வியாழன், 30 நவம்பர், 2017

கார்த்திகை தீபம் - Karthigai Deepam



கார்த்திகை தீபம் - Karthigai Deepam

இந்தியாவில் வடக்கில் தீபவழிபாடு ‘தீபாவளி’ என்றும், தெற்கே தீபவழிபாடு ‘கார்த்திகை தீபம்’ என்றும் கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில் திருவிளக்கேற்றி வழிபடுவதனால் கார்த்திகை தீபம் எனப் பெயர் பெற்றது. கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது. தீபம் என்பது நம் உள்ளத்தின் இருளைப் போக்கி ஒளி பரவச் செய்யும். தீபம் ஞானத்தின் அறிகுறி. மங்கலத்தின் சின்னம்.

இறைவன் சந்நதியில் ஏற்றபப்டும் தீப ஒளியின் மகிமையை மகாபலிச் சக்கரவர்த்தியின் கதை மூலம் அறியலாம்.

முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாக பிறந்திருந்தது. தான் அறியாமலேயே, தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது. இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டான்.
அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள்.

வீட்டின் வாசலில் அகல் விளக்குகளை வரிசையாக வைக்க வேண்டும். இந்நாளில் சிவபெருமானையும், முருகப்பெருமானையும் நினைத்து விரதம் இருந்து மாலையில் பொழுது சாயும் நேரத்துக்கு முன்பாக நடுவாசல், கூடம், வராண்டா, கைப் பிடிச்சுவர்கள், மாடிப்படிகள், துளசி மாடம் என எல்லா இடங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும், வீடுகள் தோறும், தெருக்கள் தோறும், ஊர் முழுவதும் விளக்குகள் ஒளிர்வதால் அனைத்து இடங்களும் ஜோதிமயமாக, மங்களகரமாக காணப்படும்.சந்திர தரிசனத்துக்கு பிறகு கோயில்களில் தீபம் ஏற்றப்படும். எனவே மாலை 6 மணிக்கு மேல் வீடுகளில் தீபம் ஏற்றலாம். பூஜையின்போது சிவனுக்குரிய ஸ்தோத்திரங்கள் சொல்லி, பூஜை செய்து வடை, பாயசம் மற்றும் பொரியுடன் வெல்லம் சேர்த்து உருண்டை செய்து படைப்பது சிறப்பு. தினைமாவிலும் விளக்கேற்றி வழிபடலாம்.

குத்துவிளக்கின் ஐந்து முகங்களும் அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத்தன்மை ஆகியவற்றை குறிப்பதாக ஆன்றோர்கள் சொல்வார்கள். வீடுகளில் விளக்கேற்றி, கோயிலுக்கு சென்று கார்த்திகை தீப ஜோதி தரிசனம் செய்வதால் தடை, தோஷங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மன அமைதியும், மன உறுதியும் ஏற்படும். இல்லத்தில் இருந்து தீயசக்திகள் நீங்கி, நமது மனம், சொல், செயல் அனைத்தும் சுத்தமாகும் என்பது நம்பிக்கை. தீப விளக்கு ஏற்றி, அறியாமை இருள் அகன்று வளமான வாழ்வும் இறை அருளும் பெறுவோம்.

கார்த்திகை தீபங்கள் ஏற்றும் போது இந்த மந்திரத்தை கூற வேண்டும்.

கீடா: பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா ஜலே
ஸ்தலயே நிவஸந்தி ஜீவா த்ருஷ்ட்வா
ப்ரதீபம் ந ச ஜந்ம பாஜா பவந்தி
நித்யம் ச்வபசா ஹிவிப்ரா.

பொருள்:

புழு, பட்சி, கொசு உள்ளிட்ட சகல உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களில் முதல் பிறவியில் இருந்து முக்தி பிறவி வரையில் உள்ளவர்கள் இப்படி யார் யார் பார்வையில் எல்லாம் இந்த துப ஒளி படுகிறதோ அவரெல்லாம் இன்னொரு பிறவி என்ற துன்பம் இன்றி நிதமும ஆனந்தம் பெறட்டும் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

தீபத் திருநாளின் அருமை பெருமைகளை உணர்ந்து, விளக்கேற்றி வழிபட்டு, வாழ்வில் சகல வளங்களையும் பெற்று மகிழ்வோமாக!

காமாட்சி விளக்கு ...


காமாட்சி விளக்கு ...

விளக்குகளில் காமாட்சி விளக்கு புனிதமானது. இது எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது. பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாத்து வைத்துள்ளனர்.

சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள் கின்றனர். புதுமனை புகும் போதும், மணமக்கள் மணப்பந்தலை வலம் வரும்போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனைவருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன்திருவிளக்கே.

புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, "நிறைநாழி'' எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கு வைத்து அதில் மீது தீபம் ஏற்றப்படும். பெண்ணுக்கு சீர் வரிசைகளை தரும்போது காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும். விளக்குகள் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம்.
மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று.

குத்து விளக்கு :

குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது. செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து-நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது. இந்த விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஐந்துமுகக் குத்துவிளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம். ஓர் அங்குலம் முதல், பல அடிகள் உயரமுள்ள குத்து விளக்குகள், மிக அழகிய கலை நுட்பங்களுடன் கிடைக்கின்றன.

உச்சியில் அன்னம் வீற்றிருக்கும் குத்து விளக்குகளில் சில வழிபாட்டுக் குரியவையாகவும் ,சில அலங்காரத்திற்கு உரியவையாகவும் விளங்குகின்றன.

பாவை விளக்கு :

ஒரு பெண் அகல் விளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போல் இருப்பது பாவை விளக்கு எனப்படுகிறது. இந்த வகை விளக்குகளை கடவுளின் முன் ஒளிதரும் விளக்காக பயன்படுத்தலாம் .

தீபங்கள் பதினாறு :

தூபம், தீபம் புஷ்பதீபம் (பூ விளக்கு), நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத (குதிரை) தீபம், வியாக்ர (புலி) தீபம், ஹம்ஸ் (அன்னம்) தீபம், கும்ப (குடம்) தீபம், குக்குட (கோழி) தீபம், விருக்ஷ தீபம், கூர்மா (ஆமை) தீபம், நட்சத்திர தீபம், மேருதீபம், கற்பூர தீபம் என தீபங்கள் 16 வகைப்படும்.

தூக்கு விளக்குகள் ஒன்பது :

1. வாடா விளக்கு
2. ஓதிமத்தூக்கு விளக்கு
3. தூண்டாமணி விளக்கு
4. ஓதிம நந்தா விளக்கு
5. கூண்டு விளக்கு
6. புறா விளக்கு
7. நந்தா விளக்கு
8. சங்கிலித் தூக்கு விளக்கு
9. கிளித்தூக்கு விளக்கு.

பூஜைவிளக்குகள் ஒன்பது :

சர்வராட்சததீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கணநாயக தீபம், வித்யாகர தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம் ஆகியவை 9 வகை பூஜை விளக்குகளாக வழக்கத்தில் உள்ளன. சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோவில் விளக்குகளின் மூன்று வகைகளாகும்.

கைவிளக்குகள் ஏழு :

கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, சம்மனசு விளக்கு, கணபதி விளக்கு, கைவக் விளக்கு ஆகியவை கை விளக்குகளாகும்.

நால்வகை திக்பாலர் தீபங்கள் :
ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம்.

அஷ்டகஜ தீபங்கள் எட்டு :

ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்பகந்த தீபம், சர்வ பவும தீபம், சுப்ரதீபம், பித்ர தீபம்.
படித்ததை பகிர்ந்தேன்.


செல்வத்தை தக்க வைக்க கார்த்திகை மாதத்தில் இதைச் செய்தால் போதும்!



செல்வத்தை தக்க வைக்க கார்த்திகை மாதத்தில் இதைச் செய்தால் போதும்!

கார்திகை மாதம் பிறந்து விட்டது. இம்மாதத்தில் வீடு முழுவதும் விளக்குகளால் அலங்கரிப்போம். திருவிளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்பே தமிழ்மக்கள் இறைவனைஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இவ்வழிபாட்டை "கார்த்திகை விளக்கீடு' என்று குறிப்பிடுகின்றன.பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை போன்ற எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன.

விளக்கு : திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது.இதன் அடிப்பாகத்தில்பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம்செய்கின்றனர்.

பொட்டு : திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல்குங்குமமும் வைக்க வேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர்,காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்துபூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.

கார்திகை மாதம் : கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

நேரம் : தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.

திசைகள் : தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும். மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும். பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும். தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.

எண்ணெய் : கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது. அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணை தீபம். நல்லெண்ணை தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது, நவக்கிரகங்களைத் திருப்தி செய்யவும் ஏற்றது.

இந்த எண்ணெய் கூடாது : கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்

திரி : விளக்கிற்கு திரியும் மிகவும் முக்கியமானது. சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி. முற்பிறவியின் பாவங்களை அகற்றி செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப் பெருமானுக்கும் உகந்தது இது..


செவ்வாய், 21 நவம்பர், 2017

கரு காக்கும் அம்பிகை




கரு காக்கும் அம்பிகை
         

திருமணத்தின் வரப்பிரசாதம் - மழலைச் செல்வம். இறையருளால் கரு தாங்கி, அதற்கு உயிரும் உடலும் கொடுத்து, புதியதோர் பிறவி தரும் அற்புத உறவு.

*‘ஒரு உயிரிலிருந்து தான் இன்னொரு உயிர் ஜனிக்கிறது. அப்புறம் ஏன் சிருஷ்டிக்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறோம் ?’* என்று சிலர் கேட்கலாம்.

கருப்பைக்குள் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய உருவமாக உருவாகும் உயிரை, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து, இயங்கச் செய்யும் அற்புதத்தை இறைவனைத் தவிர வேறு யாரால் செய்ய முடியும் ?

தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து முடிப்பதையே, தம் கடமையின் முழுமையாகக் கருதுகிறார்கள் பெற்றோர்.

மணமக்களோ, தமக்கு மக்கட்செல்வங்கள் பிறப்பதையே மணவாழ்வின் நிறைவாகக் கருதுகிறார்கள். ஆரோக்யமான வாழ்வு படைத்தோர் அனைவருமே அந்த மழலைச் செல்வத்தைப் பெற்று விடுகிறார்களா ? அந்த நடைமுறையில் தான் எத்தனை சிரமங்கள், இடையூறுகள் !

இன்றைய நாகரிக வாழ்க்கையில் பெண்களும் வேலைக்குச் செல்லும் அவசியம் ஏற்பட்டுள்ளது. பணியின் சுமை அவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தைத் தருகிறது. இறுக்கமான சூழலும் இனம்புரியாத காரணங்களும் சேர்ந்து கொள்ள, கருவின் வளர்ச்சி முழுமையடையாத சிலருக்கு *‘கருச்சிதைவு’* ஏற்பட்டுவிடுகிறது.

கருவுக்குள் உருவாகும் உயிரைக் காக்கும் அம்பிகை, தஞ்சை மாவட்டம், திருக்கருகாவூர் என்ற திருத்தலத்தில் குடியிருக்கிறாள்.

எத்தனையோ பேரின் ஏக்கப் பெருமூச்சுகளை இன்ப உணர்வலைகளாக மாற்றிய அம்பிகை அவள்.

அந்த நெகிழ்ச்சியான அனுபவங்களின் பிரதிபலிப்பை, இங்கு மக்கள் வெள்ளம் நிரம்பி வழிவதிலிருந்து காணமுடியும்.

விருந்தோம்பல் தமிழர் பண்பாடு. தவிர்க்க முடியாத ஒரு இக்கட்டான சூழலில் விருந்தினரை உபசரிக்க இயலாத போது ஏற்படும் தவிப்பும் வேதனையும் மிகையானது தான்.

இது தான் கர்ப்பரட்சாம்பிகையின் அளவிலாக் கருணையை நமக்கு எடுத்துக் காட்டும் திருக்கருகாவூர் தலத்தின் வரலாறு.

வேதிகை என்ற பெண்ணும், அவளது கணவன் நித்திருவரும், புத்திர பாக்கியம் வேண்டி, திருத்தல யாத்திரை மேற்கொண்டனர். காவிரிக்கு தெற்கே வெட்டாற்றங்கரையில் முல்லை வனத்தை அடைந்த போது, ஓர் இனிய அனுபவம் அவர்களுக்கு காத்திருந்தது. வேதிகை தான் கருவுற்றிருப்பதை உணர்ந்தாள்.

முல்லைவனநாதரின் கருணையால் கருவுற்ற சந்தோஷத்தில், மேலும் சில நாட்கள் அங்கேயே தங்க எண்ணினர்.

ஒருநாள்... கடுமையான வெயில்காலம். கருவுற்றிருந்த வேதிகை, வீட்டில் களைப்பாகப் படுத்திருந்தாள்.

நித்திருவர் வெளியே சென்றிருந்தார். அந்த நேரம் ஊர்த்துவ பாதர் என்ற முனிவர் அவர்கள் இல்லத்தைச் சென்றடைந்தார்.

மயக்கமுற்ற நிலையிலிருந்த அந்தப் பேதை, மாமுனிவர் வருகையை கவனிக்கவில்லை. அவரை உபசரிக்கும் நிலையிலும் அவள் அப்போது இல்லை. சினங்கொண்டார் முனிவர். தன்னை வேதிகை அவமதித்து விட்டதாகவே கருதினார். இறைவன் திருவருளால் உருவான *‘கரு’* சிதைந்து போகுமாறு, கொடிய சாபமிட்டார். அவருடைய கோபம் உடனே பலித்தது.வேதிகையின் கர்ப்பம் சிதைந்தது.

நித்திருவர் திரும்பி வந்ததும், நடந்த சம்பவத்தை அறிந்து மனம் நொந்தார். வெகு நாட்கள் காத்திருந்து, மனைவி கருவுற்ற மகிழ்ச்சியில் இருந்த அவருக்கு, இது அதிர்ச்சி மிகுந்த துயரை அளித்தது.

*‘திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பர். உன்னுடைய திருத்தலத்தில் இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலை உருவாகிவிட்டதே ! அன்னையே, நீதான் வேதிகை வயிற்றில் சிதைந்துள்ள கருவைக் காத்திட வேண்டும்’* என்று தம்பதிகள் மனமுருக வேண்டினார்கள்.

Ⓜ *குடத்திலிட்டு காத்திட்டாள்:*Ⓜ

வேண்டுதல் வீண்போகவில்லை. வேதிகையின் கருவைக் காத்திட திருவுளம் கொண்டாள் அன்னை. சிதைந்திருந்த கருவை ஒரு குடத்திலிட்டு, ஒன்று சேர்த்து, ஒன்பது மாதங்களும் பாதுகாத்து, நன்கு வளரச் செய்து, ஒரு அழகிய ஆண் குழந்தையாகவே அவர்களிடம் தந்தாள் அன்னை. நித்திருவரும் வேதிகையும் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை !

இறையருளால் பிறந்த அந்த சிசுவுக்கு பாலூட்ட, காமதேனுவே அங்கு வந்தது. தன் குளம்புகளால் கீறி, ஒரு பால் குளத்தையே உருவாக்கியது. *‘க்ஷீர குண்டம்’* என்று அழைக்கப்படும் அந்தக் குளம், கோயிலின் எதிரில் உள்ளது.

🅱 *கருணை தொடர்ந்திட...*🅱

*‘எனக்குக் கருணை காட்டியது போல், இனி வருங்காலத்தில், மக்கட்பேறு வேண்டி உன் திருத்தலம் வருவோருக்கும், கருத்தரித்த பெண்கள் நல்லபடியாக குழந்தை பெற்றிடவும் அருள்புரிய வேண்டும். கருகாத்த நாயகியே ! உன்னை நம்பி வருவோர் நலம் காத்திட வேண்டும்’* என்று அன்னையிடம் வரம் கோரினாள் வேதிகை.

அவளது உயர்ந்த பண்பைப் பாராட்டிய அன்னை கர்ப்பரட்சாம்பிகை, பல அற்புதங்களை இன்றும் நிகழ்த்தி வருகிறாள்.

*பிறவிப்பிணி தீர்த்திடும் மருந்தீஸ்வரனாக முல்லைவனநாதரும், புற்று வடிவில் சுயம்புத் திருமேனியாக அருள்பாலிக்கிறார்.*

மருத்துவத்துறையில் *‘கற்பனைக்கு எட்டாத அதிசயம்’* என்று புகழப்படும் *‘சோதனைக்குழாய் குழந்தை’* என்ற அறிவியல் கண்டுபிடிப்பு, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்கருகாவூர் திருத்தலத்தில் இப்படி நிகழ்ந்திருக்கிறது.

Ⓜ *படிகளை மெழுகி !*Ⓜ

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை வரம் கிட்டாத தம்பதிகள் இங்கு வந்து, அன்னையின் கருவறைப் படிகளை நெய்யினால் மெழுகி, அன்னையின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜிக்கப்பட்ட நெய்யை கணவன் - மனைவி இருவருமே தொடர்ந்து 48 நாட்கள் இரவில் சாப்பிட்டு வர, விரைவில் கருத்தரிக்கும். மாதவிலக்கு சமயத்தில் மட்டும் ஐந்து நாட்கள் இந்தப் புனித நெய்யை உட்கொள்ளக் கூடாது.

{ நேரில் வர இயலாதவர்களுக்கு தபால் மூலமும் இதை அனுப்பி வைக்கிறார்கள்.}

🅱 *சுகப்பிரசவம் ஆக !*🅱

இந்தத் தலத்து அன்னையின் கருணையுடன் வழங்கப்படும் எண்ணெயை பிரசவத்திற்காகக் காத்திருக்கும் பெண்களின் வயிற்றில் தடவி வர, அவர்கள் அறுவை சிகிச்சை ஏதுமின்றி, சுகப் பிரசவமாக குழந்தையைப் பெற்றெடுக்கிறார்கள் ! இங்கு வழங்கப்படும் விளக்கெண்ணெயை அன்னையின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜித்து, அதை அடிவயிற்றில் தடவிக்கொள்ள வேண்டும். அசாதாரண வலி வரும் சமயங்களில் இதைத் தடவினால், வலி நிற்கும். குறிப்பாக, பிரசவ காலம் நெருங்கும் சமயத்தில், அன்னையை வேண்டிக்கொண்டு இப்படித் தடவி வருவது சுகப்பிரசவத்துக்கு வகை செய்யும்.

Ⓜ *முல்லைவனநாதர்:*Ⓜ

*முல்லைக் கொடிகளுக்கிடையே புற்றுமண்ணில் தானே தோன்றிய சிவலிங்கத் திருமேனியாக, முல்லைவனநாதர் அருள்பாலிக்கிறார். மாதவி வனேஸ்வரர், கர்ப்பபுரீஸ்வரர் என்றும் அவருக்குப் பெயர்கள் உண்டு.*

புற்றுமண்ணாகத் தோன்றிய சிவலிங்கத் திருமேனியில், முல்லைக் கொடிகள் சுற்றி வளைத்த தழும்பையும் காணலாம். இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. *‘புனுகுச் சட்டம்’* மட்டுமே சாத்தப் படுகிறது.

வளர்பிறை பிரதோஷ நாட்களில் இவருக்கு புனுகு சார்த்தி வணங்கினால், தீராத நோய்களும் தீர்ந்துவிடும் என்று நம்பிக்கை.

🅱 *தங்கத்தொட்டிலில்...*🅱

இந்தத் தலத்தில் வழிபடு வோருக்கு குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை. பிரசவ கால வேதனையும் மிகுதியாவதில்லை. அன்னையின் அருளால் சுகப்பிரசவம் ஆகி, தாயும் குழந்தையுமாக இங்கு வந்து, அன்னையின் சந்நிதியில் தங்கள் குலக் கொழுந்தை, *‘தங்கத் தொட்டிலில்’* கிடத்தி சீராட்டி, அன்னையை வலம் வரும் ஆனந்தக் காட்சி நெகிழ வைப்பது.

பிற மதத்தினரும்கூட இங்கு கூடுவதைக் காண முடிகிறது ! எந்நாட்டவர்க்கும் எம்மதத் தினருக்கும், ஏன், இந்த மனித குலத்திற்கே சொந்தமானவள் அன்னை.

கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் (ஆவூர் - மெலட்டூர் வழி) 20 கி.மீ. தொலைவில் உள்ளது, திருக்கருகாவூர்.

தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், சாலியமங்கலம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் நிறைய உள்ளன.

காலை 5.30 மணி முதல் பகல் 12.30 வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

நேரில் வரமுடியாதோர், அஞ்சல் மூலம் (செயல் அலுவலர், அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில், திருக்கருகாவூர் - 614 302. தொலைபேசி: 04374 - 273423) காணிக்கை செலுத்தி அன்னையை வேண்டிக் கொள்கிறார்கள்.

பெற்ற அன்னையை விட பரிவோடு பேறுகால மகளை அணைத்துக் காத்திடும், அம்பிகையின் கருணைக்கு தான் எல்லை ஏது ?

திங்கள், 20 நவம்பர், 2017

இந்துக்களின் காலக்கணக்கு, உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்...



இந்துக்களின் காலக்கணக்கு,
உலகத்தோற்றம் வரை பின்னோக்கிச் சென்றால்...

கி.பி.1947 - பாரத சுதந்திரம்
கி.பி 1847 - பிரிட்டிஷ் ஆட்சி துவக்கம்
கி.பி 1192 - முஸ்லீம் ஆட்சி துவக்கம்
கி.பி. 788 - ஆதி சங்கரர் தோற்றம்
கி.பி 58 - சாலி வாகன சக வருசம்
கி.மு.57 - விக்ரமாதித்ய சகம் வருடம்
கி.மு 509 - புத்தர் தோற்றம்
கி.மு 3102 - கலியுகம் ஆரம்பம்
கி.மு 3138 - மகாபாரத போர், யுதிஷ்டிரர் முடிசூட்டு, யுதிஷ்டிர சகம் கி.மு 8,69,100 - இராமபிரானின் காலம்
கி.மு21,05,102 - சூரிய சித்தாந்தம்
கி.மு 38, 90,100- சத்திய யுகம் ஆரம்பம், 28-வது சதுர்யுகம்
கி.மு12,05,31,100 - பிரளய முடிவு, தற்போது உள்ள ஏழாம் மன்வந்ரம் ஆரம்பம், இக்ஷவாகு வம்சம்
கி.மு42,72,51,100 - 6 ஆம் மன்வந்ரம்
கி.மு73,39,71,100 - 5 ஆம் மன்வந்ரம்
கி.மு1,04,06,91,100-­ 4 ஆம் மன்வந்ரம்
கி.மு13,47,41,11,100­- 3 ஆம் மன்வந்ரம்
கி.மு1,65,41,31,100-­ 2 ஆம் மன்வந்ரம்
கி.மு1,96,08,51,100-­ 1 ஆம் மன்வந்ரம்,மனிதர் - உயிர்களும் படைப்பு
கி.மு1,98,67,71,100-­ கல்பம் ஆரம்பம், உலகப்படைப்பு!

குறிப்பு:- விஞ்ஞானிகள் உலகம் தோன்றி சுமார் 200 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்று கணக்கிட்டுள்ளனர்...
அது இந்துக்களின் காலக்கணக்குடன் பொருத்தமாக இருப்பதைக் கவனிக்கவும்!

பன்னிரண்டு லக்னங்களுக்கும் யோகம் தரும் கோயில்கள் !!!




பன்னிரண்டு லக்னங்களுக்கும் யோகம் தரும் கோயில்கள்  !!!

நாம் நட்சத்திரங்களையும் ராசிகளையும் அறிவோம். ‘‘உங்களின் ராசி என்ன?’’ என்று கேட்டால் எல்லோரும் சட்டென்று சொல்லி விடுவோம்.  ஆனால்,  ‘‘உங்களின் லக்னம் என்ன?’’ என்று கேட்டால் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு ஜோதிடர் ராசிக் கட்டத்தை  நோக்கும்போது லக்னம் என்ன  என்றுதான் பார்ப்பார். ஜாதகக் கட்டத்தில் ‘ல’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடம்தான் அது. உங்களின் மையச்  சக்தி குவிந்திருக்கும் ராசியையே லக்னம் என்று  வரையறுத்திருக்கிறார்கள். இந்த உலகத்தை நீங்கள் எந்த ராசியின் வழியாக, அதன் அதிபதியான எந்த கிரகத்தின் மூலம் சந்திக்கிறீர்கள் என்பதைத்தான் லக்னம்  என்கிறார்கள். ராசி என்பது, சந்திரன் எந்த கிரக வீட்டில் இருந்தபோது  நீங்கள் பிறந்தீர்கள் என்று சொல்வது. ஆனால், லக்னம் என்பது நீங்கள் எந்த  மையத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்றும், உங்கள் வாழ்க்கையை  எந்த மையம் நகர்த்துகிறது என்றும் தீர்மானிக்கிறது.

மரத்தின் ஆணிவேர் போல மனிதனுக்கு லக்னம். உடலுக்கு உயிர்போல என்பதாலேயே,  விதியாகிய லக்னம் மதியாகிய சந்திரன் கதியாகிய சூரியன் என்பார்கள்.  ஏனெனில், ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிப்பதே லக்னம்தான். ஜாதகத் தின் பிராண மையமே லக்னம்தான். ராசியை வைத்து பலன்களை சொல்லுவதை விட  லக்னத்தை வைத்துத்தான் முழுமையான பலன்களை கூற  முடியும். வாழ்க்கைக் கணக்குகளை தொடங்கும் இடமும் இதுதான். ராசிக் கட்டங்களில் ஆங்காங்கு  கிடக்கிற கிரகங்களின் பலம், பலவீனங்களை,  திறனை லக்னம்தான் தீர்மானிக்கிறது. எனவே, எந்தெந்த லக்னக்காரர்கள் எந்தெந்த கோயில்களுக்குச் சென்றால்  பூரண நற்பலன்களை அடைவார்கள்  என்பது கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது. அந்தந்த கோயில்களுக்குச் சென்று தரிசித்து பயனடையுங்கள்.

மேஷ லக்னம்

கிரகங்களால் ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ்வதற்கும் நீங்கள் செல்ல வேண் டியது திருச்சி  மலைக் கோட்டை யிலுள்ள தாயுமானவசுவாமி ஆலயமாகும். அத்தலத்தில் உறையும் தாயுமானவ சுவாமி யையும் மட்டுவார்குழலி  அம்மையையும் தரிசித்து  வாருங்கள். இத்தலம் திருச்சியின் நகர மையத்திலேயே உள்ளது. தினமும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தாயுமானவ  சுவாமியின் பதிகத்தை சொல்லிக்  கொண்டேயிருங்கள்.

அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி, வேறாய்
அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகிப்
பகர்வன எல்லாம் ஆகி அல்லது ஆகிப்
பரம்ஆகிச் சொல்லரிய பான்மை ஆகித்
துகள் அறுசங்கற்ப விகற்பங்கள் எல்லாம்
தோயாத அறிவுஆகிச் சுத்தம் ஆகி
நிகர் இல் பசுபதியான பொருளை நாடி
நெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம்

ரிஷப லக்னம்

உங்களுக்கு நல்ல நேரமோ கெட்ட நேரமோ எது நடந்தாலும் நன்மை விளையச் செய்வது என்பது இறைவன் கைகளில்தான் உள்ளது. அதிலும்  இயல்பாகவே  சுகவாசியான நீங்கள் இன்னும் சுகமான வாழ்க்கையை வாழ வேண்டுமெனில் திட்டக்குடி எனும் தலத்திலுள்ள சுகாசனப் பெரு மாளையும், வேதவல்லித்  தாயாரையும் முடிந்தபோதெல்லாம் தரிசியுங்கள். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொழுதூரிலிருந்து  13 கி.மீ., விருத்தாசலத்திலிருந்து 32  கி.மீ. கீழேயுள்ள ஆண்டாளின் திருப்பாவையை எப்போதும் கூறுங்கள்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்ககுடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

மிதுன லக்னம்

எல்லாவற்றையும் தாண்டி கிரகங்களை சரி செய்யும் ஆற்றலும், திறனும் இறைவனிடமே இருப்பதால் இறுதியில் கிரகங்கள் இறைவனிடமே  சரணடைகின்றன.  எனவே, நம்மால் ஆன பரிகாரங்களை செய்து கொண்டிருக்கும்போதே இறைவனின் பாதங்களை நினைத்து சரணடைவோம்.  அப்படிப்பட்ட தலமாக நீங்கள் செல்ல  வேண்டியது திருத்தங்கல் ஆகும். இத்தலத்திலுள்ள நின்ற நாராயணப் பெருமாளையும், செங்கமலத்  தாயாரையும் தரிசித்து வாருங்கள். இத்தலம் சிவகாசி -  ஸ்ரீவில்லிபுத்தூர் பாதையில் அமைந்துள்ளது. கீழ்க்காணும் பாடலை முடிந்தபோதெல்லாம்  பாடி வாருங்கள்:

கண்ண ணென்னும் கருந்தெய்வம்
காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய் தாற்போலப்
புறநின் றழகு பேசாதே
பெண்ணின் வருத்த மறியாத
பெருமா னரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை
வாட்டம் தணிய வீசீரே

கடக லக்னம்

கிரகங்களால் ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கை அமைவதற்கும் நீங்கள் செல்ல வேண்டிய  ஆலயம்,  அம்மன்குடி ஆகும். இத்தலத்திலுள்ள அஷ்டபுஜ துர்க்கையை தரிசியுங்கள். துர்க்கையே, தான் மகிஷனை சம்ஹாரம் செய்த பாவம் போக்க  இங்கே  சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. இத்தலம் கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.  கும்பகோணம் -  உப்பிலியப்பன் கோயில் - அய்யாவாடி வழியாக அம்மன்குடிக்கு பேருந்துகள் செல்கின்றன. ஆடுதுறையிலிருந்து தனி வாகனம்  மூலமாகவும் இக்கோயிலை  அடையலாம்.

