செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில்



பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில்

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சவடி என்னும் சிற்றூரில் இந்த கோவில் உள்ளது. இது ஒரு ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ஆகும்.

தல வரலாறு

ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்தனர். இதுபற்றிய விபரம் ரமணி அண்ணா என்பவர் பார்த்த தேவபிரசன்னத்தில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவானது. ஆஞ்சநேயர் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதால், மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் எடை கருங்கல்லைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட்டது.

பஞ்சமுகத்திற்கான காரணம்

ராமனுக்கும், ராவணனுக்கும் போர் நடந்த போது, ராவணன் ஆயுதங்களை இழந்தான். இதனால் அவனை மறுநாள் வரும்படி அனுப்பி விட்டார். ராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்கு என்பதை ராவணன் உணரவில்லை. மீண்டும் ராமருடன் போர் செய்ய நினைத்த ராவணன், "மயில் ராவணன்' என்ற மற்றொரு அசுரனின் துணையுடன் போருக்கு வந்தான். ராமரை அழிக்க மயில் ராவணன் கொடிய யாகம் நடத்த திட்டமிட்டான். இந்த யாகம் நடந்தால் ராம-லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று விபீஷணன் ராமரிடம் தெரிவித்தான். அவனை அழிக்க ஆஞ்சநேயரை அனுப்பினார் ராமன். நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்ற ஆஞ்சநேயருக்கு, அந்த தெய்வங்கள் தங்களின் சக்தியை அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார்.

தல சிறப்பு

ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் செயல்களில் வெற்றி, லட்சுமி கடாட்சம், ஹயக்கிரீவரின் அருளால் அறிவாற்றல், ஆன்மிக பலம், வராகரின் அருளால் மனத்துணிவு, கருடனின் அருளால் நஞ்சு ஆபத்து விலகும் தன்மை, ஆஞ்சநேயர் அருளால் மன அமைதி, சகல சவுபாக்கியம் கிடைக்கும்.

கோவில் அமைப்பு

12 ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து கோவில் அமைந்துள்ளது. ராமர், சீதை, இலட்சுமணன், சத்துருக்கன், பரதன் ஆகியோர் ஒரு சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயர விமானமும், அதன் மீது 5 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு அபிஷேகம் செய்ய உயர்தூக்கி இருக்கிறது. இதற்கு 1008 லிட்டர் பால் தேவைப்படும். இங்குள்ள 1200 கிலோ எடையுள்ள மணியை ஒலித்தால் 8 கி.மீ. தூரம் ஒலிக் கேட்கும். பெரிய தீர்த்த கிணறும் உள்ளது. இங்கு ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சந்தன மரத்தால் செய்யப்பட்டது. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது.

மிதக்கும் கல்

சீதையை மீட்பதற்காக ராமர், ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை சென்றபோது, சேது சமுத்திரத்தில் பாலம் அமைக்கப்பட்டது. நளன், நீலன் என்ற வானர வீரர்கள் இந்த பாலப்பணியை நடத்தினர். நளன் தேவசிற்பியான விஸ்வகர்மாவின் மகன். விஸ்வகர்மா தன் மனைவிக்கு, "என்னைப்போலவே உனக்கொரு மகன் பிறப்பான். எனக்குரிய திறமை அனைத்தும் அவனிடமும் இருக்கும்,என வரம் கொடுத்தார். இதனால் நளன் தன் தந்தையைப்போல் சிற்ப பணியில் சிறந்து விளங்கினான். இவனால் கடலிலும் பாலம் கட்ட முடிந்தது. இந்த மிதக்கும் கல்லின் ஒரு பகுதி இக்கோவிலில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. எட்டு கிலோ எடையுள்ள இந்தக்கல்லை தண்ணீர் நிறைந்த ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு பூக்களால் அலங்கரித்துள்ளார்கள்
.
இருப்பிடம்

திண்டிவனம் புதுச்சேரி சாலையில் திருச்சிற்றம்பலம் என்ற இடத்தில் இந்த கோயில் உள்ளது. இந்த இடத்தின் பெயர் பஞ்சவடி. திண்டிவணத்தில் இருந்து புதுச்சேரி சாலையில் 29 வது கி.மீ லும் ,புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் சாலையில் 9 வது கி.மீ லும் உள்ளது. இந்த கோயில் புதுச்சேரிக்கு மிக அருகிலே உள்ளது.

பொது தகவல்கள்

மூலவர் : ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர்
திருமேனி : 36 அடி உயர பிரமாண்ட திருமேனி
ஊர் : பஞ்சவடி
மாவட்டம் : விழுப்புரம்
திறப்பு நேரம் : காலை 7 முதல் இரவு 8 மணி வரை (இடையில் நடை அடைப்பு இல்லை)
தொலைபேசி : 0413-267 1232, 267 1262, 267 8823
அருகிலுள்ள ரயில் நிலையம் : புதுச்சேரி, திண்டிவனம்
அருகிலுள்ள வானூர்தி நிலையம் : புதுச்சேரி, சென்னை.

ஐந்துவிதமான பலனை தரும் பஞ்சமுக ஆஞ்சநேயர்
ஒரு முறை ராமருக்கும், ராவணனுக்கும் போர் நடந்தது. இதில் ராவணன் நிராயுதபாணியானான். இதனால் ராமர் ராவணனை கொல்ல மனமின்றி,"இன்று போய் நாளை வா' என திருப்பி அனுப்பிவிட்டார். ராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்குத்தான் என்பதை ராவணன் உணரவில்லை. மீண்டும் ராமருடன் போர் செய்ய நினைத்த ராவணன், "மயில் ராவணன்' என்ற மற்றொரு அசுரனது துணையுடன் போருக்கு கிளம்பினான். ராமரை அழிப்பதற்காக மயில் ராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான்.
இந்த யாகம் நடந்தால் ராம-லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்பும்படி ராமரிடம் கூறினான். ராமர் கூறியதன் பேரில் ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.இந்த தெய்வங்கள் அனைவரும் போரில் அனுமன் வெற்றிபெற தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர்.
இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மனித குல வாழ்விற்காக மயில் ராவணனை அழித்தார்.
இப்படி பஞ்ச முகத்தில் விசேஷ அவதாரம் எடுத்த தால், பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக "பஞ்சமுக ஆஞ்சநேயர்' விளங்குகிறார். அத்துடன் வெற்றியையும் வளத்தையும் குறிக்கும் வகையில் "ஜய மங்களா' என்றும் அழைக்கப்படுகிறார்.
பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் எடுத்த காரியங்களில் வெற்றியும், லட்சுமி கடாட்சமும், ஹயக்கிரீவரின் அருளால் உண்மை யான அறிவாற்றல், ஆன்மிக பலமும், வராகரின் அருளால் மனத்துணிவும், கருடனின் அருளால் அனைத்து விதமான நஞ்சின் ஆபத்து விலகும் தன்மையும், ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதியும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தோஷம் நீக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர் அனைத்து கோரிக்கைகளையும் ஈடேற்றக்கூடிய வல்லமை படைத்தவர் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது முகங்களான கருடமுகம் பிணி நீக்கும், வராகமுகம் செல்வம் அளிக்கும், அனுமன் முகம் சகல கிரகதோஷமும் போக்கி எல்லா நலமும் தரும், நரசிம்மமுகம் தீமையைப் போக்கும், ஹயக்ரீவர் முகம் கல்வியும், ஞானமும் தரும். பக்தர்கள் வேண்டியதை வேண்டியவாறு அருள்கிறார் பஞ்சமுக ஆஞ்சநேயர். இவரது தாடை நீண்டு இருக்கும். முகம், நரசிம்ம முகம், கருடன் முகம், வராஹ முகம், அனுமன் முகம், ஹயக்கிரீவர் முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முகவடிவில் ஒருங்கிணைந்து உள்ளார்.
கிழக்கு முகம் ஹனுமனாக சத்ருக்களை அழிக்க வந்த முகம் "பிரதிவாதி முகஸ்நம்பி'' என்ற சுலோக வரியினால் அனுமனை வேண்டினால் எதிரிகள் விலகுவர் என பொருள் தரும். தெற்கு முகம் நரசிம்ம முகம். இம்முக ரூப ஆஞ்சனேயர் பயத்தினால் உண்டாகும் பிரச்சனைகள், பில்லி சூன்யம் துஷ்ட தேவதைகளால் உண்டாகும் பரயந்த்ர பரமந்த்ர தோஷங்களை போக்க அவதரித்த முகம். மேற்கு முகம் கருடன் முகத் தரிசனம் சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தரும்.

