திங்கள், 28 மே, 2018

விளம்பி ஆண்டு முக்கிய விரத தினங்கள்


விளம்பி ஆண்டு முக்கிய விரத தினங்கள்

ஏப்ரல் 14-ம் தேதி விளம்பி வருடம் தொடங்கியுள்ளது. விளம்பி வருடம் முழுவதும் வரும் முக்கியமான விரத நாட்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

26.4.2018 வியாழன் புதன் ஜெயந்தி அன்று நவக்கிரகத்தில் புதனுக்கு பச்சை ஆடை உடுத்தி பச்சை மலர்களால் அர்ச்சனை செய்து 5 நெய் விளக்குகள் வைக்க புதன் தோஷம் விலகும்.

28.4.2018 சனி ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்மரை வழிபட பிறவிக்கடன்கள் தீரும்.

29.4.2018 ஞாயிறு சித்ரா பவுர்ணமி அன்று சத்யநாராயண பூஜை செய்தால் உரிய பலன்களைப் பெறலாம்.

28.5.2018 திங்கள்-வைகாசி விசாகம்.

14.6.2018 வியாழன் கங்கா பூஜை. இன்று முதல் 10 நாட்கள் கங்கையில் ஸ்நானம் செய்தாலும் காசியில் இருந்து பெறப்பட்ட கங்கா தீர்த்தத்தை பூஜை செய்து தலையில் தெளித்துக் கொண்டாலும் சகல பாப நிவர்த்தி பெறலாம்.

16.6.2018 சனி ரம்பா திருதியை இன்று கவுரி பூஜை செய்ய திருமணத் தடை ஏற்பட்ட பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.

20.6.2018 புதன் ஆனித் திருமஞ்சனம் அன்று ஸ்ரீநடராஜர் அபிஷேகம் தரிசித்தால் தொழில் போட்டியில் வெற்றி கிடைக்கும்.

22.6.2018 வெள்ளி சக்கரத்தாழ்வார் ஜெயந்தி.

27.6.2018 புதன் ஜேஷ்டாபிஷேகம் அன்று அபிஷேக பிரார்த்தனைகள் நிறைவேற்ற ஏற்ற தினமாகும்.

28.6.2018 வியாழன் வடசாவித்திரி விரத தினம். இன்று கவுரி பூஜை செய்து சத்தியவான் சாவித்திரி கதை படித்தால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாயிருப்பர்.

27.7.2018 வெள்ளி குரு பூர்ணிமா இன்று ஆசிரியர்களுக்கு உதவிகள் செய்யலாம். வஸ்திர தானம் செய்யவும்.

3.8.2018 வெள்ளி ஆடி பதினெட்டு அன்று புண்ணிய நதிகளுக்கு பூஜை செய்து திருமாங்கல்யம் மாற்ற பெண்கள் தீர்க்க சுமங்கலியிருப்பர்.

5.8.2018 ஞாயிறு ஆடிக்கிருத்திகை அன்று அம்பாளையும், முருகனையும் வழிபாடு செய்யவும்.

13.8.2018 திங்கள் சொர்ண கவுரி விரதம் ஸ்ரீஆண்டாள் திருவாடிப்பூரம் இன்று கவுரி பூஜை செய்ய பெண்கள் பொன் நகைகளுடன் தீர்க்க சுமங்கலியாயிருப்பர்.

15.8.2018 புதன் நாக பஞ்சமி, கருட பஞ்சமி அன்று நாக பூஜை செய்யவும். கருட பகவானுக்கு நெய்விளக்கு ஏற்றவும், நாகதோஷம் விலகும்.

24.8.2018 வெள்ளி. பங்காளிகள் ஒன்றுகூடி முன்னோர் களுக்கு வழிபாடும், குலதெய்வ பூஜையும் செய்ய உகந்த நாளாகும்.

24.8.2018 வெள்ளி வரலட்சுமி விரதம் இன்று லட்சுமி பூஜை, துளசி பூஜை செய்யவும்.

25.8.2018 சனி. ஓணம் பண்டிகை, ஸ்ரீஹயக்ரீவ ஜெயந்தி அன்று மாணவர்கள் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவரை வழிபட நிறைந்த கல்வி அறிவு பெறுவர்.

27.8.2018 திங்கள். இன்று 1008 முறை காயத்ரி ஜெபம் செய்ய சகல பாப நிவர்த்தி அடையலாம்.

30.8.2018 வியாழன் மகா சங்கடஹர சதுர்த்தி இன்று விநாயகருக்கு அபிஷேகம் செய்ய சர்வ சங்கடங்களும் விலகும்.

2.9.2018 ஞாயிறு கிருஷ்ண ஜெயந்தி.

4.9.2018 செவ்வாய் சனி ஜெயந்தி இன்று நவக்கிரகங்களில் சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி கருங்குவளை மலர்களால் அர்ச்சனை செய்து 8 நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சனி தோஷம் விலகும்.

11.9.2018 செவ்வாய் ஜெயந்தி இன்று நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி சிகப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து 9 நெய் விளக்குகள் வைக்க செவ்வாய் தோஷம் விலகும்.

13.9.2018 விநாயகர் சதுர்த்தி.

21.9.2018 வெள்ளி குரு ஜெயந்தி. இன்று நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி மஞ்சள் சாமந்தி புஷ்பங்களால் அர்ச்சனை செய்து 3 நெய் விளக்கு வைத்து வர குரு தோஷம் விலகும்.

23.9.2018 ஞாயிறு அனந்த விரதம்.

30.9.2018 ஞாயிறு முதல் புரட்டாசி 25-ந் தேதி (11.10.2018) வியாழன் வரை காவேரி ஆந்த்ய புஷ்கரம் தினங்களாகும். கடந்த வருடம் காவேரி புஷ்கரத்தில் புனித நீராடாமல் வாய்ப்பை தவற விட்டவர்கள் இந்த நாட்களில் காவிரியில் புனித நீராடலாம்.

4.10.2018 வியாழன் ஸ்ரீசுக்கிர ஜெயந்தி இன்று நவக்கிரகங்களில் சுக்கிரனுக்கு வெள்ளை பட்டு வஸ்திரம் சாற்றி வெள்ளை சம்பங்கி மலர்களால் அர்ச்சனை செய்து 6 நெய் விளக்குகள் வைக்க சுக்கிர தோஷம் விலகும்.

8.10.2018 திங்கள் மஹாலய அமாவாசை இன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும் படையல் வைக்கவும் திலஹோமம் செய்யவும் ஏற்ற நாளாகும்

9.10.2018 செவ்வாய் இன்று காமதேனு பூஜைசெய்ய ஏற்ற நாளாகும்.

10.10.2018 புதன் நவராத்திரி ஆரம்பம்.

12.10.2018 வெள்ளி முதல் 12 நாட்கள் தாமிர புஷ்கரம். தாமிரபரணியில் குளித்து தாமிரபரணிக்கரையில் தான தர்மங்கள், தர்ப்பணங்கள், சிராத்தங்கள், தோஷங்கள் செய்ய ஏற்ற காலமாகும். இது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் நிகழ்வாகும்.

16.10.2018 செவ்வாய் பத்ரகாளி அவதார தினம். இன்று வீட்டில் தேவி பாகவதம் படித்தாலும் தொழில் ஸ்தாபனங்களில் சண்டி ஹோமம் செய்தாலும் தொழில் விருத்தியும் வழக்குகளில் வெற்றியும் பெறலாம்.

18.10.2018 வியாழன் துலா ஸ்நானம் ஆரம்பம். இம்மாதம் ஒருமுறையாவது ஸ்ரீரங்கம் சென்று காவேரி ஸ்நானம் செய்தால் கங்கையில் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும். இன்று ஆயுத பூஜை. சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நாளாகும்.

19.10.2018 வெள்ளி விஜயதசமி இன்று புதுத்தொழில் தொடங்கவும். வேதம் படிக்கவும், கல்வி சாலைகளுக்கு செல்லவும் உகந்த நாளாகும்.

24.10.2018 புதன் அன்னாபிஷேகம். இன்று இரவு முழுவதும் கண்விழித்து லட்சுமி பூஜை செய்ய வருடம் முழுவதும் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

4.11.2018 ஞாயிறு கோவஸ்த துவாதசி இன்று பிற்பகல் பிரதோஷ காலத்தில் கன்றையும் வழிபட வீட்டினுள் குழந்தைகளும், பெண்களும் உடல்நலம் பெறுவர்.

5.11.2018 திங்கள் யமதீபம், தனத் திரயோதசி தன்வந்திரி ஜெயந்தி இன்று மாலை பிரதோஷ காலத்தில் வீட்டிற்கு வெளியே கோலமிட்டு நபர் ஒருவருக்கு ஒரு தீபம் வீதம் (குறைந்தது 5 தீபம்) தெற்கு நோக்கி வைக்க வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியம் ஏற்படும். வீட்டில் தன்வந்திரி பகவானை பூஜை செய்யவும், தங்கம் வாங்கவும் உகந்த நாளாகும்.

6.11.2018 செவ்வாய் தீபாவளி. அதிகாலை 3 முதல் 6 மணிக்குள் எண்ணை தேய்த்து குளித்து லட்சுமி பூஜை செய்ய வேண்டும்.

7.11.2018 புதன் கேதார கவுரி விரதம் இன்று 21 ஜோடி வெற்றிலை 21 பாக்கு 21 பழங்கள் வைத்து கவுரி பூஜை செய்யவும். லட்சுமி குபேர பூஜை செய்யவும் இன்று உகந்த நாளாகும்.

9.11.2018 வெள்ளி யமத்துவிதியை இன்று சகோதரி அழைப்பின் பேரில் சகோதரன் சகோதரி வீட்டிற்கு சென்று உணவு அருந்தி பரிசுகளை பரிமாறிக் கொள்ள இரு குடும்பத்தாரும் தீக்காயங்களுடனும் தீர்க்க சுமங்கலியாகவும் இருப்பர்.

13.11.2018 செய்வாய் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம். இன்று முருகனை வழிபட தொழில் வெற்றி கிடைக்கும்.

