்தார் போலிருக்கும் குளத்தில் ஒரு முதலை வாழ்ந்து வருகிறது.

அது “தெய்வீக அம்சம்” பொருந்திய முதலை என்று இக்கோவிலின் பக்தர்களும், இவ்வூர்மக்களும் கூறுகின்றனர்.

அதற்கு காரணம் “வில்வமங்கலம்” என்ற முனிவர் இங்கு தவம் புரிந்த போது அம்முனிவருக்கு, சிறுவன் வடிவில் காட்சி தந்த மஹாவிஷ்ணு இக்கோவிலின் குளத்தையொட்டி உள்ள ஒரு குகையில் சென்று மறைந்ததாகவும், அத்தகைய புனிதமான குகைக்குள் மற்ற மனிதர்கள் யாரும் செல்லாதவாறு, இறைவனின் கட்டளைப்படி இம்முதலை காவல் காப்பதாகவும் கூறுகிறார்கள்.

இம்முதலை தெய்வீக அம்சம் கொண்டது என்பதற்கு வேறு பல காரணங்களும் உள்ளன.

ஏனெனில் முதலைகள் இயற்கையாகவே மாமிசம் உண்ணும் விலங்காகும்.

ஆனால் இக்குளத்தில் உள்ள இந்த முதலை இக்குளத்திலுள்ள மீன்களைக்கூட உண்டதில்லை என்றும், தினம் இருவேளை பூஜைகள் முடிந்து அரிசியால் செய்யப்பட்ட பிரசாதத்தை இக்கோவிலின் அர்ச்சகர், அக்குளத்தின் ஓரம் வந்து அம்முதலையை “பபியா” என்று பெயர்கூறி அழைத்து, பிரசாதத்தை முதலைக்கு தருகிறார் அதுவே அதற்க்கு உணவு.

மேலும் இக்குளத்தில் அவ்வப்போது குளித்து வரும் இக்கோவிலின் அர்ச்சகரையோ, பக்தர்களையோ இது வரை இம்முதலை அச்சுறுத்தவோ, தாக்கவோ செய்தததில்லை என ஆச்சர்யமடைகின்றனர் இங்கு வழக்கமாக வருபவர்கள்.

அதுமட்டுமல்லாது கடந்த 100 முதல் 150 ஆண்டுகளுக்கும் மேலாக இக்குளத்தில் ஒரு முதலை இறந்தாலும், மற்றொருமுதலை தோன்றுவதாகவும், முதலைகள் வாழும் பெரிய ஆறுகளோ, சதுப்பு நிலங்களோ இக்கோவிலுக்கு அருகாமையில் ஏதுமில்லாத போது, இங்கு இந்த முதலை தோன்றும் அதிசயத்தை கண்டு தாங்கள் வியப்பதாக கூறுகிறார்கள் இவ்வூர் மக்கள்.

இம்முதலையால் பிரசித்தி பெற்ற கோவிலை தரிசிக்க அம்மாநில மக்கள் அதிகளவில் வருகின்றனர்.

இக்கோவில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தை அமாவாசை ஸ்பெஷல் !

தை அமாவாசை ஸ்பெஷல் !

🍃சிரார்த்தம், திதி, தர்ப்பணம், மஹாளயம் மற்றும் பித்ரு தோஷ பரிகாரம் – ஐயம் போக்கும் முழு தகவல்கள் – 60 !

🍃1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.

🍃2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.

🍃3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிரார்த்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

🍃4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.

🍃5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து  மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

🍃6. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

🍃7. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால்  தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.

🍃8. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

🍃9. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. அகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய  வேண்டும்.

🍃10. மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிரார்த்தம் செய்ய வேண்டும்.

🍃11. மன்வாதி 14 நாட்களிலும் யுகாதி 4 திதிகளிலும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆயிரம் ஆண்டுகள் வரை முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

🍃12. மன்வாதி யுகாதி நாட்களில் செய்யப்படும் புண்ணிய  நதி நீராடல், ஜெபம், ஹோமம் ஆகியவை கூடுதல் பித்ரு புண்ணியத்தைத் தரும்.

🍃13. தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும் ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.

🍃14. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த  நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

🍃15. இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டி நாள்தான்.

🍃16. துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத் தரும். ஆகவே அதிக புண்ணி யங்களைத் தரும் தந்தையரின் சிரார்த்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.

🍃17. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த் தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

🍃18. இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றைய நாளன்று இறந்த ஜீவன் காற்று வடிவில் இறந்தவரின் குழந்தைகள் வாழும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிரார்த்தத்தில் தரும் உணவை சாப்பிடுவதற்காக காத்துக் கொண்டிருக்குமாம்.

🍃19. முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் சிரார்த்தத்துக்கு பார்வணசிரார்த்தம் என்று பெயர்.

🍃20. ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிரார்த்தம் சங்கல்ப சிரார்த்தம் எனப்படும்.

🍃21. ஒருவருக்கு சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற  பொருட்கள் அனைத்தையும், சமைக்காமல் அப்படியே தட்சணையுடன் அளித்துச் செய்யும் சிரார்த்தம் ஆம சிரார்த்தம் எனப்படும்.

🍃22. சிரார்த்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வது ஹிரண்ய சிராத்தம் எனப்படும்.

🍃23. சிரார்த்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.

🍃24. சிரார்த்தம் நடத்தப்படும் இடம், சிராத்தம் செய்யும் நேரம், சிரார்த்தத்தில் பித்ருக்களாக பாவித்து பூஜிக்கப்படும் நபர், சிரார்த்தத்தில் உபயோகிக்கும் பொருட்கள், சிராத்தம் செய்யும் நபர் ஆகியவை சிரார்த்தத்துக்கு முக்கியமானவை. இவைகள் தூய்மையானவைகளாக இருந்தால் சிரார்த்தத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும்.

🍃25. பித்ருக்களை சிரார்த்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு சிரார்த்தம் செய்து அவர்களுக்கு உணவளித்து, அவர்களை திருப்தி செய்தால் அவர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள், அழியாப்புகழ், உடல் வலிமை, செல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றை தருகிறார்கள்.

🍃26. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கி த்தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.

🍃27. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது  என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.

🍃28. பெற்றோர்களின் வருஷ சிரார்த்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த் தத்தைச் செய்ய வேண்டும்.

🍃29. அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பண பூஜைகளை செய்து விட்டு பிறகு மஹாளயத்தை செய்ய வேண்டும்.

🍃30. பெற்றோர்களின் வருஷாந்தர சிரார்த்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதி தர்ப்பணங்கள் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.

🍃31. தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொருவருக்கு வருஷாந்திர சிரார்த்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில் வருஷசிராத்தம் செய்து விட்டு பிறகு மாஸிகத்தை செய்ய வேண்டும்.

🍃32. தாய் தந்தை இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிரார்த்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய வேண்டும். பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.

🍃33. பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர்களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டு விட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

🍃34. இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில் உங்கள் மறைந்த முன்னோர் வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள்.

🍃35. சிரார்த்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாகப் பிறப்பான் என்று புரா ணங்களில் கூறப்பட்டுள்ளது.

🍃36. உடல் நிலை சரியில்லாதவர்கள் – யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு சிரார்த்தம் செய்ய வேண்டும்.

🍃37. நம்மைவிட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாக புண்ணியமும், செல்வமும் நமக்கு கிடைக்கும்.

🍃38. மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட் டாயமாகச் செய்ய வேண்டும்.

🍃39. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத் தப்பட்டுள்ளார்கள்.

🔥அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள்.

🔥அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள்.

🔥சித்தப்பா, மாமா,  குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை  நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

🍃40. மக்களுக்கு தொண்டாற்றி, சுயநலமின்றி அரிய இறைப்பணிகளைப் புரிந்தோர் மட்டுமே பித்ருலோகம்  அடைகின்றனர் என்பதை கருடபுராணம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

🍃41. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மஹாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்.

🍃42. கார்த்திகை மாதம் உத்திராயண புண்ணியகாலம் சுக்ல பட்சம், பவுர்ணமி திதியில் தானம் செய்ய வேண்டும். கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவாதசி திதியில் தானங்கள் அளிக்கலாம்.

🍃43. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.

🍃44. பித்ருக்கள் எங்கிருந்தாலும் சரி, தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள்அளவும் சந்தேகம் கிடையாது.

🍃45. ஒருவர் மரண படுக்கையில் அவதிப்படும்போது அவரது மகன் அல்லது மகள் மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரையை எருமை மாட்டிற்கு தானம் அளித்தால் மரண அவதி நீங்கும்.

🍃46. வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மை அளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.

🍃47. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக் கூடாது.

🍃48. சிரார்த்தம் செய்யக்கூடியவர் முதல் நாள் முகச்சவரம் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது, மனைவியுடன் சேர்ந்து உறங்கக் கூடாது, பிரஷ் கொண்டு பல் தேய்ப்பதும், வெற்றிலை தாம்பூலம் போடுவதும் கூடாது.

🍃49. மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக, மிக முக்கியம்.

🍃50. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.

🍃51. திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவனுக்கு அறிவு, ஞான சக்தி, பசுக்கள் தேக ஆரோக்கியம், சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம், அனைத்து பலன்களும் தவறாமல் கிடைக்கும்.

🍃52. சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் திருப்தி அடைவார்கள்.

🍃53. மஹாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை நினைத்து மனதார வணங்கினால் சகல சவுபாக்கியங்களும் தேடி வரும்.

🍃54. மஹாளய பட்சத்தின் 16 நாட்களும் சிரார்த்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அளிக்கும்.

🍃55. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அற்றை நன்கு தெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

🍃56. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

🍃57. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மஹாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.

🍃58. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

🍃59. திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும்  அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

🍃60.  திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம்    இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும்  லட்சுமணரும் தம் தந்தையான தசர மகாராஜாவிற்க்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.Ⓜ

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

பௌர்ணமியில் விளக்கேற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்!


பௌர்ணமியில் விளக்கேற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்!


விளக்கேற்றும் பலர் ஏதோ சம்பிரதாயத்துக்காக விளக்கு ஏற்றுகிறார்களே தவிர அதன் உண்மை தன்மையை அறிவதில்லை.

பொதுவாக விளக்கு ஏற்ற எண்ணெய், திரி, தீ இருந்தால் போதும். எண்ணெய், திரி, தீ இதை மீண்டும் மீண்டும் சொல்லி பாருங்கள் கடவுளே எண்ணை திருத்தி நல்வழிப்படுத்து என்று பொருள்படும்.

யார் ஒருவர் பிரதி மாதத்திலும் வரும் பௌர்ணமியன்று விளக்கேற்றி வழிபட்டு வருகிறார்களோ அவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

• சித்திரை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தான்யத்தைப் பெறுவர்.

• வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தன லாபம் பெறுவர்.

• ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று விளக்கேற்றினால் சந்தான பாக்கியம் கிட்டும்.

• ஆடி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் நீண்ட ஆயுளைப் பெறுவர்.

• ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று விளக்கேற்றினால் பதவி கிடைக்கும்.

• புரட்டாசி மாத பௌர்ணமியில் விளக்கேற்றினால் பசுக்கள் விருத்தியாகும்.

• ஐப்பசி மாதத்தில் விளக்கேற்றினால் பசிப்பினிகள் நம்மை விட்டு அகலும்.

• கார்த்திகை மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் ஐஸ்வரியம் பெருகும். நிலைத்த புகழ் ஏற்படும்.

• மார்கழி மாதத்தில் விளக்கேற்றினால் துன்பம் அகலும் இன்பங்கள் வந்து சேரும்.

• தை மாதத்தில் வரும் பௌர்ணமியன்று விளக்கேற்றினால் வெற்றியைப் பெறுவர்.

• மாசி மாதத்தில் விளக்கேற்றினால் பாவங்கள் போகும்.


• பங்குனி மாத பௌர்ணமியன்று விளக்கேற்றினால் தர்மசிந்தனை பெருகும்.

எத்தனை முகம் ஏற்றலாம்?

• ஒரு முகம் ஏற்றினால் – நினைத்த செயல்கள் நடக்கும்

• இரு முகம் ஏற்றினால் – குடும்பம் சிறக்கும்

• மூன்று முகம் ஏற்றினால் – புத்திரதோஷம் நீங்கும்

• நான்கு முகம் ஏற்றினால் – செல்வம் பெருகும்

• ஐந்து முகம் ஏற்றினால் – நற்பலன்கள் உண்டாகும்.

வெள்ளி, 17 ஜனவரி, 2020

சமயபுரம் சாய்பாபா கோயில்


சமயபுரம் அருகில் உள்ள ( அக்கரைப்பட்டி) யில் உள்ள சாய்பாபா கோயில் 20 01 2020 திங்கள் அன்று திறப்பு விழா.....













தை மாத‌ சிறப்புகள்..!!



தை மாதம்... என்னென்ன விஷேசங்கள்?... வரவிருக்கிறது... வாங்க பார்க்கலாம்..!
தை மாத‌ சிறப்புகள்..!!
💥'தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற நம்பிக்கை அளிக்கும் தை மாத‌த்தில் மக்கள் தைப்பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும், பைரவ வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, தை வெள்ளி வழிபாடு போன்ற வழிபாட்டு முறைகளையும் இம்மாதத்தில் பின்பற்றுகின்றனர். அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

தைப்பூசம் :

💥இவ்விழா தை மாதத்தில் வரும் பௌர்ணமியோடு கூடிய பூசம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமான் மற்றும் முருக்கடவுள் ஆகியோரை வழிபாடு செய்கிறோம்.

💥சிதம்பரம் பொன்னம்பலத்தில் இறைவன் ஆடலரசனாக உலக மக்களுக்கு காட்சியருளிய நாள் தைப்பூசம் என்றும், உமையம்மை வேலவனுக்கு சக்தி வேலை வழங்கிய நாள் தைப்பூசம் என்றும் கருதப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. இவ்விழா உலகெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தை அமாவாசை :

💥தை அமாவாசை அன்று மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனப்படும் நீத்தார் கடன் வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் இவ்வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

💥உத்திராண்ய காலத்தின் முதல் மாதமான தை மாத அமாவாசையும், தட்சிணாயன காலத்தின் முதல் மாதமான ஆடி மாத அமாவாசையும், புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையும் முன்னோர்களுக்கான வழிபாட்டிற்கு உகந்தவை எனக் கருதப்படுகின்றன.

💥இவ்வழிபாட்டின் மூலம் தாங்கள் செய்த பாவங்கள் நீங்குவதாகவும், குழந்தைப்பேறு, குடும்பத்தில் ஒற்றுமை, சுபிட்சம், மகிழ்ச்சி ஆகியவை கிடைப்பதாகவும் கருதப்படுகிறது.

ரத சப்தமி :

💥ரத சப்தமி என்பது தை மாதத்தின் வளர்பிறையில் வரும் சப்தமி திதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில்தான் சூரியன் தனது வடஅரைக்கோளப் பயணத்தைத் தொடங்குகிறார்.

💥இந்நாளில் விரதம் மேற்கொள்வதால் ஆரோக்கியம், நோய் இல்லாமை, செல்வம், புத்திரப்பேறு, நீண்ட ஆயுள், பகைவர்களை வெல்லும் சக்தி, வெற்றி, நிலம், தானியம், புண்ணியம் ஆகியவை கிடைக்கும். மேலும் மனக்கவலை, வியாதி ஆகியவற்றை நீக்கும். வழியில்லாமல் தவிக்கும்போது வழி காட்டும் என்றும் கருதப்படுகிறது.

வீரபத்ர வழிபாடு :

💥வீரபத்ர வழிபாடு என்பது செவ்வாய் தோறும் ஓராண்டு காலம் கடைபிடிக்கப்படுகிறது. ஓராண்டு வழிபட முடியாதவர்கள் தை மாத செவ்வாய்க்கிழமையில் மட்டுமாவது இவ்வழிபாட்டினை கடைபிடிக்கலாம். இவ்வழிபாட்டை மேற்கொள்வதால் நீங்காத தடையும் நீங்கும். தீராத பகையும் தீரும். நவகிரக பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.

தை வெள்ளி வழிபாடு :

💥உத்திராண்ய காலத்தின் ஆரம்ப மாதமான தையில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினங்களில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

💥தை மாதத்தின் திருவிழாக்களைக் கொண்டாடி, வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி இறையருள் கிடைக்கப்பெற்று வளமான வாழ்வு வாழ்வோம்.


வியாழன், 16 ஜனவரி, 2020

மாட்டுப் பொங்கல்


மாட்டுப் பொங்கல்:

பொங்கலோ பொங்கல்
மாட்டுப் பொங்கல் ..

உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையில் அந்த உழவனுக்கு உற்ற துணையாக விளங்கும் மாடுகளைக் கவனிக்காமல் விடலாமோ? அதற்காகத்தான் மாட்டுப் பொங்கல்.

உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருந்து, வருடமெல்லாம் கடுமையாக உழைத்து, நமது உயர்வுக்கு உழைக்கும் மாடுகளை அன்று நன்கு குளிப்பாட்டப்பட்டு, கொம்புகளில் வர்ணம் பூசி, புதுக் கயிறு கட்டி, பொங்கலிட்டு அதை மாடுகளுக்குப் படைப்பர் விவசாயிகள்.
மாடுகளுக்கு பூஜையும் நடத்தப்படும்.

இதற்கும் ஒரு கதை உண்டு.

சிவபெருமான் தனது வாகனமான பஸவா எனப்படும் நந்தியிடம், நீ பூலோகத்திற்குச் சென்று, மக்களிடம், தினமும் எண்ணெய் குளியல் எடுத்து, மாதம் ஒரு முறை சாப்பிடும்படி கூறு என்று அனுப்பி வைத்தாராம்.

ஆனால் நந்தியோ அதை மாற்றி தினசரி சாப்பிட்டு, மாதம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுக்கும்படி கூறி விட்டதாம்.

இதனால் கோபமடைந்த சிவபெருமான், என் பேச்சை கேட்காத நீ, பூலோகத்திலேயே இருந்து மனிதர்களின் விவசாயப்பணிகளுக்கு உழைத்து அங்கேயே இரு என்று சபித்து விட்டாராம்.
இதனால்தான் காளை மாடுகள், விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அந்த ஐதீக செய்தி கூறுகிறது.

ஜல்லிக்கட்டு:

மாட்டுப் பொங்கலுடன் இணைந்த மற்றொரு விசேஷம் ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறு தழுவுதல். அந்தக் காலத்தில் ஏழு தழுவுதல்என்று அழைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கும் ஒரு தனிப்பெரும் வரலாறு உண்டு.

அந்தக் காலத்தில் கன்னி ஒருவளை மணம் முடிக்க விரும்பும் ஆடவன், ஜல்லிக்கட்டு காளையை அடக்கியாக வேண்டும்.

அப்படிகாளையை அடக்கும் காளைக்குத்தான் தங்களது பெண்களை அந்தக்கால தந்தையர் மணம் முடித்துக் கொடுப்பார்களாம்.

இதற்காகவே வீடுகள் தோறும் காளைகள் வளர்க்கப்படுமாம்.
தமிழர்களின் வீர விளையாட்டுதான் ஜல்லிக்கட்டு. இன்றும், தமிழக கிராமங்களில் எந்த விசேஷம், திருவிழா நடந்தாலும் ஜல்லிக்கட்டுகள் நடத்தப்படுவதைக் காணலாம்.

இனி நம் மாடுகள் எனப்படும் தெய்வம் பற்றி

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன.

 அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை.

இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம் கொண்டிருந்தன.

இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றன.

இவற்றில் இருந்துவரும் கோமயம்(சாணம்), கோமூத்திரம்(கோமியம்), பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு செய்யும் அபிஷேகமே பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது.

இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர்.

செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள்.

இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும்.

காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம். தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம்.

பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம் என்னும் பசுவுலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம்.

பசுவைத் தெய்வமாக வழிபட்டால் கோலோகத்தை அடையும் பாக்கியம் உண்டாகும்.

வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணனின் வாசஸ்தலம். வைகுண்டத்திற்கும் ஊர்த்தவ பாகத்தில் விளங்குவது விளங்குவது கோலோகம்.

இந்து மதத்தைப் பொறுத்தவரை பசு தெய்வமாகவே வணங்கப்படுகிறது.

பசுவின் சிறுநீரும் (கோமியம்) மருத்துவ குணம் மிக்கதாகவே இருக்கிறது

பசுவின் சாணத்தை தலையில் சுமந்து சென்று கொட்டுவது, பசுவின் தொழுவத்தை தூய்மைப்படுத்துவது உள்ளிட்டவை சிவனுக்கு தொண்டாற்றுவதற்கு சமமானது என இந்து மத நூல்கள் கூறுகின்றன.

 பசுவின் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தெய்வங்கள், தேவர்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

பசுவின் கொம்புகளின் அடியில் - பிரம்மன், திருமால்

கொம்புகளின் நுனியில் - கோதாவரி முதலிய புண்ணிய தீர்த்தங்கள்,சராசை உயிர் வர்க்கங்கள்

சிரம் - சிவபெருமான்

நெற்றி நடுவில் - சிவசக்தி

மூக்கு நுனியில் - குமரக் கடவுள்

மூக்கினுள் - வித்தியாதரர்

இரு காதுகளின் நடுவில் - அசுவினி தேவர்

இரு கண்கள் - சந்திரர், சூரியர்

பற்கள் - வாயு தேவர்

ஒளியுள்ள நாவில் - வருண பகவான்

ஓங்காரமுடைய நெஞ்சில் - கலைமகள்

மணித்தலம் - இமயனும் இயக்கர்களும்

உதட்டில் - உதயாத்தமன சந்தி தேவதைகள்

கழுத்தில் - இந்திரன்

முரிப்பில் - பன்னிரு ஆரியர்கள்

மார்பில் - சாத்திய தேவர்கள்

நான்கு கால்களில் - அனிலன் எனும் வாயு

முழந்தாள்களில் - மருத்துவர்

குளம்பு நுனியில் - சர்ப்பர்கள்

குளம்பின் நடுவில் - கந்தவர்கள்

குளம்பிம் மேல் இடத்தில் - அரம்பை மாதர்

முதுகில் - உருத்திரர்

சந்திகள் தோறும் - எட்டு வசுக்கள்

அரைப் பரப்பில் - பிதிர் தேவதைகள்

யோனியில் - ஏழு மாதர்கள்

குதத்தில் - இலக்குமி தேவி

வாயில் - சர்ப்பரசர்கள்

வாலின் முடியில் - ஆத்திகன்

மூத்திரத்தில் - ஆகாய கங்கை

சாணத்தில் - யமுனை நதி

ரோமங்களில் - மகாமுனிவர்கள்

வயிற்றில் - பூமாதேவி

மடிக்காம்பில் - சகல சமுத்திரங்கள்

சடாத்களியில் - காருக பத்தியம்

இதயத்தில் - ஆசுவனீயம்

முகத்தில் - தட்சிணாக்கினி

எலும்பிலும், சுக்கிலத்திலும் - யாகத் தொழில் முழுவதும்

எல்லா அங்கங்கள் தோறும் - கலங்கா நிறையுடைய கற்புடைய மாதர்கள் வாழ்கிறார்கள்.

ஸ்ரீ காமதேனு பற்றி

பசுக்களின் தாய் காமதேனு ஆகும்.

அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடையும் போது பல்வேறு தெய்வங்கள் பாற்கடலில் இருந்து கிடைத்தன,  கற்பக விருட்சம் போல கேட்டதை தருகின்ற காமதேனுவும் அப்போது தோன்றியது.

காமதேனு பெண்ணின் தலையும், மார்பும், பசுவின் உடலும், மயில் தோகையும் இணைந்து தோற்யமளித்தது.

இதற்கு நந்தினி, பட்டி என இரு மகள்கள் உண்டு.

சிவன், முருகன், விநாயகன், பெருமாள்ஆகியோருக்கு வாகனமாக காமதேனு உள்ளது

ஸ்ரீ நந்தி தேவர் பற்றி

உழவர்களுக்கு உற்ற தோழனான பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப் பொங்கல் அன்று ஸ்ரீ சிவபெருமானின் வாகனமான ஸ்ரீ நந்தி தேவரை பற்றி

சைவசமயத்தின் முதல் குரு.
சிவபெருமானின் வாகனம்
திருநந்தி தேவர்ஆவார்.

ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும்

நந்தியின் நிறம் வெள்ளை. வெண்மை தூய்மையைக் குறிப்பதாகும்.

அறமாகிய தர்மத்தின் நிறமும் வெண்மையே. நந்தி தூய்மையும் ஆண்மையும் நிறைந்தது.

சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது ரிஷபம் வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். தருமதேவதை, சிவபெருமானிடம் தன்னை வாகனமாக ஏற்கும்படி கூறியது.

அவ்வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான், ஒவ்வொரு யுகத்திலும் நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று என்ற பாதங்களால் நீ நடக்க வேண்டும். நானே உனக்கு உயிராய் இருந்து உன்னை நடத்துவதால் நம்மை வணங்குவோர் செய்யும் பாவங்கள் கூட அறமாக மாறும் என்று வரமருளினார் சிவபெருமான்.

சிவாலயங்களில் உள்ள நந்திதேவர் மூன்று கால்களை மடக்கி ஒரு காலை மட்டும் நிமர்த்தியுள்ளதை நாம் காண முடியும். கலியுகத்தில் ஒரு காலால் நடக்க வேண்டும் என்ற சிவ பெருமானின் ஆணைக் கேற்பவே அவ்வாறு உள்ளது.

சிவன் கோயில் வாசலில் கொடி மரத்தை அடுத்து நந்தி மண்டபம் காணப்படும். பிரதோஷ காலத்தில் இவருக்கே முக்கியத்துவம் தருவர். நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது எனவும் தடை விதிப்பர்

இதற்கு காரணம் உண்டு. இது சிவனின் வாகனம். வாகனம் எதுவாயினும் அது ஜீவா ஆத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மா கருவறையிலுள்ள பரமாத்மாவைக் பார்த்த வண்ணம் உள்ளது. ஜீவாத்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பது தான். அந்த கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்திதேவர் சிவனை நோக்கி இருக்கிறார்.

ஆகவே பக்தர்கள் நந்தியின் குறுக்கே செல்ல கூடாது என்றும் இது கடவுளை அடைய நினைப்பவர்களை தடுக்கும் செயலுக்கு ஒப்பாகும் என்று சொல்வார்கள். மேலும் நந்தீஸ்வரரை வணங்கி அவரது அனுமதி பெற்றே நாம் கோயிலுக்குள் நுழைய வேண்டும். அது மட்டுமல்லது, இறைவனின் முதல்வன் விநாயகர். சிவன் கோயிலில் முதல்வன் நந்தீஸ்வரனே, தயவுசெய்து மூலவருக்கும் நந்திக்கும் இடையே செல்லாதீர்கள்.

நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.

சிவபெருமான்
சிவாகமத்தை நந்தி தேவருக்கு உபதேசித்தார். பின்
உலகத்தவர்களுக்கு நேரடியாகத் அருளியவர் நந்தி தேவரே.

நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.
சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமார், பதஞ்சலி, சிவயோக மாமுனி, வியாக்கிரமர், திருமூலர் ஆகிய 8 பேரும் நந்தி பெருமானின் மாணவர்களாவர்.

சிவபெருமான் நாட்டியக் கலையைப் பிரும்மாவுக்கு கற்றுக் கொடுக்க அம்முறையை அறிந்த நந்தி பரத முனிவருக்குப் போதித்தார் என்று அபிநய தர்ப்பணம் கூறுகிறது.

காமசாஸ்திரத்தை தோற்றுவித்தவரும் நந்திகேசுவரரே என்று பல நூல்கள் கூறுகின்றன. நந்தி இயற்றிய பல செய்யுட்களை ''ரதி ரகசியம்'' என்று தம் நூலில் கொக்கோகர் மேற்கோளாகக் காட்டுகிறார்.

நந்தி தேவர் சிவலோகத்தின் தலைமைக் காவலனாக விளங்குவதால் இவர் தேவர்கள் மற்றும் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க வல்ல அதிகாரம் உள்ளது.

நந்திகேசுவரரின் மறு அவதாரமாக அனுமான் கருதப்படுகிறார்.

தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும்.

முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் யோகிகளுக்கும் நந்திதேவரே ஆதி குரு.

நந்தி தேவருக்கு சிவ பெருமானைப் போலவே நெற்றிக்கண்ணும் நான்கு புஜங்களும், கையில் பிரம்பும், உடைவாளும், இருபுஜங்களில் மான் மழுவும் உண்டு. மானும் மழுவும் வேதத்தைக் குறிக்கிறது. மழு வீரத்தை அல்லது ஆண்மையைக் குறிக்கிறது எனவும் கூறுவர்.

சிவ பெருமான் திருநடனம் புரிகையில் நந்திதேவரே மத்தளம் வாசித்ததாக சிவபுராணம் கூறுகிறது.

நந்திதேவருக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் நெய்விளக்கும் வைத்து வழிபட வேண்டும்.

நாட்டியம் பயில்வோரும் இசை பயில்வோரும் நந்தியை வழிபட்டால் அவர்களின் கலைகள் தடையின்றி சிறந்து வளரும்.

பிரபஞ்சத்தில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் பிரதோஷ காலத்தில் பீஜத்தை வந்தடைகின்றன. அதனால் நந்தியின் பீஜத்தைத் தொட்டு வணங்கிய பிறகே சிவதரிசனம் காணவேண்டும். பிறகு வாலைத் தொட்டு வணங்க வேண்டும்.

நந்தி பிறந்த கதை

தருமநெறியில் நின்ற, சாஸ்திர ஞானம் மிகுந்த ஷிலாதர் என்ற முனிவர் ஆயிரம் ஆண்டுகள் சிவனை நோக்கித் தவம் செய்ய சிவபெருமான் அவர் முன் தோன்றி வேண்டிய வரம் யாது? என்று கேட்க, அம்முனிவர் தாயிடம் பிறக்காத ஒரு புதல்வனைத் தனக்கு அருளுமாறு வேண்டினார். சிவன் அவ்வாறே வரம் அளித்தார்.

ஸ்ரீசைலம் மலையில் சிலாதர் வசித்தாக கூறப்படுகிறது. ஷிலாதர் நிலத்தை உழுது கொண்டிருந்தபோது ஓர் அழகிய பையன் ஏரியின் மீது திடீரென்று தோன்றினான். அவனைச் சுற்றி நான்கு பக்கமும் பேரொளி வீசியது. அவன் ஷிலாதரைத் தந்தையே என்று கூப்பிட்டான். அவனுக்கு நந்தி எனப் பெயரிடப்பட்டது. ஷிலாதர் தன்னுடைய காளைகளின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தமையால் நந்தி தேவரும் காளையைப் போலவே பிறந்தார்.

அவன் கல்வி கற்க ஆரம்பித்து சகல சாஸ்திரங்களிலுமா புலமை பெற்வன் ஆனான்.

நந்தி சிவதரிசனம் பெறவும், தான் மரணமின்றி இருக்கவும் சமுத்திர தீர்த்தத்தில் ஓரிடத்தில் கோடி சிவ நாமம் ஜபித்துத் தவம் செய்தான். சிவபெருமான் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க இன்னும் கோடி சிவநாமம் ஜபிக்க ஆயுள் வேண்டும் என்றான். அவ்வாறே வரம் அளித்தார் பரமசிவன்.

இம்மாதிரி மும்முறை நிகழ கடைசியில் சிவபெருமான் தோன்றி சிவநாம ஜபம் போதும். மேலும் தவம் வேண்டாம். உனக்கு மரணம் ஏற்படாது. நீ ஒரு கணநாதன் ஆகி கணங்களுக்கெல்லாம் நாயகனாக விளங்குவாய், என்னை விட்டுப் பிரியாத தோழனாவாய் என்று வரமளித்தார்.

மருத்தின் புதல்வியாகிய சுயாஷாவை நந்திக்குச் சிவபெருமான் மணம் செய்து வைத்தார். நந்தி எப்போதும் சிவ சந்நிதியில் பரமனைப் பிரியாமல் இருந்தார்

இன்று தேய்பிறை அஷ்டமி... பைரவரை வணங்கினால் கோடி புண்ணியம்...!



இன்று தேய்பிறை அஷ்டமி... பைரவரை வணங்கினால் கோடி புண்ணியம்...!
தேய்பிறை அஷ்டமி..!

👉 இன்று தேய்பிறை அஷ்டமி... அனைத்து சிவன் ஆலயங்களிலும் 'ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் பைரவர் காட்சி தருவார். ஸ்ரீ பைரவருக்கு பௌர்ணமிக்கு பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கி நல்லருள் கிட்டும். இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் இவற்றினை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்றலாம்.

👉அஷ்டமி திதியில் மற்றும் பிரதி தமிழ் மாதம் எல்லாத் தேதியிலும் ஆயில்யம், சுவாதி, மிருகசீரிடம் நட்சத்திர தினங்களிலும் பைரவரை வழிபட்டால் உத்தியோகத்தில் மதிப்பும், பதவி உயர்வும் கிட்டும். தொழிலில் லாபம் உண்டாகும்.

👉இந்த நாளில், பைரவருக்கு செவ்வரளி மலர்கள் சார்த்தி வழிபட்டால் மிகுந்த பலன்களை வாரி வழங்குவார் என்பது ஐதீகம். மேலும் பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியமாகப் படைத்து வழிபடுவது, எதிரிகளைத் தகர்க்கும். எதிர்ப்புகளை விலக்கும்.

👉இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். நமக்கு செல்வ வளங்களை வழங்குவதற்கும், நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழ வைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.

ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும்?

👉 அஷ்ட லட்சுமிகளும்... அஷ்டமி அன்றுதான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லா நாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை.

👉அதனால் தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட, அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைக்கும். தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சார்த்தி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும்.

👉ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி, வடைமாலை சார்த்தி, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

👉பரணி நட்சத்திரம் வரக்கூடிய நாள் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில்தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகமாக கிடைக்கும்.