வடக்கு முகம் வராஹமுகத் தரிசனம், தீராத கடன், பொருள் இழப்பு விஷ சுரம், மர்ம நோய்கள் முதலியனவற்றை அழித்து சாந்தியும், நிம்மதியும் தரவல்லது. பொருளாதார மேன்மை உண்டாகும். மேல் முகம் ஸ்ரீஹயக்கிரீவர் முகம். இம்முக ஆஞ்சநேயர் சகல கலைகளையும், சிறந்த ஞானத்தையும், சொல்வன்மையையும், சகல கலா வல்லவனாக தேர்ச்சியையும் தருபவர். அனுமனை பஞ்சமுக ஆஞ்ச நேயராக வழிபாடு செய்யும் போது உங்களுக்கும் சொல்வன்மை, ஆரோக்கியம், எதிரிகள் விலகல் என அனைத்தும் உண்டாகும்.

திங்கள், 24 பிப்ரவரி, 2020

மூன்றாம் பிறை தரிசனம் ஸ்பெஷல்


மூன்றாம் பிறை தரிசனம் ஸ்பெஷல்
25.2.20 !

 மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள்.  சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.

சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும். காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவு
படுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.மூன்றாம் பிறையை பார்த்தல் நமக்கு மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

மூன்றாம்பிறை பிறந்த கதை :

ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார். தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் . தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர்.  சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறு அருளினார்.

மூன்றாம் பிறை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் :

சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.
 மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.
மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையன்று (சோமவாரத்தில்) வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

அனைத்து மதங்களும் போற்றும் மூன்றாம் பிறை:

மூன்றாம் பிறையை சிறப்பை இன்னும் சொல்வதெ ன்றால் அனைத்து மதங்களுமே இதை ஏற்றுகொ ண்டுள்ளன.
அதாவது இஸ்லாம் மத‌ம், ஜைன‌ம், கிறித்தவம், இந்து மத‌ம் என்று எல்லா மதங்களும் மூன்றாம்பிறை என்பது தெய்வீக அம்சம்பொருந்தியது
என தெரிவிக்கிறது . அந்த பிறையைகண்டு வணங்குவது ஆயுளை விருத்தி செய்யும்.
செல்வங்களை சேர்க்கும். பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும். மூன்றாம் பிறைச்சந்திரனை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் தரிசிப்பதால் மனதில் உள்ள கல்மஷங்கள் பாபங்கள் குழப்பங்கள் விலகி மன நிம்மதியும் , தெளிவான ஞானமும் ஆரோக்கியமும், தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் ஏற்படும்.

*பிறை பார்ப்பதன் புண்ணியம்*

வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. ஊர்மக்கள் அவரவர் பங்காக மணலைக் கொட்டி, உடையும் கரையை அடைத்தார்கள்.
மதுரை மாநகரில் பிட்டு விற்று வாழ்ந்து வந்த மூதாட்டியின் பங்கினை அடைக்க யாருமில்லை. அவள் தினமும் வழிபடும் சொக்கநாதப் பெருமானை நினைத்து வருந்தினாள்.
அவளது உண்மையான அன்பிற்கு செவி சாய்த்த இறைவர், தாமே கூலி ஆளாக வந்து அவள் பங்கிற்கு வேலை செய்தார் என்பது திருவிலையாடற்புராணம் கூறும் செய்தியாகும்.
 கிழவியின் பங்கினை அடைக்க சிவபெருமானே கூலி ஆளாக வரவேண்டுமா? அப்பெருமான் தன்னிடம் உள்ள பூதக்கணங்களில் ஒன்றை அனுப்பி இருந்தாலே போதுமே! அப்பெருமானே ஆளாக வரும் அளவிற்கு அந்த மூதாட்டியின் தகுதி என்ன என்பது பற்றி சிந்திப்போம்.
திருவிளையாடற் புராணத்தை அருளிய பரஞ்சோதி முனிவர்
     *திங்கள் ஆயிரம் தொழுதாள்* என்று கூறுகின்றார். ஆயிரம் பிறையைத் தரிசித்த மேலான புண்ணியம் தான் அவள் பெற்றிருந்த தகுதியாகும்.

பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். பிறை, சிவபெருமான் திருமுடிமேல் இருப்பதல்லவா? பிறையை தரிசிக்கும் பொழுது பிறையணிந்த பெருமானை அல்லவா நாம் தரிசிக்கின்றோம்.
பிறையை தொடர்ந்து வணங்குவதால் அளவிட முடியாத புண்ணியத்தை பெறலாம். இன்று முதல் அனைவரும் பிறையை வணங்கும் உயர்ந்த வழக்கத்தை மேற்கொள்வார்களாக!

*பிறை பார்க்கும் பயன்*

#மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.

#நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.

#ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.

#ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.

#ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்ட கடன் தீரும்.

#பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில் புகழ் ஓங்கும்.

வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.

#நீடித்த பிறை தரிசனம் நீடுலக வாழ்வு தரும்  ( முத்திப்பேறு )

மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வர்.

அதற்கான முறைகளையும் காண்க:

 ஒரு தாம்புள தட்டில் பச்சரிசி அல்லது பச்சை நெல் பரப்பி அதில் குல விளக்கான காமாட்சி அம்மன் விளக்கு வைத்து நல்ல எண்ணெய் ஊற்றி பஞ்சு அல்லது பருத்தி நூல் திரி போட்டு மேற்கு பக்கமாக விளக்கு முகம் வைத்து ( வெளியில் வந்து வழிபாடு செய்ய வேண்டும்,) ஏற்றி வணங்க வேண்டும், அப்போது இறைவனை மும்மூர்த்தியாகவும் பாவித்து வணங்கலாம்.அவர்களிடம் அதாவது பிறையை பார்த்து கையேந்தி வணங்க வேண்டும்.தேவையை கேட்க வேண்டும். இந்த தேவையை கேட்கும் முன் இன்று காலையில் இருந்து ஏதாவது ஒரு உயிருக்காவது உணவு தண்ணீர் தர்மம் செய்திருக்க வேண்டும். இந்த தர்மம் நம் சேமிப்பு கணக்கில் இருக்கும், இதை அளந்தே இறைவன் நமக்கு கூலி வழங்குவார். இதைத்தான் முன்னோர்கள் கையில் ஏதாவது வைத்துக் கொண்டு வணங்க வேண்டும் என்றார்கள். பின்னாளில் வந்தவர்கள் கையில் காசு. நகை. தானியம். மாங்கல்யம். இவைகளை வைத்து வழிபடும் முறைகளை செய்தார்கள். தவறாக புரிந்து கொண்டவர்கள் காட்டிய வழி இன்றும் கையாளப்படுகிறது. கையில் எதுவும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தர்ம பலம், மனதிலே அன்பு பலம், இவை மட்டும் கொண்டு மேற்கு நோக்கி தீபம் ஏற்றி கையேந்தி வழிபட நாம் செய்து வைத்துள்ள தர்மத்தின் கூலியாக நம் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்வார்.

சூரியனிடமும். சந்திரனிடமும் வேறு எந்த தெய்வத்திடமும் நாம் வேண்டியதை கேட்கும் போது கையேந்தியே கேட்க வேண்டும். அதுவே யாசகம் பெறுவது . ஸ்ரீ கிருஷ்ணர் கூட கர்ணனிடம் யாசகம் பெறும்போது கையேந்தியே பெற்றார். சிவபெருமான் கூட அனு தினம் அவரவர் செய்து வைத்துள்ள தர்மத்தை பிச்சையாக வாங்கி அதன் பலனை அவரவருக்கு பிச்சை இடுவார். இதை படி அளப்பது என்பார்கள்.எனவே இதை உணர்ந்து பவ்யமாக மரியாதையாக பிறை தரிசனம் செய்யும் போது வேண்டுங்கள். செல்வ, சந்தோஷ வளம் கிட்டும்.
வணங்கி முடித்த பின் அந்த தீபத்தை ஒரு முறை சுற்றி வந்து வடக்கு நோக்கி விழுந்து வணங்கவும்.பின்பு சிறிது தண்ணீர் எடுத்து பூமியில் விட்டு, தீபத்தை அணையாமல் நடு வீட்டில் கொண்டு வந்து வைத்து வணங்கவும்.