17.11.2018 சனி முடவன் முழுக்கு இன்று காவிரியில் நீராட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

22.11.2018 வியாழன் பரணி தீபம். அண்ணாமலையார் திருக்கார்த்திகை தீபம்.

22.11.2018 வியாழன் சந்திர ஜெயந்தி இன்று நவக்கிரகங்களில் சந்திரனுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்து 2 நெய்தீபங்கள் ஏற்றிவர சந்ஙதிரதோஷம் விலகும்.

23.11.2018 வெள்ளி பாஞ்சராத்ர தீபம். இந்த நாட்களில் வீட்டில் தீபம் ஏற்ற லட்சுமி கடாட்சம் பெருகும்.

30.11.2018 வெள்ளி கால பைரவாஷ்டமி இன்று காலபைரவரை வணங்க உகந்த நாளாகும்.

12.12.2018 புதன் நாகபூஜா பஞ்சமி இன்று நாகதோஷ நிவர்த்தி செய்ய உகந்த நாளாகும்.

16.12.2016 ஞாயிறு முதல் 30 நாட்களும் அதிகாலையில் பெருமாள் கோயில் சென்று தினசரி திருப்பாவை 30 பாசுரங்கள் படித்தால் வீட்டில் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் ஏற்படும்.

18.12.2018 செவ்வாய் சர்வ முக்கோடி வைகுண்ட ஏகாதசி இன்று பெருமாள் கோயில் சென்று பரமபத வாசல் கடந்தால் வாழ்க்கை சொர்க்கமாகும்.

23.12.2018 ஞாயிறு ஸ்ரீஆருத்ரா தரிசனம். இன்று நடராஜரை வழிபட்டால் தொழில் போட்டியில் வெற்றி உண்டாகும்.

5.1.2019 சனி ஸ்ரீஆஞ்சநேயர் ஜெயந்தி. இன்று ஆஞ்சநேயரை வழிபட குறைகள் தீரும்.

11.12.2019 வெள்ளி கூடாரைவல்லி இன்று அதிகாலை பெருமாள் கோவில் ஆண்டாள் அருளிய திருப்பாவையில் “கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா” என்று தொடங்கும் பாடலை இருமுறை பாட திருமண பாக்கியமும் தொழிலில் வெற்றியும் ஏற்படும்.

14.1.2019 திங்கள் போகிப்பண்டிகை.

15.1.2019 செவ்வாய் பொங்கல் பண்டிகை.

16.1.2019 புதன் மாட்டுப் பொங்கல் காமதேனுவுக்கு பூஜை செய்யவும்.

21.1.2019 திங்கள் தைப்பூசம் இன்று முருகனை வழிபடவும்.

5.2.2019 செவ்வாய் முதல் 30 நாட்கள் புனித நீராடவும் தோஷ பரிகாரங்கள் செய்யவும் ஏற்ற காலமாகும்.

9.2.2019 சனி வரகுந்த சதுர்த்தி இன்று மல்லிகைப் பூவால் சிவபூஜை செய்ய காரியத் தடைகள் நீங்கும்.

10.2.2019 ஞாயிறு வசந்த பஞ்சமி இன்று வீட்டில் லட்சுமி பூஜை செய்ய வருடம் முழுவதும் வசந்தமாகும்.

12.2.2019 செவ்வாய் ரத சப்தமி. இன்று பெருமாள் கோவில்களில் சூரிய பிரபையுடன் கூடிய ரத சப்தமி உற்சவம் நடைபெறும். அதை தரிசித்தால் முன்னோர்கள் திருப்தியடைவர். திருப்பதி திருமலையில் நடக்கும் ரத சப்தமி உற்சவம் மிக விசேஷம். இன்று நவக்கிரகங்களில் சூரியனுக்கு சிகப்பு வஸ்திரம் அணிவித்து சிகப்பு மலர்களால் அர்ச்சனை செய்து ஒரு நெய்விளக்கு வைத்துவர சூரிய தோஷம் விலகும்.

19.2.2018 செவ்வாய் ஆகாமாவை மாசி மகம் இன்று புனித நீராடி தோஷ பரிகாரங்கள் செய்ய ஏற்ற நாளாகும்.

4.3.2019 திங்கள் மகா சிவராத்திரி இன்று இரவு முழுவதும் கண் விழித்து 4 ஜாமங்களிலும் சிவபூஜை செய்ய அல்லது சிவ அபிஷேகத்தை நேரில் கண்டு களித்தால் சகல பாவங்களும் விலகி கைலாச பாக்கியம் கிடைக்கும்.

6.3.2019 புதன் சிறிய திருவடி இன்று ஸ்ரீராமரையும் ஆஞ்சநேயரையும் தரிசிக்க பிரிந்த நண்பர்கள் கூடுவர்.

15.3.2019 காரடையான் நோன்பு இன்று அதிகாலை 4- 5 கௌரி பூஜை செய்து சத்தியவான் சாவித்திரி கதை படித்தால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்.

21-3-2019 வியாழன் பங்குனி உத்திரம் இன்று கோயில்களுக்குச் சென்று திருக்கல்யாண உற்சவம் தரிசித்தால் விரைவில் திருமணமாகும். ஸ்ரீரங்கம் சேர்த்தி உற்சவம் தரிசித்தால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவர்-மனைவிக்குள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் வகையில் அன்னியோன்யம் ஏற்படும்.

13.4.2019 சனி ஸ்ரீராம நவமி. அன்று பகல்வரை விரதம் இருந்து ஸ்ரீராமரை வழிபட பித்ரு தோஷங்களும் சூரிய தோஷமும் விலகும்.

திருப்பதி வெங்கடேஸ்வரா ஸ்வாமியின் உண்மையான புகைப்படங்கள் மற்றும் கோயில் வரலாறு நீங்கள் எவரும் காணாதது காண முடியாது.

திருப்பதி வெங்கடேஸ்வரா ஸ்வாமியின் உண்மையான புகைப்படங்கள் மற்றும் கோயில் வரலாறு நீங்கள் எவரும் காணாதது காண முடியாது.


திருப்பதி, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் 4th திருப்பதி பெரிய நகரத்தில் யாத்திரை மிகவும் பிரபலமான இடத்தில் மட்டுமே நகரமாகும். திருப்பதி நகருக்கு விமான, ரயில் மற்றும் சாலை வசதி உள்ளது. விஜயவாடா நகரில் இருந்து 349 கி.மீ., ஹைதெராபாத், பெங்களூர், 256 கி.மீ., சென்னை 140 கி.மீ தூரத்தில் இருந்து 550 கி.மீ..

ராமநஜச்சாரியர்கள் மலையின் கீழ் ஆலயத்தை அமைத்தனர், மேலும் திருமலையின் வரலாறு வீழ்ச்சியுற்றது. ராமானுஜாஸ் தனது சீடனான யத்வ ராஜாவை ஏற்கனவே குளம்க்கு அடுத்த கோவில் கட்டித் தொடங்குவதற்கு ஊக்கப்படுத்தினார். படிப்படியாக கோவிலை சுற்றி கட்டப்பட்ட Agraharas கட்டப்பட்ட yadavaraju அவரது ஆசிரியர் பெயரிடப்பட்டது ramanujapuram purtayyaka வேண்டும். ராமானுஜரைத் தவிர, யாதவர்கள் பல வீடுகளை கட்டினார்கள். பக்தர்கள், ஸ்ரீசைல பல்லவ மற்றும் அனந்தாச்சார்யா போன்ற பக்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். களஞ்சியம் கோயில் கிழக்கு, நேரம் இன்று திருப்பதி punadivesaru நகரத்தில் உள்ள கடைக்கு தெரு வடமேற்கு கட்டினார். 
ஸ்ரீ வெங்கடேஷ்வர ஸ்வாமி கோயில்
ஸ்ரீவதாரஸ்வரா ஸ்வாமி ஆலயத்தின் கோவில் ஒரு சொல்லர்த்தமான ஆதாரம் மற்றும் புராணம். விஜயநகர பேரரசர் திருப்பதி ஸ்ரீ கிருஷ்ணா தேவ ராயர் venkatesvarasvamini பல முறை darsincukoni பரிசு அளிப்பார்கள். காஞ்சிபுரம் பல்லவர்களால் 9th நுற்றாண்டில் ஆண்ட, சோழர்கள் அடுத்த நூற்றாண்டில், தஞ்சாவூர், மதுரை பாண்டியர்கள் ஆண்ட, விஜயநகர அரச பரம்பரை பேரரசர்கள், venkatesvarasvami bhaktulai அதிபதிகள் அளவிடப்படுகிறது. கோவிலுக்கு போட்டியிட்டு, கோவிலுக்கு நன்கொடை அளித்தனர். விஜயநகர சாம்ராஜ்யத்தில் இந்த கோயில் நிறைந்திருந்தது. அவரது இரண்டு மனைவிகள், இவரது சிலை, கோவில் pratisthimpajesadu இன் தலைவாயில் மீது கொண்டு ஸ்ரீ கிருஷ்ணா தேவ ராயர் சிலைகள். பிரதான கோவிலில் வெங்கடாபதி ரயிலா சிலை அமைந்துள்ளது.
பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பல நாடுகள் நாடெங்கிலும் சிறிய தலைவர்கள் பரிசுகளை செல்வம் கோயிலுக்கும் தொடர்ந்து விளையாடும் வழங்கப்பட்ட. மராத்தி பொது, கோவில் raghoji உள்ள போன்ஸ்லே ஆலய நிர்வாகம் திட்டம் விஜயம் தினசரி வழிபாடு, ஒரு நிரந்தர நன்கொடை நிறுவப்பட்டது. அவர் வெங்கடேஷ்வரருக்கு ஒரு பெரிய கறை மற்றும் விலையுயர்ந்த வைரம் கொடுத்தார். கறை இன்னும் ராகோகி பெயரில் ஒரு பெட்டியில் பாதுகாக்கப்படுகிறது. மைசூர் மற்றும் கத்வாலா ஆட்சியாளர்கள் பின்வருவதில் பெரிய நன்கொடைகள் செய்தவர்களில் ஒருவர். இந்து சாம்ராஜ்யத்திற்குப் பிறகு கர்நாடகாவின் முஸ்லீம் ஆட்சியாளர்களின் கைகளிலும் பின்னர் பிரிட்டிஷாராலும் இந்த ஆட்சி வந்தது. திருப்பதி கோவில் அவர்களின் மேற்பார்வையின் கீழ் வந்தது. இருப்பினும் இந்த கோயில் உண்மையில் ஒரு பௌத்த ஜெயின் ஆலயம் .
திருப்பதியில் எம்.எஸ்.சுப்புலட்சுமி சிலை
திருமலை திருப்பதி கோயில்
1843 ஆம் ஆண்டில், கிழக்கு இந்தியா கம்பெனி கிரிஸ்துவர் அல்லாத மற்றும் கிறிஸ்தவ சாராத வழிபாட்டு இடங்களை உரிமை கைவிட்டு. Venkatesvarasvami கோயில், ஜாகீர் tirumalaloni hathiranji கணித நிர்வாகத்தை கை sevadasjiki. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, ஆலய நிர்வாகம் மகாமக்களின் கைகளில் இருந்தது
1933 ஆம் ஆண்டில், சென்னை சட்டமன்றத்தில் alayanirvahana, "திருப்பதி கோவில்" கட்டுப்பாட்டை (டிடி) செய்து சிறப்புச் சட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் சென்னை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டது.
1951 ஆம் ஆண்டில், சமூகம் அறங்காவலர்கள் டிடி மார்ச் மேலாண்மை இந்த சட்டம், மற்றொரு நிர்வாகி சட்டம் அரசால் நியமிக்கப்பட்ட வருகிறது கொடுத்துள்ளது.

