சனி, 31 ஆகஸ்ட், 2019

விநாயகரும் 21 வகை இலையும்...


விநாயகரும் 21 வகை இலையும்...

*🚩விநாயகர் சதுர்த்தி அன்று 21 வகை இலை கொண்டு அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்னவென்று பார்க்கலாம்.*

*_🚩விநாயகரை 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்து கொள்வது நலம்பல பயக்கும் என்பர்.  அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக் கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:-_*

*🍃1. முல்லை இலை:  அறம் வளரும்*

*🍃2. கரிசலாங்கண்ணி இலை:  இவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.*

*🍃3. விஸ்வம் இலை:  இன்பம், ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.*

*🍃4. அருகம்புல்:  அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.*

*🍃5. இலந்தை இலை:  கல்வியில் மேன்மையை அடையலாம்.*

*🍃6. ஊமத்தை இலை:  பெருந்தன்மை கைவரப் பெறும்.*

*🍃7. வன்னி இலை:  பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப் பெறும்.*

*🍃8. நாயுருவி:  முகப் பொலிவும், அழகும் கூடும்.*

*🍃9. கண்டங்கத்திரி:  வீரமும், தைரியமும் கிடைக்கப் பெறும்.*

*🍃10. அரளி இலை:  எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.*

*🍃11. எருக்கம் இலை:  கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிடைக்கும்.*

*🍃12. மருதம் இலை:  மகப்பேறு கிடைக்கும்*

*🍃13. விஷ்ணுகிராந்தி இலை:  நுண்ணிவு கைவரப் பெறும்.*

*🍃14. மாதுளை இலை:  பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.*

*🍃15. தேவதாரு இலை:  எதையும் தாங்கும் மனோதைரியம் கிடைக்கும்.*

*🍃16. மருக்கொழுந்து இலை:  இல்லற சுகம் கிடைக்கப் பெறும்.*

*🍃17. அரசம் இலை:  உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.*

*🍃18. ஜாதிமல்லி இலை:  சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப் பெறும்.*

*🍃19. தாழம் இலை:  செல்வச் செழிப்புக் கிடைக்கப் பெறும்.*

*🍃20. அகத்தி இலை:  கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.*

*🍃21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை:  நல்ல கணவன்- மனைவி அமையப் பெறும்.*

விநாயகர் பற்றிய 25 வழிபாட்டு தகவல்கள்



விநாயகர் பற்றிய 25 வழிபாட்டு தகவல்கள்

*🔔தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி. விநாயகருக்கு உகந்த 25 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.*

*🔔🐘🚩விநாயகர் 25🚩🐘🔔*

*🔔1. விநாயகரின் ஐந்து கைகளில் உள்ளவை.*
 *🐘துதிக்கையில் தண்ணீர்க்குடம்.*
*🐘 பின் இரண்டு கைகளில் அங்குசம், பாசம்.*
*🐘 முன் கைகளில் வலது கையில் தந்தம், இடது கையில் மோதகம்.*

*🔔2. விநாயகரை ஒரு முறை வலம் வருதல் வேண்டும்.*

*🔔3. மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதினார்.*

*🔔4. விநாயகர் பயிர் தொழிலுக்குரிய தெய்வம் என்று சொல் லப்படுகின்றார். அதாவது பயிரை அழிக்கக் கூடிய பெருச்சாளியைத் தமது வாகனமாக்கி அடக்கி வைத்துள்ளார் என்பது இதன் பொருள்.*

*🔔5. விநாயகரின் வாகனங்கள் மயில், காளை, சிங்கம், யானை, குதிரை, பூதம் முதலியனவாகும்.*

*🔔6. வெள்ளிக் கிழமை தோறும் அருகம்புல், தேங்காய் ஆகியவற்றினைக் கொண்டு கணபதி ஹோமம் செய்து வந்தால், நீண்ட ஆயுளும், செல்வமும் கிடைக்கும்.*

*🔔7. விநாயகரின் மந்திரம் ஓம் கம் கணபதியே நமஹ என்பதாகும். காலை மாலை 108 தடவை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.*

*🔔8. பல்லவர் காலக் கோவில்களில் பரிவார தேவதையாக முதன் முதலாக அமைக்கப் பெற்ற கணபதி காஞ்சி கைலாசநாதர் கோவிலில் காணப்படுகின்றார்.*

*🔔9. பஞ்சபூதத் தொடர்பு உடையவர் விநாயகர். இவர் அரச மரத்தடியில் ஆகாய வடிவாகவும், வாதநாராயண மரத்தடியில் வாயு வடிவமாகவும், நெல்லி மரத்தடியில் நீர் வடிவமாகவும், ஆல மரத்தடியில் மண்வடிவமாகவும் விளங்குகின்றார்.*

*🔔10. விநாயகப் பெருமான் பிரணவம் ஆகிய ஓங்கார மந்திர சொரூபமாய் விளங்குபவர்.*

*🔔11.இப்வுலகில் விநாயகரின் பரிபூரண அருளைப் பெற்று வாழ்ந்தவர் புருசுண்டி என்ற முனிவர். இவர் விநாயகரைப் போல் துதிக்கையுடன் கூடிய தோற்றத்தில் காணப்பட்டார்.*

*🔔12. விநாயகர் உருவத்தில் எல்லா கடவுள்களும் உள்ளனர். நாபி - பிரம்ம உருவம், முகம் - விஷ்ணு, கண் - சிவரூபம், இடப்பாகம் - சக்தி, வலப்பாகம் - சூரிய ரூபம் என்று கருதப்படுகிறது.*

*🔔13. விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் காப்புதான் மிகவும் பிரியமானது.*

*🔔14. விநாயகர் ஏற்காத இலை துளசி இலை.*

*🔔15. விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றோர் அவ்வை யார், நம்பியாண்டார் நம்பி, சேந்தனார்*

*🔔16. பிள்ளையார் சுழியில் உள்ள ஐந்தெழுத்துத் தத்துவம் நமசிவாய என்பதாகும்.*

*🔔17. விநாயகர் புகழ் பாடும் நூல்கள்: ஸ்ரீகச்சியப்ப முனிவர் அருளிய விநாயகக் கவசம், ஸ்ரீவிநாயக சப்தகம், ஷோடச கணபதி ஸ்துதிகள், ஸ்ரீகணேச புஜங்கம், ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம், ஸ்ரீகணேச வைகறைத் துதி, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல், ஸ்ரீகணேஷாஷ்டகம்.*