 இதுபோல் குறைந்தது மூன்று சந்திர தரிசனத்தையாவது செய்வது நலம்.ஆயுளுக்கும் செய்து வந்தால் தரித்திரனும். அவனிருக்கும் போதே உயர்ந்த செல்வத்தை பெறுவான். இது உறுதி.மேக மூட்டமாக உள்ள காலங்களில் பிறை தெரியாது.எனினும் கவலை இல்லை.மாலை 6 1/2 மணி முதல் 7 1/2 மணிக்குள் மேற்கு திசை அடிவானத்தை பார்த்து, கூறிய முறைப்படி வழிபட்டால் போதும்.நலம் பயக்கும்.பிறை தரிசனம் செய்யும் போது நிதான மன பக்குவத்துடன் செய்ய வேண்டும். குறிப்பாக சந்தோஷ மன நிலையில் பிறையை காண வேண்டும். என்ன மனநிலையில் நாம் பிறையை காண்கிறோமோ அதுவே வரமாக நமக்கு பெருகி கிடைக்கும்.எனவே நல்ல மனதோடு தேவைகளை கேட்க வேண்டும்.அசைவ உணவை விரும்பி உண்ணும் இஸ்லாமியர்கள்கூட இந்த பிறை தரிசனத்தை காணும் நாளில் கடுமையான விரதங்களை மேற்கொண்ட பின்னரே பிறை தரிசனம் கண்டு விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

இந்த பிறைநாள் செவ்வாய். வெள்ளி. சனி கிழமைகளில் வந்தால் இரட்டிப்பான பலன்கள் உண்டு.அதே போல் சித்திரை. வைகாசி மாதங்களில் காணும் பிறை தரிசனத்திற்கு ஒரு வருட பிறை தரிசனம் கண்ட பலன் கிட்டும். அதே போல் கார்த்திகை,மார்கழி மாதங்களில் காணும் பிறை தரிசனத்தால் சகல பாவங்களும் தீரும். ஆக மகிமை பெற்ற சந்திர பிறை தரிசனம் செய்தால் அறிவு வளரும், ஞாபக சக்தி கூடும், கேட்ட வரம் கிடைக்கும், செல்வமும் சந்தோஷமும் தேடிவந்து அமையும்.
திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராய் நின்று பிறையை வணங்க வேண்டும்.
திருமணம்ஆகாதவர்கள் பெற்றோர்களுடன் நின்று பிறை தரிசனம் காண வேண்டும்.சூழ்நிலையால் முடியாதவர்கள் தனித்து நின்றும் வழிபடலாம். இந்த பிறை தரிசனம் காண ஆண்,பெண் பேதமில்லை. யாருக்கு செல்வம்,சந்தோஷம், கல்வி வேண்டுமோ அவரவர் தரிசனம் கண்டு வணங்கி கேட்க நிச்சயம் கிடைக்கும்.

ஓரிரு முறை தரிசனம் கண்டும் இன்னும் கிடைக்கவில்லையே என நினைக்காமல் பொறுமையாக வழிபட்டு வரவேண்டும். அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு இறைவன் யோகத்தை அருளுவார்.எனவே பொறுமையாக உண்மையாக வழிபட்டு வரவேண்டும். சிலருக்கு ஒரே தரிசனத்திலேயே கிடைத்து விடும்.சிலருக்கு 12 மாதம் பிறை தரிசனம் கண்டவுடன் தான் பலன் கிடைக்கும். எனவே இறைவன் மேல் நம்பிக்கை வைத்து தரிசனம் காணுங்கள். அளவு கடந்த நன்மைகளை பெறுங்கள் .

வாழ்க வளமுடன் !

துன்பங்கள் நீக்கியருளும் திருவெண்ணெய்நல்லூர் கோவில்


துன்பங்கள் நீக்கியருளும் திருவெண்ணெய்நல்லூர் கோவில்

சிவபெருமானின் திருப்பாதம் பதிந்த பெரும் புனிதமான புராதனமான திருத்தலம், திருவெண்ணெய்நல்லூர். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

திருவெண்ணெய்நல்லூர் கோவில்

சிவபெருமானின் திருப்பாதம் பதிந்த பெரும் புனிதமான புராதனமான திருத்தலம், திருவெண்ணெய்நல்லூர்.

ஒருமுறை திருக்கயிலாயத்தில், பளிங்கு போல் காட்சியளித்த பனிப்படலத்தில் தன் கண்களைத் திறந்து நோக்கினார், சிவபெருமான். அதில் அவரது பிம்பம் தெரிந்தது. தன் எதிரில் பிரதிபலித்த அந்த பிம்பத்தின் அழகில் மயங்கிய ஈசன், அதை நோக்கி “சுந்தரா வா” என்றார். உடனே அந்த பிம்பம் உயிர் பெற்று, சிவபெருமானை நோக்கி வந்தது. அவருக்கு சுந்தரர் என்று பெயரிட்டு, அணுக்கத் தொண்டராய் அருகில் அமர்த்திக் கொண்டார் சிவன்.

திருப்பாற்கடல் கடைந்தபோது, அதில் இருந்து வெளிப்பட்ட ஆலகால விஷத்தை, பந்து போல உருட்டி சிவபெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தவர், சுந்தரர்தான். அதனால்தான் அவரது பெயர் ‘ஆலால சுந்தரர்’ என்றானது.

சிவபெருமான் சாப்பிட்ட விஷம் அவரது கழுத்தில் நின்றது. அது வெம்மையை தராமல் இருக்க, பெண்ணை ஆற்றின் கரையில் பசுவின் வெண்ணெயால் கோட்டை அமைத்து, அதனுள் பஞ்சாக்கினி வளர்த்து, அதன் நடுவில் தவம் இயற்றினார். அந்த திருத்தலமே ‘திருவெண்ணெய் நல்லூர்’ என்றானது.

ஒருநாள் சிவபூஜைக்காக பூப்பறிக்க, கயிலையில் இருந்த நந்தவனத்திற்கு சென்றார் சுந்தரர். அப்போது அங்கே பார்வதியின் தோழியர்களான கமிலினி, அனிந்ததை ஆகியோர் மீது சுந்தரருக்கு ஈர்ப்பு உண்டானது. இதனை அறிந்த ஈசன், தம் அடியவர்களான ஆலால சுந்தரர், கமிலினி, அனிந்ததை ஆகிய மூவரையும் பூலோகத்தில் பிறப்பெடுத்து காதல் வாழ்வை வாழ்ந்து, பின்னர் திருக்கயிலாயம் வந்தடையும்படி அருளினார்.

உடனே சுந்தரர் ஈசனை வேண்டி, “தன்னை பூலோகத்தில் தக்கச் சமயத்தில் தடுத்தாட்கொள்ள வேண்டும்” என்று வேண்டினார். ஈசனும் அதற்கு இசைந்தார்.

இதையடுத்து திருநாவலூரில் சடையனார் - இசைஞானியார் தம்பதிகளுக்கு ஆதிசைவ மரபில் நம்பிஆரூரர் எனும் திருநாமத்தில் சுந்தரர் பிறந்தார். சிறு வயதில் சுந்தரரை பார்த்த, அந்தப் பகுதி மன்னனான நரசிங்கமுனையர், அவரை தன்னுடைய அரண்மனையிலேயே வளர்த்து வந்தார். சுந்தரருக்கு 16 வயதான போது, புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை அவருக்கு மணம் செய்து வைக்க பேசி முடித்தனர்.

சுந்தரருக்கு கொடுத்த வாக்கின்படி, அவரை தடுத்தாட்கொள்ள வேண்டிய தருணம் சிவபெருமானுக்கு வந்தது. அதன்படி திருமணம் நடைபெற இருந்த இடத்திற்கு ஓர் அந்தணக் கிழவராக உருவெடுத்து வந்தார் சிவபெருமான்.

அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் நம்பி ஆரூரரை காட்டி, “இவன் என் அடிமை. இவனை என்னோடு அனுப்புங்கள். மணம் செய்து வைக்காதீர்கள். இவன் பாட்டன் எழுதிக் கொடுத்த ஓலையில், அவனும், அவனது வழிவழி சந்ததியினரும் இந்த திருவெண்ணெய் நல்லூர் அந்தணனுக்கு அடிமை” என்று கூறியதோடு, அதற்கான ஓலையையும் காட்டினார்.

அதைக் கேட்ட சுந்தரர், “உமக்கு என்ன பித்து பிடித்திருக்கிறதா?” என்று கேட்டவாறே, முதியவரின் கையில் இருந்த அடிமை ஓலையை பிடுங்கி, படித்துக்கூட பார்க்காமல் கிழித்து எறிந்தார்.

முதியவருக்கும், சுந்தரருக்கும் வழக்கு மூண்டது. “இங்கே எனக்கு நீதி கிடைக்காது. எனது ஊரான திருவெண்ணெய் நல்லூருக்குச் செல்வோம். அங்கு வழக்காடு மன்றத்தில் மறையோர்கள் முன்னிலையில் உண்மையை நிரூபிக்கிறேன்” என்று கூறி சுந்தரரை தன்னுடன் அழைத்துச் சென்றார் முதியவர்.

சுந்தரரோ, “அப்படியோர் வழக்கு இருக்குமெனில், அதை முடித்த பின்னரே இங்கு வந்து மணம் முடிப்பேன்” எனச் சபதம் இட்டு முதியவருடன் சென்றார்.

பின்னர் வழக்கு திருவெண்ணெய்நல்லூரில் மறையவர்கள் முன்னிலையில் நடந்தது. அப்போது சுந்தரரின் பாட்டனார் கையெழுத்திட்ட பழைய ஓலைச் சுவடிகளை கொண்டுவந்து சரிபார்த்தனர். முதியவர் காண்பித்த அடிமை ஓலைச் சுவடியில் உள்ள சுந்தரரின் பாட்டனார் கையெழுத்தும், இதுவும் பொருந்திப்போயின. எனவே அங்கிருந்த மறையவர்கள், சுந்தரரை அந்த முதியவருக்கு அடிமை என தீர்ப்பளித்தனர்.