ஞாயிறு, 27 மே, 2018

வைகாசி விசாகம்



வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள்அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம்திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்துஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.

புத்த பெருமான் பிறந்ததும் ஞானம் பெற்றதும் இந்த வைகாசி விசாகத்திலேயே ஆகும். இந்நாளிலேயே நம்மாழ்வாரும் பிறந்தார்.


வைகாசி விசாகம்: நெருப்பில் அவதரித்த அழகன் முருகன்

   
சென்னை: சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்தவர் ஆறுமுகப் பெருமான். அவரது அவதார தினம் நிகழ்ந்தது வைகாசி விசாகம் நாளில்தான். எனவேதான் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாளை தமிழ் மக்கள் கொண்டாடுகின்றனர்.

வைகாசி விசாக தினத்தன்று பால்குடங்கள் எடுத்தும், காவடிகள் சுமந்தும் முருகக்கடவுளின் அவதாரத் திருநாளை ஆன்மீகம் மணக்க மணக்க கொண்டாடுகின்றனர். தீமைகளை அழித்து, நன்மைகளை காப்பதற்காகவே ஏற்பட்டது முருகனின் தோற்றம்.

நெருப்பில் உதித்த முருகன்
சூரபத்மன் என்ற அசுரனிடம் இருந்து மக்களை காக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர், முருகன். சரவண பொய்கையில் விழுந்த அந்த பொறிகள் ஆறு குழந்தைகளாயின. அந்தக் குழந்தைகளை ஆறு கிருத்திகை பெண்கள் எடுத்து வளர்த்தனர். அந்த ஆறு குழந்தை களையும் பராசக்தி எடுத்து அணைக்க அந்த அவை ஆறுமுகமும், பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே ஒரு குழந்தையாக மாறின.

ஆறுமுகன் பெயர்கள்
முருகன், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், பக்தர்கள் ஒவ்வொருவர் மனதிலும் வசிப்பதால் குகன் ஆகவும், சரவண பொய்கையில் இருந்து வந்ததால் சரவணபவன் என்றும், ஆறு முகங்களை கொண்டவராக இருப்பதால் ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார்.


அக்னியில் அவதரித்த அழகன் முருகன்

   
சென்னை: தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அவதார தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வைகாசி விசாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது.தீமைகளை அழிப்பதற்காக சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகன். இந்த அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக நாளில்தான். வைகாசி விசாக தினத்தன்று பால்குடங்கள் எடுத்தும், காவடிகள் சுமந்தும் முருகனின் பிறந்தநாளை ஆன்மீகம் மணக்க மணக்க கொண்டாடுகின்றனர்.

நட்சத்திரங்கள் இருபத்தி ஏழில், சில நட்சத்திரங்கள் இறைவனுக்கு உகந்த நட்சத்திரங்களாகவும், இறைவன் அவதாரம் எடுத்த நட்சத்திரங்களாகவும் கருதப்படுகின்றது. அந்த அடிப்படையில் வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாக பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. விசாக தினத்தன்று வேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும்.
Lord Murugan birthday of Vaikasi Vishagam
முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும்! வேலவன் அருளால் விரும்பியது நடக்கும்! எனவே தான் திருசெந்தூர் முதல் தேசமெங்கும் முருகனது ஆலயங்களில் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.
அள்ளிக்கொடுப்பதற்கு கரங்கள் அதிகமாக உள்ள தெய்வமாகவும், கூப்பிட்டதும் பறந்து வந்து உதவி செய்ய மயில் வாகனம் வைத்திருப்பதாலும் முருகப்பெருமான் மீது மக்கள் அளவிற்கு அதிகமாக பக்தி வசப்பட்டுள்ளனர். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா என்றும், பழத்திற்காக போட்டியிட்டு பழநி மலையில் குடிகொண்டவன் என்றும், சூரபத்மனை போராடி வெற்றிகொண்ட சத்ரு சம்ஹாரனாகவும் மக்கள் நினைத்து வழிபடும் மகத்தான தெய்வம் முருகக்கடவுள். அப்படிப்பட்ட தெய்வத்தை வழிபட நமக்கு
வைகாசி விசாகம் வழிகாட்டுகின்றது.
இந்த ஆண்டு 28.5.2018 அன்று வருகின்றது. அன்றைய தினம் பன்னிருகை வேலவனை எண்ணி விரதமிருந்து வழிபட்டால் இடையூறு சக்திகள் விலகும். லட்சியங்கள் நிறைவேறும். இந்த விசாகத் திருநாளில் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு, அருகில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றிற்குச் சென்று வழிபட்டு வரலாம். கந்தப் பெருமானை உள்ளத்திலும், இல்லத்திலும் நினைத்து வழிபட்டு வரலாம்.

வடிவேல் முருகனின் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சித்து வழிபடுபவர்கள், அபிஷேக ஆராதனைகளிலும் கலந்து கொண்டால் அற்புதப் பலன்கள் கிடைக்கும். வீட்டு பூஜையறையில் முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபடலாம். ஐந்துமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் என்பது நம்பிக்கை. மயில் மீது ஏறி விரைந்து வந்து மால்மருகன் உங்களுக்கு வரம் தருவான்.
விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள்
அகலும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.
கலியுகத்தின் கண்ட தெய்வமாக விளங்குபவர் கந்தப்பெருமான். அவரது “வேலை” வணங்குவதே வேலையாக கொள்ள வேண்டிய நாள் விசாகத் திருநாளாகும். எனவே விசாகத் திருநாளில் வேலவனின் சன்னிதி சென்று வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும்.

வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் எப்படித் தோன்றினார்கள் தெரியுமா..?- விசாக மகத்துவம்!
    
'தமிழ்க் கடவுள்' என்று போற்றப்படும் அழகு முருகனுக்கு ஆயிரமாய் திருநாமங்கள் இருந்தாலும், சிறப்பான பெயர்களாகத் திகழ்பவை 'கார்த்திகேயன்' மற்றும் 'விசாகன்' ஆகிய இரண்டு திருப்பெயர்களாகும். காரணம்?

வீரபாகு

முருகப்பெருமான் ஞானஸ்வரூபி. அவனைச் சரணடைந்தால், நம்முடைய அகம்பாவம் நீங்கும். அகம்பாவமே மனிதர்களைப் பாவக்குழியில் வீழ்த்துகிறது. அதன் விளைவாக பல துன்பங்களையும் அனுபவிக்க நேரிடுகிறது. சூரபத்மன் அகங்காரத்தின் ஒட்டுமொத்த வடிவம். அவனால் பலவகையான துன்பங்களுக்கு ஆட்பட்ட தேவர்களின் துயரங்களைத் தீர்ப்பதற்காகவே, 'குமார சம்பவம்' நிகழ்ந்தது.


தர்மத்தை நிலைநிறுத்தவும், அதர்மத்தை அழிக்கவும் இறைவன் பல அவதாரங்களை எடுத்ததாக புராணங்கள் பேசுகின்றன. முருகப்பெருமானின் அவதாரம் தவிர்த்து, இறைவனின் மற்ற அவதாரங்களில் அசுரர்கள் சம்ஹாரம் செய்யப்பட்டனர். ஆனால், அழகு, அன்பு, கருணை ஆகிய அனைத்தும் உருவம் தரித்து வந்ததுபோல் அவதரித்த முருகப்பெருமான், சூரனை சம்ஹாரம் செய்யவில்லை. மயிலாகவும் சேவலாகவும் மாற்றி வாகனமாகவும், கொடியாகவும் கொண்டார். ஆக, முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்யவில்லை; மாறாக ஆட்கொண்டருளினார்.

அதுவே முருகப்பெருமானின் பேரருள் பெருங்கருணைத் திறம்.

முருகப்பெருமானின் திரு அவதாரம் நிகழ்ந்த வைகாசி விசாகம், நாளை (28.5.18) முருகப்பெருமானின் அனைத்து தலங்களிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படவுள்ளது.


சரி, விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்தபோது நிகழ்ந்த மற்றோர் அற்புதம்தான் என்ன? 

சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்கமாட்டாத தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று பிரார்த்திக்கின்றனர். அவர்களுக்கு அபயம் அருளிய சிவபெருமான், குமார சம்பவத்தை நிகழ்த்தத் திருவுள்ளம் கொண்டார். தம் நெற்றிக் கண்ணைத் திறக்க, ஆறு தீக்கதிர்கள் வெளிப்பட்டு, சரவணப்பொய்கையில் இருந்த ஆறு தாமரை மலர்களில் ஆறு அழகிய குழந்தைகளாகத் தோன்றியதும், அறுவரையும் அன்னை பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர்த்து, அதன் பயனாக முருகப்பெருமானுக்கு ஆறுமுகன் என்ற திருப்பெயர் ஏற்பட்டதும் நாமெல்லாம் அறிந்த விஷயம்தான். ஆனால், அன்றைக்கே நிகழ்ந்த மற்றோர் அற்புதம் நவவீரர்களின் தோற்றம்தான்.