அபிராமி அந்தாதியிலுள்ள 75வது பதிகத்தை எப்போதும் சொல்லுங்கள்.தங்குவர் கற்பக தாருவின் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வாழாப் பிறவியை மால்வரையும்
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே

சிம்ம லக்னம்

உங்கள் லக்னத்தை இயக்கும் மூன்று கிரகங்களால் ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கையைப்   பெறுவதற்கும் நீங்கள் செல்ல வேண்டிய ஆலயம், பழநி முருகன் கோயில். அக்கோயிலுக்குச் சென்று ராஜ அலங்கார முருகனை மறக்காது  தரிசியுங்கள். அல்லது  வீட்டில் ராஜ அலங்கார முருகனின் படத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இந்தத் திருப்புகழை எப்போதும் சொல்லுங்கள்.

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே

கன்னி லக்னம்

பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் அருளும் தலத்தை தரிசிக்கும்போது நிச்சயம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் உண்டாகும். அதிலும்  கடற்கரையோரம்  அருளும் பெருமாளாக இருப்பின் நற்பலன்கள் அதிகரிக்கும். புண்டரீக முனிவரின் பக்தியை மெச்சி மாமல்லபுரத்தில் பெருமாள்  பள்ளிகொண்ட கோலத்தில்  சேவை சாதித்தார். புண்டரீக முனிவரும் எம்பெருமானின் பாதத்தின் அருகே அமரும் பாக்கியம் பெற்றார். இவ்வாறு  சயனத் திருக்கோலத்தில் காட்சி  தந்தமையால் பெருமாள், ஸ்தலசயனப் பெருமாள் ஆனார். சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் அமைந் துள்ளது இக்கோயில்.
தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்றிய திருமாலை பாசுரங்களை தினமும் கூறுங்கள்.

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம்நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத்துயிலு மாகண்டு
உடலெணக் கருகு மலோ எஞ்செய்கேனுலகத்தீரே!  
     
துலா லக்னம்

எந்த கிரகங்கள் எங்கு இருந்தாலும் சரி, தெய்வ சக்தியை அடிபணியுங்கள். அதிலும் புதனை பலப்படுத்தும் அம்சமாகவே உள்ள பெருமாளை  எப்போதும்  வணங்குங்கள். குறிப்பாக காஞ்சிபுரத்திலுள்ள நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான பச்சை வண்ணப் பெருமாளை அவ்வப்போது  தரிசித்துவிட்டு  வாருங்கள். பச்சை வண்ணப் பெருமாளின் அருளால் புதன் பிரமாண்டமான வாழ்வைத் தருவார்.
கீழேயுள்ள திருமங்கையாழ்வார் பாசுரத்தை தினமும் கூறுங்கள்.

வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர்
மல்லையாய் மதிள் கச்சியூராய், பேராய்
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன்
குலவரையான் மடப்பாவை யிடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
பணி வரையினுச் சியாய் பவள வண்ணா
எங்குற்றா யெம்பெருமான் உன்னை நாடி
யேழையே னிங்ஙணமே யுழிதருகேனே

விருச்சிக லக்னம்

கிரகங்கள் எப்படியிருந்தாலும் பிராப்தம் எனும் முன்வினைப் பயனை மாற்றியமைக்கும் சக்தி தெய்வத்திற்குத்தான் உண்டு. எனவே, உங்களின்  வாழ்க்கை  யோகமாக மாற நீங்கள் தில்லை ஸ்தானம் என்றழைக்கப்படும் திருநெய்த்தானம் தலத்திற்குச் சென்று வாருங்கள். அத்தலத்தில் அருளும்  நெய்யாடியப்பரையும்,  பாலாம்பிகையையும் தரிசித்து வாருங்கள். இத்தலம் தஞ்சாவூர், திருவையாறுக்கு அருகேயுள்ளது. கீழேயுள்ள திருவருட் பாவையை தினமும் கூறுங்கள்.

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே எந்தைநினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும் செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவமார்க்கம் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும் தப்போது நான் என் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நின்னைப் பிரியாத நிலையையும் வேண்டுவனே

தனுசு லக்னம்

கிரகங்களால் ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ்வதற்கும் நீங்கள் செல்ல வேண்டிய  தலம்  வில்வாரணி முருகன் கோயிலாகும். சகல நட்சத்திரங்களுக்கும் இவர் அருள்பாலிப்பதாக புராண ஐதீகம் நிலவுகிறது. நட்சத்திரங்கள் பூஜிக்கும்  நாயகனாக இந்த  முருகன் விளங்குகிறார். கருவறையில் நாகாபரணத்துடன் முருகப் பெருமானும், சுயம்பு வடிவமான சிவபெருமானும் ஒரு சேர  காட்சி தருகின்றனர். இத்தலம்  திருவண்ணாமலை வேலூர் சாலையில் கலசப்பாக்கத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், போளூரிலிருந்து 12 கி.மீ.  தொலைவிலும் அமைந்துள்ளது. கீழேயுள்ள  திருப்புகழை தினமும் கூறுங்கள்.

சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில்
சேய சாயல்க லாமதி முகமானார்
தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலை
சேலு லாவிய கூர்விழி குமிழ்நாசி
தாரு லாவிய நீள்குழல் வேய ளாவிய தோளியர்
சார்பி லேதிரி வேனைநி னருளாலே
சாம வேதியர் வானவ ரோதி நாண்மலர் தூவிய
தாளில் வீழ வினாமிக அருள்வாயே

மகர லக்னம்

கிரகங்களின் முத்தான நன்மைகள் காலத்தே கிடைத்திட இந்த கிரகங்களை இயக்கும் சக்தியான இறைவனை நாடிச் செல்லுங்கள். அத்தகைய ஒரு  தலம்,  திருநின்றவூர். தாயாரின் பூரண அனுக்கிரகமும், பெருமாளின் பொங்கும் அருளும் நிறைந்த தலம் இது. இத்தலத்தில் கருணையே சொரூபமாக  தாயார், ‘என்னைப்  பெற்ற தாயே’ என்கிற திருநாமத்தோடு அருள்கிறாள். சுதாவல்லி என்கிற திருநாமமும் உண்டு. பெருமாள், பக்தவச்சலன். இத் தலம் திருவள்ளூருக்கு  அருகேயுள்ளது. சென்னையிலிருந்து சென்று வர பேருந்து மற்றும் ரயில் வசதி உண்டு. திருமங்கையாழ்வார் திருநின்றவூரில்  பாடிப் பரவசமான பாசுரத்தை  தினமும் சொல்லுங்கள்

ஏற்றினை யிமயத்து ளெம் மீசனை
இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை அண்டத் தற்புறத் துய்த்திடும்
ஐயனைக் கையிலாழி யொன்றேந்திய
கூற்றினை குருமாமணிக் குன்றினை
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
காற்றினைப் புணலைச் சென்று நாடிக்
கண்ணமங்கயுள் கண்டு கொண்டேன்

கும்ப லக்னம்

உங்களை சுக்கிரன், புதன், சனி போன்ற கிரகங்கள் வழி நடத்துவதால் மறக்காமல் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் உரிய வழிபாட் டை  மேற்கொள்வதும் நல்லதாகும். அதனால் திருப்பதி பெருமாளான வெங்கடாஜல பதியை வருடத்திற்கு ஒருமுறையேனும் தரிசித்து வாருங்கள்.  வீட்டில் பெரிய  அலர்மேல் மங்கைத் தாயார்-திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் படத்தை வாங்கி வைத்து வணங்குங்கள். கீழேயுள்ள குலசேகராழ்வார்  பாசுரத்தை தினமும்  கூறுங்கள்

மின்னனைய நுண்ணிடையா ருருபசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடா மருந்தவத்தனாவேனே
வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே

மீன லக்னம்

உங்களின் சொந்த ஜாதகத்தில் எத்தனைதான் கிரகங்கள் பலவீனமாக இருந்தாலும் எல்லாவற்றையும் சரி செய்யும் சக்தி தெய்வத்திற்கு உண்டு.  கிரகங்களுக்கு  பிரமாண்ட பலத்தை அளிப்பவையே தெய்வங்கள்தான். எனவே, உங்களின் யோகாதிபதிகள் பூரண பலன்களை கொடுக்க நீங்கள்  செல்ல வேண்டிய தலம்  குறுக்குத்துறை முருகன் கோயிலாகும். இக்கோயில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மிகவும் ரம்மியமான சூழ்நிலையில்  அமைந்துள்ளது. திருநெல்வேலி சந்திப்பு  ரயில் நிலையத்தில் இருந்தும், டவுன் ரயில் நிலையத்தில் இருந்தும் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  பஸ், ஆட்டோ வசதி உண்டு. கீழேயுள்ள கந்தர்  அனுபூதி பாடலை தினமும் கூறுங்கள்.

அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியஆ
விரிதாரண விக்ரமவேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனே.
மின்னே நிகர்வாழ்வை விரும்பியயான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
ம.ன்னே மயில் ஏறிய வானவனே.
எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தாகும் ஆனவை தீர்த்தெனைஆள்
கந்தா கதிர் வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறைநாயகனே.

(சூரியன் பதிப்பக வெளியீடான ‘முனைவர் கே.பி. வித்யாதரன்’ எழுதிய பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி)

சனி, 18 நவம்பர், 2017

108 ஐயப்பன் சரண கோஷம்




108 ஐயப்பன் சரண கோஷம்

1. சுவாமியே சரணம் ஐயப்பா
2. ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
3. கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
4. சக்தி வடிவேலன் ஸோதரனே சரணம் ஐயப்பா
5. மாளிகப்புரத்து மஞ்சம்மாதேவி லோகமாதவே சரணம் ஐயப்பா
6. வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா
7. கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
8. பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
9. சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
10. வனதேவதமாரே  சரணம் ஐயப்பா
11. துர்கா பாகவதிமாரே சரணம் ஐயப்பா
12. அச்சன்  கோவில் அரசே சரணம் ஐயப்பா
13. அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
14. அன்னதன பிரபுவே சரணம் ஐயப்பா
15. அச்சம் தவிர்பவனே சரணம் ஐயப்பா
16. அம்பலதரசனே சரணம் ஐயப்பா
17. அபய தாயகனே சரணம் ஐயப்பா
18. அகந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
19. அஷ்டசித்தி தாயகனே  சரணம் ஐயப்பா
20. ஆண்டிநோரை ஆதரிக்கும்  தெய்வமே சரணம் ஐயப்பா
21. அழுடயின் வாசனே சரணம் ஐயப்பா
22. ஆர்யாங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா
23. ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா
24. அனந்த ஜோதியே சரணம் ஐயப்பா
25. ஆத்மா ஸ்வரூபியே சரணம் ஐயப்பா
26. ஆணைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா
27. இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா
28. இன்னலை தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
29. இகபரசுக  தாயகனே சரணம் ஐயப்பா
30. இதய கமலா வாசனே சரணம் ஐயப்பா
31. ஈடில்லா இன்பம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
32. உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா
33. ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
34. ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா
35. ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
36. எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா
37. எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா
38. என் குலதெய்வமே சரணம் ஐயப்பா
39. என் குரு நாதனே சரணம் ஐயப்பா
40. எருமேலி வாழும் சச்தவே சரணம் ஐயப்பா
41. எங்கும் நிறைந்த நாத பிரம்மமே சரணம் ஐயப்பா
42. எல்லோர்க்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா
43. எற்றுமாநூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
44. ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா
45. ஏழைக்கு அருள் புரியும் ஈசனே சரணம் ஐயப்பா
46. ஐந்துமலை வாசனே சரணம் ஐயப்பா
47. ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
48. ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா
49. ஓம்கார பரப்ரம்மமே சரணம் ஐயப்பா
50. கலியுக வரதனே சரணம் ஐயப்பா
51. கண்.கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
52. கம்பன் குடிகுடைய நாதனே சரணம் ஐயப்பா
53. கருணா சமுத்திரமே சரணம் ஐயப்பா
54. கற்பூர ஜோதியே  சரணம் ஐயப்பா
55. சபரிகிரி வாசனே சரணம் ஐயப்பா
56. சத்ரு சம்ஹார மூர்தியே சரணம் ஐயப்பா
57. சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
58. சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா
59. சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
60. ஷம்புக்குமாரனே சரணம் ஐயப்பா
61. ஸத்தியஸ்வரூபனே  சரணம் ஐயப்பா
62. சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
63. சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
64. ஷன்முக்ஹா சோதரனே சரணம் ஐயப்பா
65. தன்வந்தரி மூர்த்தியே சரணம் ஐயப்பா
66. நம்பினோரை காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
67. நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா
68. பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா
69. பம்பை பாலகனே சரணம் ஐயப்பா
70. பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா
71. பாக்தஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா
72. பாக்த வட்சலனே சரணம் ஐயப்பா
73. பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா
74. பம்பா வாசனே சரணம் ஐயப்பா
75. பரம தயாளனே சரணம் ஐயப்பா
76. மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா
77. மகர ஜோதியே சரணம் ஐயப்பா
78. வைக்காது அப்பன் மகனே சரணம் ஐயப்பா
79. காண்க வாசனே சரணம் ஐயப்பா
80. குலத்துபுழை  பாலகனே சரணம் ஐயப்பா
81. குருவாயூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
82. கைவல்ய பத தாயகனே சரணம் ஐயப்பா
83. ஜாதி மத பேதம் இல்லாதவனே சரணம் ஐயப்பா
84. சிவசக்தி ஐக்கிய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
85. செவிப்பவற்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
86. துஷ்டர் பயம் நீக்குபவனே சரணம் ஐயப்பா
87. தேவாதி தேவனே சரணம் ஐயப்பா
88. தேவர்கள் துயர் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
89. தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா
90. நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா
91. நெய்அப்ஹிஷெக ப்ரியனே சரணம் ஐயப்பா
92. பிரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
93. பாப சம்ஹார மூர்டியே சரணம் ஐயப்பா
94. பாயஸான ப்ரியனே சரணம் ஐயப்பா
95. வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
96. வரப்ரதாயகனே  சரணம் ஐயப்பா
97. பாகவா தொத்தமனே சரணம் ஐயப்பா
98. போனம்பள வாசனே சரணம் ஐயப்பா
99. மோகினி சுதனே சரணம் ஐயப்பா
100. மோகன ரூபனே சரணம் ஐயப்பா
101. வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
102. வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா
103. சத்குரு நாதனே சரணம் ஐயப்பா
104. சர்வ ரோஹ நிவாரண தன்வந்திரி மூர்த்தியே சரணம் ஐயப்பா
105. சச்சிதானந்த ச்வருபனே சரணம் ஐயப்பா
106. ஸர்வாப்ஹீஷெக தயகனே சரணம் ஐயப்பா
107. சாச்வதப்பதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
108. பதினெட்டாம் படிக்குடையனாதனே சரணம் ஐயப்பா

வெள்ளி, 17 நவம்பர், 2017

மாலை சூடும் மணநாள்:திருமணத்தடை நீக்கும் கோயில்களின் தொகுப்பு



மாலை சூடும் மணநாள்:திருமணத்தடை நீக்கும் கோயில்களின் தொகுப்பு
           

திருமணம் - அது இளமையின் ஏக்கத் தீர்வு மட்டுமல்ல... எதிர்காலத் தனிமையை, ஆதரவின்மையைத் தவிர்க்க மேற்கொள்ளும் பந்தமும்கூட. எங்கோ பிறந்து, வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்ந்த இரண்டு பேரை காலம் பிணைத்து வைக்கும் வித்தை. அந்த மண வாழ்க்கை கைகூடுவதற்குள்தான் எத்தனை பிரச்னைகள் ?