இதனால் வழியின்றி அந்த முதியவருடன் சென்றார், சுந்தரர். வழியில், “ஐயா.. என்னை எங்கு அழைத்துச் செல்கிறீர்? உமது வீடு எங்கு இருக்கிறது?” என வினவினார்.

உடனே அந்த முதியவர், “அன்பனே! நமது வீடு அதோ இருக்கிறது” என திருவெண்ணெய்நல்லூர் ஆலய அருட்துறையை கைகாட்டி அழைத்துச் சென்றார்.

சுந்தரருக்கு ஒன்றும் புரியவில்லை. “ஐயா.. அங்கே தெரிவது திருவெண்ணெய்நல்லூர் ஆலயம் அல்லவா? நான் கேட்டது, உமது வீடு எங்கிருக்கிறது என்றுதானே” என்றார் சுந்தரர்.

முதியவர் வேடத்தில் வந்த சிவபெருமான் மீண்டும் திருவெண்ணெய்நல்லூர் ஆலய அருட் துறையை கைகாட்டி, சுந்தரரை ஆலயக் கருவறைக்குள் கைப்பிடித்து அழைத்துச் சென்றார். அங்கு சிவலிங்கத்திற்கு முன்பாக தமது பாதக் குறடுகளைக் கழற்றி விட்டுவிட்டு, சிவலிங்கத்திற்குள் சென்று மறைந்தார், முதியவர்.

சுந்தரர் திகைப்பில் ஆழ்ந்து போனார். அப்போது கருவறைக்குள் இருந்து சிவபெருமான் தோன்றி, சுந்தரரின் முற்பிறவியையும், இப்போதைய பிறவியையும் பற்றி விளக்கிவிட்டு மறைந்தார்.

இதையடுத்து சிவபெருமானின் மீது, ‘பித்தா பிறை சூடி..” தன்னுடைய முதல் பதிகத்தை பாடினார் சுந்தரர்.

சுந்தரருடன் பஞ்சாயத்துச் சபையில் ஈசன் வழக்காடிய மண்டபம் இன்றும் திருவெண்ணெய்நல்லூரில் உள்ளது. தீராத வழக்குகளில் வெற்றி கண்டிட இத்தல வழிபாடு பெரிதும் கைகொடுக்கும் என் கிறார்கள். சடையப்ப வள்ளல், கவிச்சக்கரவர்த்தி கம்பரை ஆதரித்துப் போற்றிய பவித்திரமான புண்ணியபூமி இதுவாகும். சந்தான குரவரான மெய்கண்டார், ‘சிவஞான போதம்’ அருளிய திருத்தலமும் இதுதான். மெய்கண்டாருக்கு அவரது ஐந்தாம் வயதில் ஞான உபதேசம் செய்த பொல்லாப் பிள்ளையார் இங்கு அருள்கிறார்.

இத்தல மங்களாம்பிகை அம்மன் சன்னிதியில் வழிபட செல்வம், வீடு, வாசல், கல்வி, நன்மக்கட்பேறு, நீண்ட ஆயுள் அனைத்தும் கிடைக்கும். இங்கு அம்பாள் சன்னிதியில் ஸ்ரீசக்கரம், சங்கநிதி, பதுமநிதி அமைந்துள்ளது சிறப்பாகும். அறுபத்து மூவர், சப்தகன்னியர் சன்னிதிகளும் உள்ளன.

இத்தல ஈசனின் திருநாமம் ‘கிருபாபுரீஸ்வரர்’ என்பதாகும். சுந்தரரை தடுத்தாட்கொள்ள ஈசன் வந்தபோது அணிந்திருந்த பாதக்குறடுகள் இன்றும் இங்கு உள்ளது. இத்தல இறைவனுக்கு ‘தடுத்தாட்கொண்ட நாதர்’ என்ற பெயரும் உண்டு.

வழிபாட்டு பலன்

இத்தல ஈசனின் சன்னிதியில் 11 திங்கட்கிழமைகள் கருவறை தீபத்தில் பசுநெய் சேர்த்து வந்தால், நம்முடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். இங்குள்ள ஈசனின் பாதக்குறடுகளுக்கு வில்வார்ச்சனை செய்து வழிபட வேண்டும் என்றும் சொல் கிறார்கள். இத்தல ஈசனை அர்ச்சுனன், இந்திரன், திருமால் வழிபட்டுள்ளனர். விஜயலிங்கம் என்ற பெயரில் அர்ச்சுனன் வழிபட்ட லிங்கமும், சுந்தர லிங்கம் எனும் பெயரில் இந்திரன் வழிபட்ட லிங்கமும் இங்குள்ளது. திருமால் வழிபட்ட லிங்கத்திற்கு, ‘சங்கரலிங்கம்’ என்று பெயர். நவக்கிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கமும் காணப்படுகிறது.

இத்தல பலிபீடத்தின் நேர் உயரத்தில், சுந்தரருக்கு ஈசன் ரிஷபாரூடராகக் காட்சிகொடுத்த விமானக் கோவில் உள்ளது. அதற்கு எதிரில் கீழே கையில் ஓலைச்சுவடியுடன் சுந்தரர் உள்ளார். ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் சுந்தரர் குருபூஜை விழா இங்கு இரண்டு நாட்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். விழா நாளில் சுந்தரரின் திருமண உற்சவம், ஈசன் சுந்தரரின் திருமணத்தை தடுத்தாட்கொண்டது, அவிநாசியில் முதலை உண்ட பாலகனை மீட்டது, சுந்தரருக்கு ஈசன் காட்சி கொடுத்தது, திருக்கயிலாயம் செல்லுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.

மகாசிவராத்திரி அன்று இத்தலத்தில் நடைபெறும் திருமுறை பாராயணம் சிறப்பானது. மகாசிவராத்திரி நாளில் விரதமிருந்து இத்தலத்தில் தங்கியிருந்து ஈசனை மனமுருகி வழிபட்டால் வாழ்வில் தீவினைகள் அகன்று நல்லனவெல்லாம் வந்தடையும். சிவராத்திரி அன்று நள்ளிரவில் இத்தல மூலவர் கருவறைச் சுற்றின் பின்புறமுள்ள லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

அமைவிடம்

விழுப்புரத்தில் இருந்து அரசூர் செல்லும் வழியில் 19 கிலோமீட்டர் தூரத்தில் திருவெண்ணெய்நல்லூர் அமைந்துள்ளது. இத்தலத்தின் அருகில் அப்பரின் பாடல்பெற்ற திருத்தலமான திருமுண்டீஸ்வரம் சிவலோகநாதர் திருக்கோவிலும் அமைந்துள்ளது.