குமாரசம்பவத்துக்கு முன்பாக மற்றொரு தருணத்தில் சிவபெருமான் தம் நெற்றிக்கண்ணைத் திறந்த நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது வெளிப்பட்ட அக்னிச் சுடரின் வெம்மை தாங்கமாட்டாமல், பார்வதி தேவி எழுந்தோடினார். அதனால், அவருடைய திருவடி சிலம்புகளிலிருந்து நவமணிகள் தெறித்துச் சிதறின. சிதறிய நவமணிகளை, பார்வதி தேவியார் திருக்கண் நோக்க, அந்த மணிகளிலிருந்து நவசக்தி தேவியர் தோன்றினர். ஈசனின் திருவுள்ளக்குறிப்பின்படி அவர்கள் கருத்தரித்தனர். ஆனால், திடீரெனத் தோன்றிய நவதேவியரும் ஈசனருகே நிற்பதைக் கண்ட சக்திதேவி அவர்களிடம் கோபம் கொண்டு அவர்களது கரு பிரசவமாகாமல் நீண்ட காலம் அப்படியே தங்கியிருக்க வேண்டும் என்று சபித்தார்.


வைகாசி விசாகம்

அம்பிகையின் சாபம் கேட்டு அஞ்சி நின்ற நவசக்தியரின் உடலிலிருந்து வெளிப்பட்ட வியர்வைத்துளிகள் ஒவ்வொன்றும் ஒரு வீரனாக மாற, மொத்தம் ஒரு லட்சம் வீரர்கள் தோன்றினர். பின்னர், அம்பிகையின் கோபம் தணியவேண்டி சரவணப்பொய்கையின் அருகில் தவமியற்றினர். காலம் கனிந்து விசாகத்தன்று முருகப்பெருமானின் அவதாரம் நிகழ்ந்த அதே தருணத்தில், பார்வதிதேவி நவசக்தியருக்கும் அருள்புரிந்தாள். நவசக்தியரும் ஆளுக்கொரு பிள்ளையைப் பெற்றனர்.

மாணிக்கவல்லி வீரபாகுவையும், மௌத்திகவல்லி வீரகேசரியையும், புஷ்பராகவல்லி வீரமகேந்திரனையும், கோமேதகவல்லி வீர மகேஸ்வரனையும், வைடூரியவல்லி வீர புரந்தரனையும், வைரவல்லி வீர ரட்சகனையும், மரகதவல்லி வீர மார்த்தாண்டனையும், பவளவல்லி வீராந்தகனையும், இந்திரநீலவல்லி வீர தீரனையும் வீரத் திருமகன்களாகப் பெற்றனர். பிறக்கும்போதே பகைவர்களை அச்சுறுத்தும் தோற்றத்தோடு தோன்றிய அவர்களை வாழ்த்தி ஈசன் ஆளுக்கொரு வாளை பரிசளித்து வாழ்த்தினார். தர்மத்தை காக்க பிறப்பெடுத்திருக்கும் முருகப்பெருமானுக்கு உதவத் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார். இப்படி முருகப்பெருமான் தோன்றிய திருநாளிலேயே உருவானவர்கள் இந்த நவவீரர்கள். வைகாசி விசாகத் திருநாளில் கந்தனை வணங்குபவர்கள் இவர்களையும் வணங்கினால் எதிரிகள் பயம் ஒழிந்து வாழ்வாங்கு வாழ்வார்கள் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.


முருகப்பெருமான் விசாக நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன் என்ற பெயரும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பெற்றதால் கார்த்திகேயன் என்ற பெயரும் சிறப்பு வாய்ந்தவைகளாகப் போற்றப்படுகின்றன.


திருச்செந்தூர்

எங்கும் ஞான வடிவாக காட்சியளிக்கும் முருகப்பெருமான் அவதரித்த இந்த நாளில் அவன் தாள் வணங்கி அவன் புகழ் பாடி உய்வோம்.

வைகாசி விசாகம்
வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர். 
வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் "வைசாக' மாதம் என்றிருந்து பின்னாளில் "வைகாசி' என்றானது. இந்த மாத பவுர்ணமி நாளை "வைகாசி விசாகம்' என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. "வி' என்றால் "பட்சி' (மயில்), "சாகன்' என்றால் "சஞ்சரிப்பவன்' மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் "விசாகன்' என்றும் வழங்குவர். முருகனுடைய வாகனமாக சூரபத்மனே வீற்றிருக்கிறான். பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகப்பெருமானிடத்தில் காணலாம். இந்நாளில் திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் அணி அணியாக மக்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். விசாகனாம் முருகனைப் பணிந்து வினைகளைப் போக்குவோம்.

முருகப் பெருமானுக்கு உகந்த நாள் வைகாசி விசாகம். அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டிக் கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது உறுதி. 

குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டால் அடுத்த வருடம் வைகாசி விசாகத்திற்குள் மடியில் குழந்தை தவழுவது உறுதி. திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும். 

இந்த விரதத்தை ஆண்களும் இருக்கலாம். அன்றைய தினம் பக்தர்கள் பால் காவடிகள் எடுத்து ஆறுமுகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்வர். அன்றைய தினம் விரதமிருந்து ஒரு வேளை உணவு உண்டு முருகனை தியானிடத்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.

வைகாசி விசாக நன்னாளில், முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
காளிதாசர் எழுதிய, “குமார சம்பவம்’ எனும் நூலில், முருகப்பெருமானின் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. சம்பவம் என்றால், தோன்றுதல் குமரனின் தோற்றத்தைப் பற்றிய நூல் என்பதால், இந்தப் பெயர் வைக்கப்பட்டது. காளிதாசர் இந்தத் தலைப்பை வால்மீகி ராமாயணத்தில் இருந்து தேர்ந்தெடுத்தார்.


முனிவர்களின் யாகத்திற்கு இடைஞ்சல் செய்த தாடகை எனும் அரக்கியை வதம் செய்ய,ராமபிரானை விஸ்வாமித்திரர் அழைத்துச் சென்றார். அப்போது, அவர் கந்தப்பெருமானின் பிறப்பு, அவர் பத்மாசுரனை அழித்தது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ராம லட்சுமணருக்கு சொன்னார். இந்த நிகழ்ச்சியை வால்மீகி, “குமார சம்பவம்’ என வர்ணித்துள்ளார். அந்த வர்ணனையே, காளிதாசருக்கு தலைப்பாக கிடைத்து விட்டது.


பத்மாசுரன் என்பவன், கடும் தவமிருந்து, சிவனுக்கு இணையான ஒருவரைத் தவிர, வேறு யாராலும் அழிக்க முடியாத வரம் பெற்றான். மேலும், அவ்வாறு பிறப்பவன், பெண் சம்பந்தமில்லாமல் பிறக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் வைத்து, சிவனிடம் அனுமதி வாங்கிவிட்டான்.
பிறகென்ன… இப்படி ஒருவன் பிறக்கவே முடியாதென்ற எண்ணத்தால், ஆணவம் கொண்டு, தேவர்களைத் துன்புறுத்தினான். சிவனிடம் முறையிடுவதற்காக சென்றனர் தேவர்கள். அப்போது, தட்சிணாமூர்த்தியாக வடிவம் தாங்கி, தவத்தில் இருந்தார் சிவன்; அவருக்கு பணிவிடை செய்ய வந்த அம்பாளும் தவத்தில் இருந்தார். தவமிருக்கும் நேரத்தில், எது கேட்டாலும் கிடைக்கும். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், தங்களைத் துன்புறுத்தும் அசுரனை அழிக்கும் ஒரு அம்சம் உருவாக வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.


சிவன், உடனடியாக விநாயகரை அனுப்பியிருக்கலாம்; ஆனால், அவரோ பார்வதியின் அம்சமாகத் தோன்றியவர். பெண் சம்பந்தம் அவருக்கு இருக்கிறது. பத்மாசுரனுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற, தன் நெற்றிக்கண்ணில் இருந்து, ஆறு பொறிகளை உருவாக்கி, கங்கை நதியில் விட்டார். அவை இணைந்து கந்தப்பெருமான் அவதரித்தார்.


இவருக்கு சுப்பிரமணியன் என்றும் பெயர் உண்டு. “ஸுப்ரஹ்மண்யன்’ என்ற பெயரே, தமிழில் இவ்வாறு சொல்லப்படுகிறது. இதற்கு, பரமாத்மாவின் அம்சம் என்று பொருள். சிவபெருமானே பரமாத்மா. அவரது பிள்ளை என்பதால் இந்தப் பெயர் வந்தது.


முருகப்பெருமான் ஆறு வயது வரை மட்டுமே பாலப்பருவ லீலைகளைச் செய்தார். பிரம்மாவுக்கு, “ஓம்’ என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால், அவரைச் சிறையில் அடைத்தது, தந்தைக்கே பாடம் சொன்னது, தமிழ் மூதாட்டி அவ்வைக்கு நாவல்கனியைக் கொடுத்து, சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு, அந்த அறிவுக்கடலையே கலங்கச் செய்தது, உலகைச் சுற்றும் போட்டியில் பங்கேற்று, தண்டாயுதபாணியாக மலையில் நின்றது ஆகிய லீலைகள் குறிப்பிடத்தக்கவை.


பின்னர், அவர் தேவர்களின் சேனாதிபதியாகி, தேவசேனாதிபதி என்ற பெயர் பெற்றார். தேவசேனா என்பது, தெய்வானையின் பெயர். அவளை மணந்து, அவளுக்கு பதியானதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். குறமகளான வள்ளியை மணந்ததன் மூலம், இறைவனுக்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதமில்லை என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
முருகப்பெருமானின் அவதார நன்னாளில், அவர் குடிகொண்டுள்ள மலைக் கோவில்களுக்குச் சென்று, நல்லருள் பெற்று வருவோம்.