*🔔18. விநாயகர் என்றால் அவரை விட மேலான ஒருவர் இல்லை என்று அர்த்தமாகும்.*

*🔔19. விநாயகர் சதுர்த்தி விழா மராட்டியத்திலும், ஆந்திராவிலும் 11 நாட்கள் வழி பாடாகக் கொண்டாடப்படுகின்றது.*

*🔔20. பிள்ளையாருக்கு ஞானக்கொழுந்து என்றொரு பெயருண்டு. ஞானத்தை அருள்வதற்காக விநாயகர் அரச மரத்தடியில் அமர்ந்துள்ளார்.*

*🔔21. வைணவ கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப்படுகின்றார்.*

*🔔22. கணபதிக்கும், சனீஸ்வரனுக்கும் பிரியமானது வன்னி மரம். எனவே, வன்னிமர இலைகளால் விநாயகப் பெருமானை வழிபட்டால் சனிபகவான் தொல்லைகள் நீங்கும்.*

*🔔23. கணபதி வழிபாடு என்பது காணா பத்யம் என்றழைக்கப்படுகிறது. இது ஆதிசங்கரர் சிறப்பித்த வழிபாடு ஆகும்.*

*🔔24. விநாயகப் பெருமான் சித்தி, புத்தி என்ற தம் மனைவியர் மூலம் உருவாக்கியவர் தான் சந்தோஷி மாதா ஆவார்.*

*🔔25. விக்னம் என்றால் கஷ்டம். கஷ்டங்களை அகற்றுபவர் என்பதால் விக்னேஸ்வரர் என்கிற பெயர் விநாயகருக்கு ஏற்பட்டது.*

விநாயகர் சதுர்த்தி விரதம்

விநாயகர் சதுர்த்தி விரதம்


உங்கள் வீட்டில் பிள்ளையாரை எந்த வஸ்துவால் பிடிக்க போகிறீர்கள்  எவ்வாறு பிடித்தால், என்ன மாதிரி பலன் அமையும்?

1: மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழி பட சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.காரிய சித்தி தருவார்

2: குங்குமத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்க செவ்வாய் தோஷம் அகலும்.குழந்தைகளைப் படிப்பில் வல்லவராக்குவார்

3: புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வணங்க நோய்கள் அகலும். விவசாயம் செழிக்கும். வியாபாரத்தைப் பெருக வைப்பார்

4: வெல்லத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உடலில் உள்ளேயும்,வெளியேயும் உள்ள கட்டிகள்(கொப்பளம்) கரையும்.வளம் தருவார்

5: உப்பினால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் எதிரிகளின் தொல்லை நீங்கும்.எதிரிகளை விரட்டுவார்

6: வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார்

7: விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும்.

8: சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.

9: சாணத்தால் பிள்ளையார் செய்துவழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழி வகுக்கும்.

10: வாழைப் பழத்தில் பிள்ளையார் செய்து வழி பட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.

11: வெண்ணெய்யில் பிள்ளையார் செய்து வழி பட்டால் கடன் தொல்லை நீங்கும்.

12: சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழி பட சர்க்கரை நோயின் வீரியம் குறையும்.

13 பசுஞ்சாண விநாயகர்- நோய்களை நீக்குவார்

14 கல் விநாயகர்- வெற்றி தருவார்

15 மண் விநாயகர்- உயர் பதவிகள் கொடுப்பார்.

எப்படி சொல்லப்பட்டிருந்தாலும், விநாயக சதுர்த்தி அன்று மண்ணால் பிடிக்கப்பட்ட பிள்ளையாரைத்தான் பூஜையில் வைத்து வழிபடுகிறோம். எதனால் தெரியுமா?

மண்ணில் பிறந்தவர்கள் எல்லோருமே ஒரு நாள் மண்ணிற்குள்தான் அடங்குவோம் என்னும் மிகப் பெரிய தத்துவத்தை நாம் எல்லோரும் உணர்ந்து கொள்ளத்தான் களிமண்ணால் செய்த பிள்ளையாரை வாங்கி வந்து, பூஜித்துவிட்டு, கடலிலோ, குளத்திலோ மண்ணோடு மண்ணாகக் கரைத்து விடுகிறோம்.

படிக்கும் குழந்தைகள், " சதுர்தீஸாய மான்யாய் ஸர்வ வித்யா ப்ரதாயினே வக்ர துண்டாய குப்ஜாய ஸ்ரீ கணேசாய மங்களம்" என்னும் ஸ்தோத்திரத்தைத் தினமும் கூறிவர பரிட்சையில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

ஆவணி மாத அமாவாசையில் இருக்கும் ஸ்பெஷல்... இதுதான்...!!


ஆவணி மாத அமாவாசையில் இருக்கும் ஸ்பெஷல்... இதுதான்...!!
ஆவணி மாத அமாவாசை..!


🌑மாதந்தோறும் தமிழ் மாதப்பிறப்பன்று முன்னோர்களை ஆராதனை செய்ய வேண்டும். அதேபோல், அமாவாசை நாள் என்பது, முன்னோர்களுக்கான நாள். முன்னோர்களை வழிபட்டு அவர்களுக்கான நம் கடமையை செய்யும் அற்புத நாள். இந்த நாளில், நம் முக்கியமான கடமையே பித்ருக்கள் எனப்படும் முன்னோர்களை வணங்குவதுதான்.

🌑அந்த வகையில் ஆவணி மாத அமாவாசையான இன்று முன்னோர்கள் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகும்.

🌑அமாவாசையன்று சர்வகோடி லோகங்களிலுள்ள மகரிஷிகள் உட்பட அனைத்து தேவதைகளும், ஜீவன்களும், காலச்சென்ற நம்முடைய முன்னோர்களும் பூலோகத்திற்கு வந்து புண்ணிய நதிக்கரைகளிலும், கடலோரங்களிலும் காசி ராமேஸ்வரம், கயை போன்ற புண்ணிய தலங்களிலும் தர்ப்பண பூஜையை ஏற்றுக் கொள்கின்றனர்.