சனி, 22 பிப்ரவரி, 2020

1008 லிங்க பெயர்கள்


1008  லிங்க பெயர்கள்

1 அகர லிங்கம்
2 அக லிங்கம்
3 அகண்ட லிங்கம்
4 அகதி லிங்கம்
5 அகத்திய லிங்கம்
6 அகழ் லிங்கம்
7 அகில லிங்கம்
8 அகிம்சை லிங்கம்
9 அக்னி லிங்கம்
10 அங்கி லிங்கம்
11 அங்கு லிங்கம்
12 அசரிய லிங்கம்
13 அசுர லிங்கம்
14 அசை லிங்கம்
15 அசோக லிங்கம்
16 அச்சு லிங்கம்
17 அஞ்சா லிங்கம்
18 அட்ட லிங்கம்
19 அட்ச லிங்கம்
20 அட்சதை லிங்கம்
21 அட்டோ லிங்கம்
22 அடிமுடி லிங்கம்
23 அடி லிங்கம்
24 அணணா லிங்கம்
25 அண்ட லிங்கம்
26 அணி லிங்கம்
27 அணு லிங்கம்
28 அத்தி லிங்கம்
29 அதழ் லிங்கம்
30 அதிபதி லிங்கம்
31 அதிர்ஷ்ட லிங்கம்
32 அதிய லிங்கம்
33 அதிசய லிங்கம்
34 அதீத லிங்கம்
35 அந்தார லிங்கம்
36 அந்தி லிங்கம்
37 அநந்தசாயி லிங்கம்
38 அநலி லிங்கம்
39 அநேக லிங்கம்
40 அப்ப லிங்கம்
41 அப்பு லிங்கம்
42 அபய லிங்கம்
43 அபி லிங்கம்
44 அபிநய லிங்கம்
45 அபிஷேக லிங்கம்
46 அம்பல லிங்கம்
47 அம்பி லிங்கம்
48 அம்புசி லிங்கம்
49 அம்ம லிங்கம்
50 அமல லிங்கம்
51 அமர லிங்கம்
52 அமராவதி லிங்கம்
53 அமிர்த லிங்கம்
54 அர்ச்சனை லிங்கம்
55 அர்ச்சுண லிங்கம்
56 அர்த்த லிங்கம்
57அரச லிங்கம்
58 அரவ லிங்கம்
59 அரங்க லிங்கம்
60 அரம்பை லிங்கம்
61 அரளி லிங்கம்
62 அரி லிங்கம்
63 அரிணி லிங்கம்
64 அரிமா லிங்கம்
65 அருக லிங்கம்
66 அருணை லிங்கம்
67 அருமணி லிங்கம்
68 அரும்பு லிங்கம்
69 அருளி லிங்கம்
70 அரூப லிங்கம்
71 அல்லி லிங்கம்
72 அலை லிங்கம்
73 அவைய லிங்கம்
74 அழகு லிங்கம்
75 அளத்தி லிங்கம்
76 அற லிங்கம்
77 அறிவு லிங்கம்
78 அன்பு லிங்கம்
79 அன்புரு லிங்கம்
80 அன்ன லிங்கம்
81 அனுதாபி லிங்கம்
82 அனுபூதி லிங்கம்
83 அஷ்ட லிங்கம்
84 ஆக்கை லிங்கம்
85 ஆகம லிங்கம்
86ஆகாய லிங்கம்
87 ஆசான லிங்கம்
88 ஆசிரிய லிங்கம்
89 ஆசி லிங்கம்
90 ஆட லிங்கம்
91 ஆடரி லிங்கம்
92 ஆண் லிங்கம்
93 ஆண்டி லிங்கம்
94 ஆணுரு லிங்கம்
95 ஆத்ம லிங்கம்
96 ஆதார லிங்கம்
97 ஆதி லிங்கம்
98 ஆதிரி லிங்கம்
99 ஆதிசேவி லிங்கம்
100 ஆதிரை லிங்கம்
101 ஆதினா லிங்கம்
102 ஆபேரி லிங்கம்
103 ஆமிர லிங்கம்
104 ஆமை லிங்கம்
105 ஆய லிங்கம்
106 ஆயதி லிங்கம்
107 ஆர்த்தி லிங்கம்
108 ஆரண்ய லிங்கம்
109 ஆரண லிங்கம்
110 ஆராதனை லிங்கம்
111 ஆராபி லிங்கம்
112 ஆரூர லிங்கம்
113 ஆரோக்ய லிங்கம்
114 ஆலகால லிங்கம்
115 ஆலவாய் லிங்கம்
116 ஆலால லிங்கம்
117 ஆலி லிங்கம்
118 ஆவார லிங்கம்
119 ஆவி லிங்கம்
120 ஆவே லிங்கம்
121 ஆவுடை லிங்கம்
122 ஆழி லிங்கம்
123 ஆனந்த லிங்கம்
124 இக்கு லிங்கம்
125 இசை லிங்கம்
126 இடப லிங்கம்
127 இணை லிங்கம்
128 இதய லிங்கம்
129 இந்திர லிங்கம்
130 இமய லிங்கம்
131 இமை லிங்கம்
132 இரட்டை லிங்கம்
133 இராம லிங்கம்
134 இலக்கிய லிங்கம்
135 இலாப லிங்கம்
136 இளைய லிங்கம்
137 இறவா லிங்கம்
138 இறை லிங்கம்
139 இனிமை லிங்கம்
140 ஈகை லிங்கம்
141 ஈசான்ய லிங்கம்
142 ஈட லிங்கம்
143 ஈடண லிங்கம்
144 ஈடித லிங்கம்
145 ஈடிலி லிங்கம்
146 ஈர்ப்பு லிங்கம்
147 ஈழ லிங்கம்
148 ஈஸ்வர லிங்கம்
149 ஈஸ்வரி லிங்கம்
150 உக்ர லிங்கம்
151 உச்சி லிங்கம்
152 உசித லிங்கம்
153 உடம்பி லிங்கம்
154 உடுக்கை லிங்கம்
155 உணர் லிங்கம்
156 உத்தம லிங்கம்
157 உத்ராட்ச லிங்கம்
158 உதய லிங்கம்
159 உதிர லிங்கம்
160 உப்பிலி லிங்கம்
161 உப்பு லிங்கம்
162 உப லிங்கம்
163 உபதேச லிங்கம்
164 உபய லிங்கம்
165 உமா லிங்கம்
166 உமை லிங்கம்
167 உயிர் லிங்கம்
168 உரி லிங்கம்
169 உரு லிங்கம்
170 உருணி லிங்கம்
171 உருமணி லிங்கம்
172 உவப்பு லிங்கம்
173 உழவு லிங்கம்
174 உழுவை லிங்கம்
175 உற்சவ லிங்கம்
176 உன்னி லிங்கம்
177 ஊக்க லிங்கம்
178 ஊசி லிங்கம்
179 ஊதா லிங்கம்
180 ஊருணி லிங்கம்
181 ஊழி லிங்கம்
182 ஊற்று லிங்கம்
183 எட்டி லிங்கம்
184 எட்டு லிங்கம்
185 எதனா லிங்கம்
186 எந்தை லிங்கம்
187 எம லிங்கம்
188 எருது லிங்கம்
189 எல்லை லிங்கம்
190 எளிய லிங்கம்
191 எழிலி லிங்கம்
192 எழுத்தறி லிங்கம்
193 என்குரு லிங்கம்
194 ஏக லிங்கம்
195 ஏகம லிங்கம்
196 ஏகா லிங்கம்
197 ஏகாம்பர லிங்கம்
198 ஏகாந்த லிங்கம்
199 ஏடக லிங்கம்
200 ஏந்திழை லிங்கம்
201 ஏம லிங்கம்
202 ஏர் லிங்கம்
203 ஏரி லிங்கம்
204 ஏவச லிங்கம்
205 ஏழிசை லிங்கம்
206 ஏறு லிங்கம்
207 ஏனாதி லிங்கம்
208 ஐங்கர லிங்கம்
209 ஐய லிங்கம்
210 ஐராவத லிங்கம்
211 ஒப்பிலா லிங்கம்
212 ஒப்பிலி லிங்கம்
213 ஒருமை லிங்கம்
214 ஒளி லிங்கம்
215 ஓசை லிங்கம்
216 ஓடேந்தி லிங்கம்
217 ஓம் லிங்கம்
218 ஓம்கார லிங்கம்
219 ஓவிய லிங்கம்
220 ஔடத லிங்கம்
221 ஔவை லிங்கம்
222 கங்கா லிங்கம்
223 கச்ச லிங்கம்
224 கண்ட லிங்கம்
225 கடம்ப லிங்கம்
226 கடார லிங்கம்
227 கடிகை லிங்கம்
228 கடை லிங்கம்
229 கதிர் லிங்கம்
230 கதலி லிங்கம்
231 கந்த லிங்கம்
232 கபால லிங்கம்
233 கபில லிங்கம்
234 கமல லிங்கம்
235 கயா லிங்கம்
236 கயிலை லிங்கம்
237 கர்ண லிங்கம்
238 கர்ப்ப லிங்கம்
239 கரண லிங்கம்
240 கரு லிங்கம்
241 கருட லிங்கம்
242 கருமை லிங்கம்
243 கருணை லிங்கம்
244 கல்ப லிங்கம்
245 கல்வி லிங்கம்
246 கலி லிங்கம்
247கலை லிங்கம்
248 கவி லிங்கம்
249 கற்பக லிங்கம்
250 கற்பூர லிங்கம்
251 கன்னி லிங்கம்
252 கன லிங்கம்
253 கனக லிங்கம்
254 கனி லிங்கம்
255 கஸ்தூரி லிங்கம்
256 கஜ லிங்கம்
257 கருணாகர லிங்கம்
258 காசி லிங்கம்
259 காஞ்சி லிங்கம்