வைகாசி விசாக வழிபாடு:

* மயில் மீது வலம் வருபவனே! வேதத்தின் உட்பொருளாய் திகழ்பவனே! கண்டவர் மனம் கவரும் அழகனே! தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமே! சிவபெருமானின் புதல்வனே! முருகப்பெருமானே! உன்னைச் சரணம்அடைகிறோம்.
* "மலையேறி வந்து என்னைத் தரிசித்தால் வாழ்வின் உச்சியை அடைந்து மகிழ்வாய்' என்பதை எடுத்துக் காட்டுவதற்காக, குன்றிருக்கும் இடமெல்லாம் கோயில் கொண்டவனே! ஆறுமுகப்பெருமானே! எப்போதும் எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தருள வேண்டும்.
* பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! ஒளிமயமான ஸ்வர்ண மஞ்சத்தில் அமர்ந்து, ஆயிரம் சூரியன்கள் ஒன்று சேர்ந்தாற்போல் அழகுற காட்சி தருபவனே! தேவர்களுக்கு வாழ்வு அளித்த தெய்வமே! கார்த்திகேயனே! உன்னை எப்போதும் எங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருப்போம்.
* வேடராஜனின் குமரியான வள்ளிநாயகியை மணந்தவனே! இந்திரன் மகள் தெய்வானையின் துணைவனே! தாரகாசுரனை வதம் செய்த வீரனே! தாமரை போன்ற உன் ஆறுமுகங்களும் புன்சிரிப்பால் மலர்ந்துள்ளன. கண்கள் கருணையைப் பொழிந்து கொண்டிருக்கின்றன. சிவகுமரனே! உன் திருவடியைச் சரணடைந்து விட்டோம்.
* இளங்குமரனே! சிவபெருமானுக்கு குருவாய் வந்த குகனே! கந்தப்பெருமானே! சேனாதிபதியே! வெற்றி வேலவனே! மயில்வாகனனே! பக்தர்களின் துயர் தீர்ப்பவனே! எங்கள் தலைவனே! அசுரனை அழித்தவனே! எப்போதும் எங்களைக் காத்தருள வேண்டும்.
* கந்தப்பெருமானே! எங்கள் கண்கள் உன் திருவடிகளை மட்டுமே காணட்டும். காதுகள் உன் திருப்புகழை மட்டும் விருப்பத்தோடு கேட்டு மகிழட்டும். நாக்கு உன் பெருமையை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கட்டும். உனக்கு தொண்டு செய்து வாழ்வதே எங்கள் பணியாக அமையட்டும். 
* முருகா! தாயும் நீயே! தந்தையும் நீயே! உன் பிள்ளைகளான எங்கள் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக. உன்னையன்றி வேறொருவரையும் நாங்கள் அறிந்ததில்லை. பாமரருக்கும் அருள்புரியும் பரம்பொருளே! நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வவளம் ஆகிய அனைத்து பேறுகளையும் தந்தருள்வாயாக.

வைகாசி விசாகத்திருநாlளில் குடும்பத்தினர் அனைவரும் கூட்டாக அமர்ந்து இந்த பிரார்த்தனையைச் செய்து, குமரன் அருள் பெறுங்கள்.

முருகப்பெருமானை பற்றிய 25 ருசிகர தகவல்கள்


முருகப்பெருமானை பற்றிய 25 ருசிகர தகவல்கள்

1. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.
2. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.
( சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.)
3. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.
4. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.
5. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.



6. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.
7. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.
8. முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.
9. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.
10. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்
11. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.
12. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.
13. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.
14. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.
15. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.
16. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.



17. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.
18. முருகப்பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.
19. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.
20. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.
21.முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகை யில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள்பாலிக்கிறார்.
22. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.
23. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.
24. கந்தனுக்குரிய விரதங்கள்: 1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம்.
25. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.


சனி, 26 மே, 2018

வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது



வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது

வாழ்க என்பது வாழ்த்துச் சொல்.

வளமுடன் என்பது ஒரு நிறைவுத் தன்மையைக் குறிக்கும்.

வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத் தன்மையுடன் வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம்.

ஒருவன் எப்போது நிறைவுத் தன்மை அடைய முடியும்?

தேவைகள் பூர்த்தியடையும் போது நிறைவுத் தன்மை ஏற்படும்.

தேவைகளை எப்படி பட்டியலிடுவது.

மனிதனின் பொதுவானத் தேவையை எளிதாக பட்டியலிட்டு விடலாம்.

ஒருவன் மகிழ்ச்சியாக வாழ ஐந்து தேவைகள் முக்கியம்.

1.உடல் நலம்

2.நீளாயுள்

3.நிறைச்செல்வம்

4.உயர்புகழ்

5.மெய்ஞானம்.

இந்த ஐந்தையும் உணர்ந்து அனுபவித்து கடந்து வாழும் வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கை.

உலகின் எல்லா இன்பங்களும் இந்த ஐந்தில் அடங்கிவிடும்.

வாழ்க வளமுடன் என்று ஒருவர் உச்சரித்து வாழ்த்தும் போது, நீங்கள் இந்த ஐந்து செல்வங்களையும் பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்.

இது வெறும் வார்த்தை ஜாலமல்ல ! இதுனூடே ஒரு ஆழமான உளவியல் தன்மை ஒளிந்து இருக்கிறது. அடுத்து இதன் பின் ஒரு அறிவியல் தன்மாற்றமும் இருக்கிறது.

அது என்ன ?

வாழ்க வளமுடன் என்று இன்னொரு முறை உச்சரித்து பாருங்கள். உங்களின் உள் நாக்கு அதாவது தொண்டையின் உள் மேல் பகுதியில் “ழ்” எனும்போது ஒரு அழுத்தம் நிகழ்வதை உங்களால் உணர முடியும்.

உள்நாக்கின் உச்சியில் அதாவது நெற்றிக்கும், பின் மண்டையில் பிடறிக் கண்ணுக்கும் நேர் கோட்டில் ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ளது.

அந்த சூட்சுமம் இந்த பிரபஞ்சத்தோடு நேரடியாக தொடர்புகொண்டிருக்கும் சக்தி.

உங்களின் எண்ணங்களில் எழும் தேவைகளை பிரபஞ்சத்தில் கட்டளையாக மாற்றி அதனை பெற்றுத் தரும் சூட்சுமம் அது.

உங்கள் எண்ணம் வலிமைமிக்கது என்றால், அது உங்கள் மூலமாகவே செயலுக்கு வந்துவிடும். கொஞ்சம் பலகீனமான எண்ணம் என்றாலும் நீங்கள் கவலைப்படத்தேவையில்லை...

நீங்கள் பேரப்பிள்ளைகளை எடுப்பதற்குள்ளாவாவது செயலுக்கு வந்துவிடும். எண்ணம் எப்போது வீணாவது இல்லை.

எண்ணமும் வீணாவது இல்லை. அதனால் எண்ணுவதை வலிமையாக எண்ணுவது சாலச்சிறந்தது.

அந்த சூட்சுமப் பகுதியை அறிவியலில் பீனியல் சுரப்பி என்பார்கள். ஆன்மிகத்தில் துரியம் என்பார்கள்.

வாழ்க வளமுடன் உச்சரிக்கும் போதும் உங்களின் துரியமையம் கட்டளைகள பிரபஞ்சத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்.

ஒருவர் உங்களை வாழ்த்தும் போது நீங்கள் வளமுடன் வாழ கட்டளைகளை அவர் பிரபஞ்சத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறார் என்று அர்த்தம்.

வாழ்க வளமுடன் வெறும் வாழ்த்துச் சொல் அல்ல... அது ஒரு மந்திரச் சொல்.

நன்றி..

 *_நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா?_*

*Kidney :* நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை.

*Stomach :* குளிரூட்டப்பட்ட உணவுகள்.

*Lungs :* புகைப்பிடித்தல்.

*Liver :* கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், மது அருந்துதல்.

*Heart :* உப்பு நிறைந்த உணவு வகைகள்.

*Pancreas :* அதிகப்படியான நொறுக்கு தீனி

*Intestines :* கடல்சார் உணவுகளை பாகுபாடின்றி மிகுதியாக உண்பது.

*Eyes :* Watching TV, Mobile & Computer screens

*Gall bladder :* காலை உணவு தவிர்ப்பது.

நம்மை பாதுகாத்துக் கொள்வது நமது கடமை.

ஏனெனில் பழுதடைந்து விட்டால் இந்த உதிரிபாகங்கள் விலையுயர்ந்து.

மாற்றிப் பொறுத்த மிகவும் செலவு பிடிக்கும்.

எளிதாக கிடைக்காது.

Original போல் இயங்காது.

உண்ணும் உணவில் கவனம் தேவை.

வாழ்க்கை முறையில் கவனம் தேவை.


*ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் 50 இலட்ச்சம்  ஆகும்.*

அந்த 30 இலட்சத்திற்கு என்னென்ன கிடைக்கிறது?

நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா?! முடியாது.

காரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை; ஆகவே, அவனுக்கும் சொந்தம்!

நம் தலைக்கு மேலிருக்கும் கூரையை நம்முடையது என்று சொல்லமுடியுமா? அதுவும் முடியாது; அது, மேல் மாடியில் இருப்பவனுடைய தரை.

ஆகவே, அவனுக்கும் சொந்தமானது!

சரி... வலது பக்க சுவரை நம்முடையது என்று சொல்ல முடியுமா? முடியவே முடியாது...
அது அந்தப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது!

சரி, இடது பக்க சுவர்?! அதுவும் இடதுப்பக்கம் இருப்பவனுக்கும் சொந்தமானது!

நாம் பயன்படுத்துகின்ற படிக்கட்டுகள், லிப்ட் ?! அவையெல்லாம் மொத்த அபார்ட்மென்டுக்கும் சொந்தமானது!

சரி, நமக்கென்று அபார்ட்மென்ட் வளாகத்தில் ஒரு பத்து சதுரடி இடமாவது கொடுத்திருக்கிறார்களா?

நிச்சயமாக இல்லை... இடம் எல்லோருக்குமே பொதுவானது! அப்படியென்றால்,
*அந்த ஒரு கோடிக்கு நமக்கு கொடுக்கப்பட்டது என்ன?!*

1500 சதுர அடி கொண்ட காலியான அந்த SPACE தான் நமக்கு கொடுக்கப்பட்டது!