👉பைரவர் வழிபாட்டில் சிறந்தது சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு. இந்த வழிபாடு செய்வதற்கு தேய்பிறை அஷ்டமி உகந்த நாளாகும். குழந்தை இல்லாமல் வருந்தும் தம்பதியர், தொடர்ந்து 6 தேய்பிறை அஷ்டமி நாட்களில் செவ்வரளி மலர்கள் மற்றும் வில்வத்தால் பைரவரை அர்ச்சித்து, நெய் தீபம் ஏற்றி வழிபட, விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.



தை முதல் வெள்ளிக்கிழமை... அம்மனை தரிசிக்க மறந்துவிடாதீர்கள்..!


 தை முதல் வெள்ளிக்கிழமை... அம்மனை தரிசிக்க மறந்துவிடாதீர்கள்..!

தை மாத வெள்ளிக்கிழமை வழிபாடு..!
🙏உத்திராண்ய காலத்தின் ஆரம்ப மாதமான தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அன்றைய தினங்களில் அபிராமி அந்தாதி, சௌந்தர்ய லஹரி உள்ளிட்ட அம்மன் குறித்த பாடல்களைப் பாடி வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.

🙏தை மாத வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உரிய நன்னாள். இந்த நாளில், அம்பாள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், சிறப்பு வழிபாடுகள், விசேஷ பூஜைகள் நடைபெறும். தை மாத வெள்ளிக்கிழமையில், அம்மன் கோவிலுக்குச் சென்று அம்மனை வணங்கினால் நம்மையும், நம் குடும்பத்தையும் தழைக்கச் செய்வார்.

🙏ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பார்கள். அதேபோல் ஒவ்வொரு மாதமும் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் அம்பிகைக்கு உரிய அற்புதமான நாட்கள் ஆகும். அதனால்தான் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மகாசக்தி குடிகொண்டிருக்கும் தலங்களில் பெண்கள் முதலான பக்தர்கள் பலரும் வணங்கி வழிபடுகிறார்கள்.

🙏அந்த வகையில் தை மாத வெள்ளிக்கிழமைகள் அம்பாளுக்கு மிகவும் விசேஷமானவை ஆகும். தை மாத வெள்ளிக்கிழமையான இன்று அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று, அம்பாளை தரிசனம் செய்தால் நன்மைகள்யாவும் கிடைக்கும். முடிந்தால், செந்நிற மலர்கள் சூட்டி வழிபடலாம். செவ்வரளி மாலை சார்த்தி வணங்குவது சிறப்பு.

🙏வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில் அம்மன் கோவிலுக்குச் சென்று அல்லது அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று அங்கே உள்ள துர்க்கை சன்னிதியில் விளக்கேற்றி வழிபடுவது, சகல தோஷங்களும், கண் திருஷ்டியும் நீங்கும்.

🙏எனவே, தை வெள்ளிக்கிழமை நாளில், அம்பாளுக்கு செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக் கொள்ளுங்கள். துர்க்கை சன்னிதியில் நெய் தீபம் அல்லது எள் தீபமேற்றி வழிபடுங்கள். வீட்டில் உள்ள திருஷ்டி முதலானவை நீங்கும். வீட்டில் மங்கள காரியங்கள் விரைவில் நடக்கும்.

🙏தை வெள்ளியில் அம்மனை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும். மேலும், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெண்பொங்கல், கேசரி என ஒவ்வொரு வாரமும் ஏதேனும் பிரசாதத்தை வழங்கி அம்மனை வழிபட்டு வந்தால் தனம், தானியம் பெருகி நிறைவான வாழ்க்கையை வாழலாம்.

திங்கள், 13 ஜனவரி, 2020

போகிப் பண்டிகை.. வீட்டை சுத்தம் செய்து.. காப்புக் கட்டுவது ஏன்?


இன்று போகிப் பண்டிகை.. வீட்டை சுத்தம் செய்து.. காப்புக் கட்டுவது ஏன்?
போகிப்பண்டிகை
காப்பு கட்ட உகந்த நேரம்...!!

காலை 10.30 மணி முதல் 11.00 மணி வரை

நண்பகல் 12.00 மணி முதல் 2.00 மணி வரை

மாலை 04.30 மணி முதல் 06.00 மணி வரை

மாலை 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
போகிப்பண்டிகையில் காப்பு கட்டுவது எதற்காக?



🌟போகிப்பண்டிகை மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் பெயர் போக்கிப் பண்டிகை என்பதாகும். இது பின்னர் மருவி போகிப்பண்டிகை என்றாகி விட்டது.

🌟பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகுப்படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப்பொலிவுடன் காணப்படும். வீட்டின் வாசலில் மாக்கோலமிட்டு வாசலில் மாவிலை கட்டி பூஜைகள் செய்து இறைவனை வழிபடுவர். அதுமட்டுமில்லாது, வீடுகளிலும் அரிசிக்கோலம், பெயிண்டுகளால் கோலமிட்டு அழகுப்படுத்துவது தமிழர் பண்பாடு.

🌟போகி நன்னாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் என்பது வழக்கம். இந்திரனுக்கு போகி என்று வேறு பெயர் உள்ளது. பழங்காலத்தில் இந்திர விழா நடைபெற்றபோது பழைய குப்பைகளை தீமூட்டி வைப்பார்கள்.

🌟போகிப்பண்டிகை காப்பு கட்டும் நாளாக கொண்டாடப்படுகிறது. மாவிலை, வேப்பிலை, பூலாப்பூ, ஆவாரம்பூ இவற்றை வீட்டிலும், கோவிலிலும் கட்டி வைப்பது தான் காப்பு கட்டுதல். இதனால் தீயவைகள் நெருங்காது என்பது ஐதீகம்.

🌟பண்டிகை காலங்களில் வீட்டில் உள்ளவர்களை நோய் அண்டாமல் இருக்க வேண்டும் என எண்ணி, காப்பு கட்டுதல் எனும் பெயரில் ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. அது தற்போது போகி என கொண்டாடப்படுகிறது.

🌟இந்நாளில் மழையால் ஏற்படும் மூட்டைப்பூச்சிகளின் தொல்லையின் காரணமாகவும், விஷப்பூச்சிகளின் தாக்குதலில் இருந்து விடுபடவும், வீட்டின் முகப்புகளிலும் காப்பு கட்டி தோரணங்களாக தொங்கவிடுவார்கள்.

🌟தை மாத அறுவடையின்போது புது தானியங்கள் வந்தவுடன் பழைய தானியங்களை வெளியே எடுத்துவிட்டு பூலாப்பூ, ஆவாரம்பூ, வேப்பிலை, மஞ்சள் போன்றவற்றை தரையில் பரப்பி அதன்மேல் தானியங்களைக் கொட்டி வைப்பார்கள். இதன்மூலம், புதிய தானியங்கள் கெட்டுப் போகாமல் இருக்க காப்பு கட்டு உதவுகிறது.



தை மாத சிறப்புத் தொகுப்பு இல்லங்கள் நிறையும் இதயங்கள் பூரிக்கும்!


தை மாத சிறப்புத் தொகுப்பு
இல்லங்கள் நிறையும் இதயங்கள் பூரிக்கும்!


உலகில் உள்ள நாடுகளில் எந்த நாட்டுக்கும் இல்லாத பெருமை பாரத நாட்டுக்கு மட் டுமே இருக்கிறது. அது, உலக நாடுகள் அனைத்துமே பாரத நாட்டை ‘ஆன்மிக பூமி’ என்று ஒப்புக் கொண்டிருப்பதுதான்!
வேதங்களும் இதிகாச- புராணங் களும் தழைத்து ஓங்கும் இங்கு, ஆறு வகையான வழிபாடுகள் இருக்கின்றன. அவை: சௌரம் (சூரிய வழிபாடு), சைவம் (சிவ வழி பாடு), சாக்தம் (சக்தி வழிபாடு), கௌமாரம் (முருகன் வழிபாடு), காணாபத்யம் (கணபதி வழிபாடு), வைஷ்ணவம் (விஷ்ணு வழிபாடு).

இவற்றுள் ஏதாவது ஒன்றைப் பின்பற்றி, ஏக (ஒரே) தெய்வத்தை வழிபடுவோர், மற்ற தெய்வங்களை வழிபட மாட்டார்கள். ஆனாலும் விதிவிலக்காக அனைவரும் ஏற்றுக் கொண்டு வழிபடும் ஒரே தெய்வம் - சூரியன். நாம் நேரில் காணக்கூடிய ஒரே தெய்வம் சூரியன்.

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த சூரியக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக நாம் நடத்தும் வழிபாடே பொங்கல் திருநாள் எனும் பண்டிகை.

சூரியனைப் பற்றிப் புகழாத ஞான நூல்களே இல்லை. ஆம், நம் முன்னோர்கள் சூரிய னைப் பற்றியும் சூரியனின் சக்தியைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்ததுடன், தாங்கள் உணர்ந்து அனுபவித்ததை, ஞான நூல்கள் மூலம் நமக்கு வழங்கியும் இருக்கிறார்கள்.

வாருங்கள்... அதோ, சூரியனின் பயணம் தொடர்கிறது. அதைக் கவனிப்போம்.

உத்தராயணம்!

சூரியன், தன்னுடைய பாதையில் மகர ராசியில் பிரவேசிப்பது ‘மகர ரவி’ எனப்படும். அதுவே உத்தரா யண புண்ணிய காலம். உத்தர அயனம் என்றால், வடக்குப்புற வழி என்று பொருள்.
சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கே மறைகிறான் என்று சொன்னாலும், தட்சிண அயனம் என் னும் காலத்தில் சற்றுத் தென்புறமாகவும், உத்தர அயன காலத்தில் சற்று வடக்குப் புறமாக வும் சூரியனின் சஞ்சாரம் இருக் கும்.

தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி எனும் ஆறு மாதங்களும் உத்தராயண புண்ணிய காலம் என்றும் தேவர்களின் பகல் காலம் என்றும் சொல்லப்படும். மங் கள கரமான காரியங்களைச் செய்ய உத்தராயணமே சிறந்த காலம். இறப்பது கூட உத்தராயணத்தில் நிகழ்ந்தால் நற்கதி கிடைக்கும். எனவேதான், தட்சிணாயண காலத்தில் (பாரதப்போர் நிகழ்ந்தபோது) அடிபட் டுக் கீழே விழுந்த பீஷ்மர், தான் இறப்பதற்காக உத்தராயண புண் ணிய காலம் வரும் வரை காத்திருந்து உயிர் நீத்தார்.

உத்தராயண புண் ணிய காலம் தை மாதம் தொடங்குகிறது. தை மாதப் பிறப்பு ‘பொங்கல்’ திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் திருநாள் நான்கு நாள் விழாவாகக் கொண்டாடப் படுகிறது. அவை: போகி, பொங்கல், மாட்டுப் பொங் கல், காணும் பொங்கல்.


போகிப் பண்டிகை: பொங்கலன்று வரக் கூடிய சூரிய பூஜையையும், அதன் மங்கலங்களையும் வரவேற் கும் முகமாக போகி, முதல் நாளன்று (மார்கழி மாதக் கடைசி நாளன்று) கொண்டாடப்படுகிறது.

உதவாத பழைய பொருட்களை எல்லாம் தீயில் இட்டுப் பொசுக்கி, வீட்டைத் தூய்மை செய்து வெள்ளை அடிப்போம். நம்மை வாழ விடாத, நமக்கு உதவாத, கெடுதல் செய்யக் கூடிய தீய குணங்களை எல்லாம், தூய்மை யான அறிவு என்னும் ஞானத்தீயில் இட்டுப் பொசுக்கி, உள்ளத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இதன் உட்பொருள். தீயவற்றைப் போக்கு வதால், இந்த பண்டிகை, ‘போக்கி’ எனப்பட்டு, ‘போகி’ என மருவி வழங்கப்படுகிறது.

போகிப் பண்டிகை வட நாட்டிலும் கொண்டாடப்படு கிறது. அங்கே இந்திரனைப் போற் றும் முகமாக இதை ‘இந்திர விழா’ என்று கொண்டாடுகிறார்கள். இந்திரனுக்குப் ‘போகி’ என்ற பெயரும் உண்டு. அதனால் அங்கே இந்திர விழா, போகிப் பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது. ‘லோரி கொளுத்துவது’ என்ற பெயரில் (நம் தமிழ்நாட்டைப் போலவே) கட்டைகளைப் போட்டு நெருப்பு மூட்டுவதும் உண்டு.  (மார்கழி மாதத்தின் சிறப்புகளை விவரிக்கும் சக்தி விகடன் 15.12.2005 இணைப்பில் போகிப் பண்டிகையைப் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.)

பொங்கல்: உழவுத் தொழிலின் மேன்மையை உலகுக்கு உணர்த்து வது பொங்கல் பண்டிகை. தை மாதம் தொடங்குவதற்குள் அறுவடை எல்லாம் அநேகமாக முடிந்துவிடும். அறுவடை ஆன பொருட்களை வைத்து, அனைத்து உயிர்களும் வாழ அருள் புரியும் பிரத்தியட்ச தெய்வமான சூரியனை வழிபடுவதே பொங்கலின் அடிப் படைக் கோட்பாடு.



சூரிய பூஜை; காலையில் எழுந்த தும் நீராடி, அதன் பிறகு பொங்கல் வைக்க வேண்டும். பொங்கல் அன்று தலைக்குக் குளிக்க வேண் டும். எண்ணெய் தேய்த்துக் குளிக் கக் கூடாது.

புது பொங்கல் பானையைக் கிழக்குப் பக்கமாக வைத்து, அதில் கிழங்குகளுடன் கூடிய மஞ்சள் இலை, இஞ்சி இலை ஆகியவற்றைக் கட்டி வைக்க வேண்டும். பொங்கல் பானையில் ஈரமான அரிசி மாவினால் சூரிய- சந்திர வடிவங்களை வரைய வேண்டும். சிலர் அடுப்பைக் கூடப் புதிதாக வைப்பார்கள்.

பொங்கல் பொங்கி வழியும் போது, ‘‘பொங்கலோ பொங்கல்!’’ என்று குரலெடுத்துக் கூவுவார்கள். சில இடங்களில் பொங்கல் பொங்கி வழியும் திசையை வைத்து, ‘நல்லது நடக்குமா? கெட்டது நடக்குமா?’ என்று தீர்மானிப்பார்கள். அது தவறு. அவ்வாறு செய்யக் கூடாது! சமையல் முடிந்ததும், நைவேத்தி யப் பொருட்களையும் வைத்து சூரிய பூஜை செய்ய வேண்டும்.

சுருக்கமாக கணபதி பூஜையை முடித்துக் கொண்டு அதன் பிறகே சூரிய பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்ய வேண்டிய இடத்தில் (திறந்த வெளியில்) அரிசி மாவால் அழகாகக் கோலமிட்டு, கோலத்துக்கு வடக்குப் பக்கம் சூரியனையும், தெற்குப் பக்கம் சந்திரனையும் வரைந்து வைத்து (கோலம் போட்டும்) பூஜை செய்ய வேண்டும்.

ஒரு தலைவாழை இலை யில், சமைத்து வைத்ததை எல்லாம் போட்டுப் பிசைந்து, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் போடும் வழக்கமும் உண்டு. அப் போதும் ‘பொங்கலோ பொங்கல்’ என்று கூவுவார்கள்.

பொங்கல் அன்று - பொங்கல் செய்த பானையையோ, சாதம் வடித்த பாத்திரத்தையோ காலி செய்யக் கூடாது!


கணுப் பண்டிகை: பொங்கலுக்கு மறுநாள் செய்யப்படும் ஒரு விசேஷ நிகழ்ச்சி இது. பெண்களுக்கு உரியது. பெண்கள், பொங்கல் பானையில் கட்டி வைத்த மஞ்சள் கிழங்கை எடுத்து, வயதில் முதிர்ந்த ஐந்து சுமங்கலிகளிடம் கொடுத்து, கல்லில் இழைத்து தங்கள் நெற்றியில் தீற்றிக் கொள்வார்கள். இல்லாதபட்சத்தில் கணவனிடமே மஞ் சளைத் தந்து தங்களின் நெற்றியில் தீற்றச் செய்வார்கள்.

கணுப்பிடி வைக்கும் முறை: இரண்டு மஞ்சள் இலைகள் (அல் லது) வாழை இலைகளை, நுனி கிழக்கு முகமாக இருக்கும்படி வைத்து, நதிக்கரையிலோ, திறந்த வெளியிலோ (மொட்டை மாடியிலோ) கணுப்பிடி வைப் பார்கள்.

கணுப்பிடி வைக்கும் இடத்தைக் கோலமிட்டு, செம்மண் பூசி, அழகு செய்வார்கள். முதல் நாள் (மீதமிருக்கும்) சாதத்தில் மஞ்சள் குங்குமம் கலந்து, மஞ்சள் சாதம், வெள்ளை சாதம், சிவப்பு சாதம் என்று தனித்தனியே தயார் செய்து கொள்வார்கள். சர்க்கரைப் பொங்கலை பழுப்பு நிற சாதமாக எடுத்து வைத்துக் கொள்வார்கள்.