260 காடக லிங்கம்
261 காத்த லிங்கம்
262 காதம்பரி லிங்கம்
263 காந்த லிங்கம்
264 காப்பு லிங்கம்
265 காம லிங்கம்
266 கார் லிங்கம்
267கார்த்திகைலிங்கம்
268 காரண லிங்கம்
269 கால லிங்கம்
270 காவி லிங்கம்
271காவிய லிங்கம்
272 காவேரி லிங்கம்
273 காளி லிங்கம்
274 காளத்தி லிங்கம்
275 காளை லிங்கம்
276 கான லிங்கம்
277கிண்கிணி லிங்கம்
278 கிரி லிங்கம்
279 கிரியை லிங்கம்
280 கிரீட லிங்கம்
281 கிருப லிங்கம்
282 கிள்ளை லிங்கம்
283 கீத லிங்கம்
284 கீர்த்தி லிங்கம்
285 கீர்த்தன லிங்கம்
286 குக லிங்கம்
287 குங்கும லிங்கம்
288 குஞ்சு லிங்கம்
289 குட லிங்கம்
290 குடுமி லிங்கம்
291 குண லிங்கம்
292 குணக்ரி லிங்கம்
293 குபேர லிங்கம்
294 குருதி லிங்கம்
295 குமர லிங்கம்
296 குமரி லிங்கம்
297 குமுத லிங்கம்
298 குல லிங்கம்
299 குழலி லிங்கம்
300 குழவி லிங்கம்
301 குழை லிங்கம்
302 குற்றால லிங்கம்
303 குன்று லிங்கம்
304 குண்டலி லிங்கம்
305 குந்த லிங்கம்
306 கும்ப லிங்கம்
307 குரவ லிங்கம்
308 குறிஞ்சி லிங்கம்
309 கூததாடி லிங்கம்
310 கூத்து லிங்கம்
311 கூர்ம லிங்கம்
312 கெஜ லிங்கம்
313 கேச லிங்கம்
314 கேசரி லிங்கம்
315 கேசவ லிங்கம்
316 கேடிலி லிங்கம்
317 கேதார் லிங்கம்
318 கேள்வி லிங்கம்
319 கைலாய லிங்கம்
320 கொங்கு லிங்கம்
321 கொடி லிங்கம்
322 கொடு லிங்கம்
323 கொளஞ்சி லிங்கம்
324 கொற்றை லிங்கம்
325 கொன்றை லிங்கம்
326 கோ லிங்கம்
327 கோகழி லிங்கம்
328 கோகுல லிங்கம்
329 கோட்டை லிங்கம்
330 கோடி லிங்கம்
331 கோண் லிங்கம்
332 கோண லிங்கம்
333 கோதண்ட லிங்கம்
334 கோதை லிங்கம்
335 கோப லிங்கம்
336 கோபி லிங்கம்
337 கோமதி லிங்கம்
338 கோல லிங்கம்
339 கௌசிக லிங்கம்
340 கௌதம லிங்கம்
341 கௌரி லிங்கம்
342 சக்தி லிங்கம்
343 சக்கர லிங்கம்
344 சகஸ்ர லிங்கம்
345 சகல லிங்கம்
346 சங்க லிங்கம்
347 சங்கம லிங்கம்
348 சங்கர லிங்கம்
349 சங்கு லிங்கம்
350 சஞ்சீவி லிங்கம்
351 சடாட்சர லிங்கம்
352 சடைமுடி லிங்கம்
353 சண்முக லிங்கம்
354 சத்திய லிங்கம்
355 சதங்கை லிங்கம்
356சதய லிங்கம்
357 சதா லிங்கம்
358 சதாசிவ லிங்கம்
359 சதுர் லிங்கம்
360 சதுர்த்தி லிங்கம்
361 சதுரங்க லிங்கம்
362 சதுரகிரி லிங்கம்
363 சந்த லிங்கம்
364 சந்திர லிங்கம்
365 சந்தன லிங்கம்
366 சந்தான லிங்கம்
367 சப்த லிங்கம்
368 சபா லிங்கம்
369 சம்பந்த லிங்கம்
370 சம்பு லிங்கம்
371 சமுத்திர லிங்கம்
372 சயன லிங்கம்
373 சர்வேஸ லிங்கம்
374 சரச லிங்கம்
375 சரீர லிங்கம்
376 சவரி லிங்கம்
377 சற்குண லிங்கம்
378 சஹான லிங்கம்
379 சற்குரு லிங்கம்
380 சாட்சி லிங்கம்
381 சாணக்ய லிங்கம்
382 சாதக லிங்கம்
383 சாதனை லிங்கம்
384 சாதி லிங்கம்
385 சாது லிங்கம்
386 சாந்த லிங்கம்
387 சாந்து லிங்கம்
388 சாம்ப லிங்கம்
389 சாமுண்டி லிங்கம்
390 சிகர லிங்கம்
391 சிகா லிங்கம்
392 சிகரி லிங்கம்
393 சிகை லிங்கம்
394 சிங்கார லிங்கம்
395 சிசு லிங்கம்
396 சித்தி லிங்கம்
397 சித்திரை லிங்கம்
398 சிந்தாமணிலிங்கம்
399 சிந்து லிங்கம்
400 சிநேக லிங்கம்
401 சிப்பி லிங்கம்
402 சிபி லிங்கம்
403 சிம்ம லிங்கம்
404 சிர லிங்கம்
405 சிரஞ்சீவி லிங்கம்
406 சிரபதி லிங்கம்
407 சிருஷ்டி லிங்கம்
408 சிலம்பு லிங்கம்
409 சிவ லிங்கம்
410 சிவகதி லிங்கம்
411 சிவாய லிங்கம்
412 சிற்பவ லிங்கம்
413 சினை லிங்கம்
414 சிஷ்ட லிங்கம்
415 சீதன லிங்கம்
416 சீதாரி லிங்கம்
417 சீமை லிங்கம்
418 சீர்மை லிங்கம்
419 சீற்ற லிங்கம்
420 சீனி லிங்கம்
421 சுக்கிர லிங்கம்
422 சுக லிங்கம்
423 சுகந்த லிங்கம்
424 சுகநிதி லிங்கம்
425 சுகுண லிங்கம்
426 சுடர் லிங்கம்
427 சுத்த லிங்கம்
428 சுதர்சண லிங்கம்
429 சுந்தர லிங்கம்
430 சுந்தரி லிங்கம்
431 சுப்பு லிங்கம்
432 சுமித்ர லிங்கம்
433 சுய லிங்கம்
434 சுயம்பு லிங்கம்
435 சுரபி லிங்கம்
436 சுருதி லிங்கம்
437 சுருளி லிங்கம்
438 சுரை லிங்கம்
439 சுவடி லிங்கம்
440 சுவடு லிங்கம்
441 சுவர்ண லிங்கம்
442 சுவாச லிங்கம்
443 சுவாதி லிங்கம்
444 சுனை லிங்கம்
445 சூட்சம லிங்கம்
446 சூர லிங்கம்
447 சூரி லிங்கம்
448 சூரிய லிங்கம்
449 சூல லிங்கம்
450 சூள்முடி லிங்கம்
451 சூளாமணி லிங்கம்
452 செக்கர் லிங்கம்
453 செங்கு லிங்கம்
454 செண்பக லிங்கம்
455 செந்தூர லிங்கம்
456 செம்ம லிங்கம்
457 செம்பாத லிங்கம்
458 செரு லிங்கம்
459 செருக்கு லிங்கம்
460 செல்வ லிங்கம்
461 செழுமை லிங்கம்
462 சேகர லிங்கம்
463 சேலிங்கம்
464 சேது லிங்கம்
465 சேர்ப்பு லிங்கம்
466 சேற்று லிங்கம்
467 சைல லிங்கம்
468 சைவ லிங்கம்
469 சொக்க லிங்கம்
470 சொப்பன லிங்கம்
471 சொர்க்க லிங்கம்
472 சொரூப லிங்கம்
473 சோம லிங்கம்
474 சோண லிங்கம்
475 சோபன லிங்கம்
476 சோலை லிங்கம்
477 சோழ லிங்கம்
478 சோழி லிங்கம்
479 சோற்று லிங்கம்
480 சௌந்தர்ய லிங்கம்
481 சௌந்தர லிங்கம்
482 ஞான லிங்கம்
483 தகழி லிங்கம்
484 தகு லிங்கம்
485 தங்க லிங்கம்
486 தச லிங்கம்
487 தட்சண லிங்கம்
488 தடாக லிங்கம்
489 தத்துவ லிங்கம்
490 தந்த லிங்கம்
491 தந்திர லிங்கம்
492 தமிழ் லிங்கம்
493 தர்பை லிங்கம்
494 தர்ம லிங்கம்
495 தருண லிங்கம்
496 தவ லிங்கம்
497 தளிர் லிங்கம்
498 தன லிங்கம்
499 தனி லிங்கம்
500 தவசி லிங்கம்
501 தாண்டக லிங்கம்
502 தாண்டவ லிங்கம்
503 தாமு லிங்கம்
504 தாய் லிங்கம்
505 தார லிங்கம்
506 தாழி லிங்கம்
507 தாழை லிங்கம்