சுற்றி இருக்கும் சுவர்களோ, கூரையோ, தரையோ நம்முடையது அல்ல, அந்த சுவர்களுக்கு இடையே உள்ள SPACE மட்டுமே நமக்கு கொடுக்கப்பட்டது!

அபார்ட்மென்ட் வளாகத்தில் உள்ள அத்தனை வசதிகளையும் பயன்படுத்தலாம், அனுபவிக்கலாம்,
ஆனால்,
என்னுடையது என்று உரிமை கொண்டாட முடியாது!

கடவுள் நமக்கு கொடுத்ததும் அதுதான்.

இந்த பூமியில் வாழ்வதற்கான SPACE மட்டும்தான் கொடுத்திருக்கிறார்;

அந்த SPACE ல் இருந்துகொண்டு, உலகத்தில் உள்ள அத்தனை சந்தோஷங்களையும் ரசித்து அனுபவிக்கலாம்,

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளலாம்!

ஆனால், இங்கு இருக்கின்ற எதையும் உரிமை கொண்டாட முடியாது.

கொண்டுசெல்லவும் முடியாது!

என்னுடைய அம்மா எனக்கு தானே சொந்தம் என்று சொல்லலாம்,
ஆனால், அவர் அப்பாவின் மனைவி,
அவருக்கு தான் சொந்தம்.

அதன் பின்புதான் குழந்தைகள் வந்தது!

சரி... அம்மா, அப்பாவுக்காவது சொந்தமா என்றால் அதுவும் இல்லை.

அவர் இன்னொருவரின் மகள்; தாத்தாவுக்கு தான் சொந்தம்!

தாத்தாவும் தனியாக சொந்தம் கொண்டாட முடியாது,
காரணம் பாட்டிக்கும் அதில் சம பங்கு இருக்கிறது!

இப்படி இந்த பூமியில் இருக்கின்ற ஒரு துரும்பு கூட நமக்கு சொந்தமானது இல்லை!

நாம் இங்கு நிரந்தரமாக இருக்கப் போவதுமில்லை...

பிறகு ஏன் பிற மனிதர்கள் மீது கோபம், போட்டி, பொறாமை, வெறுப்பு, வஞ்சகம், சுயநலம் எல்லாம்!?

நமக்கு கொடுக்கப்பட்ட SPACEல் சந்தோஷமாக இருப்போம்.

சக மனிதர்களையும் நேசிப்போம்.

*முடிந்தால், பிறர் சந்தோஷப்படும்படி எதாவது செய்வோம்!*


*"வாழ்வியல் உண்மைகள்"*

குற்றம் பார்க்கின் சுற்றமில்லை’ என்பதை மனத்தில் நன்கு பதிய வையுங்கள். உறவினர் வீடுகளுக்குப் போய் வாருங்கள்; உங்கள் வீட்டிற்கு அவர்களை அழைத்து விருந்துண்ணுங்கள். அதே நேரத்தில், உறவோடு ஒதுங்கி வாழுங்கள்;

 பணத்தைச் சேர்த்து வைக்காதீர்கள். உங்களுக்குப் பின் உங்கள் குழந்தைகள் இதனால், கசப்புணர்வை வளர்த்துப் பகைவர்களாகி விடுகிறார்கள்.

 அவர்களைத் திருப்திப் படுத்தவே முடியாது. அன்பைப் பெரிதும் வெளிக் காட்டாதீர்கள்; அளவோடு அன்பு செய்யுங்கள்.

இரவு பத்து மணிக்கு முன்னர் நிம்மதியாகத் தூங்கி, அதிகாலை ஐந்து மணிக்கு முன்னர் விழித்திடுங்கள். தினமும் குறைந்தது பத்து மணித்துளிகளாவது உடற்பயிற்சி செய்யுங்கள். அதுபோல் தினமும் பத்து மணித்துளிகளாவது காலை அல்லது மாலை உடலில் வெயில் படும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம். உதவி வேண்டுமென்று கேட்டால் மட்டுமே, உதவ வேண்டும்.

 உங்கள் சகோதரர்களையும், சகோதரிகளையும் அவர்கள் குழந்தைகளையும் அளவோடு அன்பு செய்யுங்கள்.

கருத்து வேறுபாடு வரும் பொழுது, எதிர்வாதம் செய்ய வேண்டாம். தவறான கருத்தாக இருந்தாலும், உண்மையை அப்பொழுது கூற வேண்டாம்;

 அமைதியாக இருங்கள். அது உங்களுக்கு மனஅமைதியைக் கொடுக்கும்.

 எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்; அவமானங்களை எதிர்கொள்ளுங்கள்;

 அவமானங்களைத் தாங்கிக் கொள்ளும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். யாருக்கும் துன்பமளிக்காமலும், முடிந்தவரை பிறர் துன்பம் போக்கியும் வாழ்தல் இன்பமான எதிர்காலத்திற்கு வழி.

இவை யாவும் அரை நூற்றாண்டிற்கு மேல் வாழ்ந்த வாழ்வியல் அனுபவங்கள்.

"வாழ்க வளமுடன்"

எந்நாளும் இனியநாளே!

*"நட்பும்,அதன் உணர்வும்"*

பழகிக் கொண்டிருக்கும் மனிதர்களுடன் நட்பு கொள்வது என்பது ஆரம்பத்திலேயே

தவறான அடி எடுத்து வைப்பதாகும். நட்பு என்பது பகிர்தலாக இருக்க வேண்டும்.

உன்னிடம் ஏதாவது இருந்தால் பகிர்ந்து கொள். யார் உன்னிடம் பகிர்ந்து கொள்ள

தயாராக இருக்கிறார்களோ அவர்கள் நண்பர்கள். அது தேவை பற்றி. கேள்வி அல்ல.

நீ அபாயத்தில் இருக்கும்போது ஒரு நண்பன் வந்து உதவ வேண்டும் என்ற தேவையேகிடையாது. அது சம்பந்தமில்லாதது. அவன் வரலாம், வராமலும் இருக்கலாம்

ஆனால் அவன் வர வில்லையென்றால் நீ குற்றமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

அவன் வந்தால் நீ மிகவும் நன்றியோடு இரு, வரவில்லையென்றால் பரவாயில்லை.

வருவதும் வராததும் அவனிஷ்டம். நீ அவனை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை,

நீ அவனை குற்றம் சொல்லக் கூடாது. உனக்கு கெட்ட எண்ணம் எதுவும் இருக்கக்

கூடாது. எனக்குத் தேவை ஏற்படும் போது நீ ஏன் வரவில்லை என்ன வகையான

நண்பன் நீ என்று கேள்வி கேட்கக் கூடாது

நட்பு என்பது சந்தைக்கடைக்குரியது அல்ல. நட்பு என்பது கோவிலுக்குரிய மிக

அரிதான விஷயங்களில் ஒன்றாகும், அது கடைவீதிக்குரியது அல்ல. ஆனால்

உனக்கு அந்த வகையான நட்பைப் பற்றி எதுவும் தெரியாது. நீ அதைக் கற்றுக்

கொள்ள வேண்டும்.

நட்பு என்பது மிகப் பெரும் கலை. அன்பின் பின்னே ஒரு இயற்கையின் உந்துதல்

இருக்கும், நட்பின் பின்னே எந்த இயற்கையின் உந்துதலும் இருக்காது. நட்பு என்பது

தன்னுணர்வு கொண்டது. அன்பு தன்னுணர்வு இல்லாதது.

நாம் அன்பு என்று அழைப்பது மனித உணர்வை விட அதிக விலங்குணர்வு

கொண்டது. நட்பு முழுக்க முழுக்க மனித உணர்வு கொண்டது. உன்

உயிரியலிலேயே உள்கட்டமைப்பு கொண்டதல்ல அது. அது உயிரியலை

சேர்ந்ததல்ல. ஆகவேதான் ஒருவர் நட்பில் உயர்கிறார், அவர் நட்பில்

விழுவதில்லை. அது ஆன்மீக பரிமாணம் கொண்டது.

யார் என்னுடைய உண்மையான நண்பன் என கேள்வி கேட்காதே, பதிலாக நான்

உண்மையான நண்பனா எனக் கேள். எப்போதும் உன்னைக் குறித்துப் பார். நாம் எப்போதும் அடுத்தவர்களைக் குறித்துத்தான் அக்கறை கொள்கிறோம். மற்றவர்களை

பற்றி எதையும் உறுதியாக சொல்வது முடியாத காரியம். அது தேவையுமில்லை.

நீ எப்படி அடுத்தவரைப் பற்றி உறுதி கூற முடியும்

மற்றவர் எப்போதும் மாறுதல்தான். இந்த வினாடி அவர் அன்பாக இருக்கக் கூடும்,

அடுத்த வினாடி அவருக்கு அன்பு இல்லாமல் இருக்கக் கூடும். அங்கு எந்த

உறுதிமொழியும் கிடையாது. நீ உன்னைப் பற்றி வேண்டுமானால் உறுதியாக

கூறலாம், ஆனால் அதுவும் இந்தக் கணம் மட்டுமே.

எதிர்காலம் முழுமையையும் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த கணத்தைப்

பற்றி, நிகழ்காலத்தைப் பற்றி மட்டும் நினைத்தால் போதும். நிகழ்காலத்தில் வாழு.

இப்போது இந்த கணத்தில் நட்பும் நட்பின் மணமும் நிரம்பியிருக்கும் போது எதற்காக

அடுத்த கணத்தைப் பற்றி கவலைப் பட வேண்டும் அடுத்த கணம் இந்த

கணத்திலிருந்தே பிறக்கிறது. அது உயர்ந்த ஆழ்ந்த இயல்பாக இருந்தாக வேண்டும்.

அது அதே மணத்தை உயர்ந்த இடங்களுக்கும் கொண்டு வரும். அதைப் பற்றி

நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த கணத்தை ஆழ்ந்த நட்புடன் வாழு.

நட்பு யாரையும் குறிப்பாக நினைத்து இருந்தாக வேண்டிய அவசியம் இல்லை. - நீ குறிப்பிட்ட ஆட்களுடன்தான் நட்பாக இருக்க முடியும் என்பது பழைமையான கருத்து.