ஒவ்வொரு வகை சாதத்தையும் ஏழு அல்லது ஒன்பது என ஒற்றைப்படை எண்ணிக்கையில் வரும்படியாக, இலைகளில் மூன்று வரிசைகளாக வைப்பார்கள். இவ்வாறு வைத்து முடித்ததும் தீபம் ஏற்றப்படும்.

வெற்றிலை-பாக்கு,பழம்,தேங் காய், கரும்பு (துண்டு களாக), மஞ்சள் அட்சதை (முனை முறியாத அரிசி), பூக் கள் ஆகியவை ஒரு தட்டிலும், மற்றொரு தட்டில் ஆரத்தியும் (மஞ்சள், சுண்ணாம்பு, குங்குமம் கலந்து கரைத்த நீர்) தயா ராக வைக்கப்பட்டிருக்கும்.

கணுப்பிடி வைக்கும் விடியற் காலை நேரத்தில் ராகு காலம், எம கண்டம் ஆகியவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.



இனி பூஜை: அட்சதையையும் பூக்களையும் இட்டு (கணுப்பிடியாக வைத்த சாத வகைகளுக்கு), ‘‘கணுப்பிடி வைத்தேன். காக்கைப் பிடி வைத்தேன். காக்கைக்கு எல் லாம் கல்யாணமாம் கல்யாணம்’’ என்று சொல்வார்கள். அதன் பிறகு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, கணுப்பிடி வைத்த இலைகளையும் சூரிய பகவானையும் வணங்கி ஆரத்தி எடுப்பார்கள்.

கணுப்பிடி வைத்த சாதத்தை, நாய்-பூனை போன்றவை எச்சில் பண்ணாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கணுப்பிடி அன்று சமையலில் எலுமிச்சம் சாதம், தேங்காய் சாதம், புளியஞ் சாதம், தயிர் சாதம் முதலான சாத வகைகளும், அவியல் அல்லது கூட்டு, பாயசம், தேங்காய்த் துவையல், அப்பளம் முதலானவையும் இடம்பெறும்.

கணுப்பிடி வைத்த பெண்கள் அன்று இரவு சாப்பிட மாட் டார்கள் என்பது மரபு. இந்த நோன்பு உடன் பிறந்தவர்களின் நன்மைக்காகச் செய்யப்படுகிறது (கணுப்பிடி). ஆதலால், ‘‘உடன்பிறந் தவர்கள் எந்தக் குறையும் இல் லாமல் நன்றாக இருக்க வேண்டும்!’’ என்று வேண் டிக் கொள்வார்கள். இதன் உண்மையை, ‘கார்த்திகை எண்ணெயும் கணுப்பழையதும் கூடப் பிறந்தவர்களுக்கு’ என் னும் பழமொழி விளக்கும்.

கார்த்திகையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், பொங்கல் அன்று சமைத்த சாதத்தை, (பழையதை) மறுநாள் கணுப்பிடியாக வைப்பதும் உடன்பிறந்தவர்களின் நலனுக்காக என்பதே இந்தப் பழமொழியின் விளக்கம்.

பிறந்த வீட்டுச் சீராகப் பெண் களுக்குப் பணமோ, துணியோ பிறந்த வீட்டில் இருந்து வரும். உள் ளூரிலேயே இருப்பவர்கள், தாய் வீட்டுக்குப் போய் மதியம் உணவு உண்பது வழக்கம்.

ஜல்லிக்கட்டு!


பொங்கலை முன் னிட்டு, ஜல்லிக்கட்டு என் னும் வீர விளையாட்டு பெரும்பாலான கிரா மங்களில் நடைபெறு கிறது.
இந்த வீர விளை யாட்டு எதற்காக நடத்தப்படுகிறது? என் பதற்கு நம் முன்னோர்கள் சுவாரஸ்யமான ஒரு கதை சொல்வார்கள்.

தை மாதம் பிறந்தது. பாடுபட்டு உழைத்துப் பலனைக் கண்ட ஓர் உழவர், நெல்லும் கரும்புமாகக் கொண்டு வந்து வீட்டு முற்றத்தில் குவித்தார். துண்டை உதறி முகத்தைத் துடைத்துக் கொண்டு மனைவியை அழைத்தார்.

நெற் குவியலையும் கரும் புக் கட்டுகளையும் காட்டி, ‘‘பார்த்தாயா? எப்படி? எல்லாம் என் உழைப்பால் விளைந்தவை!’’ என்று பெருமிதம் பொங்கக் கூறினார்.

அப்போது அருகில் இருந்த உழவரின் மாடு எதற்காகவோ பலமாகத் தலையை ஆட்டியது.

அதைப் பார்த்த உழவரின் மனைவி, ‘‘ஹுக்கும்! என்னத்தப் பாக்கறது? நீங்க சொல்றத உங்க மாடே ஒப்புக்கல. தலய ஆட்டுது பாருங்க! இவ்வளவும் வந்தது, தனது உழைப்பால்தான்னு மாடு சொல்லுது!’’ என்று பரிகாசம் செய்தாள்.

உழவருக்குக் கோபம் வந்து விட் டது. ‘‘மாட்டுக்கு பலம் அதிகமா? மனிதனுக்கு பலம் அதிகமா? பார்த்து விடுவோம்!’’ என்று சொல்லி, மாட்டுடன் போட்டி போடத் தொடங்கி விட்டார்.

அதுதான் ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டுப் போட்டியாக நடந்து வருகிறது.

‘மாடா? மனிதனா?’ என்று போட்டி துவங்கி விட்டதே தவிர, இன்றுவரை அதற்கு விடை கிடைக்கவில்லை.

காரணம், மாட்டை மனிதன் அடக்கிய நிகழ்ச்சிகளும், மனி தனை மாடு முட்டிக் கொன்ற நிகழ்ச்சிகளும் இன்னும் நடந்து கொண்டுதானே இருக் கின்றன?!


மாட்டுப் பொங்கல்: பல விதங்களிலும் நமக்கு உதவி புரிந்து, நம்மை வாழ வைக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தி, அவற்றைப் பெருமைப் படுத்துவதே மாட்டுப் பொங்கல். மாடுகளைப் பற்றியும், அவற்றைத் துன்புறுத்தக் கூடாது, அவற்றிடம் நன்றியுடன் இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் காரண - காரியங்களுடன் விரிவாகச் சொல்கின்றன நமது நூல்கள்.

பல விதங்களில் மனிதனுக்காக உழைப்பது மாடு. உழவுத் தொழிலுக்கு உதவுவது மாடு. மனிதன் பிறந்த நாள் தொடங்கி அவனது உணவுக்காகப் பால் தருவது மாடு. அவற்றைத் துன்புறுத்தக் கூடாது என்கிறது பின்வரும் பாடல்:

நோவன செய்யன்மின் கொடிவன கேண்மின்
விடுநில மருங்கில் படுபுல் ஆர்ந்து
நெடுநில மருங்கில் மக்கட்கு எல்லாம்
பிறந்த நாள் தொட்டு சிறந்த தன் தீம்பால்
அறந்தறா நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும்

- சிலப்பதிகாரம்

நம் நாட்டு இலக்கியம் சொன் னதைப் பார்த்தோம். இனி, அயல் நாட்டு அறிஞர் சொல்வதைப் பார்க்கலாம்.


‘‘பசுக்களைக் கொல்வது, பெருத்த நஷ்டத்தை உண்டாக்கும்’’ என்று விவரிக்கத் தொடங்கிய ரெவரண்ட் டாக்டர் ஜான் மாரிஸன் என்பவர், ‘‘பசுக்கள், குறைந்தது பதினான்கு அல்லது பதினைந்து ஆண்டுகள் உயிர் வாழும். ஒரு பசு தரும் பால், அதன் கன்றுக்குட்டிகள் வளர்ந்தபின் அவை தரும் பால்- ஆகியவை 15,440 பேருக்கு ஒரு நாளைக்கு உண்டான பாலை வழங்கக் கூடியவை. ஆகையால் பசுக்களைக் கொல்வது பெரும் நஷ்டத்தை உண்டாக்கும் என்பதை உணருங்கள்!’’ என்று வருத்தத்தோடு அறிவுறுத்தி இருக்கிறார்.

மாட்டுப் பொங்கல் அன்று மாடு களைக் குளிப்பாட்டி அவற்றுக்கு சந்தனம்-குங்குமம் வைத்து, மாலை யிட்டு அலங்காரம் செய்து கோ பூஜை செய்வார்கள்.

ஒரு தலைவாழை இலையில் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், கரும்புத் துண்டங்கள், வாழைப் பழங்கள் முதலியவற்றை வைத்து மாடுகளுக்கு விசேஷ விருந்து படைப் பார்கள்.

தமிழ்நாட்டுக்கே உரித்தான வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டும் ஒன்று. இது, கொல்லேறு தழு வுதல், மஞ்சு விரட்டு எனப் பல பெயர்களில் அழைக்கப் படுகிறது.

‘‘இந்தக் காளையை அடக்கு பவனுக்குத்தான் என் மகள் மாலை யிடுவாள்!’’ என்று பெண்ணைப் பெற்றவர் சொல்ல, அவர் வீட்டுக் காளை சீறிப் பாய்ந்து கிளம்பும். ஓரளவு அனைவருக்குமே தெரிந்தது தான் இது.



விவரம் தெரிந்த நாள் முதல் பெண் ஒருத்தி, ஒரு காளைக் கன்றைச் செல்லமாக வளர்த்து வருவாள். அவளுக்குத் திருமணப் பருவம் வரும்போது, கன்று வளர்ந்து காளை மாடாக கொழுகொழுவென்று இருக்கும். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர், அந்தக் காளை மாட்டை அடக்கி அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இந்தத் தகவலை, தூநிற வெள்ளை அடர்ந்தாற்கு உரியள் இப் பூவைப் புது மலராள் எனச் சிலப்பதிகாரம் சொல்கிறது.

ஜல்லிக்கட்டு என்பது வெறும் வீர விளையாட்டு மட்டுமல்ல. பார்ப்பவர் களுக்குக்கூட உற்சாகத் தையும் மன ஊக்கத்தையும் தரும் நிகழ்ச்சி அது.

ஜல்லிக்கட்டில் கலந்து கொள் ளும் மாடுகளை முன்னாலேயே தயார் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள், கூராக இருந்தாலும், இன்னும் அழகாகச் சீவி எண் ணெய் தடவிப் பக்குவம் செய் யப்பட்டு வண்ணம் பூசப்படும். கொம்புகளில் கூரான கொப்பிகள் பொருத்தப்படும். இந்தக் கொப்பி கள் அவரவர் வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு என்னும் ஏதாவது ஓர் உலோகத்தில் அமைந்து இருக்கும்.

மாடுகளுக்குச் சந்தனம் பூசி, மருக்கொழுந்து மாலை போட்டு, கொம்பில் சிறு (புது) துண்டைச் சுற்றி வைப்பார்கள். கழுத்தில் புதிய ஒரு சிவப்புத் துணியைக் கட்டி விடுவார்கள். அவற்றில் பணத்தையோ அல்லது பொரு ளையோ வைத்துக் கட்டுவதும் உண்டு.

பளபளவென்ற கொம்புகளுடனும் கழுத்தில் மாலை களுமாகக் கம்பீரத்து டன் ஜல்லிக்கட்டுக் காளைகள் போராட் டக் களத்தில் நுழை யும். ஜல்லிக்கட்டு நடை பெறும் இடத்தின் நுழைவாயில் ‘வாடி வாசல்’ எனப்படும்.

அங்கே ஊர்ப் பெரியவரான நாட் டாண்மைக்காரர் மாடுகளுக்கு மாலை போட்டு மரியாதை செய்வார். அதற்கு முன், ஊரில் உள்ள அம்மன் கோயில்களில் எல்லாம் ‘செவ்வாய் சார்த்துதல்’ என்ற பெயரில் பூஜை நடக்கும்.

மாடுகளுக்கு மாலை, மரியாதை முடிந்தவுடன் அவற்றின் கயிறுகள் அவிழ்க்கப்பட்டுக் களத்தில் இறக்கப்படும். முதன்முதலில் களத்தில் நுழைவது கோயில் மாடுதான். அதை யாரும் பிடிக்க மாட்டார்கள்.



பிறகு, நெற்றிப் பட்டயத்தில் பணம், கழுத்தில் பணம், கொம்பில் பணம் என விதவிதமாகக் காளை கள் களத்தில் பாயும்.

ஜல்லிக்கட்டுக் காளைகள் களத்தில் இறங்கியதும் அவற் றுக்கு வேகத்தையும் வெறியையும் ஊட்டுவதற்காகத் தாரை, தப் பட்டை, ஊதுகொம்பு முதலியவை முழங்கும்.

ஒவ்வொரு காளையைப் பற்றிய தகவல்களும் சொல்லப்படும். ‘இது இத்தனை போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறது. வெற்றி பெற்ற போட்டிகள் இத்தனை; இத்தனை பேரைக் குத்திக் கிழித்திருக்கிறது’ போன்ற தகவல்கள் எல்லாம் அதில் இடம்பெறும்.

சீறிப் பாயும் இந்தக் காளைகளின் மீது, வாலிபக் காளைகள் உயிரையும் பொருட்படுத்தாமல் பாய்வார்கள்.

மாடுகளின் கழுத்தில் உள்ள துணியை உருவி எடுக்க முயற்சிப்பார்கள். யார் வெற்றி பெறுவார்கள் என்பது அவரவர் பலத்தையும், நேரத்தை அனுசரித்து இயங்கும் திறமையையும் பொறுத் தது. வாட்டமின்றி வாகாக வளைய வரும் காளைகள், களத்தில் இருக்கும் வாலிபர்களைத் தூக்கிப் பல முறை கொம்பினால் வீசிப் பந்தாடிவிட்டு ஓடும்.

ஓடாமல் ஒரே இடத்தில் இருந்தபடி, ‘வா! வந்து என்னைப் பிடி! பார்க்கிறேன்!’ என்று எதிர் சவால் விட்டுப் பாய்ந்து விரட்டும் காளைகளும் உண்டு. இவற்றுக்கு ‘நின்று குத்திக் காளை’ என்று பெயர்.

காளையை அடக்கி அதன் கொம்பிலோ அல்லது கழுத்திலோ உள்ள துண்டையும் பணத்தையும் எடுத்துவிட்டால், அது காளையை அடக்கிய வீரனுக்கே சொந்தம். பார்வையாளர்களிடம் இருந்தும் பரிசு கிடைக்கும்.

மாடுகளின் திமிலைக் கெட் டியாகப் பிடித்தபடி, குறிப்பிட்ட தூரம் வரை அவற்றுடன் சேர்ந்து ஓடுபவர்கள் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படு வார்கள். தங்கள் கால்கள் தரையில் பட்டும் படாமலும், மாட்டின் மீது உரசியபடியே குறிப்பிட்ட தூரம் ஓடினாலும் அதுவும் வெற்றி பெற்றதாகவே கருதப்படும்.

யாராலும் அடக்க முடியாமல் களத்தையே கலக்கி வெற்றிபெறும் காளைகள், சில நேரங்களில் அங்கேயே ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுவதும் உண்டு.


மாட்டுப்பொங்கல்-2: இது வரை பார்த்து வந்த மாட்டுப் பொங்கல் வைபவத்தில் இருந்து மாறுபட்டது இது. பல பேருக்குத் தெரியாது. நாம் தெரிந்து கொள்வதற்காகவும் அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காகவும் விசேஷமான இந்த ‘மாட் டுப் பொங்கல்’ இங்கே படைக்கப்படுகிறது.

மாட்டுப் பொங்கல் அன்று மாலையில், ஊரி லுள்ள மாடுகள் எல்லாம் ஒரு மந்தையில் கூடும்.

ஊரில் இருக்கும் பெரியவர்கள் வீடு வீடாகப் போய், ஒரு வீடு கூட விட்டுப்போகாமல் வெல்லம், அரிசி, தேங்காய், தயிர், பழம், சீயக்காய், எண்ணெய் முதலானவற்றை வாங்கிச் சேகரித்துக் கொண்டு வருவார்கள்.

சேகரிக்கப்பட்ட அரிசியை (மந்தையிலேயே ஓர் ஒதுக்குப் புறமாக) மிச்சம் மீதி வைக்காமல், பிரமாண்டமான பாத்திரங்களில் போட்டுப் பொங்கல் செய்வார் கள்.

மந்தையின் மேற்புறத்தில் மண் ணால் செய்யப்பட்ட பெரும் மேடை ஒன்று இருக்கும். அதில் வெள்ளைத் துணியை விரித்து அதன் மேல் நீள நீளமான, நுனியுடன் கூடிய வாழை இலைகளை வரிசையாக விரித்து வைப்பார்கள். அந்த வாழை இலை களில், அங்கேயே தயார் செய்யப்பட்ட பொங்கலைப் பரப்பி வைப்பார்கள்.

பிறகு தயிர், உரித்த வாழைப்பழங்கள், தேங்காய் பத்தைகள், வெல்லம் ஆகியவற்றைப் பொங்கலுடன் சேர்த்துக் கலக்கு வார்கள். கலவையான அந்தப் பொங்கல் ஒரு மலையாகக் குவிக்கப்பட்டு, சிவலிங்கம் போல் காட்சி தரும். இந்தச் செயல்களை எல்லாம் வாயில் துணி கட்டி மறைத்தபடியே செய்வார்கள். தவறிப் போய் வாயில் இருந்து எச்சில் தெறித்து, புனிதம் கெட்டுப் போகக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்யப்படுகிறது.