🌑சில சடங்குகளுக்கும், சில வழிமுறைகளுக்கும் அமாவாசை சிறந்தது. அதில் ஒன்றுதான் பித்ரு தர்ப்பணம். முன்னோர்களில் மூன்று தலைமுறையினரின் பெயர்களாவது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நமது முன்னோர்களும், பெற்றோர்களும் ஏற்கனவே இறைவனடி சேர்ந்திருந்தால் அவர்கள் அனைவரின் ஆன்மாக்களும் நம்மை எங்கிருந்தோ ஆசீர்வதித்துக் கொண்டிருக்கும் என்பது நம்பப்பட்டு வரும் ஐதீகம். நமது முன்னோர்களின் ஆன்மாக்கள் நம்மைச் சுற்றி எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கிறது. அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும்.


🌑அமாவாசை அன்று முன்னோர்களுக்கு செய்யும் தர்ப்பணம் முடியும்வரை வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை செய்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். பித்ரு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர், வீட்டில் பூஜையறையில் கோலம் போட்டு, தீபம் ஏற்றி மணியடித்து தெய்வ பூஜையை வழக்கம்போல் செய்யலாம்.

🌑இன்று முன்னோரை ஆராதித்து தர்ப்பணம் செய்யுங்கள். அவர்களின் படங்களுக்கு பூக்களால் அலங்கரித்து, தீபதூபம் காட்டுங்கள். இந்த அமாவாசை நாளில், காகத்திற்கு மறக்காமல் உணவிடுங்கள்.

🌑மேலும், நான்கு நபர்களுக்காவது முன்னோரை நினைத்து உணவு வழங்குங்கள். இதனால் பித்ருக்கள் குளிர்ந்து போவார்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பார்கள். பித்ருக்கள் சாபமெல்லாம் நீங்கும்.

🌑ஆவணி மாதம் சுப மற்றும் தெய்வீக காரியங்கள் செய்வதற்கான சிறப்பான மாதமாக இருக்கிறது. இந்த ஆவணி மாத அமாவாசை தினமான இன்று மேற்கண்ட முறையில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்து முன்னோர்களை வழிபடுவதன் மூலம் வீட்டில் தரித்திர நிலை நீங்கி சுபிட்சங்கள் பெருகும்.

🌑தங்கள் வம்சத்தில் திருமணம் காலதாமதமாகும் நபர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வீண் பண விரயங்கள் ஏற்படுவது நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். காரிய தடைகள் நீங்கும்.


வியாழன், 29 ஆகஸ்ட், 2019

27 நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்

🍃அஸ்வினி - அஸ்வத்தாமன்
🍃பரணி - துரியோதனன்
🍃கிருத்திகை - கார்த்திகேயன்
🍃ரோஹிணி - கிருஷ்ணன்,பீமசேனன்
🍃மிருகசீரிடம் - புருஷமிருகம்
🍃திருவாதிரை - ருத்ரன்,கருடன்,ஆதிசங்கரர்,ராமானுஜர்
🍃புனர்பூசம் - ராமன்
🍃பூசம் - பரதன்,தாமரை மலர்,கிளி
🍃ஆயில்யம் - தர்மராஜா,லக்ஷ்மணன்,சத்ருகணன்,பலராமன்
🍃மகம் - யமன்,சீதை,அர்ச்சுணன்
🍃பூரம் - பார்வதி,மீனாட்சி,ஆண்டாள்
🍃உத்திரம் - மஹாலக்ஷ்மி,குரு
🍃ஹஸ்தம் - நகுலன்-சகாதேவன்,லவ-குசன்
🍃சித்திரை - வில்வ மரம்
🍃ஸ்வாதி - நரசிம்மர்
🍃விசாகம் - கணேசர்,முருகர்,
🍃அனுசம் - நந்தனம்
🍃கேட்டை - யுதிஸ்திரர்
🍃மூலம் - அனுமன்,ராவணன்
🍃பூராடம் - ப்ருஹஸ்பதி
🍃உத்திராடம் - சல்யன்
🍃திருவோணம் - வாமனன்,விபீசனன்,அங்காரகன்
🍃அவிட்டம் - துந்துபி வாத்தியம்
🍃சதயம் - வருணன்
🍃பூரட்டாதி - கர்ணன்,கின்னரன்,குபேரன்
🍃உத்திரட்டாதி - ஜடாயு,காமதேனு
🍃ரேவதி - அபிமன்யு,சனிபகவான்.

உலகிலேயே மிகப் பெரிய சுவர் ஓவியம் 60 அடி உயர குருவாயூரப்பன்


உலகிலேயே மிகப் பெரிய சுவர் ஓவியம் என்ற கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது  குருவாயூரில் வரையப்பட்டுள்ள இந்த 60 அடி உயர குருவாயூரப்பன் படம் . குருவாயூரைச்  சேர்ந்த சரன்ஸ் என்ற ஓவியர் வரைந்துள்ளார். இதற்காக அவர் எடுத்துக் கொண்ட காலம் 100 நாட்கள்.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

இந்தியாவின் 20 புகழ்பெற்ற விநாயகர் கோயில்கள்!!






எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வணங்கிவிட்டு துவங்கினால் அந்தக் காரியம் வெற்றி பெரும் என்று நம்பப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஏதேனும் ஒன்றை எழுதத்துவங்கும் முன் தமிழ் எழுத்து 'உ'-வை எழுதி தொடங்குவது வழக்கம். இந்த உகரமே (உ) பிள்ளையார் சுழியாக கருதப்படுகிறது.
இப்படியாக முழுமுதல் கடவுளான விநாயகருக்கு இன்று மூலைக்கு மூலை கோயில்கள் காணப்படுகின்றன.
ஆனால் எவ்வளவு பிள்ளையார் கோயில்கள் இருந்தாலும் ஒரு சில கோயில்கள் பக்தர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று திகழ்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் கோயில்களை பற்றி பார்ப்போம் வாருங்கள்!



சாசிவேகாலு கணேசா கோயில்



சாசிவேகாலு கணேசா கோயில்

கர்நாடகாவின் சரித்திர புகழ் வாய்ந்த ஹம்பி நகரத்தில் ஹேமகூட மலையடிவாரத்தில் சாசிவேகாலு கணேசா கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகர் சிலை கடுகுகளினால் பூசப்பட்டது போல் தோன்றுவதால் கடுகு கணேசா (சாசிவேகாலு கணேசா) என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் அதிகம் உணவை உண்டு விட்ட விநாயகர் தன் வயிறு வெடித்துவிடாமல் இருக்க ஒரு பாம்பை எடுத்து தன் வயிற்றில் கட்டிக்கொண்டதாக ஐதீகக் கதைகள் கூறப்படுகின்றன. அதன் காரணமாக இந்த விநாயகர் சிலையின் வயிற்றில் ஒரு பாம்பை சுற்றியிருப்பது போன்று சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. 8 அடி உயரமுள்ள இந்த விநாயகர் சிலை ஒரே கல்லினால் உருவாக்கப்பட்டுள்ளது.