காதல் திருமணம் என்றால் மனம் திறப்பதில் தவிப்பு. பெற்றோர் ஆசி கிடைக்கும்வரை போராட்டம்.

பெரியவர்கள் பேசி முடிக்கும் திருமணங்களில் வேறுவித சிக்கல்கள். ஜாதகப் பொருத்தம், அந்தஸ்து, மனப் பொருத்தம், விசாரிப்புகள்... என தடைக்கற்கள் நிறைய!

ஆனால், கடவுள் அருள் இருந்தால் எந்தத் திருமணமும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது போலவே நடக்கும். அப்படி அருளும் ஆன்மிகத் தலம் *திருமணஞ்சேரி.*

Ⓜ *மணநாள் வாராதோ ?*Ⓜ

கைநிறைய சம்பாதிக்கிறான், லட்சணமாகவும் இருக்கிறான். இவனுக்கு ஒரு பெண் அமையவில்லையே, எங்கே பிறந்திருக்கிறாளோ என்று பிள்ளை வீட்டார் கலங்குவது ஒரு பக்கம்.

கண்ணுக்கு அழகாய் இருக்கிறாள்; நல்ல படிப்பு, நல்ல குணம், அடக்கமான பெண், இத்தனை இருந்தும் ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்கவில்லையே, எத்தனை காலம்தான் காத்திருக்க வேண்டுமோ என்று பெண்வீட்டார் கலங்குவது இன்னொரு பக்கம்.

உரிய காலத்தில் மணவாழ்க்கை அமைந்திடாவிட்டால், குடும்பத்தில் அமைதி ஏது?

இவர்கள் குறை தீர்த்திடவே, இறைவன் திருமண வரம் அளிக்கும் எம்பெருமானாக, மணக்கோல நாதராக, அவர் தம் தேவியுடன் திருமணஞ்சேரியில் எழுந்தருளி இருக்கிறார்.

🅱 *கோகிலாம்பாள் சமேத கல்யாணசுந்தரர்:*🅱

திருமணஞ்சேரி திருக்கோயிலுக்குள் நுழையும்போதே, ஓர் இனிய உணர்வு மேனியெங்கும் பரவுகிறது. கோயிலுக்குள் நுழைந்த உணர்வே இல்லை. உறவினர் அல்லது நண்பர் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ளப்போகும் பரவசம்தான் மனதைச் சூழ்கிறது. கோயிலிலும் கல்யாணக்களை !

யாருக்கு கல்யாணம் நடக்கிறது அங்கே... இறைவனுக்கா? இல்லை, பல ஜோடி பக்தர்களுக்கு!

இதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், இந்தக் கோயில் நாயகரைத் தரிசிப்போமா?

*காண்போரைக் கட்டிப் போடும் கவினோடு விளங்குகிறார் மூலவர். இவர் மணக்கோலநாதர். வடமொழியில், உத்வாகநாதர். திருமண நம்பிக்கை தரும் பேரொளி அவர்.*

*பக்கத்திலேயே இறைவி ‘கோகிலாம்பிகை’. பதினாறு வயதுப் பருவக் குமரியாக, அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை.* அம்பிகையின் தரிசனம், நம் உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.

Ⓜ *ஐயனும் அம்பிகையும் இங்கே வந்தது எப்படி ?*Ⓜ

ஒரு முறை சிவபெருமான் உமையவளோடு ஊடல் கொள்கிறார். தன்னை அலட்சியப்படுத்திய அம்பிகையை பசுவாகப் பிறக்குமாறு சாபமிடுகிறார். ஆனாலும், பிரிவு வேதனை அவருக்கு மனவருத்தம் தந்தது. அதே சமயம், அன்னைக்கு சாபவிமோசனம், அவளுடைய சகோதரனாலேயே கிடைக்கும் என்று ஆறுதலும் அளித்தார். ஆனால், அந்த சாபம் அன்னையைப் பல இடங்களுக்கு அலைக்கழித்தது.

தேரெழுந்தூரில் சாபம் பெற்ற உமையவள், காட்டில் அலைந்து திரிந்து, கோமல் என்ற தலத்தை அடைந்தாள். அங்கே திருமால், மாடு மேய்ப்பவனாக வந்து, தன் பசுக்களோடு அவளைப் பாதுகாத்தார். திருக்கோழம்பத்தில் அந்த பசுவின் வருடலை ஏற்றார் திருமால். பிறகு, திருவாவடுதுறையில் அந்தப் பசுவிற்கு சாப விமோசனம் அளித்தார்.

குத்தாலம் என்ற திருத்தலத்தில், பசு உருவம் நீங்கி, பரத மகரிஷியின் வேள்வியில், மீண்டும் உமையம்மையாக தோன்றுகிறாள் அம்பிகை. அதையடுத்து, திருவேள்விக்குடியில் கங்கணதாரணம் செய்து கொண்டு, குறுமுலைப்பாடி மற்றும் எதிர்கொள்பாடி வழியே சென்றபோது, மணக்கோல நாதராக அவளை இறைவன் எதிர்கொண்டார். திருமணஞ்சேரியில் அவளை மணஞ் செய்து கொண்டு, கல்யாணசுந்தரராக அருள்பாலிக்கிறார் இறைவன். அம்பிகை இந்தத் தலத்தில் கோகிலாம்பிகையாக அருளாட்சி புரிகிறாள்.

எம்பெருமானின் திருமண வைபவத்தைக் காண ஏழு கடல்களும் மாலையாக மாறி வந்ததாகத் தலபுராணம் சொல்கிறது. இந்த கடல்மாலைகள், கோயிலைச் சுற்றி இப்போது அகழியாகக் காட்சியளிக்கின்றன.

திருமணம் கூட்டுவிப்பது மட்டுமல்ல, மனவேற்றுமை காரணமாகப் பிரிந்து வாழும் தம்பதியரையும் மனம்திருந்தி, இணைந்து வாழச் செய்யும் அற்புதத் தலம் இது.

🅱 *மகாதேவன் முன்னே மாலை மாற்றி...:*🅱

திருமணத் தடையால் மனவேதனை அடைந்தவர்கள், திருமணஞ்சேரியில் கல்யாணசுந்தரரை மனமுருகி வழிபட, உடனே திருமணம் நிச்சயமாகிவிடும் அதிசயம், ஆனந்தத்தைத் தருகிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மனதிற்கிசைந்தபடி மணவாழ்க்கை அமைந்த தம்பதியர் மீண்டும் இங்கு வருகிறார்கள். திருமணம் கைகூடிய அவர்கள், கல்யாணசுந்தரர் முன்னிலையில் மீண்டும் மாலை மாற்றிக் கொள்கிறார்கள்.

மனிதர்கள் சாட்சியாக நடந்த திருமணத்திற்கு, இப்போது தெய்வ சாட்சி. யாருடைய அருளால் அந்தத் திருமணம் கைகூடியதோ, அந்த இறைவனுக்கு நன்றி சொல்லும் ஒரு வழிதான் இது. இப்படி பல ஜோடிகள் தினமும் நன்றி செலுத்துவது கண்கொள்ளாக் காட்சி.

கல்யாணசுந்தரர் மணக்கோலத்தில், மண்டபத்தில் எழுந்தருளி இருக்கிறார். அருகே கோகிலாம்பிகை நாணத்தில் தலைகுனிந்தபடி நிற்கிறாள். அவளது வலக்கரம் பற்றியபடி அருள்பாலிக்கிறார் மாப்பிள்ளைச் சாமி!

*‘மணமாலை’* வேண்டி வழிபடுவோர் ஏக்கத்தோடும் எதிர்பார்ப்புகளோடும் ஒரு வரிசையாக எதிரே அமர்ந்திருக்கிறார்கள். திருமணம் நடந்தேறியதற்காக நன்றி வழிபாடு நடத்தும் தம்பதிகள் நம்பிக்கையோடும் முகம்கொள்ளா மகிழ்ச்சியோடும் இன்னொரு வரிசையாகவும் அமர்ந்திருக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது. அந்த தம்பதிகளின் கண்களில்தான் எத்தனை குதூகலம்! இந்த பக்தர் வெள்ளத்தால் வெள்ளிக் கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருமண மண்டபம் நிரம்பி வழிகிறது.

சரி, திருமணம் தெய்வ சங்கல்பத்துடன் இனிதே நடந்து முடிந்தது. ஆனால், இனிமையான மணவாழ்க்கை அமைந்தும்கூட, ராகு தோஷத்தால் பாதிப்புக்குள்ளானவர்களும் இருப்பார்களே... அவர்கள் தோஷம் நீங்கி, மன அமைதி பெறவும் இங்கு வழி இருக்கிறது.

அவ்வாறு பாதிப்புக்குள்ளானவர்கள், இங்கே உள்ள சப்த சாகர திருக்குளத்தில் நீராடி, திருக்கோயிலின் உள்ளே உள்ள மங்கள ராகுவிற்கு பாலபிஷேகம் செய்து, பால் பொங்கல் படைக்கிறார்கள். அந்த பிரசாதத்தை பக்தியுடன் உட்கொண்டால், சர்ப்ப தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

Ⓜ *குறையொன்றும் இல்லை...*Ⓜ

வைசியர் குலத்தில் பிறந்த இரண்டு பெண்கள் இணைபிரியாத தோழிகள். தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கிடையே திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள உறுதி எடுக்கிறார்கள்.

ஒருத்தி அழகிய பெண்மகவைப் பெறுகிறாள். மற்றவளுக்கோ ஆமை வடிவத்தில் ஆண் குழந்தை பிறக்கிறது. இருவரும் மண வயதை அடையும் நேரத்தில், அந்த ஆமை இளைஞனுக்கு பெண் தர மறுத்து விடுகிறாள் பெண்ணைப் பெற்றவள். என்றாலும், இந்த ஒப்பந்தத்தை அறிந்த இளம் பெண், தாயின் தடையையும் மீறி, ஆமை வடிவினனை மணக்க முன்வருகிறாள். அவன் மறுக்கிறான். அவள் அவனை அன்புடன் வற்புறுத்தி திருமணஞ்சேரி கூட்டி வருகிறாள். கல்யாண சுந்தரரை வேண்டுகிறாள். அவளுடைய உறுதியைக் கண்டு வியந்த இறைவன், அவனது ஆமை உருவம் போக்கி, இயல்பாக மாற்றுகிறார்.

ஆழ்ந்த பக்தியினால், இறைவனிடம் எதை யாசித்தாலும் பெறலாம் என்பதற்கு உதாரணம் இந்தக் கதை.

திருமணத்துக்குத் தடையாக உள்ள உடற்குறை நீங்கும் அல்லது அந்தக் குறையைப் பொருட்படுத்தாத வாழ்க்கைத் துணை அமையும் என்பதே இக்கதை சொல்லும் நீதி.

ஊடலால் பிரிந்திருந்த இறைவனுக்கும் தேவிக்குமே திருமணம் நடந்த ஊர் ஆதலால் திருமணஞ்சேரி என்ற பெயர் பெற்றது.

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் குத்தாலத்திலிருந்து வடக்கே 5 கி.மீ. பயணித்தால் திருமணஞ்சேரியை அடையலாம்.

மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்துகள் அடிக்கடி உண்டு. குத்தாலத்திலிருந்து ஆட்டோ, டாக்ஸி வசதிகள் நிறையவே உண்டு.

திருமணஞ்சேரியில் தங்கும் வசதிகள் இல்லை. மயிலாடுதுறையில் தங்கலாம். இத்தலத்தில் உணவு விடுதிகள் அவ்வளவாக இல்லை.

இங்கே கெட்டிமேள ஒலி கேட்டுக் கொண்டேயிருக்கிறது.

Ⓜ *திருமணத்தடை நீக்கும் மேலும் சில கோயில்கள்:*Ⓜ

திருமணஞ்சேரி மட்டும்தானா திருமணத்தடை நீக்கும் திருத்தலம் ? நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் இங்குதானா வர வேண்டும் என்ற கேள்வி பலருக்கு எழலாம்.

தமிழகமெங்கும் இப்படி பல திருத்தலங்கள் உண்டு. அவற்றில் சில:

Ⓜ *திருப்பைஞ்ஞீலி:* Ⓜ

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வழியே 17 கி.மீ. பயணித்து இந்தத் தலத்தை அடையலாம். *‘ஞீலிவாழை’* என்ற தலமரமான ஒருவகை வாழைமரத்தடியில், சிறப்பு வழிபாடுகள் நடத்தி வேண்டிட திருமணம் கைகூடும். தலத்தின் *இறைவன் நீலகண்டேசுவரர். இறைவி விசாலாட்சி.*

🅱 *திருமழபாடி:*🅱

அரியலூர் அருகே உள்ள தலம். இங்கு நந்திதேவர் திருமணத்தை தரிசிப்போருக்கு திருமணம் முந்தி வரும் என்பது வாக்கு.

Ⓜ *அழகிய மணவாளன்:*Ⓜ

 திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகில் உள்ள தலம். அழகிய மணவாளப் பெருமாள், திருமணத் தடை நீக்கி, சேவை சாதிக்கிறார்.