பொங்கல் குவிக்கப்பட்ட அந்தப் பெரிய மண்மேடைக்குத் ‘திட்டாணி’ என்று பெயர். அதற்கு நேராக, கீழ்த் திசையில் ‘கள்ளி வட்டம்’ என்பது இருக்கும்.

அங்கே கிளை கிளையாகப் படர்ந்திருக்கும் திருகுக் கள்ளியை ஒடித்துக் கொண்டு வந்து, அவற்றில்- எண்ணெயில் நனைக்கப்பட்ட ஏராளமான திரிகளைச் சர விளக்குகளைப் போலச் செருகி வைத்திருப்பார்கள். இங்கே ஒரு பெரிய சட்டியில் சாம்பிராணியும் புகைந்து கொண்டிருக்கும். இவற் றுக்குப் பாதுகாவலாக ‘திட்டாணிக் காவலர்’ என்று ஒருவர் அங்கேயே அமர்ந்து இருப்பார்.

பொங்கல் கொட்டி வைத்திருக் கும் பெரிய மண் மேடைக்கும் (சற்று முன் பார்த்த) கள்ளி வட்டத் துக்கும் நடுவே மாடுகள் எல்லாம் கொண்டு வரப்படும்.

‘வரவேண்டியவர்கள் எல்லாம் வந்தாகி விட்டதா?’ என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு ‘மாட் டுப் பொங்கல்’ வைபவம் ஆரம்ப மாகும்.

முதலில் மாடுகளுக்கு முடி (சவரம்) எடுப்பார்கள். அதாவது மாடுகளின் வாலில் இருந்து சிறி தளவு முடி, நறுக்கி எடுக்கப்படும். அதன்பின் அவற் றின் முதுகில் கொஞ்சம் கொஞ்சம் எண்ணெய் தடவி, சீயக்காய்த் தூளைத் தேய்ப்பார்கள். பிறகு தண்ணீர் நிரம்பிய சொம்புகளில் மாவிலையை நனைத்து மாடுகளை நோக்கி வீசுவார்கள். இது குளிப்பாட்டும் நிகழ்ச்சி.

இது முடிந்ததும்... வாயைக் கட்டியபடி இருக்கும் பெரியவர் ஒருவர், மலை போன்ற பொங்கல் குவியலில் இருந்து பொங்கலை எடுத்து, அங்குள்ளவர்களிடம் கொடுப்பார். வாங்கியவர்கள் அதை மாடுகளுக்கு ஊட்டுவார்கள். பிறகு, ‘‘மாலை கட்டலாம்’’ என அறிவிப்பு வரும். மாவிலை, ஆவாரம் கொத்து, பிரண்டை, பீளைப் பழம் ஆகியவற்றைக் கோரையில் மாலையாகக் கட்டி மாடுகளுக்கு அணிவிப்பார்கள்.




வண்ண மயமான நெட்டி மாலைகளும் போடப்படும். கற் றாழை நாரால் ஆன வண்ணக் குஞ்சங்களை சிறுவர்கள் மாடுகளின் கொம்புகள், கழுத்து, கால்கள் ஆகியவற்றில் கட்டுவார்கள். அவ் வப்போது ஆரவாரம் எழும்.

அடுத்ததாக, அங்கிருப்பவர்கள் வரிசையாக நிற்க, ஒருவர் கையில் தீச்சட்டி இருக்கும். மற்றொருவர் சேகண்டியை (வெண்கலத்தால் ஆன தட்டையான, நூல் கட்டப் பட்ட இசைக் கருவி) பிடித்து இருப்பார். இன்னொருவர் கையில் சங்கு இருக்கும். ஒருவர் நீர் நிறைந்த சொம்பில் மாவிலையைப் போட்டு வைத்திருப்பார். நல்ல குரல் வளம் மிக்க ஒருவர் ‘மாட்டுப் பொங்கலை’ வாழ்த்திப் பாடுவார். அதை அப் படியே பின்பற்றி மற்றவர்கள் எல்லோரும் சேர்ந்திசையாகப் பாடுவார்கள்.

வரிசையாக அணி வகுத்து நின்றவர்கள் மாட்டு மந்தையைச் சுற்றி வட்டமாக வலம் வரு வார்கள். சேகண்டி ஒலி எழுப்பும். சங்கு முழங்கும். தண்ணீர்ச் சொம்பில் இருந்து மாவிலையால் தண்ணீர் எடுத்து, மாடுகளின் மீது தெளிக் கப்படும்.

இந்த ஊர்வலம்- கள்ளிவட்டம், பொங்கல் கொட்டி வைக்கப் பட்டிருந்த பெரிய திட்டாணி என்னும் பள்ளயம் ஆகியவற்றை மூன்று முறை வலம் வரும்.

அப்போது ‘பொங்கலோ பொங்கல்’ எனக் கூவுவார்கள்.

இந்தச் சத்தம் வீட்டில் இருக்கும் பெண்களின் காதுகளில் விழுந் ததும், (இந்த வைப வத்தின்போது பெண்கள் மந்தைக்கு வருவதில்லை) அவர்கள் பலகாரங்கள் பலவற்றுடன் கூடிய படையலை, வீட்டில் தெய்வத்துக்குப் படைப்பார்கள். இது நடைபெறும்போது இரவு மணி இரண்டு, மூன்று கூட ஆக லாம். அதுவரை பெண்கள் தூங்க மாட்டார்கள்.

இதன் பிறகே மாடுகள் மந்தையில் இருந்து வீடு திரும்பும். அப்போதும், மந்தையில் இருந்து அனைவரும் வீடு திரும்ப மாட்டார்கள். வீட்டுக்கு ஒருவர் என்று, மந் தையிலேயே இருப்பார்கள். ஒவ் வொருவர் கையிலும் ஒரு பாத்திரம் இருக்கும்.

திட்டாணியில் இருக்கும் பொங்கல் கவளங்களாக உருட்டப்பட்டு, பாத்திரம் வைத்திருப்பவர்களுக்கு ஒவ் வொரு கவளம் தரப்படும். அனைவருக்கும் தந்த பிறகு மீதி இருக்கும் பொங்கலை அங்கு இருக்கும் மற்றவர்களுக்கும் சிறு சிறு உருண்டைகளாகக் கொடுப் பார்கள்.

‘பெருமாள் சோறு’ என்று சொல்லி, அதை எல்லோரும் அங்கேயே சாப்பிடுவார்கள். மந்தையில் இருந்து, விழா முடிந்து மாடுகள் வீடு திரும்பும்போது, பெண்கள் தங்கள் வீட்டின் எல் லையில் சிறிதளவு வைக்கோலைப் போட்டுக் கொளுத்தி, ஓர் உலக்கையையும் குறுக்காகப் போட்டு வைப்பார்கள். மாட்டுக்கு திருஷ்டி படக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. வியாதிகள் வராமல் இருக்கவும், நல்ல விளைச்சல் கிட்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் இவ்வாறு செய்யப்படுகிறது. நமக்கெல்லாம் நன்கு பழக்கப்பட்ட மாட்டுப் பொங்கலில் இருந்து மாறு பட்ட ‘மாட்டுப் பொங்கல் விழா’ இது!

காணும் பொங்கல்

தை
மாதம் மூன்றா வது நாளன்று ‘கன் னிப் பொங்கல்’ கொண் டாடப்படும். இதை ‘கன்றுப் பொங்கல்’ என் றும் சொல்வார்கள். இரண்டுக்கும் பெயர்க் காரணங்கள் உண்டு.
கல்யாணம் ஆகாத பெண்களுக்கு உரியது இது. ஆகையால் இது ‘கன்னிப் பொங்கல்’.

கல்யாணம் ஆகாத ஆண்களுக்கு(ம்) உரியது இது. ஆதலால் இது ‘கன்றுப் பொங்கல்’ எனவும் அழைக்கப்படுகிறது.


கல்யாணம் ஆகாத இளம்வயதுப் பெண்கள் எல்லோரும், வெள்ளைத் துணியால் மூடப்பெற்ற தாம்பாளங்களை எடுத்துக் கொண்டு மாலை நேரத்தில் ஓரிடத்தில் கூடுவார்கள். ஒவ்வொருவர் தாம் பாளத்திலும் கரும்புத் துண்டு, கற்கண்டு, பூ, பச்சரிசி, சர்க்கரை, வாழைப்பழம் ஆகியவை இருக்கும்.
எல்லோரும் கும்மியடித்துப் பாடல்களைப் பாடியபடியே ஊரில் உள்ள ஆற்றங்கரை, குளக் கரை, ஏரிக்கரை (ஏதாவது ஒன்றை) நோக்கிச் செல்வார்கள். பக்க வாத்தியமாக மேளமும் போகும்.

தண்ணீர்க் கரையை அடைந்த வுடன் அங்கே ஒரு சிறிய மண் மேடை அமைப்பார்கள். இது திட்டாணி எனப்படும். கொண்டு வரப்பட்ட மங்கலப் பொருட்கள் அடங்கிய தாம்பாளங்களை, அந்த மண் மேடையின் மீது வரிசை யாக அடுக்கி வைப்பார்கள்.

தாம்பாளங்கள் கொண்ட அந்த மண் மேடையைச் சுற்றி வட்டமாக நின்றபடி கும்மியடித்துப் பாட்டுப் பாடுவார்கள். பாடல்கள் பாடி முடிந்ததும், அவரவர் தாம்பாளங்களில் இருக்கும் பச்சரிசியில் சர்க்கரையைச் சேர்த்து, நீர் வார்த்துக் கலந்து வைப்பார்கள்.

கற்பூரம் ஏற்றிக் கடவுள் வழிபாடு செய்வார்கள். ‘‘சீக்கி ரம் திருமணம் நடக்க வேண்டும்’’ என்று வேண்டிக் கொள்வார்கள். அவர்களுக்கு அந்த வருடத்திலேயே கல்யாணம் நடந்து விடும் என்றும் சொல்வார்கள்.

சர்க்கரை கலந்த பச்சரிசி, அங்கு வேடிக்கை பார்க்க வந்திருக்கும் எல்லோருக்கும் விநியோகம் செய்யப்படும்.

கன்னிப் பெண்கள் கொண்டாடிய ‘கன்னி பொங்கலை’ பார்த்தோம். ‘கன்றுப் பொங்கல்’ என்றால் என்ன, தெரியுமா?

கட்டிளங் காளை ஒருவன் காளையை அடக்கித் தன் வீரத்தை வெளிப்படுத்துவான். காளையைக் கன்று என்று கூறுவதும் உண்டு. இதை முன்னிட்டு இவ்விழா ‘கன்றுப் பொங்கல்’ எனக் கூறப் படுகிறது.


கன்னிப் பொங்கல் - 2: கன்னிப் பொங்கலைப் பற்றி விரிவாகவே பார்த்தோம். சற்றே வித்தியாசமான கன் னிப் பொங்கலும் உண்டு. அது:

இளம் வயதுப் பெண்கள் கூட்டமாகக் கூடிக் கும்மியடித்துப் பாட்டுப் பாடியபடி ஆற்றங்கரைக்குச் செல்வார்கள். அங்கே, இஷ்டப்படி ஆடல், பாடல் என விளை யாடி விட்டுக் கூட்டாஞ்சோறு சமைப்பார்கள்.

அதை ஆற்றுக்குப் படைத்துப் பூஜை செய்வார்கள். ஆற்றுக்குக் ‘கன்னி’ என்று பெயரும் உண்டு. ‘வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி’ என்று பெருமை பெற்று, வான் மழை பொய்த்து விட்டாலும் தன்னுடைய ஊற்று நீரால் அனைவரையும் வாழ வைக்கும் ஆற்றை, கன்னி அம்மனாகவே நினைத்துப் பூஜை செய்வார்கள்.

நதிகளுக்கு, நவ கன்னிகைகள் வடிவில்-கங்கை, யமுனை, சரஸ் வதி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, நர்மதா, துங்கபத்ரா, சரயூ என்னும் ஒன்பது திருநாமங்களில் வழிபாடு நடக்கும்.

இந்த நவ கன்னிகைகளின் அழகிய விக்கிரகங்களைக் கும்பகோணத்தில் மகாமகக் குளக்கரையில் இருக்கும் விஸ்வநாதஸ்வாமி கோயிலில் தரிசிக்கலாம்.

வழிபாடு முடிந்ததும் கூட்டாஞ்சோறை அங்கேயே சாப்பிட்டு விட்டுக் குதூகலத்துடன் வீடு திரும்புவார்கள் பெண்கள்.

கன்னிகள், கன்னிக் (ஆற்றங்) கரையில், கன்னியை (ஆற்றை)க் குறித்துச் செய்யும் கன்னிப் பொங் கல் இது.

காணும் பொங்கல்: நெருங்கிய நண் பர்களையும் உறவினர்களையும் பார்த்து, நலம் விசாரித்து சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் பண்டிகை இது.

சென்னை முத லான கடற்கரை உள்ள பகுதிகளில், குடும்பத்துடன் கடற் கரைக்குப் போய்க் கூட் டத்தோடு கூட்டமாக மகிழ்ச்சியோடு பொழு தைக் கழிப்பதும் உண்டு.

இதைவிட விசே ஷமான நிகழ்ச்சி: உழைப் பாளர்களும், இசை மற்றும் நாடகக் கலைஞர்களும், ஜமீன் தார்கள், பிரபுக்கள் முதலான பெருந்தனக்காரர்களைப் போய்ப் பார்ப்பார்கள்.

‘வாழ்நாள் எல்லாம் நமக்காகப் பல விதங்களிலும் உழைப்பவர்கள் இவர்கள்’ என்ற எண் ணத்துடன் வேட்டி, சேலை, அரிசி, பணம் முதலானவற்றைக் கொடுத்து அவர் களை மகிழ்வுறச் செய்வார்கள் பணக்காரர்கள். தெருக்கூத்துக் கலை ஞர்கள் கௌரவிக்கப் படுவார்கள்.

இவ்வாறு அடுத்தவர்கள் மனமும் முகமும் மகிழ்ச்சியில் மலர்வதைக் காண்பதே உண்மையான ‘காணும் பொங்கல்’.

ஸபலா ஏகாதசி



ம்பாவதீ நகர மன்னர் மாஹிஷ்மதனுக்கு ஐந்து பிள்ளை கள். லும்பகன் என்பவன் மூத்த வன்; பாவங்களுக்கு எல்லாம் இருப்பிடம் ஆனவன் அவன். தந்தையின் பெரும்பாலான செல்வத்தை மது, மங்கையரிடம் கொண்ட ஆசைக்காகவே செலவு செய்தான் லும்பகன்.
‘‘தெய்வமாவது ஒன்றாவது? ஸ்வாமிக்குப் பூஜை செய்கிறேன், அது இது என்று அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்!’’ என்று வாய்போன போக்கில் தெய்வத்தையும் அடியார்களையும் திட்டுவதே, லும்பக னின் தினசரி நடவடிக்கைகளில் முக்கியமானதாக இருந்தது.

குடிமக்களை எல்லாம் குறையின்றிக் காத்து வந்த மன் னர், மைந்தனின் நடவடிக்கைகளால் மனம் நொந்தார். வேறு வழியற்ற நிலையில் காவலாளிகளை அழைத்து, ‘‘லும்பகனைக் கொண்டு போய்க் காட்டில் விட்டுவிடுங்கள்!’’ என்று உத்தரவிட்டார் மன்னர்.

காட்டுக்குப் போயும் லும்பகன் திருந்தவில்லை. காட்டில் இருந்த படியே அவ்வப்போது நகரத்துக்குள் நுழைந்து திருட ஆரம்பித்தான். திருடுவதும் தப்புவதும் அவனுக்குக் கைவந்த கலையாகிவிட்டது.

ஒரு நாள்... தன் வழக்கப்படி திருடிக் கொண்டு லும்பகன் திரும்பும் நேரம். காவலர்களிடம் அகப்பட்டுக் கொண்டான். அவனை அடித்துத் துவைத்தார்கள் காவலர்கள்.

‘‘அடிக்காதீர்கள்! அடிக்காதீர் கள்! நான் மாஹிஷ்மத மன்னனின் மகன். என் பெயர் லும்பகன்!’’ எனக் கதறினான். அரசன் மகன் என்பதால் கருணையுடன் லும்பகனை விட்டுவிட்டனர் காவ லர்கள்.

அடிபட்ட லும்பகன் திருந்தி னான். ‘நல்லவேளை! அரசன் மகன் என்பதால் விட்டார்கள். இல்லாவிட்டால்? நம்மைக் கொன் றிருப்பார்கள். இனிமேல் திருடக் கூடாது’ எனத் தீர்மானித்தான்.


மனம் திருந்திய லும்பகன் மரத்தடியிலேயே வசித்தான். காட் டில் கிடைத்த கனிகளையும், கிழங்குகளையும் உணவாகக் கொண்டான்.