508 தாள லிங்கம்
509 தான்ய லிங்கம்
510 தாரகை லிங்கம்
511 திக்கு லிங்கம்
512 திகம்பர லிங்கம்
513 திகழ் லிங்கம்
514 தியாக லிங்கம்
515 தியான லிங்கம்
516 திரி லிங்கம்
517 திரிபுர லிங்கம்
518 திரு லிங்கம்
519 திருமேனி லிங்கம்
520 திருவடி லிங்கம்
521 திருவாசக லிங்கம்
522 திருவாத லிங்கம்
523 திலக லிங்கம்
524 திவ்ய லிங்கம்
525 தீ லிங்கம்
526 தீட்சை லிங்கம்
527 தீர்க்க லிங்கம்
528 தீர்த்த லிங்கம்
529 தீப லிங்கம்
530 தீர லிங்கம்
531 தீர்ப்பு லிங்கம்
532 துதி லிங்கம்
533 துர்கை லிங்கம்
534 துருவ லிங்கம்
535 துலா லிங்கம்
536 துளசி லிங்கம்
537 துறவு லிங்கம்
538 தூங்கா லிங்கம்
539 தூண்டா லிங்கம்
540 தூமணி லிங்கம்
541 தூய லிங்கம்
542 தூளி லிங்கம்
543 தெங்கு லிங்கம்
544 தெய்வ லிங்கம்
545 தெரிவை லிங்கம்
546 தெளி லிங்கம்
547 தென்னவ லிங்கம்
548 தேக லிங்கம்
549 தேகனி லிங்கம்
550 தேகி லிங்கம்
551 தேச லிங்கம்
552 தேசு லிங்கம்
553 தேயு லிங்கம்
554 தேர லிங்கம்
555 தேவ லிங்கம்
556 தேவபத லிங்கம்
557 தேவாதி லிங்கம்
558 தேவு லிங்கம்
559 தேன் லிங்கம்
560 தேன்மணி லிங்கம்
561 தேன லிங்கம்
562 தேனுக லிங்கம்
563 தைரிய லிங்கம்
564 தொகை லிங்கம்
565 தொட்டி லிங்கம்
566 தொடி லிங்கம்
567 தொடைய லிங்கம்
568 தொண்டக லிங்கம்
569 தொண்டை லிங்கம்
570 தொல் லிங்கம்
571 தோகச லிங்கம்
572 தோண்டி லிங்கம்
573 தோணி லிங்கம்
574 தோத்திர லிங்கம்
575 தோரண லிங்கம்
576 தோரி லிங்கம்
577 தோழ லிங்கம்
578 தோன்ற லிங்கம்
579 தௌத லிங்கம்
580 தௌல லிங்கம்
581 நகமுக லிங்கம்
582 நகு லிங்கம்
583 நகை லிங்கம்
584 நங்கை லிங்கம்
585 நசை லிங்கம்
586 நஞ்சு லிங்கம்
587 நடன லிங்கம்
588 நடம்புரி லிங்கம்
589 நடு லிங்கம்
590 நதி லிங்கம்
591 நந்தி லிங்கம்
592 நம்பி லிங்கம்
593 நம லிங்கம்
594 நயன லிங்கம்
595 நர்மதை லிங்கம்
596 நலமிகு லிங்கம்
597 நவ லிங்கம்
598 நவமணி லிங்கம்
599 நவிர லிங்கம்
600 நற்குண லிங்கம்
601 நற்றுணை லிங்கம்
602 நறுமண லிங்கம்
603 நன்மணி லிங்கம்
604 நன்மை லிங்கம்
605 நனி லிங்கம்
606 நா லிங்கம்
607 நாக லிங்கம்
608 நாச்சி லிங்கம்
609 நாசி லிங்கம்
610 நாட லிங்கம்
611 நாடி லிங்கம்
612 நாத்திர லிங்கம்
613 நாத லிங்கம்
614 நாரண லிங்கம்
615 நாரணி லிங்கம்
616 நாரி லிங்கம்
617 நாபிச லிங்கம்
618 நாயன லிங்கம்
619 நாயாடி லிங்கம்
620 நாவ லிங்கம்
621 நாற்கர லிங்கம்
622 நான்மறை லிங்கம்
623 நான்முக லிங்கம்
624 நிகர் லிங்கம்
625 நித்தில லிங்கம்
626 நித்ய லிங்கம்
627 நிதர்சண லிங்கம்
628 நிதி லிங்கம்
629 நிபவ லிங்கம்
630 நிர்மல லிங்கம்
631 நிரஞ்சன லிங்கம்
632 நிரம்ப லிங்கம்
633 நிருதி லிங்கம்
634 நிமல லிங்கம்
635 நில லிங்கம்
636 நிலை லிங்கம்
637 நிவேத லிங்கம்
638 நிறை லிங்கம்
639 நிஜ லிங்கம்
640 நிசாக லிங்கம்
641 நீடு லிங்கம்
642 நீடுநீர் லிங்கம்
643 நீத்தவ லிங்கம்
644 நீதி லிங்கம்
645 நீர்ம லிங்கம்
646 நீரச லிங்கம்
647 நீரேறு லிங்கம்
648 நீல லிங்கம்
649 நீள்முடி லிங்கம்
650 நீறாடி லிங்கம்
651 நீறு லிங்கம்
652 நுதற் லிங்கம்
653 நுதி லிங்கம்
654 நூதன லிங்கம்
655 நெகிழ் லிங்கம்
656 நெஞ்சு லிங்கம்
657 நெட்ட லிங்கம்
658 நெடு லிங்கம்
659 நெய் லிங்கம்
660 நெற்றி லிங்கம்
661 நெறி லிங்கம்
662 நேச லிங்கம்
663 நேர் லிங்கம்
664 நைச்சி லிங்கம்
665 நைவேத்ய லிங்கம்
666 நொச்சி லிங்கம்
667 நோக்கு லிங்கம்
668 நோன்பு லிங்கம்
669 பசு லிங்கம்
670 பசுவ லிங்கம்
671 பசுபதி லிங்கம்
672 பஞ்ச லிங்கம்
673 பஞ்சாட்சர லிங்கம்
674 பட்டக லிங்கம்
675 படரி லிங்கம்
676 படிக லிங்கம்
677 பண்டார லிங்கம்
678 பண்டித லிங்கம்
679 பத்ம லிங்கம்
680 பத்ர லிங்கம்
681 பத்திர லிங்கம்
682 பதி லிங்கம்
683 பதிக லிங்கம்
684 பர்வத லிங்கம்
685 பரசு லிங்கம்
686 பரத லிங்கம்
687 பரம லிங்கம்
688 பரமாத்ம லிங்கம்
689 பரமேஸ்வர லிங்கம்
690 பரணி லிங்கம்
691 பரிதி லிங்கம்
692 பவண லிங்கம்
693 பவணி லிங்கம்
694 பவநந்தி லிங்கம்
695 பவழ லிங்கம்
696 பவாணி லிங்கம்
697 பவித்ர லிங்கம்
698 பளிங்கு லிங்கம்
699 பன்னக லிங்கம்
700 பனி லிங்கம்
701 பரகதி லிங்கம்
702 பராங்க லிங்கம்
703 பராபர லிங்கம்
704 பவநாச லிங்கம்
705 பா லிங்கம்
706 பாக்ய லிங்கம்
707 பாக லிங்கம்
708 பாச லிங்கம்
709 பாசறை லிங்கம்
710 பாசுர லிங்கம்
711 பாத லிங்கம்
712 பாதாள லிங்கம்
713 பாதி லிங்கம்
714 பாதிரி லிங்கம்
715 பார்வதி லிங்கம்
716 பாரதி லிங்கம்
717 பாராயண லிங்கம்
718 பாரி லிங்கம்
719 பாரிஜாத லிங்கம்
720 பாயிர லிங்கம்
721 பாலக லிங்கம்
723 பாலா லிங்கம்
723 பாவை லிங்கம்
724 பானு லிங்கம்
725 பாஷான லிங்கம்
726 பாகோட லிங்கம்
727 பாசுபத லிங்கம்
728 பாணிக லிங்கம்
729 பார்த்திப லிங்கம்
730 பாநேமி லிங்கம்
731 பாம்பு லிங்கம்
732 பாழி லிங்கம்
733 பிச்சி லிங்கம்
734 பிச்சை லிங்கம்
735 பிட்டு லிங்கம்
736 பிடரி லிங்கம்
737 பிடாரி லிங்கம்
738 பிடி லிங்கம்
739 பிண்ட லிங்கம்
740 பித்த லிங்கம்
741 பிதா லிங்கம்
742 பிம்ப லிங்கம்
743 பிரகதி லிங்கம்
744 பிரகாச லிங்கம்
745 பிரசன்ன லிங்கம்
746 பிரணவ லிங்கம்
747 பிரதர்சன லிங்கம்
748 பிரபாகர லிங்கம்
749 பிரபு லிங்கம்
750 பிரம்ம லிங்கம்
751 பிரம்பு லிங்கம்
752 பிரமிள லிங்கம்
753 பிராண லிங்கம்
754 பிராசித லிங்கம்
755 பிரிய லிங்கம்
756 பிரேம லிங்கம்
757 பிள்ளை லிங்கம்