🅱 *திருவிடந்தை:*🅱

சென்னை - மாமல்லபுரம் சாலையில், கோவளம் அருகில் உள்ள தலம். பூமிதேவியை மடியில் அமர்த்தியவாறு, சேவை சாதிக்கிறார் நித்யகல்யாணப் பெருமாள். சக்தி வாய்ந்த திருமணத் தடை நீக்கத் தலம் இது.

Ⓜ *அரசர் கோயில்:*Ⓜ

சென்னை - திண்டிவனம் சாலையில், படாளம் கூட்டுரோடுக்கு கிழக்கே, 5 கி.மீ. தொலைவில் உள்ள தலம். கமல வரதராஜப்பெருமாள், சுந்தரவல்லித் தாயார் சந்நதிகள் திருமணத் தடைநீக்கத்திற்கு உகந்தவை.

🅱 *திருவீழிமிழலை:*🅱

கும்பகோணம் - நன்னிலம் சாலையில் உள்ள திருத்தலம். *கல்யாணசுந்தரர்* உற்சவத் திருமேனியும், கருவறையில் உள்ள அரசாணிக்காலும், வழிபட வேண்டியவை ஆகும்.

Ⓜ *கோனேரிராஜபுரம்:*Ⓜ

கும்பகோணம் - காரைக்கால் சாலையில் 18 கி.மீ. பயணித்து எஸ்.புதூர் வழியே இந்தத் தலத்தைச் சென்றடையலாம். கல்யாணசுந்தரர் சிறப்பு மூர்த்தி.

🅱 *பந்தநல்லூர்:*🅱

மயிலாடுதுறை - குத்தாலம் வழியில் வடமேற்கில் 10 கி.மீ. பயணித்து இந்தத் திருத்தலத்தை அடையலாம். இங்குள்ள கல்யாணசுந்தரரை வணங்கிட, திருமணம் கைகூடும்.

Ⓜ *திருமழிசை:*Ⓜ

பூந்தமல்லிக்கு அருகில் உள்ள திருத்தலம். மூலவர் கருவறையில் அகத்தியருக்கு திருமணக் கோலம் காட்டியருளிய வடிவில் இருக்கிறார்.

*திருவேள்விக்குடி, குத்தாலம், தாமிரபரணி ஆற்றின் கரையில் பாபநாசம், பஞ்ச கல்யாணித் தலங்களான அம்பை, கடையம், சிவசைலம், குமரி மாவட்டம்-அகத்தீசுவரம், விழுப்புரம் மாவட்டம்- ரிஷிவந்தியம் ஆகியவையும் திருமணத் தடையை நீக்கும் திருத்தலங்கள்..* ஆகும்.


வியாழன், 16 நவம்பர், 2017

ஐயப்பமார்களுக்கான முக்கிய குறிப்புகள்!



ஸ்வாமியே சரணம் ஐயப்பா... இன்று முதல் ஐய்யன் ஐய்யப்பனை பற்றியும் சபரிமலை யாத்திரை பற்றியும் தெரிந்து கொள்வோம். ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா...

ஐயப்பமார்களுக்கான முக்கிய குறிப்புகள்!


1. ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும் சமயத்தில் உறுதியான கம்பியில் கட்டிய ஒரு மாலையே போதுமானது. துணை மாலை அவசியமே இல்லை. வருடா வருடம் புதிதாக மாலை வாங்க வேண்டாம். ஒரு முறை அறிந்த மாலையே எத்தனை முறை வேண்டுமானாலும் அணியலாம்.

2. முறையாக விரதம் இருந்தால் தங்களது மனசாட்சி அனுமதிக்கும் பட்சத்தில் மாலை போடாமல் 41 நாட்கள் விரதமிருந்து புறப்படும் நாளன்று மாலை போடுவதில் தவறேதும் இல்லை.

3. சென்ற தடவை உபயோகித்த மாலையை அது உறுதியாய் இருக்கும் பட்சத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.

4. சபரிமலை தரிசனம் செய்த பிறகு வழியிலேயே மாலையைக் கழற்றாமல் வீட்டுக்குத் திரும்பிய பிறகு மாலையைக் கழற்றுவது முழுமையான முறையான உத்தமமான செயலாகும்.

5. மாலையை ஏதாவது ஒரு கோயிலில் கழற்ற இயலாத பட்சத்தில் அம்மாவைக் கொண்டு கழற்றலாம்.

6. மாலை போட்டுக் கொண்டே தகப்பனாருக்கு சிரார்த்தம் (திதி) செய்யலாம்.

7. மாலைபோட்டு விரதம் இருக்கும் போது மனைவிக்குக் குழந்தை பிறப்பதென்பது சுபகாரியமே. மாலையைக் கழட்ட வேண்டாம். குழந்தை பிறந்து ஆறு நாட்கள் கழித்து புண்ணியாதானம் முடிந்து குழந்தையைப் பார்க்கலாம். பிரசவ சமயத்தில் தாங்கள் உடன் இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தாலும் குழந்தையை உடனே பார்க்க வேண்டும் என்ற கடமை உணர்வு இருக்கும் பட்சத்தில் மாலையைக் கழற்றலாம். மாலை போட்டிருக்கும் போது கருவுற்றிருப்பது சுபகாரியமே! எனவே மாலை போடலாம்.

8. நாற்பத்தோரு நாட்கள் முறையாக விரதம் இருந்து பயணத்தை மேற்கொள்வதே போற்றத்தக்க உத்தமமான செயலாகும்.

9. சபரிமலை பயணத்தில் மிதியடி அணிந்து கொள்வது என்பது தங்கள் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு தகுந்த முடிவு எடுக்கலாம். அணிவது தவறில்லை.

10. ஒரு முறை உபயோகித்த இருமுடிப்பையை மறு முறை உபயோகிக்கலாம். அத்துடன் இன்னொருவர் உபயோகித்த இருமுடிப்பையை அது சுத்தமாக இருக்கும் பட்சத்தில் உபயோகிக்கலாம்.

11. முதல் வருடம் மலைக்குச் செல்லும் ஐயப்பமார்கள் கன்னி பூஜையை அவசியம் செய்ய வேண்டும் என்கிறார்கள். வசதியில்லாத பட்சத்தில் கடன் வாங்கியாவது கன்னி பூஜையை செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஐயப்பன் அத்தகைய ஆடம்பரத்தை விரும்புவதும் இல்லை. தங்களால் எப்போது எவ்வளவு முடியுமோ எப்போது இயலுமோ வீட்டிலேயே உணவைப் பொட்டலமாகக் கட்டிக்கொண்டு சாலையோரத்தில் உள்ள மிகவும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்றவரை அளிக்கலாம்.

12. தொழிற்சாலையில் வேலை செய்யும் போது கடமையைச் சரிவர செய்யும் பொருட்டு ஷு அணியலாம். இதில் குற்றம் ஏதும் இல்லை.

13. விரத காலத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டாம். மற்றபடி சாதாரணமாக சிகைக்காய், சோப்பு உபயோகிப்பதில் தவறில்லை.

14. மாலை போட்டுக் கொண்டு விரதம் இருக்கும் சமயத்தில் வீட்டிலுள்ளவர்களுக்கு அம்மை கண்டிருந்தால் அதே வீட்டில் இருக்கும் பட்சத்தில் மாலையைக் கழட்டுவது உத்தமம்! ஆனால் தாங்கள் வெளியே எங்கும் தங்கியிருந்தால் மாலையைக் கழட்ட வேண்டிய அவசியமில்லை.


சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களின் கவனத்துக்கு:

1. ஐயப்ப விரதத்தில் மூட நம்பிக்கைகள் அவசியமில்லாதவை.

2. ஐயப்ப பூஜை என்ற பெயரில் ஒலிபெருக்கி வைத்து நள்ளிரவு வரை அடுத்தவர்களுக்கு இடையூறாக இருப்பது விரும்பத்தக்கதல்ல!

3. தங்களுக்கு இது எத்தனையாவது மலை என்று வினவுவதும் தான் இத்தனை தடவை மலைக்குச் சென்றிருக்கிறேன் என்று பெருமை அடித்துக்கொள்ள வேண்டாம்.

4. மாலை போடுதல் இருமுடி கட்டுதல் மிகவும் புனிதமான வைபவம் ஆகும். இதை வீடியோ, புகைப்படம் எடுப்பது உகந்த செயல்கள் அல்ல. இதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

5. இருமுடி கட்டும் நாளை ஒரு விழாவாக எண்ணி உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பி அவர்களிடம் அன்பளிப்பாகப் பணம் பெறுதலும் ஐயப்ப பக்தி விதிமுறைக்குப் புறம்பானது. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் பொருள்களை சன்னிதான உண்டியலில் அப்படியே சேர்ப்பது தான் முறை.

6. இருமுடி தாங்குபவர்களுக்கு பூமாலை அணிவித்து அடுத்த நிமிடமே அந்தப் பூக்கள் மற்றவர்கள் காலில் பட்டுச் சீரழிவது விரும்பத்தக்க செயல் அல்ல.

7. சபரிமலை யாத்திரையின் போது கன்னி சாமிகள் தான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தவறானது. பக்தியும் பணிவும் எல்லோருக்கும் பொதுவானது.

8. ஐயப்ப பக்தர்கள் வெளி ஸ்தலங்களுக்கு வழிபடச் செல்லும் போது அங்குள்ள நடைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மதித்து நடத்தலும் அவசியமானது. உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமெனில் குருவாயூரப்பன் சன்னதியில் மிக சப்தமாக சரண கோஷம் சொல்லாமல் அமைதியாக வழிபடுதல்.

9. சபரிமலை யாத்திரை செல்லும் ஒவ்வொரு பக்தரும் ஒரு ஐந்து நிமிடமாவது பம்பை நதிக்கரையையோ அல்லது சன்னிதானத்தையோ சுத்தம் செய்வது மிகவும் போற்றத்தக்க செயலாகும்.

10. சபரிமலை யாத்திரையின் போது மிகவும் ஆடம்பரமான விருந்து உண்ணுதலைத் தவிர்த்தல் எல்லா வகையிலும் நல்லது.

11. சாப்பிட்ட இலைகளை புனிதமான பம்பை நதியில் எறிந்து அந்தப் புண்ணிய நதியை அசுத்தப்படுத்துதல் மிகவும் தவறான செயலாகும். மாறாக, ஒரு குழி தோண்டி அவற்றைப் புதைக்கலாம்.

12. பம்பையில் விளக்கேற்றி வழிபடுதலை மற்றவர்களுக்கு எந்த விதமான இடையூறும் இல்லாமல் அமைதியாக ஆடம்பரமின்றி தங்கும் தாவளத்திலேயே (இடத்திலேயே) கொண்டாடுதல் மிக சிறப்பான செயல்.

13. சன்னிதானத்தில் கற்பூர ஆழிப் பிரதட்சிணத்தை எந்தவித அசம்பாவிதத்துக்கும் உட்படுத்தாமல் அடக்கமாகச் செய்வது எல்லோருக்கும் நல்லது.

14. கண்ணாடி பாட்டில்களையும் உடைந்த தேங்காய் மூடிகளையும் கண்ட இடத்திலும் போட்டு மற்ற ஐயப்பன்மார்களின் பாதத்தைப் புண்ணாக்கும் பாவத்தைச் செய்ய வேண்டாம்.

15. ஐயப்பன் வழிபாட்டை ஆவேசத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் ஆடம்பரத்துக்கும் உட்படுத்தாமல் அமைதியாகவும் சாத்விகமாகவும் மேற்கொண்டால் அனைவருக்கும் நன்மையே.


கார்த்திகை மாத சிறப்புகள்!



கார்த்திகை மாதப் பிறப்பில்... கார்த்திகை மாத சிறப்புகளை தெரிந்து கொள்வோம்

தமிழ் மாதங்களில் கார்த்திகை மன உறுதியை தரும் என்பது ஐதீகம். திருவண்ணாமலை மகாதீபம், கார்த்திகை பெளர்ணமி என விஷேசங்கள் நிறைந்தது கார்த்திகை மாதம். கார்த்திகை மாதத்திற்குரிய மேலும் பல சிறப்புகளை தெரிந்து கொள்வோம்.

தமிழில் பாகுலம் என்றால் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும். சூரியன் விருச்சிக இராசிக்குள் புகுந்து அங்கே பயணம் செய்யும் காலமான 29 நாள், 30 நாடி அல்லது நாழிகை, 24 விநாடிஅளவே
கார்த்திகை மாதமாகும் .
நம் தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம்.
கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம்.
கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.
கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.
திருக்கார்த்திகையை அங்கி, அளக்கர், அளகு, அறுவாய், ஆரல், இறால், எரிநாள், நாவிதன் என்றும் அழைப்பதுண்டு.
மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்த நாள் கார்த்திகை பௌர்ணமி!
கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது இடப் பாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது அருணாசல புராணம்.
தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 500 முதல் 600 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிராகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.
கார்த்திகை மாத அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில்... ஸ்ரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரவாகித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவகிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர்.
ஜோதி வடிவாய் தோன்றிய சொக்கநாதப் பெருமானை நினைவு கூர்ந்தே சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.


கார்த்திகை மாத சிறப்புகள்!

மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்த நாள் _ கார்த்திகை பௌர்ணமி!
கடும் தவம் மேற்கொண்ட அன்னை பார்வதிதேவி, கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரம் கூடிய பௌர்ணமி நாளில்தான் இறைவனது இடப் பாகத்தைப் பெற்றாள். அப்படி, ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்த தலம் திருவண்ணாமலை என்கிறது அருணாசல புராணம்.
கார்த்திகை மாத (பிருந்தாவன) துவாதசி நாளில், துளசிதேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். எனவே, கார்த்திகை மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால், ஒவ்வொரு துளசி தளத்துக்கும் ஒவ்வொரு அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்பர். துளசி மாலை அணிபவர்களிடம், மகாலட்சுமி எப்போதும் வாசம் செய்வாள் என்று சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.
கார்த்திகை மாத துவாதசி நாளில், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், கங்கைக் கரையில் ஆயிரம் பேருக்கு அன்னமிட்ட பலன் கிடைக்கும் என்பர்.
மகாவிஷ்ணுவை கஸ்தூரியால் அலங்கரித்து, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தேவாதிதேவர்களால் பெற முடியாத பாக்கியத்தைக் கூட பெறலாம் என்பர்.
விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.
நவக்கிரக மூர்த்திகள் விரதம் அனுஷ்டித்து, வரம் பெற்ற கார்த்திகை ஞாயிறு விரதத்தை, முதல் ஞாயிறு தொடங்கி பன்னிரண்டு வாரங்கள் கடைப்பிடித்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி, சிவசக்தியின் பேரருள் கிடைக்கும் என்பது அடியார்களது நம்பிக்கை.
தன்னைப் பிரிந்த திருமகளுடன் மீண்டும் சேருவதற்காக மகாவிஷ்ணு தவம் மேற்கொண்டு, சிவபெருமானது அருளைப் பெற்ற திருத்தலம் ஸ்ரீவாஞ்சியம். இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நடைபெறும் கார்த்திகை ஞாயிறு நீராடல் உற்ஸவம் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில், அதிகாலை 5:00 முதல் 6:00 மணிக்குள் சிவபெருமானும் பார்வதிதேவியும் அஸ்திர தேவரோடு பிராகார வலம் வந்து, குப்த கங்கையின் கிழக்குக் கரையில் ஆசி வழங்கி அருளுகின்றனர். கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த குப்த கங்கையில் நீராடினால் பிரம்மஹத்தி தோஷம், கள் உண்ட பாவம், திருடுவதால் வரும் பாவம் மற்றும் மனச் சஞ்சலத்தால் ஏற்பட்ட பாவங்கள் ஆகியவை நீங்கி விடும் என்று பிரும்மாண்ட புராணம் கூறுகிறது.
கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதி காலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து, வீட்டின் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால், குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்று புராணங்கள் விளக்குகின்றன.
வைஷ்ணவக் கோயில்களில், 'பாஞ்சராத்ர தீபம்' என்று கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில், கோயிலுக்கு முன்னே, பனையோலை கொண்டு கூடுகள் அமைக்கப்பட்டு சொக்கப்பனை எரிப்பது வழக்கம்.
ஜோதி வடிவாய் தோன்றிய சொக்கநாதப் பெருமானை நினைவு கூர்ந்தே சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.

கார்த்திகை பௌர்ணமி விழாவில், ஸ்ரீரங்கத்தில், ஐந்தாவது திருவீதியிலிருந்து ஆள நாடான் திருவீதிக்குச் செல்லும் வழியில்... தெற்கு வாசல் கோபுரம் அருகே பெருமாள் எழுந்தருளுவார். அப்போது அவரது முன்னிலையில், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். பிறகு சந்தன மண்டபத்தில் எழுந்தருளும்போது, பாசுரங்கள் பாடி அரையர் சுவாமிகள் வழிபடுவது வழக்கம். மேலும்... அப்போது, மார்கழி மாதத் திருநாள் விவரத்தை, கடிதமாக எழுதி பெருமாளிடம் சமர்ப்பிப்பார்கள். இதை 'ஸ்ரீமுகம்' என்பர்.
கார்த்திகை மாத அமாவாசை அன்றுதான் திருவிசநல்லூரில்... ஸ்ரீதர ஐயாவாள் திருமடத்தில் உள்ள கிணற்றில் கங்கா தேவி பிரவாகித்தாள். இன்றைக்கும் இந்தக் கிணற்றில் கங்கை பிரவகிப்பதாக நம்பிக்கை. இதில் ஏராளமானோர் நீராடுவர்.
ஈசனின்... ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம், அதோமுகம் ஆகிய ஆறு திருமுகங்களிலிருந்து உருவான தீப்பொறியிலிருந்து ஆறுமுகக் கடவுள் அவதரித்ததும் கார்த்திகை நாளில்தான்!
சென்னை- திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயிலில், புற்று வடிவான லிங்கத் திருமேனியில் புனுகுத் தைலம் சார்த்தி கவசம் போட்டிருப்பர். கார்த்திகை பௌர்ணமி துவங்கி மூன்று நாட்கள் மட்டும் இங்கு கவசம் இல்லாத ஈசனை தரிசிக்கலாம்.
தேவர்கள் ஆண்டுதோறும் இந்த நன்னாளில், இறைவனை பூஜிப்பதற்கு வருவதாக ஐதீகம். இதையட்டி சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.
திருநெல்வேலி- ஸ்ரீநெல்லையப்பர் கோயிலில், கார்த்திகை தீபத்தன்று 27 நட்சத்திரங்களை மையமாக வைத்து பெரியளவில் தீபாராதனைகள் நடை பெறும். இதை மடக்கு தீபாராதனை என்பர். இந்தத் தலத்தில், அனைத்து நாளிலும் பிரசாதமாக நெல்லிக்கனி வழங்குவது விசேஷம்.
குருவாயூரப்பன் கோயிலில், கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி நடத்தப்படும் உற்சவம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அந்த நாளில், காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலங்களின் புண்ணிய தீர்த்தங்களின் மகிமையும், கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளும் குருவாயூரில் ஒருங்கே கூடுவதாக ஐதீகம்!



கார்த்திகை மாதத்தின் சிறப்பும் திருவண்ணாமலை மகிமையும்!

கார்த்திகை மாதம் துவங்குகிறது. மார்கழி மாதத்துக்கு எத்தனை சிறப்பு உள்ளதோ அதே அளவு கார்த்திகை மாதத்துக்கும் உள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது திருவண்ணாமலை மகாதீபம் தான். ஆனால், இக்கார்த்திகை மாதத்திற்கு வேறு பல சிறப்புகளும் உண்டு. அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். மாதங்களில் கார்த்திகை மாதம் மன உறுதி தரும் என்பது ஜதீகம். அதே போன்று நினைத்தாலே முக்தியளிக்க கூடியது திருவண்ணாமலை. திருவண்ணாமலை மகாதீபத்தை தரிசிக்க செல்ல முடியாதவர்கள் இங்கு கூறப்பட்டிருக்கும் திருவண்ணாமலையின் சிறப்பை படித்து பயன்பெறலாம். பண்டிகைகளின் சிறப்பு, தல வரலாறு, மாதங்களின் மகத்துவம் இவற்றை படிப்பது மிக மிக புண்ணியம் தரக்கூடியது.
யாமறிந்த தகவல்களையும் இணையத்தில் திரட்டிய தகவல்களையும் சேர்த்து தந்திருக்கிறேன். படித்து முடிக்கும்போது மனம் ஒருவித அமைதி பெறுவதை நிச்சயம் உணர்வீர்கள்!
திருமண மாதம்
விருச்சிக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இம்மாதத்தில் மனசேர்க்கை, உடல் சேர்க்கை, கர்ப்பதானம் ஆகிய இவற்றில் பிரச்சினைகள் வராது. எனவே, கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.
கார்த்திகை மாத மகிமை
கார்த்திகை மாததத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள். சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள். விஷ்ணு பகவானை கார்த்திகை மாதத்தில் புஷ்பங்களால் அர்ச்சித்து பூஜை செய்பவர்கள் தேவர்களும் அடைய அரிதான மோட்ச நிலையை அடைவார்கள்.
கார்த்திகை மாதத்தில் விஷ்ணு பகவானை துளசி இலையால் அர்ச்சனை செய்பவர்கள் பகவானுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள்.
கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்ம ஹத்தி முதலான தோஷங்களிலிருந்தும் விடுபடுவார்கள். கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் இல்லங்களில் தீபங்களை ஏற்றி வழிபடுபவர்கள் புண்ணிய பலனை அடைவர்.
கார்த்திகை மாதத்தில் மது மாமிசம் முதலானவைகளை ஒழித்து விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவார்கள். கார்த்திகை மாதத்தில் மாமிச ஆகாரத்தைக் கைவிடாதவர்கள் புழுப் பூச்சிகளாய் பிறவி எடுப்பார்கள் என்று பத்மபுராணம் கூறுகிறது.
கார்த்திகைக் கடவுள்
தெய்வங்களுக்குரிவையாக ஒவ்வொரு நட்சத்திரங்கள் திகழும் ஆனால் முருகப் பெருமானுக்கு மட்டும் இரண்டு நட்சத்திரங்கள் உகந்தவையாகும். விசாக நட்சத்திரமும் கார்த்திகை நட்சத்திரமும்தான். அந்த இரு நட்சத்திரங்கள் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பிறந்தவர் ஆகையால் விசாக நட்சத்திரம் முருகக் கடவுளுக்குரியதாயிற்று.
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளாகத் தோன்றிய சரவணப் பொய்கையில் குழந்தையாய் தவழ்ந்த முருகனை கார்த்திகைப் பெண்கள் எடுத்து வளர்த்ததால் கார்த்திகையும் முருகனுக்குரிய நட்சத்திரமாயிற்று.
அதிலும் விருச்சிக மாதமாகிய கார்த்திகைத் திங்களில் பெளர்ணமியோடு கூடி வரும் கார்த்திகை நட்சத்திரம் முருக வழிபாட்டிற்கேற்ற ஒன்றாகும். கார்த்திகைத் தீபத் திருநாளன்று தீபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவது சிறந்தது. எனவே கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை விரதமிருந்து கார்த்திகையனாக வழிபட நற்பேறுகள் யாவும் கிடைக்கப் பெறுவர்
சபரிமலை மாலை அணிதல்
கார்த்திகை மாதம் பிறந்தவுடன் மாலை அணி விழா நடத்தப்படுகிறது. சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு மண்டல பூஜை தொடங்கப்படுகிறது. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் மேற்கொள்வர். இதனால் இம்மாதம் ஸ்ரீ ஐய்யப்பனுக்கு உரிய மாதமாகவும் ஐயப்ப பக்தர்களுக்கு உரிய மாதமாகவும் ஐயப்ப பக்தர்களுக்கு உரிய மாதமாகவும் கருதப்படுகிறது.
கார்த்திகை பெளர்ணமி
கார்த்திகை பெளர்ணமியன்று பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருகிறது. ஆகவே அன்றைய தினம் மற்ற பெளர்ணமி தினத்தை விட நிலவின் ஒளி மிகப் பிரகாசமாக இருக்கும். அன்றைய தினம் சிவசக்தி சமேதராய், பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள்பாலிக்கின்றனர்.
கார்த்திகை பெளர்ணமி தினத்தன்று பெரும்பாலும் கார்த்திகை நட்சத்திரமும் இணைந்து வரக் காணலாம். கார்த்திகை, திருவோணம் ஆகிய இரு நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திர சக்தி தருவதால் இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் விரதங்கள் இருக்க வேண்டும் என்று இந்து மதம் கூறுகிறது.
சுபமான கார்த்திகை மாதத்தில், பிரகாசமான பெளர்ணமியில், நல்ல நட்சத்திர சக்தி கொண்ட கார்த்திகை நட்சத்திரம் இணைந்து வருவதால் இது ‘பெரிய கார்த்திகை’ எனப்படுகிறது. எனவே இவ்வளவு சிறப்புப் பெற்ற கார்த்திகை மாதத்தில் உள்ள விரத முறைகளை அனுஷ்டித்து வாழ்வில் வளம் பல பெறுவோமாக.
கார்த்திகை மாதம் விளக்கேற்றும் முறை
எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். விளக்கினை ஏற்றி வைப்பதோடு இதோ இங்கே தரப்பட்டுள்ள துதியினையும் சொல்லுங்கள். தீப லட்சுமியின் அருளால் உங்கள் வாழ்வில் அஷ்டலட்சுமி கடாட்சம் சேரும்.
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.
எந்த நேரத்தில் விளக்கேற்றலாம்?
ஊருக்கு முன் விளக்கேற்றினால் உயர்ந்த குடியாகும் என்று ஒரு பழமொழியே உள்ளது.
சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
கார்த்திகை தீபங்கள் ஏற்றும் போது இந்த மந்திரத்தை கூற வேண்டும்
கீடா: பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா ஜலே
ஸ்தலயே நிவஸந்தி ஜீவா த்ருஷ்ட்வா
ப்ரதீபம் ந ச ஜந்ம பாஜா பவந்தி
நித்யம் ச்வபசா ஹிவிப்ரா.
பொருள்:
புழு, பட்சி, கொசு உள்ளிட்ட சகல உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களில் முதல் பிறவியில் இருந்து முக்தி பிறவி வரையில் உள்ளவர்கள் இப்படி யார் யார் பார்வையில் எல்லாம் இந்த துப ஒளி படுகிறதோ அவரெல்லாம் இன்னொரு பிறவி என்ற துன்பம் இன்றி நிதமும ஆனந்தம் பெறட்டும் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.
கார்த்திகை தீபத்தன்று வீட்டில் பெண்கள் பாட வேண்டிய பாடல் இது
விளக்கே திருவிளக்கே: வேந்தன் உடன்பிறப்பே!
சோதி மணிவிளக்கே: சீதேவி பொன்மணியே!
அந்தி விளக்கே: அலங்கார நாயகியே!
காந்தி விளக்கே: காமாட்சித் தாயாரே!
பசும்பொன் விளக்குவைத்துப் பஞ்சுத் திரிபோட்டு
குளம்போல எண்ணெய் விட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்.
ஏற்றினேன் நெய்விளக்கு: எந்தன் குடிவிளங்க
வைத்தேன் திருவிளக்கு: மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் சோதியுள்ள
மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்!
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தான பாக்கியத்துடன் தனங்களும் தாரும் அம்மா
பெட்டி நிறையப் பூஷணங்கள் தாரும் அம்மா
பட்டி நிறையப் பால் பசுவைத் தாரும் அம்மா
கொட்டகை நிறையக் குதிரைகளைத் தாரும் அம்மா
புகழுடம்பைத் தாரும் அம்மா: பக்கத்தில் நில்லும் அம்மா
அல்லும் பகலும் எந்தன் அண்டையிலே நில்லும் அம்மா
சேவித்து எழுந்திருந்தேன்: தேவி வடிவம் கண்டேன்
வஜ்ரக் கிரீடம் கண்டேன்: வைடூரிய மாலை கண்டேன்
முத்துக் கொண்டை கண்டேன்: முழுப்பச்சைமாலை கண்டேன்
உரிமுடி கண்டேன்: தாழைமடல் சூடக் கண்டேன்
பின்னழகு கண்டேன்: பிறை போல நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன்: தாயார் வடிவம் கண்டேன்
கமலத் திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டும் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக் கண்டேன்
கைவளையல் கலகலவென கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்கக் கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன்: காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிர
கண்டு மகிழ்ந்தேன் அடியாள் நான்!
அன்னையே அருந்துணையே
அருகிருந்து காரும் அம்மா
வந்த வினை அகற்றி மகாபாக்கியம் தாரும் அம்மா
தாயாரும் உந்தன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே! உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்!!
===========================================================