வெறுமனே நட்பாக இரு. நட்பை உருவாக்கிக் கொள்வதற்கு பதிலாக நட்புணர்வை

உருவாக்கிக் கொள். அது உனது இருப்பின் இயல்பாக மாறட்டும். உன்னைச் சுற்றி

சூழலை உருவாக்கிக் கொள். அப்போதுதான் உன்னருகில் யார் நெருங்கி வந்தாலும்

நீ அவர்களுடன் நட்புணர்வோடு இருக்க முடியும்.

இந்த பிரபஞ்சம் முழுவதும் நட்புணர்வாக வேண்டும். நீ இந்த இயற்கையுடன்

நட்புணர்வுடன் இருந்தால் ஆயிரம் பங்கு அதிகமாக அது உன்னுடன் நட்புணர்வுடன்
இருக்கும். அதே வழியில் ஆனால் அதிகமான அளவு அது உனக்கு திருப்பித்
தரும். அது உன்னை எதிரொலிக்கும்.

 "வாழ்க வளமுடன்"  .... எந்நாளும் இனியநாளே!

வியாழன், 24 மே, 2018

சாய் பாபா உண்மையான புகைப்படங்கள் மற்றும் வரலாறு.

சாய் பாபா உண்மையான புகைப்படங்கள் மற்றும் வரலாறு.


ஷிர்டி சாய்பாபா
ஷீரடி சாயி பாபா (செப்டம்பர் 28, 1835 - அக்டோபர் 15, 1918) ஒரு இந்திய marmikudu, துறவி, மற்றும் ஞானி.
சாயி பாபாவின் உண்மையான பெயரும் பிறப்பும் தெரியவில்லை. சாய் பாபா பல முஸ்லிம்களாலும் இந்துக்களாலும் புனிதர்கள் என நம்பப்படுகிறார். சாயி பாபாவின் வாழ்க்கையில், இரு மதங்களும் போதனைகளில் கற்பிக்கப்பட்டு உதவி செய்ய முயன்றன. சாய் பாபா மசூதியில் வாழ்ந்து, கோவிலில் புதைக்கப்பட்டார்.
இரண்டு மதங்களின் நடைமுறை அவரது போதனையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரண்டு பாரம்பரியங்களின் வார்த்தைகளையும் படங்களையும் அவர் பயன்படுத்தினார். அவர் அல்லாஹ் மாலிக், மிக முக்கியமான கருத்துக்களில் ஒன்றில், சப் கா மாலிக் ஏக் வார்த்தை உள்ளது (सबका मालिक एक) (இறைவன் அனைத்து இருப்பதன் காரணமாக, இங்கு மட்டும் ஒன்றாகும்).
பல பக்தர்கள் (இந்து மதம் பாரம்பரியம் இருந்து), தத்தாத்ரேயா அவதாரமாக யார் சாய் சிவன், மறுபிரவேசம் கருதப்படுகிறது.


சாயி பாபா பிறப்பு பற்றி தெரியாது. அவர்கள் தேவையற்றவர்கள். நீங்கள் கிராமத்தில் முனிவர் priyanuyayudaina mahalsapatito பக்கீர் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார் ஒருமுறை அவர் கூறினார் கட்டுரை பராமரிப்பில் வளர்ந்தார். [4]. venkosa seluku பக்கிரி தலைவர் ஒருமுறை அவரை ஒரு மனைவி ஒப்படைத்தார் அவர் venkosa மணிக்கு pannendellu ஒரு பயிற்சிபெறும் இருந்ததாக உணர்ந்தார்.

இந்த இரு கதைகள் காரணமாக பாபாவின் முந்தைய வாழ்க்கையைப் பற்றி வேறுபட்ட அபிப்பிராயங்கள் உள்ளன. 
இதுபற்றி பாபா 1838 இல் பிறந்தார். [7]
இளைஞன் ஒரு வேப்ப மரத்தின் கீழ் தியானத்தில் இரவும் பகலும் உட்கார்ந்திருந்திருப்பார்.
கிராமவாசிகள் அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. [8]. மகாலாசபதி, அபா ஜோகேல் மற்றும் காஷினதா போன்ற கிராமவாசிகள் அடிக்கடி பாபாவுக்கு விஜயம் செய்தனர். சாய் பாபா பைத்தியம் பிடித்தார், சில பாறைகள் கூட துப்பாக்கிச் சூடு [9]. அவர் மீண்டும் சிறிது நேரம் சென்றுவிட்டார் போது யாருக்கும் தெரியாது. ஆனால் அவை வெறும் மதிப்பீடுகள் மட்டுமே
வரலாற்று ஆதாரங்கள்
1916 ஆம் ஆண்டு Dabholkar Govindarao ரகுநாத (சாய் பாபா 'hemand பந்த்' மூலமாக பெயரிடப்பட்டது), மராத்தியில் எழுதப்பட்டுள்ளது, "சாய் saccaritra 'முக்கிய ஆதாரமாக புத்தகம், பாபாவின் வாழ்க்கையை அம்சங்களை தொடர்பான. இந்த எழுத்தாளர் தானே சாய் பாபாவின் நெருங்கிய பின்பானவர். பெரும்பாலான விஷயங்கள் நேரடியாகவோ அல்லது பாபாவின் அல்லது சாட்சிகளின் வார்த்தைகளிலோ காணப்படுகின்றன. இந்த ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் பருத்தி நாராயண் சாய் saccaritra -இல் மொழி பெயர்க்கப்பட்டது 'பக்தர்கள் உரை தினசரி பாராயணம் ஒன்றாக கருதப்படுகிறது.
Lilamrtamu சாய் ஸ்ரீனிவாஸ் நினைவகத்தில் ekkirala ஆச்சார்யா பரத்வாஜ் போன்ற பக்தர்கள் எழுதிய வாழ்க்கை அவர்கள் கேள்விப்பட்ட விஷயங்களை அடிப்படையாக அன்டோனியோ rigopolas. கணேஷ் ஸ்ரீ கிருஷ்ணா கர்னா எழுதிய 'ஷிரிதி டைரியா' ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.
முதல் தெலுங்கு ஷீரடி சாய் (1957) இன் வரலாறு வெமுரி வெங்கடேஸ்வர ராவ் எழுதியது.
பி.வி. நரசிம்ம வஸ்மமிஜியின் 'சாய் செய்தி' ஒரு முக்கியமான தெலுங்கு புத்தகமாகும்.

செவ்வாய், 22 மே, 2018

இந்துசமயம் உருவான இடம் தமிழ்நாடு தென்னாடு..


இந்துசமயம் உருவான இடம் தமிழ்நாடு தென்னாடு..

இந்து சமயத்தின் ஏழு பெரும் பிரிவுகள் :

சைவம்             )
சாக்தம்             )
வைஷ்ணவம்  )
காணாபத்யம்  )-இந்துமதம்
கெளமாரம்       )
செளரம்             )
ஸ்மார்த்தம்       )

சைவத்தின் முழுமுதற் தெய்வமான சிவ கோவில்களில் 283 இல் 276 தமிழ்நாட்டில் தான் உள்ளது...!

வைணவத்தின் 108 வைணவ திவ்ய தேசத்தலங்களில் 96 தமிழ்நாட்டில்தான் உள்ளது...!

கெளமாரத்தின் 21 முருகன் கோவில்களில் 18 கோவில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளது...!

கானாபத்தியத்தில் அஷ்ட கணபதிகள் கோவில்கள் அனைத்தும் தமிழ்நாட்டில்தான் உள்ளது..!

செளரத்தில் சூரியனை தெய்வமாக தைப்பொங்கல் தினத்தன்று வழிபடுவது தமிழ்நாட்டில் தான்...!

சாக்தத்தில் பராசக்தி நவதுர்க்கை கோவில்கள் அம்மன் கோவில்கள் பெண் தெய்வங்களுக்கு கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்...!

இந்து சமயத்தின் கிளை இணை துணை சமயங்களான சமணம் புத்தம் உருவானதும் தமிழ்நாட்டில்தான்.

மேற்க்கண்ட ஏழுப்பெரும் பிரிவு தெய்வங்களையும் வணங்கும் ஒட்டுமொத்த இந்துக்களான ஸ்மார்த்தர்கள் இருப்பதும்தமிழ்நாட்டினல்தான்.

 பதினெட்டுசித்தர்கள் தோன்றி வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்தது தமிழ்நாட்டில்தான்...!

ஆழ்வார்கள்நாயன்மார்கள் தோன்றி வாழ்ந்து மறைந்தது தமிழ்நாட்டில்தான்.

பஞ்சபூதகோவில்களில் நிலம் நீர் ஆகாயம் நெருப்புக்கான ஸ்தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

நவக்கிரக கோவில்கள் அனைத்தும் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

12 #ராசிகள் மற்றும்
27 #நட்சத்திரங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

சப்தவிடங்க ஸ்தலங்கள் இருப்பது தமிழ்நாட்டில்தான்.

இந்து பண்பாட்டின் அடையாளமே
தமிழ்நாடு தான் !!!!!

இந்து பண்பாட்டின் வாழ்வியல்முறையே தமிழ்நாடு தான் !!!!!

இந்து பண்பாட்டின் மருத்துவமான
இயற்கைசித்தமூலிகை மருத்துவம் உருவானதே தமிழ்நாடு தான் !!!!

இந்து பண்பாட்டின்
இயற்கைவேளாண்மை தோன்றி செழித்தோங்கியது தமிழ்நாட்டில்தான் !!!!

இப்பொழுது அனைவரும் புரிந்துணர்வு செய்து கொள்ளவேண்டியது :::

தமிழ்நாடு முழுக்க முழுக்க  ஆன்மிகபூமி !!!!

தென்னாடுடைய_சிவனே_போற்றி !

எந்நாட்டவர்க்கும்_இறைவா_போற்றி ! ஓம் நமசிவாய சிவாயநம ஓம்...

ஞாயிறு, 20 மே, 2018

அறுபடை வீடு தெரியும்... ஈசன் அருள்பாலிக்கும் அட்ட வீரட்ட தலங்கள் தெரியுமா?