தக்டுசேட் கணபதி, புனே



தக்டுசேட் கணபதி, புனே


மகாராஷ்டிராவின் மிகவும் புகழ்பெற்ற விநாயகர் கோயில்களில் ஒன்றாக அறியப்படும் தக்டுசேட் கணபதி கோயில் புனேவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் இந்தியாவின் பணக்கார கோயில்களில் ஒன்றாக கருதப்படுவதுடன், இக்கோயிலின் விநாயகர் சிலை ரூபாய் 1 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.



சித்தி விநாயக் மந்திர், மும்பை



சித்தி விநாயக் மந்திர், மும்பை


மும்பையின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றான சித்தி விநாயக் மந்திர் 1801-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோயில் முன்பு சிறிய செங்கல் கட்டிடமாக காட்சியளித்துக்கொண்டிருந்தாலும், இன்று மும்பையின் செல்வச் செழிப்பான கோயிலாக திகழ்ந்து வருகிறது.



சுயம்பு கணபதி கோயில், கணபதிபுலே



சுயம்பு கணபதி கோயில், கணபதிபுலே


மகாராஷ்டிராவின் கணபதிபுலே நகரில் கரீபியன் கடற்கரை என்று அழைக்கப்படும் கணபதிபுலே கடற்கரையில் சுயம்பு கணபதி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் விசேஷமான அம்சம் என்னவெனில் இங்குள்ள கணபதி சிலை மணற்பாறையில் தானே உருவானதாக சொல்லப்படுவதாகும். சிங்கத்தின் மீது அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும் கணபதியின் தாமிரச்சிலையும் இங்குள்ளது. இது கர்ப்பகிருகத்தில் காணப்படுகிறது. 




கற்பக விநாயகர் கோயில், திருப்பத்தூர்


கற்பக விநாயகர் கோயில் அல்லது பிள்ளையார்பட்டி கோயில் என்று அறியப்படும் தமிழ்நாட்டின் மிகப்புகழ்பெற்ற விநாயகர் கோயில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது. இந்தப் பாறைக்குடைவு கோயிலில் கண்டறியப்பட்ட ஆகம குறிப்புகளிலிருந்து இது கி.பி 1091-மற்றும் 1238-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்களுக்கு விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.



தொட்ட கணபதி கோயில், பெங்களூர்


தொட்ட கணபதி கோயில், பெங்களூர்


பெங்களூரில் உள்ள பசவனகுடி எனும் பகுதியில், புகழ்பெற்ற காளைக்கோயிலுக்கு வெகு அருகில் தொட்ட கணபதி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் விநாயகர் சிலை ஒற்றைப் பாறாங்கல்லை குடைந்து உருவாக்கப்பட்டதாகும். இது 18 அடி உயரத்துடனும், 16 அடி அகலத்துடனும் வெகு பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாகவே தொட்ட (மிகப்பெரிய) என்று கன்னடத்தில் பொருள்படும்படி இந்தக் கோயில் தொட்ட கணபதி கோயில் என்று அழைக்கப்படுகிறது.



கொட்டாரக்கரா ஸ்ரீ மஹாகணபதி கோயில், கொட்டாரக்கரா

கொட்டாரக்கரா ஸ்ரீ மஹாகணபதி கோயில், கொட்டாரக்கரா


கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான கொட்டாரக்கராவில் ஸ்ரீ மஹாகணபதி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் அதன் முதன்மை தெய்வமான சிவனின் பெயரால் கிழக்கேகரா சிவன் கோயில் என்ற பெயரில்தான் முதலில் அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் நாளைடைவில் இந்தக் கோயிலில் உள்ள விநாயகர் சன்னதியின் புகழ் காரணமாக விநாயகர் கோயில் என்ற அளவிலே பிரபலமாக தொடங்கியது. இங்கு சிவன், விநாயகரை தவிர பார்வதி, முருகன் மற்றும் ஐயப்பாவின் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.



உச்சிப்பிள்ளையார் கோயில், திருச்சி


உச்சிப்பிள்ளையார் கோயில், திருச்சி


திருச்சியில் உள்ள மலைகோட்டை 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மலைகோட்டையின் உச்சியில் அமைந்துள்ள பழமையான விநாயகர் கோயிலான உச்சிப்பிள்ளையார் கோயில் பல்லவர்களால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு பின்பு 7-ஆம் நோற்றாண்டில் மதுரை நாயக்கர்களால் கட்டி முடிக்கப்பட்டது. தரைமட்டத்திலிருந்து 273 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தக் கோயிலை அடைய 437 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். 



மணக்குள விநாயகர் கோயில், பாண்டிச்சேரி


மணக்குள விநாயகர் கோயில், பாண்டிச்சேரி


பாண்டிச்சேரியில் பிரெஞ்சு கம்பெனி கால் பதிப்பதற்கு முன்பே 1666-ஆம் ஆண்டு மணக்குள விநாயகர் கோயில் கட்டப்பட்டுவிட்டது. இந்த கோயில் அமைந்திருக்கும் பகுதியில் முன்பு எங்கும் மணல் பரந்து கிடந்ததோடு, அருகே ஒரு குளமும் இருந்ததால் இது மணக்குள விநாயகர் என்ற பெயரை பெற்றது. எங்கு பார்த்தாலும் சலமற்ற அமைதி நிரம்பியிருக்கும் இந்த கோயிலை நீங்கள் பாண்டிச்சேரி வரும்போது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.



கணேஷ் மந்திர், ஜான்ஸி


கணேஷ் மந்திர், ஜான்ஸி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்ஸி நகரில் கணேஷ் மந்திர் அமைந்துள்ளது. இந்த நகரை ஆண்ட காரணத்தால் 'ஜான்ஸி ராணி' என அறியப்பட்ட ராணி லக்ஷ்மிபாயின் வீர பூமி இது. 



லக்ஷ்மிபூர் கணபதி கோயில்



லக்ஷ்மிபூர் கணபதி கோயில்

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள வடக்கு லக்ஷ்மிபூர் நகரில் லக்ஷ்மிபூர் கணபதி கோயில் அமைந்துள்ளது. 