திருவண்ணாமலையின் பெருமை
காந்தமாய் ஈர்க்கும் மலை
இந்தியாவில் உள்ள சிவத்தலங்களில் 68 தலங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன. அவற்றில் காசி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகியவை அடங்கும். ஆனால், மற்ற தலங்களுக்கு சென்று வந்தால்தான் புண்ணியம். அண்ணாமலையை நினைத்தாலே போதும்.. முக்தி கிடைத்துவிடும் என்பது ஐதீகம். ஒருவர் ஒருமுறை இந்த தலத்திற்கு சென்றுவிட்டால், அவர் மீண்டும் மீண்டும் இந்த தலம் நோக்கி வருவார் என்று சொல்வர். அப்படி ஒரு காந்த சக்தி இந்த மலைக்கு உண்டு. அதனால் இந்த மலையை “காந்தமலை’ என்றும் “அருள்சக்தி மலை’ என்றும் அழைப்பார்கள்.
திருவண்ணாமலையின் உயரம்
திருவண்ணாமலை 2665 அடி உயரம் கொண்டது என்பது பழைய தகவல். அரசு தகவலின்படி இது 2748 அடி உயரம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள கோயில் மிகவும் பழமையானது. கிளிக் கோபுரம் 1191ம் ஆண்டு உருவானது. இதன் அருகில் உள்ள தீப தரிசன மண்டபம் 1202ம் ஆண்டில் கட்டப்பட்டது. 1230ல் இங்குள்ள பிரம்ம தீர்த்தம் தோன்றியிருக்கிறது. இதை ஒரு காலத்தில் பெருமாள் தடாகம் என்று அழைத்தனர். மதுரையை ஆண்ட மங்கையர்க்கரசி இந்த ஊருக்கு ஒரு ஏரியை வெட்டித்தந்தார். திருவண்ணாமலைக்கு குடிநீர் தரும் இந்த ஏரியை “சமுத்திரம் ஏரி’ என்பார்கள்.
திருவண்ணாமலையின் வயது
திருவண்ணாமலை மிகப்பழமையான மலை. இதன் தற்போதைய வயது 260 கோடி ஆண்டுகள். இது, உலகிலேயே மிகப்பழமையான மலை என்பதற்கு விஞ்ஞான சான்றும் இருக்கிறது . 1949, ஜனவரியில் இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில், டாக்டர் பீர்பால் சகானி என்பவர் இந்த தகவலைத் தெரிவித்தார். மற்ற தலங்களில் மலைமேல் கடவுள் இருப்பார். ஆனால், இங்கு மலையே கடவுளாக வணங்கப்படுகிறது. திருவண்ணாமலை மூலவரின் பெயரும் “அருணாசலேஸ்வரர்’ என இருக்கிறது. “சலம்’ என்றால் “மலை’.
பழமையான கார்த்திகை தீப விழா
கார்த்திகை தீப விழா மிகவும் பழமையானதாகும். தொல்காப்பியத்தில் “வேலினொக்கிய விளக்கு நிலையும்’ என்று இந்தத் திருவிழா பற்றி கூறப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று இந்த விளக்கு ஏற்றப்பட்டதாக நச்சினார்க்கினியர் என்னும் புலவர் உரை எழுதி இருக்கிறார். சமண மத நூல்களிலும் கார்த்திகை தீப விழா பற்றி கூறப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியமான முத்தொள்ளாயிரத்தில் இந்தத் திருவிழா பற்றி கூறப்பட்டுள்ளதிலிருந்து இதன் பழமை தெரியவருகிறது.
ஆறுவிரல் ரகசியம்
திருவண்ணாமலையில் பிறந்த அருணகிரிநாதர் முருகபக்தர் ஆவார். அவருக்கு கையில் ஆறு விரல்கள் இருந்தன. முருகப்பெருமானின் ஆறு தலைகளையும் அவருக்குரிய சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தையும் நினைவுறுத்துவதுபோல் இந்த அமைப்பு இருந்தது. அருணகிரிநாதர் கால்களை சற்று உயர்த்தி நடப்பார். இது மயிலின் நடைபோல இருக்கும். முருகப்பெருமானின் வாகனம் மயில். தன்னை முருகனின் சுமை தாங்கியாக கருதிக்கொண்டதால் தான் அருணகிரியாருக்கு, இம்மாதிரியான நடை அமைந்ததாக சொல்வதுண்டு.
அண்ணாமலையின் சிறப்பு
திருவண்ணாமலை திருத்தலம் எண்கோண வடிவில் அமைந்துள்ளது. மலையின் சுற்றளவு 14 கி.மீ. உத்தேசமாக 8 மைல். மலைவழிப் பாதையில் உள்ள லிங்கங்களும் 8. பொதுவாக மலை என்றால் கொடிய விலங்குகளும் செடி கொடிகளுமாகக் காட்சியளிக்கும். இப்படி இங்கே எதுவும் இல்லை. இங்கே தீர்த்தங்களும், சுனைகளும், குகைகளுமே உள்ளன. அவற்றில் விருப்பாட்சி குகை, நமச்சிவாய குகை, பவளக்குகை ஆகியவை முக்கியமானவை. பீமதீர்த்தம், பாத தீர்த்தம் ஆகியவை புனிதமானவை. மயிலாடும்பாறை, ஆமைப்பாறை, வழுக்குப்பாறை ஆகிய பாறைகளும் இங்குள்ளன. அல்லிச்சுனை, அரளிச்சுனை, அத்திமரச்சுனை ஆகியவற்றில் நல்ல நீர் உள்ளது. நோய் போக்கும் மூலிகைகளும் நிறைந்துள்ளன. மலையின்மேல் குகை நமச்சிவாயர் கோயில், பச்சையப்பன் கோயில், அரவன் கோயில் ஆகியவையும் உண்டு. இதனால்தான் ஏராளமான சித்தர்களும் முனிவர்களும் இந்த மலையில் வசித்தனர். இப்போதும் பல சித்தர்கள் வசிப்பதாக நம்பிக்கை உள்ளது.
லிங்கமே மலையாக அமைந்த மலை, தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் சிவ தலம், பஞ்சபூத தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது ஆகும். நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற தலம். நான் என்ற அகந்தை அழிந்த தலம் இது. உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம் இது.
பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம். அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம்.அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம் திருவண்ணாமலை.
கிரிவலம்
மலைமேல் இருந்து அருணாசலர் ஆலயம் கார்த்திகை தீபப் திரு நாள் அன்று தான் திருவண்ணாமலை திருத்தலத்தில் இறைவன்இறைவிக்கு இடப்பாகம் அளித்து அர்த்தநாரீஸ்வரர் ஆகக் காட்சி அளித்தான். இந்த நன்னாளில் மலைவலம் வருவது மகத்தான மிகுந்த புண்ணியத்தைத் தரும். குறிப்பாக திருவண்ணாமலை கிரிவலம் அனைத்துப் பாவங்களையும் போக்கி மகத்தான புண்ணிய பலனைத் தரவல்லது.
மலையின் பெருமை
இம்மலை பிறப்பு, இறப்பினை நீக்க கூடியது. ஆதலால் மலைமருந்து என்றும், சிகப்பு நிறம் உடையதால் அருணாகிரி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மலையே இலிங்க வடிவாக இருப்பதால் இம்மலையைச் சுற்றுவது இறைவனையே சுற்றி வருவதற்கு சமாகக் கருதப்படுகிறது. .
ராஜ கோபுரம்
கிருதயுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் பொன்மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் திருவுருவம் கொண்டுள்ளது அண்ணாமலை. இத்தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.




கார்த்திகை மாதத்தில் எந்த வகையான புண்ணிய காரியம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று கூறிய பகவான் கிருஷ்ணர், கார்த்திகை மாதம் முழுவதும் எல்லா நீர்

கா ர்த்திகை மாதத்தில் எந்த வகையான புண்ணிய காரியம் செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என்று கூறிய பகவான் கிருஷ்ணர், கார்த்திகை மாதம் முழுவதும் எல்லா நீர் நிலைகளிலும் வாசம் செய்கிறார்.
முன்பொரு காலத்தில் வேதங்களை நன்கு கற்றுத் தேர்ந்த வேத சர்மா என்ற அந்தணர் வாழ்ந்து வந்தார். அவர் எப்போதும் தர்ம நெறியை தவறவிடாது, அதன் வழியில் நின்று வாழ்க்கை நடத்தி வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவர், வேத சர்மாவின் வாழ்க்கை நெறிக்கு நேர்மாறாக இருந்தான். எப்போதும் தான்தோன்றித் தனமாக திரிந்து கொண்டிருந்தான். எந்த வேலையும் செய்வதில்லை.
மகனை திருத்தி விடலாம் என்று நினைத்திருந்தார் வேத சர்மா. ஆனால் அது நடைபெறாது என்பது பின்புதான் தெரிந்தது. ஒருநாள் தன் மகனை அழைத்தார் வேத சர்மா. அவனிடம், 'மகனே! கார்த்திகை மாதம் மிகவும் உன்னதமான மாதமாகும். இந்த மாதத்தில் மகாவிஷ்ணு, அனைத்து நீர்நிலைகளிலும் வாசம் செய்து நன்மை பயக்கிறார். அதே போல் ஈசனும் தீப ஜோதியாக தோன்றிய மாதம் இது என்பதால் கார்த்திகையின் சிறப்பு மிகவும் உயர்ந்ததாக இருக்கிறது.
எனவே கார்த்திகை மாதம் மட்டுமாவது நீ கோவில் சன்னிதியில் விளக்கேற்றி வை. அதன் வாயிலாக உன் வாழ்வு ஒளிமயமாக விளங்கும். இதை நீ செய்தால் நான் மிகவும் மன மகிழ்ச்சி அடைவேன்' என்று தன் மகனுக்கு கார்த்திகை மாதத்தின் அனைத்து சிறப்புகளையும் எடுத்துக் கூறி அறிவுரை வழங்கினார்.
தந்தையின் இந்த அறிவுரையைக் கேட்டதும், மகனுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. 'என்னது! விளக்கேற்றுவதா? விளக்கின் விலை என்ன? எண்ணெய் விலை என்ன? ஒரு நாளைக்கு ஒரு விளக்கு என்றாலும் கூட 30 நாட்களுக்கு முப்பது விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கிற்கேற்ப எண்ணெய் விலை என்று எல்லா செலவும் சேர்த்தால் வாழ்வில் ஒளிவீசாது. பணம்தான் கரைந்து போகும். ஏன் பணத்தை விரயம் செய்யச் சொல்கிறீர்கள்?' என்று கூறி கோவிலில் விளக்கேற்ற மறுத்து விட்டான்.
மகனின் இந்த வார்த்தையைக் கேட்டதும் வேத சர்மாவுக்கு அளவுகடந்த கோபம் ஏற்பட்டது. அவர் மகன் என்றும் பாராமல், 'எந்த வேலையும் செய்யாமல் தின்று, தின்று திரிந்து கொண்டிருக்கும் நீ, எலியாகப் பிறந்து அலைந்து திரிவாயாக' என்று சாபமிட்டு விட்டார். அடுத்த கணமே, வேத சர்மாவின் மகன் எலியாக மாறிவிட்டான்.
துன்பம் வந்த பிறகுதான் அனைவருக்கும் புத்தி வருகிறது. அவனுக்கும் அப்படித்தான். தன் நிலையைக் கண்டு இரக்கம் காட்டுமாறு தன் தந்தையிடம் கோரிக்கை வைத்தான். அதற்கு வேத சர்மா, 'கார்த்திகை மாதத்தின் சிறப்பை உணராத நீ, அதே கார்த்திகை மாத மகிமையை புராணத்தை ஒருவர் கதையாக சொல்ல, நீ கேட்கும்போது விமோசனம் பிறக்கும், உன் சாபம் நீங்கும்' என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
எலிக்கு எப்படி கார்த்திகை மாதம் தெரியும்?. அந்த எலி வளை தோண்டி வைத்து, பல இடங்களில் கிடைத்த உணவை தின்று தன் வாழ்நாளை கழித்து வந்தது. வருடங்கள் பல சென்றன. ஒரு நாள் அந்த அதிசயம் நடந்தது. கார்த்திகை மாதம் ஒரு நாள் கவுசிக முனிவர் தன் சீடர்களுடன் காவிரி நதிக்கரைக்கு வந்தார். சீடர் களுக்கு பலவித விஷயங்களை போதித்து வந்ததுடன் கார்த்திகை மாத மகிமையை பற்றியும் எடுத்துரைத்தார்.
அவர்கள் சாப்பிட்டு விட்டு போட்ட எச்சில் சாப்பாட்டை உண்பதற்காக தன் வளையில் இருந்து வெளியே வந்தது எலி. அது வேத சர்மாவின் மகன்தான். அப்போது கவுசிக முனிவர், கார்த்திகை மாதத்தின் சிறப்பு பற்றி தன் சீடர்களுக்கு கூறிக்கொண்டிருந்த புராணம், எலியின் காதிலும் விழுந்தது. ஆனால் அதற்குத்தான் அந்த மாதத்தின் பெருமையோ, தனக்கு சாப விமோசனத்தை கொடுக்கும் கதை இது என்பதோ தெரியாதே.
உணவு உண்பதற்காக வந்த எலியானது, உபன்யாசம் முடியும் வரை அங்கேயே சுற்றிக்கொண்டிருந்தது. உபன்யாசம் முடிந்ததும் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
ஆம்! எலியாக இருந்த வேத சர்மாவின் மகன் தன் சுய உருபெற்று அங்கு நின்றான்.
அதைக் கண்ட கவுசிக முனிவரின் சீடர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அவர்களிடம் தன் முன்கதையை விளக்கினான் வேத சர்மாவின் மகன். பின்னர் அவன் தனக்கு ஞான உபதேசம் செய்யும்படி, கவுசிக முனிவரிடம் சீடனாக சேர்ந்தான்.

திங்கள், 13 நவம்பர், 2017

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு ...



சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு ...