அடுத்தவர்களை அல்லல்படுத்தி வாழ்ந்து வந்தவனுக்கு, அந்த உணவு போதுமானதாக இல்லை. உடல் மெலியத் தொடங்கியது. குளிர் காலம் வந்தது. நன்கு வெயில் ஏறி, குளிர்போன பிறகே, வெளியே கிளம்பி உணவு தேடுவதை வழக்க மாகக் கொண்டான்.

ஒரு நாள்... லும்பகனுக்கு ஏதும் கிடைக்கவில்லை. அந்தி சாயும் வரை அலைந்து திரிந்தும் ஒரு சில பழங்கள்தான் கிடைத்தன. மரத்தடிக்குத் திரும்பிய லும்பகன், இரவு முழுவதும் குளிராலும் பசியாலும் வாடினான். தூக்கம் வரவில்லை. கிடைத்த ஒரு சில பழங்களையும் பகவானுக்கே அர்ப்பணம் செய்தான்.

பொழுது விடிந்தது. ஆகா யத்தில் ஓர் அசரீரி ஒலித்து,

‘‘லும்பகா! நேற்று ஸபலா ஏகாதசி. நீ தங்கியிருந்தது அரச மரத்தின் அடியில். இரவு முழுவதும் நீ தூங்கவில்லை. கிடைத்த பழங்களையும், பசி யோடு இருந்தும் நீ உண்ணவில்லை. பகவானுக்கு அர்ப் பணம் செய்தாய்! உன் பாவங்கள் அனைத்தும் பறந்தோடின. காட்டை விடு. நாடு திரும்பு. அரச பதவி உனக்குத்தான்!’’ என்றது.

அசரீரி சொன்னது போல், லும்பகனின் எதிரில் அவன் நாட்டைச் சேர்ந்த அமைச்சர்கள், பட்டத்து யானையுடன் வந்தனர்.

‘‘மன்னர் மறைந்து விட்டார். தாங்கள் வந்து தரணி ஆள வேண்டும்!’’ என்று வேண்டி, லும்பகனை பட்டத்து யானையின் மேல் ஏற்றிப் பரிவோடு அழைத்துப்போய், பட்டாபிஷேகம் நடத்தி வைத் தார்கள்.

நல்ல முறையில் நாட்டை நிர்வாகம் செய்த லும்பகன் எதிர்காலத்தில் பிள்ளையிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு வைகுண்டம் அடைந்தான்.

தை மாதம் வரும் தேய்பிறை ஏகாதசியின் மகிமையை விளக்கும் லும்பகன் சரிதம் இது. ஸபலா ஏகாதசி என்னும் இந்த ஏகாதசி பாவங்களை எல்லாம் போக்கும்.

புத்ரதா ஏகாதசி

தை
மாத வளர்பிறை ஏகாதசி ‘புத்ரதா ஏகாதசி’ எனப்படும். அதன் மகிமை: பத்ராவதி நகரின் அரசர் சுகேதுமான். அவர் மனைவி சம்பகா. ‘பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க!’ என வாழ்த்துவது வழக்கம். கலையாத கல்வி, குறை யாத வயது, ஒரு கபடு வாராத நட்பு, கன்றாத வளமை, குன்றாத இளமை, கழுபிணி இலாத உடல், சலியாத மனது, அன்பு அகலாத மனைவி, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடைகள் வாராத கொடை, தொலையாத நிதியம், கோணாத கோல், ஒரு துன்பமும் இல்லாத வாழ்வு, தெய்வபக்தி- என்னும் இந்தப் பதினாறு பேறுகளில் ஒன்பதாவதான ‘புத்திரப்பேறு’ மட்டும், சுகேதுமானுக்கும் சம்ப காவுக்கும் வாய்க்கவில்லை. ‘பிள்ளை இல்லாதவர்களுக்கு நற்கதி இல்லை’ என்ற சாஸ்திரத்தை உணர்ந்த மன்னர் வருந்தினார்.
இதன் காரணமாக மன வருத்தத்துடன் மன்னர் செய் யும் சிராத்தத்தை அவரின் முன்னோர்கள், துன்பத்துடன் ஏற்றார்கள். இதுவும் மன்னரின் மன வருத்தத்தை அதிகரிக்கச் செய்தது.


‘‘போன பிறவியில் நாம் செய்த தீவினைதான் இந்தப் பிறவியில் இவ்வாறு நம்மைப் படுத்துகிறது’’ என்று புலம்பிய மன்னர், அதை நீக்குவதற்காக யாகம்- ஹோமம் முதலானவற்றைச் செய்தார். பலன் இல்லை. மன்னர் மனம் கலங்கியது. பைத்தியம் பிடித்தவரைப் போலக் குதிரை மீது ஏறி விரைந்தார். ‘எங்கு போகிறோம்? எதற்காகப் போகிறோம்?’ என்பதெல்லாம் மன்னருக்குத் தெரியவில்லை.
பாய்ந்து ஓடிய குதிரை காட் டுக்குள் நுழைந்து அழகான ஒரு குளத்தின் அருகில் நின்றது. குதி ரையை விட்டுக் கீழே இறங்கினார் மன்னர். குளமும் அதைச் சுற்றியிருந்த ஆசிரமங்களும் அலைபாய்ந்த மன்னரின் மனதை அமைதிப்படுத்தின.

ஓர் ஆசிரமத்துக்குள் நுழைந் தார் அரசர். சூரியனைப் போல ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்த முனிவர்களை வணங்கினார். ‘‘முனிவர்களே! தாங்கள் யார்? எதற்காக இங்கு வந்தீர்கள்?’’ எனக் கேட்டார்.

‘‘மன்னா! நாங்கள் விச்வே தேவர்கள். மாசி மாதம் வரப் போவதை முன்னிட்டு, இங்கே நீராட வந்தோம். இன்று புத்ரதா ஏகாதசி. உபவாசம் இருந்து இன்று மகாவிஷ்ணுவை பூஜை செய்தால், உத்தமமான பிள்ளை பிறக்கும்!’’ என்று சொன்னார்கள் முனிவர்கள்.

அந்த பதிலிலேயே தன் மனக் கவலைக்கான மருந்து இருப்பதை மன்னர் உணர்ந்தார். முனிவர்களுடன் சேர்ந்து தானும் நீராடினார். உபவாசம் இருந்தார். முனிவர்களை வணங்கி நாடு திரும்பினார்.

ஏகாதசி விரதத்தின் பலனாக மன்னரின் மனைவிக்கு மணி வயிறு வாய்த்தது. பத்தாவது மாதத்தில் அழகான ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள். மன்னர் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார்.

‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கு இணங்க, ‘‘இந்த நாட்டிலுள்ள அனைவரும் இந்த (புத்ரதா) ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும்!’’ என்று கட்டளையிட்டார் மன்னர். ‘‘என்னைப் போலவே என் மக் களும், குறை இல்லாமல் இருக்க வேண்டும்!’’ என்றும் கூறினார்.

நல்ல பிள்ளையை அளிக் கக் கூடிய விரதம் இது.

ரத சப்தமி விரதம்

ரோக்கியம், நோய் இல் லாமை, செல்வம், புத்திரப் பேறு, நீண்ட ஆயுள், புண்ணியம், பகைவர்களை வெல்லும் சக்தி, வெற்றி, சொத்து (நிலம்), தானியம் முதலியவற்றைத் தரக் கூடிய விரதம் இது. மனக்கவலை, வியாதி ஆகியவற்றை நீக்கும். வழியில்லாமல் தவிக்கும்போது வழி காட்டும்.
வந்த விதம்: ஒரு முறை, ஜோதி வடிவமான ஈஸ்வரன், தான் ஒருவன் மட்டும் சகல உலகங்களுக்கும் பெரிய சுடராகப் பிரகாசிப்பது போதாது என எண்ணினார். உடனே மற்றொரு சுடரை உண்டாக்கினார். அதுதான் சூரியன்.

அப்போது சூரிய மண்டலம் மிகப் பெரிதாக இருந்து, உலகத்துக்கு சுகத்தையும் வெளிச்சத்தையும் தந்தது. ஏராளமான ரிஷிகளும் தேவர்களும் அதிலேயே வசித்து, சூரிய பகவானைத் துதித்து வந்தார்கள்.

யுகங்கள் பல கழிந்தன. திடீரென்று சூரியனின் ஒளி குறைந்தது. தேவர்கள் துயரத்தில் ஆழ்ந்தார்கள். பிரம்மதேவரிடம் போய், ‘‘நான்முகக் கடவுளே! சூரியன் ஒளி மங்கிப் போய் விட் டான். அவன் மறுபடியும் ஒளிபெற வேண்டும். அருள் செய்யுங்கள்!’’ என வேண்டினர்.

பிரம்மதேவர், இந்திரன் முதலா னோர் ஆலோசித்தார்கள். ‘விஸ்வ கர்மாவின் சாணை பிடிக்கும் இயந்திரத்தில் இந்தச் சூரியனைக் கடைந்தால், முன்போல் சூரியன் ஒளி பெற்று விளங்குவான்’ என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி செய்ததும் சூரியன் பழையபடியே ஒளி பெற்று விளங்கினான்.

சூரியனைக் கடைந்த அந்த நாளே ‘ரத சப்தமி’. அதே நாளில் மஹாவிஷ்ணு ஒரு சக்கரம் கொண்ட, ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை சூரியனுக்குக் கொடுத்தார்.

உண்மையிலேயே சூரியன் வடக்கு நோக்கித் தன் பயணத் தைத் தொடங்குவது இந்த நாளில் தான். இருள் கூட்டி மழை பெய்த மாரிக்காலம் முடிந்து, சூரியன் இப்படி ‘பளிச்’சென்று வெளிப்படுவதையே முன்னோர்கள் நமக்குக் கதையாகத் தந்தார்கள்.

தை மாத வளர்பிறை சப்தமி அன்றுதான் ‘ரத சப்தமி’ கொண் டாடப்படுகிறது.

ரத சப்தமி அன்று அதிகாலையிலேயே சப்தமி திதி இருந்தால், அன்றே விரதம் இருந்து பூஜை செய்ய வேண்டும். ஒரு வேளை சப்தமி திதி - இரண்டு நாள் தொடர்ந்து அதிகாலையில் இருக்கும்படி வந்தால், முதல் நாளிலேயே விரதத்தையும் பூஜை யையும் செய்ய வேண்டும்.

ரத சப்தமியன்று அதிகாலையில் எழுந்து நீராட வேண்டும். தங்கம், வெள்ளி, தாமிரம் முதலான ஏதாவது ஒரு பாத்திரத்தில் எண் ணெய் வார்த்து தீபம் ஏற்ற வேண்டும். சூரிய வடிவத்தை வரைந்து (அல்லது பிம்பமாக வைத்து) பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு அந்தத் தீபத்தை கங்கை-காவிரி முதலான புண்ணிய நதிகளில் விட வேண்டும். இதன் பிறகு பித்ருக்களுக்கு உண்டான தர்ப்பணம் முதலானவற்றைச் செய்ய வேண்டும். இவ்வாறு முறைப்படி செய்வதன் மூலம் ஏழு ஜன்ம பாவங்களும் விலகிப் போகும்.


ரத சப்தமி அன்று குளிக்கும் முறை: ஏழு எருக்கு இலைகள், ஏழு இலந்தை இலைகள் எடுத்து ஒன்று சேர்த்து அவற்றுடன் அட்சதை, மஞ்சள்தூள் சேர்த்துத் தலையில் வைத்தபடி பெண்கள் நீராடுவது மரபு.

ஆண்களாக இருந்தால் மேலே சொன்னவாறு எருக்கு, இலந்தை இலைகளுடன் அட்சதை மட்டும் சேர்த்து உச்சந் தலையில் வைத்து நீராடுவது மரபு. பெற்றோர் இல்லாதவர்கள் மேற் சொன்ன இலைகளுடன் பச்சரிசியும் எள்ளும் சேர்த்து வைத்து நீராட வேண்டும்.

இப்போது வரும் ரத சப்தமி (04-02-06), ஆயிரம் சூரிய கிரகணங்களுக்குச் சம மானது. ஆகையால் இதுவரை பார்த்தவற்றில் முடிந்தவரை செய்தால் பன்மடங்கு பலன்கள் உண்டு.

சாவித்ரி கௌரி விரதம்

தை
மாதம் பிறந்த மறுநாள்- அதாவது தை மாதம் இரண்டாம் நாள் செய்ய வேண்டிய அற்புதமான விரதம் இது.
விரதத்தன்று அதிகாலையில், காக்காய் கரைவதற்கு முன்னா லேயே எழுந்து நீராட வேண்டும். அதன்பின், குயவர் வீட்டுக்குப் போய் அவரது சக்கரத்தில் இருந்து மண்ணை எடுத்துக் கொண்டு வரவேண்டும். அந்த மண்ணால் சாவித்ரி தேவி வடிவம் செய்ய வேண்டும். பிறகு மௌன விரதம் பூண்டு முறைப்படி பூஜை செய்து, ஒன்பது முடிகள் போட்ட நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக் கொள்ள வேண்டும். இவ் வாறு (தொடர்ந்து) ஒன்பது நாட்கள் பூஜை செய்து, ஒன்பதாவது நாளன்று மாலையில் பூஜையை முடிக்க வேண்டும்.


இந்த முறைப்படி ஒன்பது ஆண்டுகள் பூஜை செய்ய வேண்டும். ஒன்பதாம் ஆண்டு பூஜையை நிறைவு செய்யும்போது ஒன்பது ஜோடி முறங்களில் (ஒவ் வொன்றிலும்) ஒன்பது வெற்றிலை பாக்கு- ஒன்பது மஞ்சள் கிழங்குகள் - ஒன்பது பழங்கள் என வைக்க வேண்டும்.
அதன் பிறகு சுமங்கலிகளை வரவழைத்து அவர்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றைத் தந்து ஒருவருக்கு ஒரு ஜோடி முறம் தந்து அவர்களை வலம் வந்து வணங்கி, வழியனுப்ப வேண்டும். அதன் பிறகே உண்ண வேண்டும்.

இவ்வாறு செய்பவர்கள் பேரன்-பேத்தி காலம் வரை சகல விதமான ஐஸ்வரியங்களையும் பெற்று மங்கல வாழ்வு வாழ்வார்கள். அதாவது - நீண்ட ஆயுள், செல்வம் முதலானவற்றைத் தருவதுடன், தவறாத சந்தான பாக்கியத்தையும் அருளக் கூடியது இந்த விரதம் என்பதே வெளிப்படையான பொருள்.

பெண்களுக்கான இந்த விரதத் தைச் சொன்னவர் மார்க்கண் டேயர். சிவபெருமானால், ‘‘என் றும் பதினாறாக இரு!’’ என வாழ்த்தப்பட்ட மார்க்கண்டேயர் சொன்னதைக் கேட்டவர் - தரும புத்திரர்.

‘‘இறந்தவர்களையும் உயிருடன் கொண்டுவரக் கூடியது இந்த விரதம்’’ என்கிறார் மார்க்கண்டேயர். அத்துடன் ‘‘இந்த விரதத்தைப் பற்றிக் கேட்டவர்களும், கேட்கும் படியாகச் செய்தவர்களும் சிவ சாயூஜ்யத்தை அடைவார்கள்’’ என்றும் கூறியிருக்கிறார்.

தை அமாவாசை



டி அமாவாசையைப் போல், தை அமாவாசையும் சிறப்பானது. இந்த நாளில் கடல், ஆறு முதலானவற்றில் நீராடி பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது நல்லது. குடும்பத்தைப் பிடித்திருக்கும் தீவினைகள் நீங்கும்.
பைரவ விரதம்
தை
மாதத்தில் முதலில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை குறித்துச் செய்யப்படும் விரதம் இது. செவ்வாய்க் கிழமையை மங்கல வாரம் என்று அழைப்பார்கள். செக்கச் செவேல் என்று சிவந்த ஒளி வீசுவதால் இந்தக் கிரகம் ‘செவ்வாய்’ எனப் பெயர் பெற்றது. சித்திரை மாத பரணி நட்சத்திரமும், ஐப்பசி மாத பரணி நட்சத்திரமும் பைரவ விரதத்துக்கு உரிய நாட்களாகும்.
வீரபத்திர விரதம்

ங்கலவாரம் எனப் படும் செவ்வாய்க் கிழமை தோறும் ஒரு வருட காலம் கடைப் பிடிக்க வேண்டிய விரதம் இது. வருடம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், தை மாதத்தில் வரும் செவ்வாய்க் கிழமைகளிலாவது இந்த விரதம் இருப்பது நல்லது. வீரபத்திரரைக் குறித்துச் செய்யப்படும் இந்த விரதம் நீங்காத தடைகளை எல்லாம் நீக்கும். பகையைப் போக்கும். பேய், பிசாசு, பில்லி, சூனியம் முதலானவற்றில் இருந்து விடுதலை அளிக்கும். கிரகங்களினால் உண்டாகும் பாதிப்புகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும் விரதம் இது
தை கிருத்திகை!