காணிப்பாக்கம் விநாயகர் கோயில், சித்தூர்

காணிப்பாக்கம் விநாயகர் கோயில், சித்தூர்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள காணிப்பாக்கம் எனும் கிராமத்தில் காணிப்பாக்கம் விநாயகர் கோயில் அமைத்துள்ளது. இந்தக் கோயில் 11-அம நூற்றாண்டின் முற்பகுதியில் சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கனால் கட்டப்பட்டது. 



அஷ்டவிநாயக்

அஷ்டவிநாயக்

அஷ்டவிநாயக் என்பது மகாராஷ்டிர மாநிலம் புனேவை சுற்றி அமைந்துள்ள எட்டு (அஷ்ட) விநாயகர் கோயில்களை குறிக்கிறது. இந்த எட்டு கோயில்களின் பெயர்களும் அவை அமைந்திருக்கும் இடங்களும் பின்வருமாறு : 1) மயூரேஷ்வர் - மோர்காவ்ன், 2) சித்திவிநாயக் - சித்ததேக், 3) பல்லாலேஷ்வர் - பாலி, 4) கிரிஜாத்மக் - லென்யாத்ரி, 5) சிந்தாமணி - தேவூர், 6) விக்னேஷ்வர் - ஒஸார், 7) மஹாகணபதி - ரஞ்சன்காவ்ன் மற்றும் 8) வரத்விநாயக் - மஹாத். பல சுற்றுலாப் பேருந்து நிறுவனங்கள் இந்த எட்டு விநாயகக் கோயில்களுக்குமான ஒருங்கிணைந்த சுற்றுலாவை மூன்று நாட்கள் கொண்டதாக ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றன. 



ரெடி கணபதி கோயில்

ரெடி கணபதி கோயில்

மகாராஷ்டிராவின் ரெடி நகரில் அமைந்துள்ள ரெடி கணபதி கோயில் குறித்து பல சுவையான கதைகள் சொல்லப்படுகின்றன. ரெடி கிராமம் வழியாக 1976-ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி அன்று தன்னுடைய சுமையுந்தில் சென்றுகொண்டிருந்த சதானந் நாகேஷ் கம்பாலி என்ற ஓட்டுனர் ஓய்வு எடுப்பதற்காக ரெடியில் வண்டியை நிறுத்திவிட்டு அதனுள்ளே உறங்கிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அவர் கனவில் தெய்வ வடிவாய் தோன்றிய கணபதி பெருமான், ரெடியின் ஒவ்வொரு பகுதியையும் தோண்டிப் பார்த்து தன் சிலையை கண்டேடுக்குமாறு கூறியிருக்கிறார். அந்த கனவை பூரணமாக நம்பிய தீவிர கணபதி பக்தரான சதானந் கம்பாலி, ரெடியை சேர்ந்த பனி ஆட்களை வைத்துக்கொண்டு தோண்டிப் பார்த்ததில், கடற்கரை ஓரமாக ஒரு விநாயகர் சிலை கிடைத்திருக்கிறது. அதுவே தற்போதுள்ள ரெடி கணபதி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கணபதி சிலை. இந்த சிலை 6 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டது. 



பிக்காவோலு மஹாகணபதி கோயில்



பிக்காவோலு மஹாகணபதி கோயில்

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிக்காவோலு கிராமத்தில் இந்த பிக்காவோலு மஹாகணபதி கோயில் அமைந்துள்ளது. 



அனந்தேஸ்வரா விநாயகர் கோயில்

அனந்தேஸ்வரா விநாயகர் கோயில்

கேரளாவின் காசர்கோட் மாவட்டத்தில் காசர்கோட் நகரத்துக்கு வெகு அருகில் மதூர் கிராமத்தில் அனந்தேஸ்வரா விநாயகர் கோயில் அமைந்துள்ளது.



மஹாகணபதி மஹமாய கோயில்

மஹாகணபதி மஹமாய கோயில்

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஷிராலி நகரில் மஹாகணபதி மஹமாய கோயில் அமைந்துள்ளது.



பழவங்காடி கணபதி கோயில்

பழவங்காடி கணபதி கோயில்

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பழவங்காடி கணபதி கோயில் கேரளாவின் பிரசித்திபெற்ற விநாயகர் கோயில்களில் ஒன்றாகும். 



கர்ஜானா கணேஷ் கோயில்

கர்ஜானா கணேஷ் கோயில்

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் கர்ஜானா கணேஷ் கோயில் அமைந்துள்ளது. 



ஸ்ரீ விநாயக தேவரு கோயில், இடகுஞ்சி

ஸ்ரீ விநாயக தேவரு கோயில், இடகுஞ்சி

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள இடகுஞ்சி நகரத்தில் ஸ்ரீ விநாயக தேவரு கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற 10 விநாயகர் கோவில்கள்



இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற 10 விநாயகர் கோவில்கள்

முழுமுதற் கடவுள் விநாயகர். இந்தியாவில் விநாயகருக்கு ஏராளமான கோவில்கள் அமைந்துள்ளது. அப்படி அமைந்துள்ள கோவில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த புகழ்பெற்ற 10 விநாயகர் கோவில்களை பற்றி தெரிந்து கொள்வோம்


1. சாசிவேகாலு கணேசா, ஹம்பி
கர்நாடக மாநிலத்தில் ஹம்பி நகரத்தில் ஹேமகூட மலையடிவாரத்தில் அமைந்துள்ளது

2. தக்டுசேட் கணபதி, புனே
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் அமைந்துள்ளது.

3. சித்தி விநாயக் மந்திர், மும்பை
மும்பையில் உள்ள புகழ்பெற்ற கோவிலாக உள்ளது

4. சுயம்பு கணபதி கோயில், கணபதிபுலே
மகாராஷ்டிராவின் கணபதிபுலே கடற்கைரையில் அமைந்துள்ளது

5. கற்பக விநாயகர் கோயில், திருப்பத்தூர்
தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற பிள்ளையார் பட்டி கோவிலான இது சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது.

6. தொட்ட கணபதி கோயில், பெங்களூர்
பெங்களூரில் பசவன குடி காளை கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

7. கொட்டாரக்கரா ஸ்ரீ மஹாகணபதி கோயில்
கேரளா மாநிலம் கொள்வதில் உள்ள கொட்டாரக்கரையில் அமைந்துள்ளது.