சபரிமலை செல்லும் வழியில் உங்கள் வாகனங்கள் பழுதுபட்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ
9400044991
9562318181
இந்த எண்களில் அழைத்தால் போக்குவரத்து துறையின் உடனடி சேவை உங்களுக்கு கிடைக்கும் இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும் இன்று முதல் இந்த சேவை ஆரம்பித்துள்ளது. முக்கியமான சில தொலைபேசி எண்கள்
*********************** S T D code 04735
_________________
தேவசம் போா்டு கம்மிஸ்ணா்
04735202004
________________
விஜிலன்ஸ் S.P 04735202081
_________________
விஜிலன்ஸ் அலுவலகம்
04735202058
_________________
தகவல் தொடர்பு மையம் சபரிமலை
04735202048
_________________
தகவல் தொடர்பு மையம் பம்பை
04735202339
_________________
_________________
தபால் நிலையம் சபரிமலை
04735 202130
_________________
தபால் நிலையம் பம்பை
04735202330
_________________
காவல் நிலையம் சபரிமலை
04735202014
04735202016
_________________
காவல் நிலையம் பம்பை
04735203419
04735203386
_________________
போலீஸ் ஸ்பெசல் ஆபீசா் சபரிமலை
04735202029
_________________
போலீஸ் ஸ்பெசல் ஆபீசா் பம்பை
04735203523
_________________
போலீஸ் வயர்லெஸ்
04735202079
_________________
தீயணைப்புத் துறை சபரிமலை
04735202033
_________________
കെ. എസ്. ആർ. ടി. സി പമ്പ
K S R T C பம்பை
04735203445
_________________
வனத்துறை பம்பை
04735202335
04735202074
_________________
அரசு மருத்துவமனை பம்பை
04735203318
_________________
அரசு மருத்துவமனை சபரிமலை
04735202101
_________________
Telephone Exchange சபரிமலை
04735202199
04735202000
04735202836.
சுவாமியே சரணம் ஐயப்பா _______________
அனைவருக்கும் பகிரவும்

ஞாயிறு, 12 நவம்பர், 2017

புதுச்சேரி அருகில் பூத்துறை - வானூர் கிராமம், முந்திரி தோப்புக்குள் நூறுக்கும் மேற்பட்ட லிங்கங்கள்... சிறப்பு படத்தொகுப்பு ஆன்மீகமும் அற்புதங்களும்

புதுச்சேரி அருகில் பூத்துறை - வானூர் கிராமம், முந்திரி தோப்புக்குள் நூறுக்கும் மேற்பட்ட லிங்கங்கள்... சிறப்பு படத்தொகுப்பு ஆன்மீகமும் அற்புதங்களும்..











செவ்வாய், 7 நவம்பர், 2017

ஐயப்பன் பற்றிய 50 தகவல்கள்



ஐயப்பன் பற்றிய 50 தகவல்கள்

1. சபரிமலை அய்யப்பன் கோவில் சுயம் புலிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது.
2. ஓம் சுவாமியே சரணம் அய்யப்பா என்றால் நம் பாவங்களை அழித்து ஞானத்தைப் பெற அய்யப்பனை சரண் அடைகிறோம் என்று பொருள்.
3. ஒரு மண்டலம் விரதம் இருப்பதால் நல்ல பழக்கங்கள் ஏற்பட்டு பலரது வாழ்க்கை முறையே மாறியுள்ளது. இதனால்தான் ஆண்டுக்கு ஆண்டு அய்யப்பனை தேடி செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.
4. சபரிமலைக்கு முதன் முதலில் மாலை அணிந்து செல்பவர்கள் 48 மைல் கொண்ட பெரிய பாதையில் செல்ல வேண்டும் என்பது மரபு.
5. கன்னிபூஜை நடத்தி விருந்து கொடுக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உளமார்ந்த பக்தி ஒன்றையே அய்யப்பன் விரும்புகிறார்.
6. கடன் வாங்கியாவது சபரிமலைக்கு வா... என்று தன் பக்தர்களுக்கு அய்யப்பன் ஒரு போதும் சொன்னதே இல்லை.
7. சபரிமலையை அடைந்ததும் சரணம் கூறியபடி செல்ல வேண்டும். உங்கள் கழுத்தில் உள்ள மாலை நெஞ்சில் அடிபடும் போதெல்லாம் அய்யப்பன் உங்கள் மனசாட்சியை தட்டிக் கொண்டே இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.
8. அய்யப்பன் தன் அவதாரத்தின் போது தன் படைகளுடன் ஆடியபடி காட்டுக்குள் சென்றார். அதை நினைவுபடுத்தவே ``சாமி திந்தக்கத்தோம்.... அய்யப்ப திந்தக்கத்தோம்...'' என்ற பேட்டைத் துள்ளல் நடக்கிறது.
9. மகிஷியை வதம் செய்த மணிகண்டன் அவன் உடல் வளர்ந்து பூமிக்கு மேல் வரக்கூடாது என்பதற்காக கனமான கல்லை வைத்ததாக வரலாறு. இதை நினைவு கூறும் வகையில் அழுதையில் எடுத்த கற்களை கல்லிடும் குன்று பகுதியில் பக்தர்கள் போடுகிறார்கள்.
10. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பொது இடங்களில் வைத்து அதிக பணத்தை மற்றவர்கள் பார்க்கும் வகையில் எடுக்கக் கூடாது. பணத்தை நிறைய கையில் வைத்திருப்பதற்கு பதில் பம்பையில் உள்ள ஏடிஎம்களை பயன்படுத்தலாம்.
11. தமிழ்நாட்டைச் சேர்ந்த மெர்ரிலேண்ட் சுப்பிரமணியம் என்பவர் ``சுவாமி அய்யப்பன்'' என்று ஒரு படம் தயாரித்தார். அந்த படம் மூலம் கிடைத்த லாபத்தை கொண்டு, பம்பையில் இருந்து நீலீமலை ஏற ஆரம்பிக்கும் போது இடது புறம் காணப்படும் ஏற்றமான பகுதியில் இருந்து சபரிமலை வரை பாதை அமைத்தார். இதனால் அந்த பாதை சுப்பிரமணியர் பாதை என்று அழைக்கப்படுகிறது.
12. நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று அகந்தைகளையும் விரட்டவே சபரிமலை பதினெட்டாம் படியில் மூன்று கண்களை உடைய தேங்காயை உடைக்கிறார்கள்.
13. பதினெட்டாம் படியில் ஏறும் போது பக்தர்கள் தங்கள் கோரிக்கையை அய்யப்பனிடம் வைக்க வேண்டும் என்பது ஐதீகமாகும். படியில் ஏறும் போது, நெரிசல் ஏற்படும் பட்சத்தில் உங்கள் கவனம் சிதறி விடக்கூடாது. எனவே பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறும் போது, என்னதான் நெரிசல் ஏற்பட்டாலும் உங்கள் வேண்டுதலை விட்டு விடாதீர்கள். இது ரொம்ப முக்கியம்.
14. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ``தத்துவமசி'' எனும் தத்துவம் எழுதப்பட்டுள்ளது. தத்துவமசி என்றால், ``நீ எதை நாடி வந்தாயோ, அது நீயாக உள்ளாய்'' என்று பொருள்.
15. சபரிமலை பதினெட்டு படிகளும் பல நூறு ஆண்டுகளாக கற்களாகவே உள்ளது. கோடிக்கணக்கான பக்தர்கள் அதில் தேங்காய் உடைத்ததால் படிகள் சிதலமடையும் ஆபத்து ஏற்பட்டது. இதனால் 1985-ம் ஆண்டு அக்டோபர் 30-ல் பதினெட்டுப் படிகளும் பஞ்சலோகத்தால் மூடப்பட்டது.
16. சபரிமலை அய்யப்பன் கோவில் கோபுரம், விமானங்களை பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லய்யா தங்கக் கவசமாக மாற்றிக் கொடுத்தார்.
17. அய்யப்பனின் படையில் சேனாதிபதியாக இருந்த கடுத்த சுவாமி (கருப்பசாமி) பதினெட்டுப் படிக்கு அருகில் பிரதிஷ்டை செய்துள்ளார். அவருக்கு முந்திரி, திராட்சை, சுருட்டு படைத்து வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மை உண்டாகும்.
18. சபரிமலையில் உள்ள பஸ்ம குளத்தில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
19. சபரிமலை அய்யப்பனுக்கு மாலை நேரத்தில் அர்ச்சனை செய்வார்கள். அர்ச்சனை சீட்டு பின்பக்கத்தில் உங்கள் ராசி, நட்சத்திரத்தை ஆங்கிலத்தில் எழுதி கொடுத்தால் அர்ச்சனை செய்து தருவார்கள்.
20. சபரிமலை சென்று வந்தவர்கள் அய்யப்பனின் அருள் பிரசாதத்தை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும், உறவினர்களுக்கும் முறைப்படி கொடுத்தால்தான் யாத்திரை பூரணத்துவம் பெறும் என்பது ஐதீகம்.
21. சபரிமலை அய்யப்பன் கோவில் ஒவ்வொரு மாதமும் 5 நாட்கள் திறந்து இருக்கும். அந்த நாட்களைத் தெரிந்து கொண்டு சென்று வரலாம்.
22. திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல சபரிமலை அரவனை பாயசம் புகழ்பெற்றது. அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து அரவனைப் பாயசம் தயாரிக்கப்படுகிறது.
23. பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை அய்யப்பனின் ஆபரணப் பெட்டியை சுமந்து வர 15 சங்கங்கள் உள்ளன.
23. பந்தளத்தில் இருந்து சபரிமலை வரை அய்யப்பனின் ஆபரணப் பெட்டியை சுமந்து வர 15 சங்கங்கள் உள்ளன.
24. சபரிமலையில் ஜனவரி 19-ந்தேதி மண்டலபூஜை நிறைவு பெறும். அன்று தண்ணீரில் குங்குமம் கலந்து மஞ்சமாதா சன்னதியில் பூஜை செய்வார்கள். இதற்கு குருதி பூஜை என்று பெயர்.
25. சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர சங்கராந்தியன்று தோன்றும் ஜோதியை அப்பச்சிமேடு, பம்பை, பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்தும் காணலாம். புல்மேடு பகுதியில்தான் இந்த ஜோதி நன்றாக தெரியும்.
26. சபரிமலையில் பக்தர்கள் கொடுக்கும் பொருட்கள், சன்னிதானம் அருகே வாரம் இருமுறை ஏலம் விடப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் ஏலம் எடுக்கலாம்.
27. சபரிமலைக்குள் செல்போனில் பேச தடை உள்ளது. எனவே நடைபந்தல் தொடங்கும் முன்பு செல்போன்களை பத்திரமாக கொடுத்து விடுவது நல்லது.
28. ஐயப்பா சேவா சங்கம் சார்பில் செய்யப்பட்டுள்ள, செய்யப்பட்டு வரும் சேவைகள் காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.
29. சபரிமலையில் மஞ்சமாதா கோவில் அருகில் தபால் நிலையம் உள்ளது. அங்குள்ள தபால்களில் 18 படி தபால்முத்திரை பதிக்கப்படும்.
30. சபரிமலையில் விழாக்காலங்களில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க நீதிபதி ஒருவரை கேரளா ஐகோர்ட்டு நியமனம் செய்யும். இந்த நீதிபதிக்கு எல்லா அதிகாரமும் வழங்கப்படும்.
31. சபரிமலை நடைபந்தல் அருகே டாடா நிறுவனம் ஆஸ்பத்திரி கட்டி கொடுத்துள்ளது. மண்டல பூஜை நாட்களில் ஏராளமான டாக்டர்கள் இங்கு வந்து சேவை செய்வது குறிப்பிடத்தக்கது.
32. சபரிமலையில் எல்லா இடங்களிலும் தண்ணீர் குடிக்காதீர்கள். தேவஸ்தானம் தரும் சுக்கு தண்ணீர் வாங்கிக் குடிப்பது நல்லது.
33. சபரிமலையில் தினமும் அதிகாலை 3 மணிக்கு கோவில் திறந்ததும் சுப்ரபாதம் பாடப்படும்.
34. நடிகர் எம்.என்.நம்பியார் சபரிமலை தேவஸ்தானம் அனுமதி பெற்று பல கட்டிடங்கள் கட்டினார். அதன் பிறகே சபரிமலை சன்னிதானம் நகரம் போல மாறியது.
35. கேரள கவர்னராக இருந்த பி.வி.கிரி நடந்து மலையேற இயலாத நிலையில் இருந்ததால் அவரை ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார வைத்து தூக்கி சன்னிதானத்துக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகே பிரம்பு நாற்காலி-கம்பு கட்டிய டோலி முறை நடைமுறைக்கு வந்தது.
36. அய்யப்பனுக்கு தினமும் இரவு 8 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தப்படும். பக்தர்களே பூக்களை கூடையில் எடுத்து வந்து கொடுக்கலாம்.
37. அய்யப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், 108 ஒரு ரூபாய் நாணயம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய எட்டும் கொண்டு செய்யப்படும் அபிஷேகத்துக்கு அஷ்டாபிஷேகம் என்று பெயர்.
38. அய்யப்பனுக்கு 1973-ம் ஆண்டு சித்திரை திருநாள் மகாராஜா, தங்க அங்கி தயாரித்து காணிக்கையாகச் கொடுத்தார். 420 பவுன் கொண்ட இந்த தங்க அங்கி மண்டல பூஜை கடைசி நாள் அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும்.
39. சபரிமலை அய்யப்பன் உற்சவர் ஆண்டுக்கு ஒரு தடவை பம்பை ஆற்றுக்கு கொண்டு வரப்பட்டு ஆராட்டு உற்சவம் நடைபெறும். பிறகு அய்யப்பனை அலங்கரித்து பம்பா விநாயகர் கோவில் முன்பு மக்கள் தரிசனத்துக்காக 3 மணி நேரம் வைப்பார்கள். சபரிமலை வர இயலாத 50 வயதுக்குட்பட்ட பெண்கள் இந்த சமயத்தில் அய்யப்ப உற்சவரை தரிசிக்கலாம்.
40. தஞ்சை மாவட்டம் மன்னார் குடியைச் சேர்ந்த முருகையன் குருசாமி 50 ஆண்டுக்கும் மேல் சபரிமலை சென்று வந்தவர் ஆவார்.
41. சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம்.
42. ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
43. பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணை வதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும்.
44. வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை.
45. சபரி மலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு.
46. ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்கவைத்த நிலையில் உள்ள பீடத்தில், சிவனைப்போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.
47. ஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது, மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம்.
48. சென்னை பாரிமுனை அரண்மனைக் கார தெருவில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் ஐயப்பனுக்கு சன்னதி உள்ளது. சபரிமலை கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து ஐயப்பன் சிலை கொண்டு செல்லப்பட்ட போது அவரை சில தலங்களில் வைத்து பூஜை செய்தனர். இங்கு பூஜை செய்தபோது மூன்று நாட்கள் வரையில் சிலையை எடுத்துச் செல்ல சுவாமியின் உத்தரவு கிடைக்கவில்லை. இதன் பிறகே எடுத்துச் சென்றனர். சபரிமலை ஐயப்பன் இங்கிருந்ததை நினைவூட்ட, தனியாக சன்னதி அமைக்கப்பட்டது. சபரிமலையில் நடப்பது போலவே இவருக்கு பூஜைமுறை கடைபிடிக்கப்படுகின்றன.
49. ஸ்ரீகிருஷ்ண அவதாரத் திற்குப் பிறகு இறைவன் மனித அவதாரம் எடுத்தது ஸ்ரீ ஐயப்பன் அவதாரம் தான் என்று ஆன்மிகப் பெரியோர் கூறுவர்.
50. குளத்து புழா அய்யப்பன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

சாமியே சரணம் ஐயப்பா
18ம்படியானே சரணம் ஐயப்பா

18ம்படி கருப்பசாமியே சரணம் ஐயப்பா