த்தராயண புண்ணிய காலத்தில் வரும் (ஆடிக் கிருத்திகையைப் போல்) தை மாதக் கிருத்திகை மிகவும் விசேஷம். ‘‘தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும். முக்தி யையும் கொடுப்பேன்!’’ என்று சிவபெருமானே வாக்குறுதி அளித் திருக்கிறார்.
தைப்பூசம்!
சி
வபெருமான் ஆனந்தத் தாண்டவம் ஆடிய அற்புதமான திருநாள் இது. தைப்பூசம், வியாழக்கிழமை, மத்தியான வேளை... ஆயிரம் முகங்களை உடைய பானுகம்பர், ஆயிரம் சங்குகளை ஊதினார். ஆயிரம் தோள்களை உடைய வாணாசுரன் குடமுழவு என்னும் வாத்தியத்தை இசைத்தான். மேலும், ஐந்து வகையான துந்துபி வாத்தியங்கள் ஒலிக்க, கந்தர்வர்கள் கீத ஒலி எழுப்ப, வேத ஒலி முழங்கிட சிவபெருமான் அம்பிகையோடு ஆனந்தத் தாண்டவம் ஆடியருளி னார்.
வியாக்ரபாதர், பதஞ்சலி, பிரம்மா, விஷ்ணு, திருவுடை அந்தணர் மூவாயிரம் பேர் என எல்லோரும் அந்த ஆனந்த நடனத்தை தரிசித்தார்கள். மெய் சிலிர்த்தது. உள்ளம் உருகியது, ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

‘‘சிவபெருமானே! இங்கேயே உமாதேவியருடன் இன்று முதல் எப்போதும் இந்த ஆனந்தத் தாண்டவத்தை எல்லோரும் தரிசிக்கும்படியாக அருள் புரிய வேண்டும்’’ என வேண்டினார் பதஞ்சலி முனிவர்.

சிவபெருமான் உடன்பட்டார். அதன் பின் சிவபெருமானின் உத்தரவுப்படி அங்கேயே பொன்னாலான ஒரு சபை உண்டாக்கப்பட்டது. அன்று முதல் அந்தக் கனக சபையில் (சிதம்பரத்தில்) வியாக்ரபாதர், பதஞ்சலி முதலான எல்லோரும் வணங்க, அம்பிகையுடன் தன் திருநடனக் காட்சியை எப்போதும் தரிசிக்கும்படி தந்தருளிக் கொண்டு இருக்கிறார் சிவன்.


பூச நட்சத்திரத்தின் தேவதை, தேவகுருவான வியாழ பகவான். ஞான வடிவம் இவர். பூச நட் சத்திரத்தன்று நாம் செய்யும் வழிபாடுகளால், தேவகுருவின் அருளைப் பரிபூரணமாகப் பெற லாம். அதுவும் புண்ணிய காலமான தைப்பூசத்தன்று செய்யும் வழிபாடு மிக மிக விசேஷம்!


தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் திருவிடைமருதூரில் தைப்பூசம் விசேஷம். இங்கு கோயிலில் உள்ள சித்த தீர்த்தத்தில் மூழ்கி, வில்வ மரத்தை வலம் வந்து இடை மருதீசனைத் தரிசித்தால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
திருநெல்வேலியில்- அம் பாசமுத்திரம் அருகில் உள்ள திருப்புடைமருதூரில் தைப் பூசத்தன்று தாமிரபரணியில் நீராடி திருப்புடைமருதூர் ஈசனைத் தரிசிப்பது விசேஷம். அளவிட முடியாத புண்ணியம் கிடைக்கும். மிகவும் அமைதியான தலம் இது. அமைதியைத் தரும் தலமும் இது.

தைப்பூசம் விசேஷமாகக் கொண்டாடப்படும். இது ஏன் என்பதற்கு ஒரு தகவல்:

சூரபத்மனின் கொடுமை தாங்காத தேவர்கள் துயரத் தில் துடித்தார்கள். அவர் களின் துயரங்களை தேவ குருவான வியாழ பகவான், முருகப் பெருமானிடம் காரண - காரியங்களுடன் விவரித்துச் சொன்னார்.

குறை கேட்ட குமரன், சூரபத்மனை சம்ஹாரம் செய்து தேவர்களின் துயரங்களைத் தீர்த்தார்.

தேவகுருவான வியாழ பகவான், இப்படி தன் சீடர்களின் துயரங்களை முருகனிடம் எடுத்துரைத்தது தைப்பூசம் அன்றுதான். அதனால்தான் நம் குறைகளையும் தீர்ப்பதற்காக முருகப் பெருமானிடம், தைப்பூசத் திருநாளில் விசேஷமான கோரிக்கைகளை வைக்கிறோம் என்று சொல்லப்படுகிறது.

இன்னொரு தகவலும் உண்டு. அது:


பூசம் நட்சத்திரத்தின் தேவதை, தேவகுருவான வியாழ பகவான். அந்த குருவுக்கும் குருவாக இருப்பவர் குமர குருபரனான முருகப்பெருமான். அதனால்தான் உத்தராயணம் பிறந்ததும் புண்ணிய காலமான தை மாதத்திய பூச நட்சத் திரத்தன்று முருகனை வழிபடுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.

தைப்பூசத்தன்று கும்பல் கும்ப லாகப் பாதயாத்திரை செய்து முரு கன் திருத்தலங்களுக்குச் சென்று விசேஷ பூஜை செய்வார்கள்.

உண்மையான ஆன்மிகவாதிகள் அடுத்தவர்களுடன் எந்தக் கார ணத்தை முன்னிட்டும் சண்டை போட மாட்டார்கள். சண்டை போடும் மற்றவர்களையும் ஒற்றுமைப்படுத்தவே முயல் வார்கள். இதற்காகவே அவதரித்த ஒரு திருவடிவம் ராமலிங்க சுவாமிகள் எனப்படும் வடலூர் வள்ளலார்.

இவர் உத்தர ஞான சிதம்பரம் என்று வடலூரில் ஒரு ஞான சபை யைக் கட்டினார். அதில் 25.1.1872 தைப்பூச நாள் அன்று முதன்முதலாக வழிபாடு தொடங்கியது. வள்ளல் பெருமானால் காட்டப்பெற்ற அருட்பெருஞ்ஜோதி தரிசனத்தை எல்லோரும் கண்டு மகிழ்ந்தார்கள். இன்றும் தைப்பூச ஜோதி தரிசனம் வடலூரில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.



தை வெள்ளி!



டி வெள்ளியைப் போலவே உத்தராயண புண்ணிய கால தொடக்கமான தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளும் விசேஷம்.
இந்த நாட்களில் அம்பிகையை வழிபடுவது சிறப்பு.

அபிராமி அந்தாதி, மீனாட்சி யம்மை கலி வெண்பா, சௌந்தர்ய லஹரி, லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அம்மைப் பதிகம் முதலி யவற்றில் ஏதாவது ஒன்றைப் பாராயணம் செய்வது நன்மையைத் தரும்.

தியாகராஜ சுவாமிகள்!



ன்பு மயமான பக்தி இருந்தால் இந்த கலியுகத்திலும் நேருக்கு நேராக தெய்வத்தை தரிசனம் செய்ய முடியும் என்பதை நிரூபித்து நமக்கு வழிகாட்டியவர் சங்கீத மும்மூர்த்திகளில் பிரபலமான சத்குரு தியாகராஜ ஸ்வாமிகள். இவரது காலம் 1767-1847.
தியாகராஜ ஸ்வாமி களுக்காக தெய்வம் நடத்திக் காட்டிய திருவிளையாடல்கள் ஏராளம். அவற்றில் ஒன்று:


ஸ்ரீரங்கத்தில் சித்திரை விழா நடந்து கொண்டிருந்தது. தியாகராஜ ஸ்வாமிகள் அப்போது தெற்கு வீதியில் தங்கி இருந்தார்.
அங்கு தங்கக் குதிரை வாகனத்தில் பவனி வரும் பெருமாளின் அழகை, ராஜு வெடலெ என்ற கீர்த்தனையில் வர்ணித்துப் பாடினார். ஏராளமான கும்பல். பக்கத்தில் போய் ஸ்வாமியை தரி சிக்க தியாகராஜ ஸ்வாமிகளால் முடிய வில்லை. ஆனால், ஸ்வாமியின் பவனி இவரைக் கடந்து, மேற்கு வீதியில் திரும்பியவுடன், திடீ ரென்று நின்று விட்டது. வாகனத்தைச் சுமந்து வந்த ஆட்கள் என் னென்னவோ முயற்சி செய்தும் பலிக்கவில்லை. திருஷ்டி கழித்துப் பார்த்தார்கள். பலன் இல்லை.

அப்போது அர்ச் சகர் ஒருவர் மேல் ஆவேசம் வந்தது: ‘‘தெற்கு வீதியில் ஒரு சிறந்த பக்தன் தரி சனம் செய்ய ஆவலோடு காத்திருக்கிறான். அவனை அழைத்து வாருங்கள்’’ என்று உத்தரவு வந்தது. உடனே, அங்கிருந்தவர்கள் வேகமாகப் போய் தியாகராஜ ஸ்வாமிகளை அழைத்து வந்தார்கள். அருகில் நின்று அரங்கனின் திருக் கோலத்தை ஆனந்தமாக தரிசித்த தியாகராஜ ஸ்வாமிகள் மனமுருகி தேவகாந்தாரி ராகத்தில் ஒரு கீர்த்தனை பாடி முடித்தார். அதன் பிறகே அரங்கனின் பவனி தொடர்ந்தது. தியாகராஜரின் பக்தியையும் அதற்குத் திருவரங் கன் நடத்திக் காட்டிய லீலையை யும் கண்டு அனைவரும் வியந் தார்கள்.

தியாகராஜ ஸ்வாமிகள் தை மாதம் தேய்பிறை பஞ்சமி அன்று (6.1.1847) தன் வழிபாட்டு தெய்வமான ராமரின் திரு வடிகளை அடைந்தார்.

இதை முன்னிட்டு இப்போதும் வருடா வருடம் திருவையாறு தியாகராஜ ஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் ஆராதனை நடை பெற்று வருகிறது.

அதில் கலந்து கொள் வதையும் அங்கு போய் ஒரு பாடலாவது பாடுவதையும் சங்கீத வித்வான்கள் பெரும் பேறாகக் கருதுகிறார்கள்!
நன்றி விகடன்.

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

திருவோணம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? - ஜோதிடரின் பதில்...!


திருவோணம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? - ஜோதிடரின் பதில்...!

ஜோதிடர் பதில்கள் !!
1. கோபம் அதிகம் வருகிறது. அதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

🌟 தினமும் காலையில் தியான பயிற்சியை மேற்கொண்டு வர கோபம் குறையும்.

2. என் கனவில் சாலையில் இருவர் அடிபட்டு இறந்து கிடக்கின்றனர். அருகில் ஆடு தலை வெட்டப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறது. இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உத்தியோகம் சார்ந்த இடமாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் சற்று சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

3. பெண் ஒருவர் சாமி ஆடுவது போலவும், என்னிடம் வந்து உன் பிரச்சனைகள் எல்லாம் தீர, நீ இறக்க வேண்டும் என்று கூறுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. திருவோணம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 கல்வியில் நாட்டம் உடையவர்கள்.

🌟 சொத்து சேர்ப்பதில் வல்லவர்கள்.

🌟 பெரியோர்களை மதிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. அமாவாசை அன்று திருமாங்கல்யம் வாங்கலாமா?

🌟 அமாவாசை அன்று திருமாங்கல்யம் வாங்குவதை தவிர்த்து மற்ற சுப தினங்களில் வாங்கிக் கொள்ளவும்.

6. மல்லிகை பூவை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 விரைவில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

7. விமானத்தை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 விமானத்தை கனவில் கண்டால் பொருட்சேர்க்கை உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

8. செந்தூரம் தரையில் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 செந்தூரம் தரையில் கொட்டுவது போல் கனவு கண்டால் முயற்சிகளில் சற்று கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

9. தங்க சங்கிலி இரவல் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தங்க சங்கிலி இரவல் கொடுப்பது போல் கனவு கண்டால் நெருக்கமானவர்களின் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருப்பீர்கள் என்பதைக் குறிக்கிறது.

10. என் அம்மா இறந்து ஆறு மாதங்கள் ஆகின்றன. திருப்பதியில் திருமணம் இருக்கின்றது. நான் கோவிலுக்கு போகலாமா?

🌟 திருமணத்திற்கும், கோவிலுக்கும் போகலாம்.

11. நாடிப்பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?

🌟 நாடிப்பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாம்.

12. விபத்தில் காதலனின் கை உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எதிர்பாராதச் செயல்களால் மாற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

சனி, 11 ஜனவரி, 2020

இயேசு கூறிய 300 பொன்மொழிகள்


இயேசு கூறிய 300 பொன்மொழிகள்

1. விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா.

2. கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவது தான் முறை.

3. மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றிலும் வாழ்வர்.

4. உன் கடவுளாகிய ஆண்டவரை சோதிக்க வேண்டாம்.

5. உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்.

6. மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்து விட்டது.

7. என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்.

8. ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

9. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.

10. கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.

11. நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.

12. இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.

13. தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.

14. அமைதி ஏற்ப்படுதுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

15. நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

16. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.

17. உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றி புகழ்வார்கள்.

18. திருச்சட்டத்தையோ இறை வாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறை வேற்றுவதற்கே வந்தேன்.

19. விண்ணும் மண்ணும் ஒழியாத வரை, திருச்சட்டத்திலுள்ள அனைத்தும் நிறைவேறாதவரை அச்சட்டத்தின் மிகச் சிறியதோர் எழுத்தோ அல்லது எழுத்தின் ஒரு கொம்போ ஒழியாது.

20. கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கு கற்ப்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவர்.

21. கட்டளைகளை கடைபிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவர்.

22. மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியை விட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில் நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது.

23. தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்.

24. தம் சகோதரரையோ சகோதரியையோ 'முட்டாளே' என்பவர் தலைமைச்சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்.

25. தம் சகோதரர் சகோதரியை 'அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.

26. ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று.

27. உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதை பிடுங்கி எறிந்து விடுங்கள், உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதை விட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.

28. உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள், உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்கு செல்வதை விட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.

29. தம் மனைவியைப் பரத்தமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்க்காகவும் விலக்கி விடக் கூடாது. அப்படி செய்வோர் எவரும் அவரை விபச்சாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர்.

30. விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.

31. ஆணையிடவே வேண்டாம். நீங்கள் பேசும் போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாக சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.

32. உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.

33. உங்கள் அங்கியை எடுத்துக் கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டுவிடுங்கள்.

34. உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள்.

35. உங்களிடம் கேட்பவருக்குக் கொடுங்கள்.

36. கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.

37. உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்.

38. உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.

39. தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம்.

40. உங்கள் விண்ணகத்தந்தை நிறைவுள்ளவரை இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

41. மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச்செயல்களைச் செய்யாதீர்கள்.

42. நீங்கள் தர்மம் செய்யும் பொது உங்களை பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள்.

43. நீங்கள் தர்மம் செய்யும் போது உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்.

44. நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம்.

45. நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள்.

46. இறைவனிடம் வேண்டும் பொழுது பிற இனத்தவரைப் போல பிதற்ற வேண்டாம்.

47. மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்.

48. மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.

49. நீங்கள் நோன்பு இருக்கும் போது வெளிவேடக்காரரை போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம்.

50. நீங்கள் நோன்பு இருக்கும் போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்.

51. மண்ணுலகில் உங்களுக்கெனச் செல்வத்தைச் சேமித்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்து விடும்; திருடரும் அதைக் கன்னமிட்டுத் திருடுவர்.

52. விண்ணுலகில் உங்கள் செல்வத்தைச் சேமித்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.

53. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் மனமும் இருக்கும்.

54. உங்களுக்கு ஒளி தரவேண்டியது இருளாயிருந்தால் இருள் எப்படியிருக்கும்.

55. எவரும் இரு தலைவர்களுக்கு பணிவிடை செய்ய முடியாது. நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.

56. உயிர் வாழ எதை உண்பது, எதை குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள் .உணவை விட உயிரும் உடையை விட உடலும் உயர்ந்தவை.

57. கவலைப்படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்.

58. காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை.

59. நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.

60. பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போது தன நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள்.

61. நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள்.

62. நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்.

63. முதலில் உங்கள் கண்ணிலிருந்து மரக்கட்டையை எடுத்தெறியுங்கள். அதன் பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணிலிருந்து துரும்பை எடுக்க உங்களுக்கு தெளிவாக கண் தெரியும்.

64. தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம். அவை திருப்பி உங்களைக் கடித்துக் குதறும்.

65. முத்துக்களைப் பன்றிகள் முன் எறிய வேண்டாம். எறிந்தால் அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துவிடும்.

66. பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என்ன விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.

67. அழிவுக்கு செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர்.

68. வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.

69. போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால் உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள்.

70. நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும்.

71. நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது.

72. நல்ல கனி கொடாத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும்.

73. என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.

74. நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறை மீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்.

75. கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள்.

76. நரிகளுக்கு பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை.

77. மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு.

78. நோயற்றவர்களுக்கு அல்ல, நோயுற்றவர்களுக்கே மருத்துவர் தேவை. பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன், நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்.

79. மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும், அப்போது அவர்கள் நோன்பு இருப்பார்கள்.

80. அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.

81. ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.

82. என் பெயரின் பொருட்டு உங்களை எல்லோரும் வெறுப்பர். இறுதி வரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.

83. ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்.

84. மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக் கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக் கொள்வேன்.

85. மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.

86. நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.

87. தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர்.

88. என்னை விடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் என்று கருதப்படத் தகுதியற்றோர்.

89. என்னை விடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.

90. தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.

91. தம் உயிரை காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர்.

92. என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.

93. உங்களை ஏற்றுக் கொள்பவர் என்னை ஏற்றுக் கொள்கிறார்.

94. என்னை ஏற்றுக் கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்.

95. இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவர்.

96. நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக் கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவர்.

97. இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார்.

98. மனிதராய் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே.

99. தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

100. என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்.

101. பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

102. நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொண்டு என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

103. ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே.

104. உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்து விட்டால் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா? ஆட்டை விட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை.

105. தூய ஆவிக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது. மக்களுடைய மற்ற பாவங்கள்; பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும். மானிட மகனுக்கு எதிராக ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவிக்கு எதிராக பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்.

106. மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்.

107. மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும் தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும்.

108. உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாக கருதப்படுவீர்கள்; உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்.

109. யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.

110. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்.

111. உள்ளவருக்கு கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார் மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும், அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை.

112. விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக் கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்.

113. தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்பு பெறுவார்.

114. வாய்க்குள் செல்வது மனிதரைத் தீட்டுப்படுத்தாது; மாறாக வாயிலிருந்து வெளிவருவதே மனிதரைத் தீட்டுப் படுத்தும்.

115. வாயினின்று வெளிவருபவை உள்ளத்திலிருந்து வருகின்றன. அவையே மனிதரை தீட்டுப்படுத்துகின்றன.

116. கொலை, விபச்சாரம், பரத்தமை, களவு, பொய் சான்று, பழிப்புரை ஆகியவற்றை செய்யத்தூண்டும் தீய எண்ணங்கள் உள்ளத்திலிருந்து வெளிவருகின்றன. இவையே மனிதரைத் தீடுப்படுதுகின்றன.

117. என் விண்ணகத் தந்தை நடாத எந்த நாற்றும் வேரோடு பிடுங்கப்படும்.

118. பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர்.

119. மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்கு கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்.

120. மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப் போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.

121. உங்களுக்கு கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து 'இங்கிருந்து பெயர்ந்து அங்கு போ' என்று கூறினால் அது பெயர்ந்து போகும்.

122. நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள்.

123. சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.

124. பாவத்தில் விழுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ ! அதற்குக் காரணமாய் இருப்போருக்குக் கேடு.

125. இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாக கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்.

126. உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.

127. படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் 'ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்'. இதனால் கணவன் தன் தாய் தந்தையரை விட்டுவிட்டு தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.

128. சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களை தடுக்காதீர்கள்; ஏனெனில் விண்ணரசு இத்தகையோருக்கே உரியது.

129. கொலை செய்யாதே; விபச்சாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்சான்று சொல்லாதே; தாய் தந்தையை மதித்து நட. மேலும் உன் மீது நீ அன்பு கூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக.

130. செல்வர் விண்ணரசில் புகுவது கடினம். செல்வர் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது.

131. என் பெயரின் பொருட்டு வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, பிள்ளைகளையோ, நிலப்புலன்களையோ விட்டுவிட்ட எவரும் நூறு மடங்காகப் பெறுவர்.

132. முதன்மையானோர் பலர் கடைசியாவர். கடைசியானோர் பலர் முதன்மையாவர்.

133. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்கு பணியாளராக இருக்கட்டும்.

134. நீங்கள் இறைவனிடம் வேண்டும் போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக் கொள்வீர்கள்.

135. உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும் அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர்.

136. அழைப்புப் பெற்றவர்கள் பலர்; ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.

137. உயிர்த்தெழுந்தவர்களுள் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. அவர்கள் விண்ணகத் தூதரைப் போல் இருப்பார்கள்.

138. கேளுங்கள், உங்களுக்கு கொடுக்கப்படும்.

139. தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்.

140. தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.

141. கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்.

142. தேடுவோர் கண்டடைகின்றனர்.

143. தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

144. நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக.

145. என்னைப் பின்பற்றி வாரும் இறந்தோரைப் பற்றி கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்.

146. துணிவோடிரு உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன.

147. நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்.

148. ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை (மன்னிக்கலாம்).

149. வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்.

150. நீர் நலமடைந்துள்ளீர்; இதை விடக் கேடானது எதுவும் உமக்கு நிகழாதிருக்க இனி பாவம் செய்யாதீர்.

151. வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை.

152. மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை.

153. கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்.

154. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே.

155. வெளித் தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள், நீதியோடு தீர்ப்பளியுங்கள்.

156. பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை.

157. கடவுளைச் சாந்தவர் கடவுளின் சொல்லுக்குச் செவிசாய்க்கிறார்.

158. என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள்.

159. ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன்.

160. நான் உலகில் இருக்கும் வரை நானே உலகின் ஒளி.

161. குளித்து விட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார்.

162. அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள்.

163. உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.

164. இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே, அவர் விண்ணகத்தில் இருக்கிறார்.

165. உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்.

166. தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.

167. பலிப்பீடத்தின் மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதன்மேலுள்ள அனைத்தின் மீதும் ஆணையிடுகிறார்.

168. திருக் கோவிலின் மீது ஆணையிடுகிறவர் அதன் மீதும் அதில் குடிகொண்டிருக்கிறவர் மீதும் ஆணையிடுகிறார்.

169. வானத்தின் மீது ஆணையிடுகிறவர் கடவுளின் அரியணை மீதும் அதில் வீற்றிருக்கிற கடவுள் மீதும் ஆணையிடுகிறார்.

170. அந்த நாளையும் வேளையும் பற்றி தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது.

171. விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது.

172. ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவர்.

173. இதைப் பெற்று உண்ணுங்கள் இது எனது உடல்.

174. இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காக சிந்தப்படும் இரத்தம்.

175. விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது.

176. நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.

177. நான் உங்களுக்கு கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைபிடிக்கும்படி கற்பியுங்கள்.

178. உலக முடிவு வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்.

179. எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாயிருங்கள் மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்து விடாது.

180. மேலிருந்து பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது.

181. ஒருவர் தண்ணீராலும் தூயஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது.

182. மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்கு சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றி சொல்லும் போது எப்படி நம்பப் போகிறீர்கள்.

183. விண்ணகத்திலிருந்து இறங்கிவந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை.

184. ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்.

185. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.

186. உண்மைக் கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள்.

187. இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது.

188. நான் உண்பதற்கு உணவு ஒன்று உண்டு அது உங்களுக்கு தெரியாது.

189. என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறை வேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு.

190. என் தந்தை இன்றும் செயலாற்றுகிறார்;நானும் செயலாற்றுகிறேன்.

191. மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும்.

192. தந்தை செய்பவற்றை மகனும் அவ்வாறே செய்கிறார்.

193. தந்தை மகன் மேல் அன்புகொண்டு தாம் செய்யும் அனைத்தையும் அவருக்கு காட்டுகிறார்; இவற்றைவிடப் பெரிய செயல்களையும் அவருக்கு காட்டுவார்.

194. தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பது போல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்.

195. தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பது போல மகனுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார்.

196. மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை.

197. என் வார்த்தையை கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனை தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள்.

198. காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர். அதைக் கேட்போர் வாழ்வர்.

199. தந்தை தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்.

200. அவர் மானிடமகனாய் இருப்பதால், தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார்.

201. காலம் வருகிறது; அப்போது கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவர்.

202. நல்லன செய்தோர் வாழ்வு பெற உயர்த்தெழுவர்; தீயன செய்தோர் தண்டனைத் தீர்ப்புப் பெற உயர்த்தெழுவர்.

203. நானாக எதுவும் செய்ய இயலாது. தந்தை சொற்படியே நான் தீப்பிடுகிறேன்.

204. நான் அளிக்கும் தீர்ப்பு நீதியானது. ஏனெனில் என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்.

205. என்னைப்பற்றி நானே சான்று பகர்ந்தால், என் சான்று செல்லாது. என்னைப் பற்றி சான்று பகர வேறு ஒருவர் இருக்கிறார். என்னைப் பற்றி அவர் கூறும் சான்று செல்லும்.

206. மனிதர் தரும் சான்று எனக்குத் தேவை என்பதற்காக அல்ல; நீங்கள் மீட்புப் பெருவதக்காகவே இதைச் சொல்கிறேன்.

207. யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள்.

208. யோவான் பகர்ந்த சான்றை விட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று.

209. நான் செய்து வரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்.

210. என்னை அனுப்பிய தந்தையும் எனக்கு சான்று பகர்ந்துள்ளார்.

211. நீங்கள் ஒருபோதும் அவரது (தந்தையின்) குரலை கேட்டதுமில்லை. அவரது வார்த்தையும் உங்களுக்குள் நிலைத்திருக்கவில்லை. ஏனெனில் அவர் அனுப்பியவரை நீங்கள் நம்பவில்லை.

212. மறைநூல் வழியாக நிலைவாழ்வு கிடைக்கும் என எண்ணி அதனைத் துருவித் துருவி ஆய்ந்து பார்க்கிறீர்களே! அம் மறைநூலும் எனக்குச் சான்று பகர்கின்றது.

213. நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன். ஆனால் என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வேறொருவர் தம் சொந்தப் பெயரால் வருவாரானால் அவரை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.

214. கடவுள் ஒருவரே அவர் தரும் பெருமையை நாடாது, ஒருவர் மற்றவரிடமிருந்து பெருமை தேடிக்கொள்கிறீர்கள்.

215. தந்தையின் முன்னிலையில் உங்கள் மேல் குற்றம் சுமத்தப்போகிறவன் நான் என நினைக்காதீர்கள். உங்கள் சார்பாக நிற்பவர் என நீங்கள் எதிர்பார்க்கும் மோசேயே உங்கள் மேல் குற்றம் சுமத்துவார்.

216. நீங்கள் மோசேயை நம்பியிருந்தால் என்னையும் நம்பியிருப்பீர்கள், ஏனெனில் அவர் என்னைப் பற்றித் தான் எழுதினார். அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால் நான் சொல்பவற்றை எவ்வாறு நம்பப் போகிறீர்கள்.

217. நீங்கள் அரும் அடையாளங்களை கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால் தான் என்னைத் தேடுகிறீர்கள்.

218. அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்.

219. வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.

220. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது.

221. வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது.

222. என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

223. தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் என்னிடம் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிட மாட்டேன்.

224. என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல; என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் வின்னகத்திலிருந்து இறங்கி வந்தேன்.

225. அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர் தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம்.

226.மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கைக் கொள்ளும் அனைவரும் நிலை வாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்.

227. என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதிநாளில் உயிர்த்தெழச் செய்வேன்.

228. கடவுள் தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக்கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார்.

229. என்னை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். வாழ்வுதரும் உணவு நானே.

230. முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே.

231. விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார்.

232. எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன் அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.

233. மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழியே நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்.

234. எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.

235. எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம்.

236. எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர். நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்.

237. வாழும் தந்தை என்னை அனுப்பினார் நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்.

238. உண்பவரை என்றும் வாழச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே. இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.

239. வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறியே வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன.

240. உலகு உங்களை வெறுக்க இயலாது; ஆனால் என்னை வெறுக்கிறது. ஏனெனில் உலகின் செயல்கள் தீயவை என்பதை நான் எடுத்துக் காட்டி வருகிறேன்.

241. நான் கொடுக்கும் போதனை என்னுடையது அல்ல; அது என்னை அனுப்பியவருடையது. அவரது திருவுளத்தின்படி நடக்க விரும்புவோர் அப்போதனை கடவுளிடமிருந்து வருகிறதா? அல்லது அதனை நானாகக் கொடுக்கிறேனா என்பதை அறிந்து கொள்வர்.

242. தாமாகப் பேசுபவர் தமக்கே பெருமை தேடிக்கொள்கிறார். தம்மை அனுப்பியவருடைய பெருமையைத் தேடுபவர் உண்மையுள்ளவர்; அவரிடத்தில் பொய்மை இல்லை.

243. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது. எனக்கு அவரைத் தெரியும். நான் அவரிடமிருந்து வருகிறேன். என்னை அனுப்பியவரும் அவரே.

244. இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். பின்னர் என்னை அனுப்பியவரிடம் செல்வேன். நீங்கள் என்னை தேடுவீர்கள்; ஆனால் காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரவும் இயலாது.

245. யாரேனும் தாகமாய் இருந்தால் என்னிடம் வரட்டும்; என்னிடம் நம்பிக்கை கொள்வோர் பருகட்டும்.

246. உலகின் ஒளி நானே; என்னை பின் தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்.

247. நான் தீர்ப்பு வழங்கினால், அத்தீர்ப்புச் செல்லும். ஏனெனில் நான் தனியாகத் தீர்ப்பு வழங்குவதில்லை; என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார்.

248. நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல.

249. என்னை அனுப்பியவர் உண்மையானவர்; நானும் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகுக்கு எடுத்துரைக்கின்றேன்.

250. என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டு விடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்.

251. என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்.

252. தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும், பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்.

253. நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயரைக் கொடுப்பார்.

254. நான் என் உயரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவே கொடுக்கிறேன்.

255. என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன்.

256. உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு.

257. உயிர்த்தெழச் செய்பவனும் வாழ்வு தருபவனும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.

258. உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கை கொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார்.

259. கோதுமை மணி மன்னில்விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

260. தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர், இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாக கருதாதோர் நிலை வாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.

261. எனக்குத் தொண்டு செய்வோர் என்னை பின் பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்.

262. எனக்கு தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்.

263. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார்.

264. என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார்.

265. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்.

266. நான் கூறும் வார்த்தைகளைக் கேட்டும் அவற்றைக் கடைபிடியாதவருக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்குபவன் நானல்ல. ஏனெனில் நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்.

267. என்னைப் புறக்கணித்து நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளாதவருக்குத் தீப்பளிக்கும் ஒன்று உண்டு; என் வார்த்தையே அது. இறுதி நாளில் அவர்களுக்கு அது தண்டனைத் தீர்ப்பு அளிக்கும்.

268. நானாக எதையும் பேசவில்லை; என்னை அனுப்பிய தந்தையே நான் என்ன சொல்ல வேண்டும், என்ன பேசவேண்டும் என்பதுபற்றி எனக்குக் கட்டளை கொடுத்துள்ளார்.

269. அவருடைய (தந்தையுடைய) கட்டளை நிலை வாழ்வு தருகிறது எனபது எனக்குத் தெரியும். எனவே நான் சொல்பவற்றையெல்லாம் தந்தை என்னிடம் கூறியவாறே சொல்கிறேன்.

270. ஒருவர் மாற்றாரிடம் அன்பு செலுத்துங்கள். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மாற்றாரிடம் அன்பு செலுத்துங்கள்.

271. வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.

272. என் கட்டளைகளை ஏற்றுக் கடைபிடிப்பவர் என் மீது அன்பு கொண்டுள்ளார். என் மீது அன்பு கொள்பவர் மீது தந்தையும் அன்பு கொள்வார்.

273. என் மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர் மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து குடி கொள்வோம்.

274. என் மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை.

275. நீங்கள் கேட்கும் வார்த்தை என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை.

276. அமைதியை உங்களுக்கு விட்டு செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்கு தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல.

277. உண்மையான திராட்சைக் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர்.

278. என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் (தந்தை) தறித்து விடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார்.

279. கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அது போல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது.

280. நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள்.

281. நானே திராட்சைச் செடி; நீங்கள் அதன் கொடிகள்.

282. ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார்.

283. என்னோடு இணைந்து இராதவர் கொடியைப்போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார்.அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.

284. நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.

285. என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளேன்.

286. நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைபிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைபிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள்.

287. நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை.

288. தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.

289. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் என் நண்பர்களாய் இருப்பீர்கள்.

290. நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.

291. கேளுங்கள்; பெற்றுக் கொள்வீர்கள். அப்போது உங்கள் மகிழ்ச்சியும் நிறைவடையும்.

292. என்னை வெறுப்போர் என் தந்தையையும் வெறுக்கின்றனர்.

293. உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும் நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நிலைவாழ்வு.

294. என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல.

295. தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும் போது என்னைப் பற்றி சான்று பகர்வார்.

296. என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார். நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.

297. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும் போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழி நடத்துவார்.

298. அவர் (தூய ஆவியார்) தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.

299. அவர் (தூய ஆவியார்) என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார்.

300. தந்தையுடையவை யாவும் என்னுடையவையே எனவே தான் அவர் (தூய ஆவியார்) என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்.