8. உச்சிப்பிள்ளையார் கோயில்,
திருச்சியில் உள்ள மலைக்கோட்டையின் உச்சியில் அமைந்துள்ளது.

9. மணக்குள விநாயகர் கோயில்
பாண்டிசேரியில் அமைதியான சூழலில் அமைந்துள்ள கோவில் இது.

10. காணிப்பாக்கம் விநாயகர் கோயில், சித்தூர்
ஆந்திர மாநிலம் சித்தூரில் இந்த கோவில் அமைந்துள்ளது

அதிசய ஆலயங்கள்...


அதிசய ஆலயங்கள்...

1. ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது.
 2. திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.
 3. தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.
4 தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.
5 கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது.
6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.
7 சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )
8 சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.
9 திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்.
10 செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.
11 வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது.
12 ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.
13 ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது.
14 மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.
16 சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
17 சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.
18 தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது.
19 தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.
20 குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.
21 தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.
22 தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.
23 விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது.
24 திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும் சுடுவதில்லை.
25 சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை.
26 திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.
27 திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.
28 ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.
29 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது.
30 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை.
31 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது.
32 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது.
33. திருக்கழுக்குன்றத்தில் தெப்பக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெறுகிறது.
34 திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது.

விநாயகர் பற்றிய அரிய தகவல்களை தெரிந்து கொள்வோம்...!!


விநாயகர் பற்றிய அரிய தகவல்களை தெரிந்து கொள்வோம்...!!

எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்னும் விநாயகர் வழிபாடு சிறந்த பலனை தரும். விநாயகர் பற்றிய அரிய தகவல்களை இங்கு தெரிந்து  கொள்ளலாம். விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.

விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார். விநாயகர்  இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.

 

யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார்  ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார். அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிடும் என்ற  குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.

 

கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்திய கை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.


 

விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர்  பெற்றார்.

 

முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டி யவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு  குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.

 

சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடுவார்கள். விநாயகருக்கு எளிதாக  கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.

 

விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு,  வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

 

விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.

 

புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து  வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ,  கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.

விநாயகர் பற்றிய சுவாரசியமானத் தகவல்கள்


விநாயகர் பற்றிய சுவாரசியமானத் தகவல்கள்

ஓம் கணபதியே நமஹ

👂. விநாயகர் என்றால் அவரை விட மேலான ஒருவர் இல்லை என்று அர்த்தமாகும்.

👂. மாதம் தோறும் பவுர்ணமி நான்காம் நாளான (நான்காம் பிறை) ஸ்ரீவிநாயகரை வழிபடுவோர் சங்கடம் நீங்கி, சந்தோஷம் அடைவர்.

👂. விநாயகர் பூஜைக்கு உகந்த மலர்கள் அருகம்புல், அரளி, நெல்லி, மரிக்கொழுந்து, ஜாதிமல்லி, வெள்ளெருக்கு, கரிசலாங்கண்ணி, எருக்கு, மாதுளை, புன்னை, மந்தாரை, மகிழம்பூ, வெட்டிவேர், தும்பை, சம்பங்கி, தாழம்பூ, முல்லை, கொன்றை, செங்கழுநீர், செவ்வந்தி, பவழமல்லி முதலியனவாகும்.

👂. விநாயகரின் ஐந்து கைகளில் உள்ளவை. 1) துதிக்கையில் தண்ணீர்க்குடம். 2) பின் இரண்டு கைகளில் அங்குசம் பாசம். 3) முன் கைகளில் வலது கையில் தந்தம், இடது கையில் மோதகம்.

👂. சிவபெருமான் உமாதேவியைத் தமது இடதுபாகத்தில் வைத்துள்ளார். இதனைப் போன்றே விநாயகர் வல்லபையைத் தமது இடதுபாகத்தில் வைத்துள்ளார்.

👂. திருஞானசம்பந்தர் அன்பிலாந்துறை என்னும் தலத்துக்குச் சென்றபோது ஆற்றில் வெள்ளம் பெருகி ஓடியது. இதனால் அவர் கரையில் இருந்தவாறே பதிகம் பாடினார். அதனைக் கேட்ட விநாயகர் செவிசாய்த்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.

👂. பல்லவர் காலக் கோவில்களில் பரிவார தேவதையாக முதன் முதலாக அமைக்கப் பெற்ற கணபதி காஞ்சி கைலாசநாதர் கோவிலில் காணப்படுகின்றார்.

👂. பஞ்சபூதத் தொடர்பு உடையவர் விநாயகர். இவர் அரச மரத்தடியில் ஆகாய வடிவாகவும், வாதநாராயண மரத்தடியில் வாயு வடிவமாகவும், நெல்லி மரத்தடியில் நீர் வடிவமாகவும், ஆல மரத்தடியில் மண்வடிவமாகவும் விளங்குகின்றார்.

👂. விநாயகர் உருவத்தில் எல்லா கடவுள்களும் உள்ளனர். நாபி - பிரம்ம உருவம், முகம் - விஷ்ணு, கண் - சிவரூபம், இடப்பாகம் - சக்தி, வலப்பாகம் - சூரிய ரூபம் என்று கருதப்படுகிறது.

👂. விநாயகரை வழிபடும் நாடுகள் சாவகம், பாலி, போர்னியா, திபெத், பர்மா, சியாம், சீனா, ஜப்பான், இந்தோனேசியா, கம்போடியா, மங்கோலியா, இந்தியா.

👂. பிள்ளையார் அழித்த அசுரர்கள் 1) அபிஜயன். 2) ஜ்வாலாமுகன். 3) துராசாரன். 4) சிந்து. 5) கிருத்திராசாரன் (6) குரோசுரன். 7) பாலாசுரன்.

👂. விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றோர் அவ்வையார், நம்பியாண்டார் நம்பி, சேந்தனார்.

👂. விநாயகரை வழிபட நல்லவாக்கு, நல்லமனம், லட்சுமி கடாட்சம் ஆகிய பலன்கள் கிடைக்கும்.

👂. வடக்கே விநாயகர் சதுர்த்தியை உருவாக்கியவர் பாலகங்காதர திலகர்.

👂. விநாயக ருத்ராட்சத்தின் மற்றொரு பெயர் எண்முக ருத்ராட்சம் ஆகும்.

👂. பிள்ளையார் அழித்த அரக்கிகள். 1) விரசை. 2) பிரமதை. 3) சிரம்பா.