758 பிழம்பு லிங்கம்
759 பிறவி லிங்கம்
760 பிறை லிங்கம்
761 பீச லிங்கம்
762 பீட லிங்கம்
763 பீடு லிங்கம்
764 பீத லிங்கம்
765 பீதகார லிங்கம்
766 பீதசார லிங்கம்
767 பீதமணி லிங்கம்
768 பீதாம்பர லிங்கம்
769 பீர லிங்கம்
770 பீம லிங்கம்
771 புகழ் லிங்கம்
772 புங்கவ லிங்கம்
773 புங்கவி லிங்கம்
774 புடக லிங்கம்
775 புண்ணிய லிங்கம்
776 புத்தி லிங்கம்
777 புத்ர லிங்கம்
778 புதிர் லிங்கம்
779 புது லிங்கம்
780 புரட்சி லிங்கம்
781 புரவு லிங்கம்
782 பராண லிங்கம்
783 புரி லிங்கம்
784 புருஷ லிங்கம்
785 புருவ லிங்கம்
786 புலரி லிங்கம்
787 புலி லிங்கம்
788 புவன லிங்கம்
789 புற்று லிங்கம்
790 புற லிங்கம்
791 புன்னை லிங்கம்
792 புனித லிங்கம்
793 புனை லிங்கம்
794 புஜங்க லிங்கம்
795 புஷ்கர லிங்கம்
796 புஷ்ப லிங்கம்
797 பூசனை லிங்கம்
798 பூத லிங்கம்
799 பூதர லிங்கம்
800 பூதி லிங்கம்
801 பூபதி லிங்கம்
802 பூபால லிங்கம்
803 பூதவணி லிங்கம்
804 பூர்ண லிங்கம்
805 பூர்த்தி லிங்கம்
806 பூர்வ லிங்கம்
807 பூரணி லிங்கம்
808 பூமித லிங்கம்
809 பூமுக லிங்கம்
810 பூவிழி லிங்கம்
811 பூலோக லிங்கம்
812 பூஜித லிங்கம்
813 பெண் லிங்கம்
814 பெண்பாக லிங்கம்
815 பெரு லிங்கம்
816 பேரின்ப லிங்கம்
817 பேழை லிங்கம்
818 பைரவி லிங்கம்
819பொன்னம்பலலிங்கம்
820 பொன்னி லிங்கம்
821 பொருந லிங்கம்
822 பொருப்பு லிங்கம்
823 பொழி லிங்கம்
824 பொய்கை லிங்கம்
825 போக லிங்கம்
826 போதக லிங்கம்
827 போதன லிங்கம்
828 போதி லிங்கம்
829 போற்றி லிங்கம்
830 போனக லிங்கம்
831 பௌதிக லிங்கம்
832பௌர்ணமி லிங்கம்
833 மகர லிங்கம்
834 மகவு லிங்கம்
835 மகா லிங்கம்
836 மகிழ லிங்கம்
837 மகுட லிங்கம்
838 மகுடி லிங்கம்
839 மகேச லிங்கம்
840 மகேஸ்வர லிங்கம்
841 மங்கள லிங்கம்
842 மஞ்சரி லிங்கம்
843 மஞ்சு லிங்கம்
844 மண லிங்கம்
845 மணி லிங்கம்
846 மதன லிங்கம்
847 மதி லிங்கம்
848 மந்தாரை லிங்கம்
849 மந்திர லிங்கம்
850 மயான லிங்கம்
851 மயூர லிங்கம்
852 மரகத லிங்கம்
853 மருக லிங்கம்
854 மருத லிங்கம்
855 மருது லிங்கம்
856 மலர் லிங்கம்
857 மழலை லிங்கம்
858 மவுலி லிங்கம்
859 மன்னாதி லிங்கம்
860 மனித லிங்கம்
861 மனோ லிங்கம்
862 மலை லிங்கம்
863 மாங்கல்ய லிங்கம்
864 மாசறு லிங்கம்
865 மாசி லிங்கம்
866 மாசிவ லிங்கம்
867 மாட்சி லிங்கம்
868 மாணிக்க லிங்கம்
869 மாதங்கி லிங்கம்
870 மாதவ லிங்கம்
871 மாதவி லிங்கம்
872 மாது லிங்கம்
873 மாதேவி லிங்கம்
874 மாமிச லிங்கம்
875 மாயை லிங்கம்
876 மாலை லிங்கம்
877 மார்க்க லிங்கம்
878 மிசை லிங்கம்
879 மிண்டை லிங்கம்
880 மீளி லிங்கம்
881 மீன லிங்கம்
882 முக்கனீ லிங்கம்
883 முக்தி லிங்கம்
884 முகுந்த லிங்கம்
885 முடி லிங்கம்
886 முத்து லிங்கம்
887 மும்மல லிங்கம்
888 முரசு லிங்கம்
889 முருக லிங்கம்
890 முல்லை லிங்கம்
891 முனி லிங்கம்
892 மூர்த்தி லிங்கம்
893 மூல லிங்கம்
894 மெய் லிங்கம்
895 மேக லிங்கம்
896 மேதினி லிங்கம்
897 மேவி லிங்கம்
898 மேனி லிங்கம்
899 மொழி லிங்கம்
900 மொட்டு லிங்கம்
901 மோட்ச லிங்கம்
902 மோன லிங்கம்
903 மோலி லிங்கம்
904 மௌன லிங்கம்
905 யதி லிங்கம்
906 யாக லிங்கம்
907 யாசக லிங்கம்
908 யாத்திரை லிங்கம்
909 யுக்தி லிங்கம்
910 யுவ லிங்கம்
911 யோக லிங்கம்
912 யோகி லிங்கம்
913 ரகசிய லிங்கம்
914 ரம்ய லிங்கம்
915 ரமண லிங்கம்
916 ரத்தின லிங்கம்
917 ரத லிங்கம்
918 ராக லிங்கம்
919 ராட்சச லிங்கம்
920 ராவண லிங்கம்
921 ராஜ லிங்கம்
922 ரிஷப லிங்கம்
923 ரிஷி லிங்கம்
924 ருத்ர லிங்கம்
925 ரூப லிங்கம்
926 ரௌத்திர லிங்கம்
927 லகரி லிங்கம்
928 லாவண்ய லிங்கம்
929 லீலா லிங்கம்
930 லோக லிங்கம்
931 வசந்த லிங்கம்
932 வஞ்சி லிங்கம்
933 வடுக லிங்கம்
934 வர்ம லிங்கம்
935 வர லிங்கம்
936 வருண லிங்கம்
937 வல்லப லிங்கம்
938 வழக்கு லிங்கம்
939 வள்ளுவ லிங்கம்
940 வளர் லிங்கம்
941 வன லிங்கம்
942 வனப்பு லிங்கம்
943 வஜ்ர லிங்கம்
944 வாகை லிங்கம்
945 வாசி லிங்கம்
946 வாணி லிங்கம்
947 வாயு லிங்கம்
948 வார்ப்பு லிங்கம்
949 வாழ்க லிங்கம்
950 வான லிங்கம்
951 வானாதி லிங்கம்
952 வார்சடை லிங்கம்
953 விக்ர லிங்கம்
954 விக்ரம லிங்கம்
955 விகட லிங்கம்
956 விகார லிங்கம்
957 விகிர்த லிங்கம்
958 வசித்ர லிங்கம்
959 விடங்க லிங்கம்
960 வித்தக லிங்கம்
961 விதி லிங்கம்
962 விது லிங்கம்
963 விந்தை லிங்கம்
964 விநாசக லிங்கம்
965 விபீஷ்ண லிங்கம்
966 விபூதி லிங்கம்
967 விமல லிங்கம்
968 வியூக லிங்கம்
969 விருட்சக லிங்கம்
970 வில்வ லிங்கம்
971 விளம்பி லிங்கம்
972 விழி லிங்கம்
973 வினைதீர் லிங்கம்
974 வினோத லிங்கம்
975 விஜய லிங்கம்
976 விஷ்ணு லிங்கம்
977 விஸ்வ லிங்கம்
978 விஸ்வேஸ்வரலிங்கம்
979 வீர லிங்கம்
980 வீணை லிங்கம்
981 வெற்றி லிங்கம்
982 வெற்பு லிங்கம்
983 வெள்ளி லிங்கம்
984 வேங்கட லிங்கம்
985 வேங்கை லிங்கம்
986 வேட்டுவ லிங்கம்
987 வேத லிங்கம்
988 வேதாந்த லிங்கம்
989 வேம்பு லிங்கம்
990 வேழ லிங்கம்
991 வேள்வி லிங்கம்
992 வைகை லிங்கம்
993 வைர லிங்கம்
994 வைத்திய லிங்கம்
995 வைய லிங்கம்
996 ஜடா லிங்கம்
997 ஜதி லிங்கம்
998 ஜல லிங்கம்
999 ஜீவ லிங்கம்
1000 ஜெக லிங்கம்
1001 ஜெய லிங்கம்
1002 ஜென்ம லிங்கம்
1003 ஜோதி லிங்கம்
1004 ஸ்ரீ லிங்கம்
1005 ஸோபித லிங்கம்
1006 ஹேம லிங்கம்
1007 ஐஸ்வர்ய லிங்கம்
1008 சுப லிங்கம்