அறுபடை வீடு தெரியும்... ஈசன் அருள்பாலிக்கும் அட்ட வீரட்ட தலங்கள் தெரியுமா?

படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து செயல்களைப் புரியும் சிவபெருமான், தமது லீலைகளின் மூலம் பலருடைய ஆணவத்தை அடக்கி, பக்தர்களைக் காப்பாற்றியிருக்கிறார். குறிப்பாக பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, ஆட்கொண்ட தலங்களே அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அட்ட வீரட்டத் தலங்கள் அனைத்துமே தமிழ்நாட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1.பிரமசிரக்கண்டீசுவரர் ஆலயம், திருக்கண்டியூர்
*****************************************************

தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாறுக்கு சுமார் 4 கி.மீ தொலைவிலிருக்கிறது திருக்கண்டியூர். மூலவர் பெயர் வீரட்டேசுவரர்; அம்பிகை மங்கள நாயகி.
ஐந்து தலைகளுடன் படைப்புத் தொழிலைச் செய்து வந்த பிரம்மன், அனைத்து உயிர்களையும் படைக்கும் தானே உயர்ந்தவன் என்று கர்வம் கொண்டார். பிரம்மனின் செருக்கை ஒடுக்க நினைத்த சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையைக் கொய்து செருக்கை அடக்கினார். பிரம்மாவின் சிரத்தை தன் சூலத்தால் கண்டம் செய்த காரணத்தால், இந்தத் தலத்துக்கு `கண்டியூர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இறைவனுக்கு `பிரமசிரக்கண்டீசுவரர்’ என்று திருப்பெயர். இவரை வழிபட்டால், சகல தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

2. வீரட்டேசுவரர் ஆலயம், திருக்கோவிலூர்
**********************************************

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது வீரட்டேசுவரர் ஆலயம். வீரட்டேசுவரர் சுயம்புவாக அருள்புரிகிறார். இறைவன் வீரட்டேசுவரர்; அம்பிகை பெரியநாயகி, சிவானந்தவல்லி. அந்தகாசுரனை கீழே தள்ளி, அவன் மேல் சூலாயுதத்தை ஏவும் நிலையில் அந்தகாசுர சம்ஹாரமூர்த்தி காட்சிதருகிறார். அந்தகாசுரன் என்பவன், இறைவனிடம் வரம் பெற்ற செருக்கில் உலகத்திலுள்ள அனைத்து உயிர்களையும் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். தேவர்களின் வேண்டுதலுக்கு இரங்கிய சிவபெருமான், தம்முடைய அம்சமாக பைரவரைத் தோற்றுவித்து, அந்தகாசுரனை சம்ஹாரம் செய்தார். அஷ்டமியன்று இந்தத் தலத்துக்கு வந்து பைரவர் உருவில் அருள்புரியும் இறைவனை வழிபட்டால், கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.

3. வீரட்டானேசுவரர் ஆலயம், திருவதிகை
*********************************************

கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து 2 கி.மீ தொலைவில் கெடிலம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. இந்தத் தலத்தில் அருளும் இறைவன் திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்தார். மேலும், திருஞானசம்பந்தருக்கு திருநடனமாடியும், அப்பருக்கு ஏற்பட்ட சூலைநோயைத் தீர்த்தும் அருள்புரிந்திருக்கிறார். இறைவனின் திருப்பெயர் வீரட்டானேசுவரர்; அம்பிகை பெரியநாயகி, திரிபுரசுந்தரி.
தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் அரக்க சகோதரர்கள் பிரம்மனிடம் வரம் பெற்று தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றாலான பறக்கும் கோட்டைகளைப் பெற்றனர். மூன்று கோட்டைகளும் முப்புரம் என அழைக்கப்பட்டன. முப்புரத்தைப் பெற்ற ஆணவத்தால் மூவரும் தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் மூன்று கோட்டைகளையும் தம்முடைய புன்னகையால் எரித்து அசுரர்களை சம்ஹாரம் செய்தார். சிவபெருமான் முப்புரங்களை அழித்த இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டால், நம் மனதிலிருக்கும் தீய குணங்கள் நீங்குவதுடன், வயிறு தொடர்பான பிணிகளும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

4.தருப்பறியலூர் வீரட்டானேசுவரர் ஆலயம், கீழப்பரசலூர்
**************************************************************

காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கிறது இந்தத் திருக்கோயில். மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ தொலைவில் இருக்கிறது பரசலூர். திருப்பறியலூர் என்பது புராணப் பெயர். `பரசலூர்’ என்றே இப்போது அழைக்கப்படுகிறது. சிவபெருமான் தட்சனின் கர்வத்தை அடக்கிய தலம். மூலவர்: வீரட்டானேசுவரர்; அம்பிகை: இளங்கொம்பனையாள்.
தட்சன், தன் மாப்பிள்ளையான சிவபெருமானை மதிக்காமலும், அவருக்குச் சேரவேண்டிய அவிர் பாகத்தைக் கொடுக்காமலும் ஒரு யாகம் செய்கிறான். அதனால் கோபம் கொண்ட சிவன் வீரபத்திரர் மூலம் தட்சனின் யாகத்தை நிறுத்தி, யாகத்தில் பங்குகொண்ட தேவர்களை அழித்ததுடன், தட்சனின் தலையைக் கொய்து அவனது அகங்காரத்தை அடக்கிய தலம் இது. தட்சனின் தலையைப் பறித்ததால் `திருப்பறியலூர்’ எனவும் அழைக்கப்படுகிறது. இந்தத் தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால், மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

5.வீரட்டானேசுவரர் ஆலயம், திருவிற்குடி
********************************************

இந்தத் தலமும் காவிரியின் தென் கரையில் அமைந்திருக்கிறது. திருவாரூரிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவிலுள்ளது திருவிற்குடி. இறைவன்: வீரட்டானேசுவரர்; அம்பிகை: ஏலவார்க்குழலி, பரிமளநாயகி.
ஜலந்தரன் என்ற அசுரனை சிவபெருமான் சம்ஹாரம் செய்த தலம் இது. ஜலந்தரனின் மனைவி பிருந்தையை துளசியாக ஏற்ற தலம் திருவிற்குடி. முன்னோர் வழிபாட்டில் ஏற்பட்ட தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருவிற்குடி.

6.வீரட்டானேசுவரர் ஆலயம், திருவழுவூர்
********************************************

திருவாரூர் - மயிலாடுதுறை சாலையில் மங்கைநல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது வழுவூர். இந்தத் தலத்தில் இறைவன் சுயம்புவாகத் தோன்றியவர். இந்தத் தலத்தில்தான் கஜசம்ஹார மூர்த்தியாக அருளும் சிவபெருமானின் திருவடியின் உட்புறத்தை தரிசிக்க முடியும். இறைவன்: வீரட்டானேசுவரர்; அம்பிகை: இளங்கிளைநாயகி.
இந்தத் தலத்தில் யானை வடிவிலிருந்த கஜமுகாசுரன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சிவபெருமான், அவனுடைய தோலை உரித்து ஆடையாக உடுத்தியிருக்கிறார். அமாவாசையன்று இந்தத் தலத்துக்கு வந்து, தீர்த்தக் குளத்தில் நீராடி இறைவனையும் அம்பிகையையும் வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

7. வீரட்டேசுவரர் ஆலயம், திருக்குறுக்கை
********************************************

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 11 கி.மீ தொலைவில் காவிரியின் வடகரையில் அமைந்திருக்கிறது திருக்குறுக்கை. இறைவன்: வீரட்டானேசுவரர்: அம்பிகை: ஞானாம்பிகை.
கயிலையில் தவத்தில் ஆழ்ந்திருந்த சிவபெருமான், தவம் கலைந்து பார்வதி தேவியை மணந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, தேவர்களின் தூண்டுதலின்பேரில் மன்மதன் புஷ்ப பாணங்களை சிவபெருமானின் மீது தொடுக்க, நிஷ்டை கலைந்ததால் சினம்கொண்ட சிவபெருமான், மன்மதனை எரித்த தலம் இது. பின்னர் ரதிதேவியின் வேண்டுதலுக்கு இரங்கி, மன்மதனை உயிர்ப்பித்து, ரதியின் கண்களுக்கு மட்டுமே அவன் தெரிவான் என்று வரம் கொடுத்த தலம். திருமால், பிரம்மா, திருமகள் ஆகியோர் வழிபட்ட தலம். இந்தத் தலத்துக்கு வந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்கி இனிய இல்லற வாழ்க்கை அமையும்.

8. அமிர்தகடேசுவரர் ஆலயம், திருக்கடையூர்
***********************************************

மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் அமைந்திருக்கும் இந்தத் தலத்தில் அருளும் இறைவனின் திருப்பெயர் அமிர்தகடேசுவரர்; அம்பிகை அபிராமி.
தன் உயிரைக் கவர்ந்து செல்ல வந்த யமதேவனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, சிவலிங்கத்தைத் தழுவிக்கொண்டான் மார்க்கண்டேயன். ஆணவம் கண்களை மறைக்க, ஈசனின் சந்நிதியில் இறைவனைத் தழுவிக்கொண்ட மார்க்கண்டேயன் மீது பாசக்கயிற்றை வீசினான் யமதர்மன். தன் பக்தனைக் காப்பாற்றவும், யமதர்மனின் ஆணவத்தை அடக்கவும் வேண்டி, சிவபெருமான் யமனைக் காலால் உதைத்து சம்ஹாரம் செய்த தலம் இது. இந்தத் தலத்தில் நீண்ட ஆயுளும் நோயற்ற வாழ்க்கையும் பெற ஆயுஷ் ஹோமம் செய்துகொள்வது சிறப்பு. சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் தினமும் நடைபெறும் தலம்.

பிறப்பிலி என்னும் பெருமைக்கு உரிய சிவபெருமானின் அட்ட வீரட்டத் தலங்களை தரிசித்து வழிபட்டால், கருமேகங்களாக நம் மனதை மறைத்திருக்கும் ஆணவம், கண்மம், மாயை ஆகிய மூன்றையும் வென்று, இறைவனின் திருவருளைப் பெற்று சிறப்புற வாழலாம்.