👂. பிள்ளையார் சுழியில் உள்ள ஐந்தெழுத்துத் தத்துவம் நமசிவாய என்பதாகும்.

👂. விநாயகர் புகழ்பாடும் நூல்கள்: ஸ்ரீகச்சியப்ப முனிவர் அருளிய விநாயகக் கவசம், ஸ்ரீவிநாயக ஸப்தகம், ஷோடச கணபதி ஸ்துதிகள், ஸ்ரீகணேச புஜங்கம், ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம், ஸ்ரீகணேச வைகறைத் துதி, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல், ஸ்ரீகணேஷாஷ்டகம்.

👂. மராட்டியத்தில் தேங்காய்களை உடைத்து விநாய கருக்கு அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு வழங்குகின்றார்கள்.

👂. மணிப்பூர் மாநிலத்தில் மைரி என்னும் மக்கள் மூங்கில் அரிசியைக் கணபதிக்கு நிவேதனம் செய்து வழிபாடு செய்கின்றார்கள்.

👂. வைணவ கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப்படுகின்றார்.

👂. விநாயகப் பெருமான் சித்தி, புத்தி என்ற தம் மனைவியர் மூலம் உருவாக்கியவர் தான் சந்தோஷி மாதா ஆவார்.

👂. விநாயகர் ஐந்து கரங்களைக் கொண்டு விளங்குவதினால் "ஐங்கரன்'' என்று அழைக்கப்படுகின்றார்.

👂. புத்தர்கள் விநாயக வழிபாடு செய்கின்றார்கள்.

👂. சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் என்று தொடங்கும் பிரபலமான விநாயகர் துதி இடம்பெறுவது விஷ்ணு சகஸ்ர நாமத்தின் தொடக்கத்தில்தான். இந்தத் துதி பல்வேறு பூஜைகளுக்கும், நியமங்களுக்கும் தொடக்கத்தில் சொல்லப்படுகின்றது.

விநாயகர் பற்றிய தகவல்கள்


விநாயகர் பற்றிய தகவல்கள்.

விநாயகர் கதை - Story of Lord Vinayaga
         கடவுளுக்கெல்லாம் மேலான தலைமைக் கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குகிறார். இடர்களைப் போக்கி வழிகாட்டுபவர் என்பதால் விக்னேஸ்வரன் என்று பெயர் பெற்றார்.

* விநாயகர் ஒரு கொம்பு (தந்தம்), இரு செவிகள், மூன்று திருக்கண்கள், நான்கு திருத்தோள்கள், ஐந்து திருக்கரங்கள், ஆறுஎழுத்து மந்திரம் கொண்டவர். அவரை வழிபட்டால் பிறவிகள் நீங்கும். எண்திசைகளும் புகழும். நவமணிகளும் பெற்று செல்வவளத்துடன் வாழச் செய்வார்.

* விநாயகருக்கு இடைக்கு கீழே பூத உடம்பும், இடையிலிருந்து கழுத்துவரை தேவவுடம்பும், மிருகத்தலையும் உள்ளது. ஒரு கொம்பு ஆண்மையையும், கொம்பில்லாத பகுதி பெண்மையையும் என்று எல்லாவற்றையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது.

* விநாயகர், யானையை அடக்கும் கருவிகளான பாசமும், அங்குசமும் வைத்திருக்கிறார். தன்னை அடக்குவார் ஒருவரும் இல்லை என்பதைக் குறிக்கும் வகையில் தன் கைகளில் இக்கருவிகளை ஏந்தியுள்ளார்.

* விநாயகருக்கு ஐந்து கரங்கள். கும்பம் ஏந்திய திருக்கரம் படைத்தலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் வைத்திருப்பது மறைத்தலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தன்மையையும் விளக்குகிறது. உலகவுயிர்களுக்கு வேண்டிய ஐம்பெரும் தொழில்களையும் விநாயகப்பெருமானே செய்து இப்பெரிய உலகத்தை இயக்குகிறார்.

* கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு,நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன்,பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலிய பொருட்களை விநாயகருக்கு நிவேதனம் செய்யலாம். இந்நிவேதனப் பொருட்களை அருணகிரிநாதர் திருப்புகழில் குறிப்பிடுகிறார்.

* விநாயகருக்கு உகந்தது அருகு. இது ஓரிடத்தில் முளைத்து, கொடிபோல நீண்டு ஆறு இடங்களில் வேரூன்றிக் கிளைக்கும் தன்மையுடையது. “”அருகு போல் வேரூன்றி” என்பது பழமொழி. அருகம்புல் இட்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் காய்ச்சல் தீரும். யோகிகள் யோகப்பயிற்சியில் விளையும் சூடு தணிய அருகுக்கஷாயம் அருந்துவார்கள். இதற்கு “மூதண்டக் கஷாயம்’ என்று பெயர்.

* விநாயகரின் சக்திகளாக சித்தி, புத்தி உள்ளனர். அவர் எப்போதும் பிரம்மச்சாரியாக விளங்குபவர். தம்மை வழிபடும் அன்பர்களுக்கு காரிய சித்தியும், அதற்கு புத்தியும் அருள்பவர். அதனால், சித்தி புத்தி என்ற பண்புகளை இரு மனைவிகளாக்கி சித்தி புத்தி விநாயகர் ஆனார். அடியார்களின் இடையூறுகளை அகற்றுவதற்கு வல்லபம் (வல்லமை) வேண்டும். எனவே, இவர் வல்லபை என்னும் சக்தியுடனும் இருப்பார்.

* விநாயகரின் சக்தியாகிய வல்லபை மரீசமுனிவரது புதல்வி.


தோப்புக்கரணம் பிறந்த கதை:

     ஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்களுக்கு கொடுமைகள் செய்து வந்தான். தேவர்கள் தன்னைக் கண்டால் தோப்புக்கரணம் இடவேண்டும் என்று நிர்ப்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் இச்செயலைச் செய்து வந்தனர். அவனைச் சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர்.

       விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். கோபமடைந்த விநாயகர் தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும் அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள் விநாயகப்பெருமானுக்குச் செய்யத் தொடங்கினர். இதுமுதல் தோப்புக்கரணம் போடும் வழக்கம் வந்தது.


விநாயகரை கரைப்பது ஏன்?

             கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம், களிமண் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

விநாயகர் என்றால் தனக்கு மேலே ஒரு தலைவர் இல்லாதவர் என்று பொருள்.

வி – இதற்கு மேல் இல்லை. நாயகர் — தலைவர்.

    வினாயகர் அஷ்டோத்திரத்தில் ஓம் அநீஸ்வராய நம என்ற ஒரு வரி உள்ளது. அதாவது தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லாதவர் என்பதாகும். ஆதிசங்கரர் தனது பஞ்ச ரத்தினம் என்ற வினாயகர் துதியில் அநாயக ஏகநாயகம் என இவரைக் குறிப்பிடுகிறார். தனக்கு மேல் ஒரு தலைவர் இல்லாமல் ஒரே மூலப்பொருளாய் எல்லாவற்றிற்கும் தலைவராய் இருப்பவர் என்பதாகும்.


       பூத கணங்களிற்கு தலைவராய் அதாவது கணங்களிற்கு அதிபதியாய் இருப்பதனால் கணபதி என அழைக்கப்பட்டார்.

         நமது கஷ்டங்களை, வினைகளை, விக்கினங்களை நீக்குபவர் என்பதனால் விக்னேஸ்வரர் ஆனார். யானை முகத்தினன் என்பதனால் கஜானனன் என்றும், மோதகத்தை விரும்பி உண்பதனால் லம்போதரன், மோதகப்பிரியன் என்றும், ஒரு தந்தத்தை உடையவர் என்பதனால் ஏகதந்தன் என்றும் வழங்கப்படலானார்.

       ஐந்து கரத்தினன் எனப்படும் இவர் துதிக்கையுடன் ஐந்து கரத்தினை கொண்டவர். துதிக்கையில் புனித நீர்க்குடம், வலது கைகளில் ஒன்றில் அங்குசமும், மற்றயதில் ஒடிந்த தந்தமும், இடது கைகளில் ஒன்றில் பாசமும், மற்ற கரத்தில் மோதகமும் வைத்திருப்பார்.

          புனித நீர்க் குடத்திலிருக்கும் புனித நீரினைக் கொண்டு உலக வாழ்வில் உழன்று, களைத்து, சோர்வடைந்து தன்னைச் சரணடையும் மக்களின் தாகம் தீர்த்து, களைப்பைப் போக்கி, பிறவா நிலையைக் கொடுத்து தன்னடியில் சேர்த்துக் கொள்கிறார்.

         இதற்கு அவ்வையாரின் வாழ்க்கை சிறந்த உதாரணமாகும். “என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து” அவ்வையார் தனது வினாயகர் அகவலில் மேற்க் கண்ட வரிகளினாலும் மற்றும் வினாயகர் அகவலில் பல இடங்களிலும் வினாயகர் தன்னை ஆட்கொண்டு தனக்கு அருள் செய்த விதத்தினை கூறியுள்ளார்.

        அங்குசம் என்பது யானையை அடக்க உதவும் ஒரு கருவி ஆகும். இவர் கையில் இருக்கும் அங்குசமோ ஆசை என்ற மாய வலையில் சிக்கி அலைந்து திரியும் மனத்தினை அடக்கி ஒருநிலைப்படுத்தி பேரின்ப வீட்டினை தரவல்லது. பாசக் கயிற்றினால் மனித மனங்களில் ஆசாபாசங்களைக் கட்டிப் போடுகிறார். ஒடிந்த தந்தம் மகாபாரதம் என்ற காவியத்தை எழுத பயன்பட்டது. நமது மனங்களில் ஞானத்தை, உண்மை அறிவை எழுதுகிறார்.

       மோதகம் அமுத கலசமாகும். இந்த மோதகத்தினால் மக்களிற்கு அமுதத்தை வழங்கி பிறப்பிறப்பு இல்லாத பேரின்ப நிலையயை அருளுகிறார்.
வினாயகர் ஓங்கார சொரூபமானவர். அவருக்கு செய்யும் வணக்கம் பிரம்மத்தையே சேருகிறது. வினாயகரை வணங்குதல் எல்லா தெய்வங்களையும் வணங்கியதற்கு ஒப்பாகும். பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று ஒரு வழக்கு மொழியும் கிராமப் புறங்களில் உள்ளது.

            அதாவது மஞ்சள் பொடி, பசும் சாணம் இதர சில பொருட்களினால் பிடித்து வைத்து பிள்ளையாரை ஆவாகணம் செய்து வழிபடலாம். மற்ற எல்லா வழிபாட்டிலும் மிக எளிமையாக வழிபடக் கூடியது வினாயகர் வழிபாடே.


வினாயகர் சதுர்த்தி:-

          ஒரு சமயம் வினாயகர் கைலையில் நடனமாடிக் கொண்டிருந்தார் இவரின் நடனத்தை பார்த்து சந்திரன் ஏளனமாக சிரித்தான். இதனால் கோபம் கொண்ட வினாயகர் சந்திரனை “இன்று முதல் சந்திரன் உருவத்தை யாரும் காணமாட்டார்கள். கண்டவரும் நிந்தை செய்து ஒதுக்குவார்கள். இப்படிப்பட்ட நீசனாகட்டும்” என்று சபித்து விட்டார்.

            இதன் காரணமாய் சந்திரன் கலையிழந்து தேய்ந்து மெலிந்தான். சந்திரன் தன் செய்கைக்கு மிகவும் வருந்தி பின்னர் வினாயகரயே சரண் அடைந்தான். தன்னை சரண் அடைந்தோரிற்கு சகல நன்மைகளையும் தரும் கருணை கடலாம் மூஷிக வாகனன் எம்பெருமான் வினாயகரும் மனமிரங்கி சுக்ல பட்ச சதுர்த்தி திதியில் சந்திரனைக் காண்போர் வீணான சங்கடங்களிற்கு ஆளாவர் என்றும். ஆனால் ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியில் விரதம் அனுட்டித்து வினாயகரை வணங்குபவர்கள் சகல சாப விமோசனமும் பெற்று சீரும் சிறப்புடனும் வாழ்வர் என சந்திரனிற்கு சாப விமோசனம் அருளினார்.

         அதனால் தான் வளர்பிறையில் வரும் நாலாம் நாள் சந்தினை யாரும் இன்றும் பார்ப்பது கிடையாது. “நாலாம்பிறைச் சந்திரனை பார்த்தால் நாய் அலைச்சல்” என்று கிராமத்து மக்கள் இன்றும் கூறுவர். ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி திதியே வினாயகர் சதுர்த்தி நாளாகும்.